"ஹலோ தலைவரே, காங்கிரஸ் கட்சியில் அதிக பரபரப்பு தெரியுது.''”

"ஆமாம்பா, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை அக்கட்சியின் தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்திருந்ததே?''”

"உண்மைதாங்க தலைவரே, கட்சித் தலைமையின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 25 ஆம் தேதி டெல்லிக்குச் சென்றார். அங்கே கட்சியின் தேசியத் தலைவர் கார்கே மற்றும் கட்சியின் rrபொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்தார். அந்த சந்திப்பில், தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி விவகாரம் பற்றியும், கூட்டணியில் காங்கிரசை தி.மு.க. எந்தளவுக்கு மதிக்கிறது? என்பது குறித்தும் கூடக் கேட்டிருக்கிறார்கள். மேலும், தி.மு.க.வின் 2 ஆண்டுகால ஆட்சியின் மதிப்பீடு, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் நிலை என்ன? என்பது உள்பட பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்தும் அங்கே விவாதிக்கப்பட்டிருக்கின்றன.''”

"தி.மு.க.வின் நட்பின் மீது காங்கிரஸ் சந்தேகப்படுகிறதா?''”

Advertisment

"நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்கிற சந்தேகம் அங்கே சிலருக்கு இருக்கிறதாம். குறிப்பாக. கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற தி.மு.க.வுக்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து சில நெருக்கடிகள் உருவாகும் என ராகுல்காந்தி சந்தேகப்படுகிறார். ஆகவே அப்படிப்பட்ட சூழலில், தேர்தலின் போது காங்கிரசுக்கு புதிய தலைவர் இருக்க வேண்டும் என்றும், அந்த புதிய தலைவர் தேர்தலை எதிர்கொள்வதற்கு குறைந்தபட்சம் ஒரு 6 மாத காலமாவது இடைவெளி இருக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி நினைப்பதால், அதற்கேற்ப இப்போதே தலைவரை மாற்றி யமைக்கலாமா? என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறதாம். இது குறித்தும் டெல்லியில் அழகிரியிடம் ஆலோசித்திருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணி குறித்து தன் கருத்தைச் சொன்ன அழகிரி, கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களான சிறுபான்மை மதத்தினரின் வாக்கு வங்கி எப்போதும் காங்கிரசுக்கு இருப்பதால் கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற தி.மு.க. நினைக்காது என்று அழுத்தமாகச் சொன்னாராம்.''”

"அழகிரிக்குப் பதிலாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யோகம் யாருக்கு இருக் கிறதாம்?''”

rang

Advertisment

"எம்.பி.க்கள் செல்லக்குமார், மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ராகுலுக்கு நெருக்கமான கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக் கப்பட்டுள்ளது. அதேசமயம், செல்வப் பெருந்தகை, ரூபி மனோகரன், விஜயதாரணி உள்ளிட்ட பலரும் தலைவர் ரேஸில் இருக்கிறார்கள். இது தொடர்பாக கார்கேவிடம் பேசிய அழகிரி, மேலிடம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன்; அதே சமயம், நாடாளுமன்றத் தேர்தல் வரை நான் தலைவராக நீடிக்க விரும்புகிறேன் எனச் சொல்லி, அதற்கான சில காரணங்களையும் சொல்லியிருக்கிறாராம். எனினும் அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என் கிறார்கள்.''”

"பா.ஜ.க.. அண்ணாமலை புதுவித கமிஷன் பிஸினசில் இறங்கிவிட்டாராமே?''”

"ஆமாங்க தலைவரே, ஒன்றிய பா.ஜ.க. அரசு மீதான பயத்தையே முதலீடாக்கி ஒரு வியாபாரத்தைத் தொடங்கி கோடிக்கணக்கில் லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டாராம் அண்ணாமலை. இது குறித்து விவரிக்கும் கமலாலயத் தரப்பினர், பெரிய பெரிய தொழி லதிபர்களை ஆடிட்டர்கள் மூலம் பிடித்து, அவர்களுக்கு வருமானவரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மூலம் ஏற்பட இருக்கும் பிரச்சினைகளை சரிபண்ணித் தருவதாக டீலிங் பேசுகிறாராம். இதன்மூலம் ஏகத்துக்கும் காசு புரளுகிறதாம். இவரது இந்த கமிஷன் பிசினசில் உறுதுணையாக இருந்து லாபத்தில் கமிஷன் வாங்கி வருகிறாராம் ஆடிட்டர்களில் ஒருவரான சுப்பிரமணியம் தியாகராஜன். அண்ணா மலையின் இந்த தில்லாலங் கடி வேலையைப் பார்த்து பா.ஜ.க. தரப்பே வாய்பிளக் கிறது.''”

