"ஹலோ தலைவரே, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, மேலும் சில திரைப்புள்ளிகள் சிக்கலாம்னு விசாரணைக் குழு சொல்லிவருகிறது.''”
"ஆமாம்பா, இந்த நேரத்தில் சென்னை வி.வி.ஐ.பி.க்களை ஒரு போதைப் பார்ட்டி தள்ளாட வைப்பதாகச் சொல்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, போதைப் பொருள் நடமாட்டம் சென்னையை மிகவும் ஆக்ரமித்துள்ளது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட முழுமையாக அதன் நடமாட்டத்தை ஒழிக்க முடியவில்லை. உதாரணமாக, சென்னை ஆர்.ஏ.புரத்தில் அய்யப்பன் கோவில் அருகே உள்ள பிரபல ஓட்டலையொட்டி யுள்ள ஒரு ஸ்பாட்டில், வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், வி.வி.ஐ.பி.க்களின் வாரிசுகள் மற்றும் பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் என பலரும் சங்கமிக்கிறார்கள். மது விருந்து மற்றும் போதைப்பொருளில் மூழ்கித் திளைப்பார்கள். ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் இந்த ஸ்பாட்டில் ஆஜராவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். விடிய விடிய பார்ட்டி களைகட்டும் இந்த பார்ட்டியில் குறிப்பிட்ட இளம்ஜோடி ஒன்று வாரா வாரம் வருகை தருகிற தாம். அந்த ஜோடி மூலமாக கொக்கைன் கைமாறுகிறதாம். காவல் துறையினர் இதையெல் லாம் கண்டுகொள்வதில்லை. சென்னையின் இந்த ரகசிய உலகத்தை கண்காணித்து ஆக்சன் எடுத்தால், போதை நடமாட்டத்தில் 50 சதவீதத்தைக் குறைத்துவிட முடியும் என்கிறார்கள்.''”
"டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை யின் நடவடிக்கைகள் குறித்து புதுப்புது தகவல்கள் பரவுதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழ்நாட்டைக் காவல் காக்கும் உச்சபட்ச அதிகாரியின் மூன்றெழுத்து பெயர் கொண்ட மகள், தற்காப்புக் கலை கொண்ட சினிமாவில் புது காத-யோடு உல்லாசமாக சுத்தும் ஜெயமான நடிகரின் ஜோடியாக நடித்து வருவது ஊரறிந்த ரகசியம். குறிப்பிட்ட அந்த உயர் அதி காரியின் மகள் நடிக்கும் படத்தின் தயாரிப்பாள ரும், சமீபத்தில் என்ஃபோர்ஸ்மென்ட் வலை வீசிய, அதிகாரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த முக்கிய புள்ளியும் ஒருவர்தான் என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர். ஈ.டி. ரெய்டுக்கு முன்பாக, காவல்துறை யில் பணியிட மாற்றம் முதல் பல வெயிட்டான பதவிகளில் விருப்பத்துக்கும் விளையாடிய அந்த செல்வாக்கு நபரின் தேடுதல் படலம் தொய்வடைந்ததற்கு, அந்த முக்கிய அதிகாரியின் கண்ணசைவும் ஒரு காரணம் என்கிறார்கள் டிபார்ட் மெண்ட் ஆட்களே.''”
"அதேபோல் டாஸ்மாக் விவகாரத்தோடு மதுரை முருகன் மாநாட்டை முடிச்சிப்போட்டு ஒரு தகவலும் உலவுதேப்பா?''”
"இந்தியா முழுக்க பரபரப்பை கிளப்பிய டாஸ்மாக் ரெய்டு விவகாரம் தற்போது பிசுபிசுத்துப் போனதற்கும், முருகன் மாநாட்டுக்கும் லிங்க் இருக்குன்னு கமலாலயத் தரப்பிலேயே டாக் அடிபடுது. அதாவது, டாஸ்மாக் விவகாரம் அனலைக் கிளப்பிய சூழலில், அதை அணைப் பதற்கு உறுதுணையாக இருந்தது ஆந்திராவின் துணை முதல்வரான பவன்கல்யாண்தானாம். ஆர். எஸ்.எஸ், இந்து முன்னணி ஆகியவற்றின் பின்னணியில் பி.ஜே.பி தடபுடலாக நடத்திய அந்த முருகன் மாநாட்டிற்கு, தமிழக ஆளுங்கட்சியின் சில முக்கிய புள்ளிகள், பவன்கல்யாண் மூலம் வெயிட்டாக நிதி கவனிப்புச் செய்தார்களாம். இதைத்தொடர்ந்துதான் முருகன் மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக பவன் கௌரவிக்கப்பட்டு, எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தாராம். இதைத் தொடர்ந்து பூரித்துப்போன பவன், ‘இனிமே டெல்லி சம்பந்தமான எந