"அண்ணாமலையின் ஐ.டி.விங்கில் இருக்கும் ஒரு வரும் சர்ச்சையில் சிக்கி வருகிறாரே?''”

annamalai

“"உண்மைதாங்க தலைவரே, அண்ணா மலையின் ஐ.டி.விங்கின் தலைவராக இருப்பவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான யுடியூபர்கள் பலரையும் கையில் வைத்துக்கொண்டு அரசியலில் அவதூறு விளையாட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார். தற்போது இவர், மோசடி நிறு வனமான ஆருத்ரா விவகாரத்தில் வசமாக சிக்கி இருக்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷுடன் உதயநிதி ஸ்டாலின் இருப்பது போன்ற புகைப்படத்தை, அவர்களில் பலருக்கும் அனுப்பி, உதயநிதி பற்றி அவதூறு செய்திகளை வெளியிடச் சொல்லி வருகிறாராம். இவர் எழுதிக்கொடுத்த தப்பும் தவறுமான அவதூறு விமர்சனங்களை வெளியிட்டு வந்த கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. ஆதரவு யு டியூபரான உமா கார்த்தி என்பவர் அண்மையில் போலீஸில் சிக்கிக் கைதாகியிருக்கிறார். அதேபோல், இவர் பேச்சைக் கேட்கும் பலரும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறார்களாம். இந்த செல்வகுமாரின் மூவ்களையும் தமிழக உளவுத்துறை கவனிக்கிறதாம்.''”v "தேர்தல் கூட்டணியில் பா.ஜ.க. வேண்டாம் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து குரல்கள் கேட்குதே?''”

"சமீப நாட்களாக எடப்பாடி தன் கட்சியினரிடம், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நாம் பா.ஜ.க.வின் கூட் டணியில் இருந்து துண்டித்துக்கொள்ள இருக்கிறோம். அப் போதுதான் மக்களிடம் வாக்குகளை வாங்கி ஆட்சியைப் பிடிக்க முடியும். இதற்கு மாறாக, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நடுத்தெருவில்தான் நாம் நிற்கவேண்டும். பா.ஜ.க.வை ஓரம்கட்டினால்தான் தேர்தல் நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி களும் விடுதலை சிறுத்தைகள் உள் ளிட்ட சில கட்சி களும் நம் பக்கம் வரும் என்று சொல்லி வருகிறாராம். கார ணம், தங்களுக்கு எதிராகவே விமர்சனக் கணைகளை வீசி வரும் அண்ணாமலையை, பா.ஜ.க. இன்னும் மாநிலத் தலைவராக வைத்திருப்பதால்தான் எடப்பாடி, தங்கள் தரப்பு கோபத்தை இப்படியொரு பிரச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் என்கிறார்கள், அங்கிருக்கும் சீனியர்கள்''.”

sasi

"கனிமவளத் துறையில் இருக்கும் ஏடாகூட நபர்கள், பண்டல் பண்டலாக கரன்ஸிகளை அள்ளுகிறார்களாமே?''”

"ஆமாங்க தலைவரே, அரசு கொடுத்த அனுமதிக்கும் அதிகமாக, முறைகேடாக கனிம வளங்களை பலரும் வெட்டி எடுத்து வருகிறார்களாம். இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறதாம். இந்த கோல்மால்கள் மூலம் துறையில் இருக்கும் முக்கிய புள்ளிகள், கமிஷன் பெறும் டெக்னிக்கே அலாதி என்கிறார்கள். உதாரண மாக, இந்தத் துறையில் இருந்த ஜெயமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், முறைகேடாக கனிமங்களை அதிக அளவில் சுரண்டி எடுத்ததாக ஒரு நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு அபராதம் விதித்தாராம். பிறகு பேச்சுவார்த்தையுடன் டீலிங்கும் நடந்ததாம். இதன்பின்னர் இந்த அபராதத் தொகையானது ரூபாய் 200 கோடியில் இருந்து வெறும் 10 கோடியாகச் சுருங்கிவிட்டதாம். இதற்காக பண்டல் பண்டலாக கணிசமான கவனிப்பைப் பெற்றாராம் அந்த அதிகாரி. இதில் மேலிடப் புள்ளிக்கும் கணிசமாகப் போய்ச் சேர்ந்ததாம்''. ”

rr

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். எப்படி இருந்த மனுஷி இப்படி ஆயிட்டாரேன்னு சசிகலாவைப் பார்த்து அவருடைய சொந்தபந்தங்களே பரிதாபப் படறாங்களாம். காரணம், சசிகலா இப்போது பெரும் பண நெருக்கடியில் இருக்கிறாராம். தினகரன் ஆட்டையைப் போட்டது ஒரு பகுதி சொத்துக்கள் என்றால், மிச்ச மீத சொத்துக்களை ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் முடக்கி வைத்திருக்கின்றனவாம். இது ஒரு பக்கம்ன்னா, பா.ஜ.க.வின் தூண்டுதலால், அரசியல் கட்சியைத் தொடங்கும் மூடுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய், அதற்கான செலவுகளை சமாளிக்க, கல்பாத்தி அகோரத்தின் ஏ.ஜி.எஸ் என்ட்டெர்டெயின்மெண்ட் மற்றும் சன்பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் போடப்போகிறாராம்.''’

______________

அடாவடி தீட்சிதர்கள்! அடக்கிய அறநிலையத்துறை!

r

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் பக்தர்கள் நுழையக்கூடாதென தீட்சிதர்கள் தரப்பில் பதாகையை வைத்து பக்தர்களைத் தடுத்த தால் காவல்துறையில் புகாரளித் தனர். இதையடுத்து, அரசாணைப்படி, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவபக்தர்களுடன் கடந்த 24ஆம் தேதி கோவிலுக்குள் சென்று பதாகையை அகற்ற முயன்றபோது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். பின்னர், 26ஆம் தேதி காவல்துறையின் பலத்த பாது காப்புடன் பதாகை அகற்றப்பட் டது. ஆனாலும் கனகசபையில் பக்தர்கள் நுழைய தீட்சிதர்கள் அனுமதிக்காததால், பலகட்டப் பேச்சுவார்த்தையை அறநிலையத் துறையினர் நடத்தினர். தீட்சிதர்கள் முரண்டுபிடித்த நிலையில், 27ஆம் தேதி, காங்கிரஸைச் சேர்ந்த சிவ பக்தர் ஜெமினி ராதா உள்ளிட்ட சிலர், கனகசபையில் வழிபட அனு மதிகோரி போராட்டத்தில் இறங்கினர். பா.ஜ.க., இந்துத்வா ஆட்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே கூச்சல் குழப்பமாக இருந்தது.

கோவில் தீட்சிதர்களின் தரப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து, கோவிலில் தீட்சிதர்களுக்கு பாதுகாப்பில்லை. கனக சபையில் பூஜையிலிருந்த கற்பக கணேச தீட்சிதரை அறநிலைத்துறையினரும் காவல்துறையினரும் தள்ளிவிட்டதில் அவரது உடைகள் ஈரமாகி பூணூல் அறுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். சிவபக்தர் ஜெமினிராதா கூறுகையில், "நடந்ததையெல்லாம் நான் கவனித் தேன். இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அரசாணைப்படி அமைதியான முறையில் கனக சபையில் ஏறி வழிபாடு செய்தனர். தீட்சிதர்களின் தடையை மீறி வழிபட்டதால் தீட்டு எனக்கருதி அவரது உடையையும் பூணூலையும் கழட்டிவிட்டு புதுத்துணி மற்றும் பூணுலை மாட்டியதுதான் உண்மை" என்றார். பின்னர் 28-ந்தேதி காலை பூஜையின்போது கனகசபையில் பக்தர்கள் வழிபடுவதற்காக கனக சபையின் கதவுகளை தீட்சிதர்கள் திறந்துவிட, அனைவரும் கனக சபையில் ஏறித் தரிசித்ததும் ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது. கோவிலை அறநிலையத் துறை கைப்பற்றுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்!

-காளிதாஸ்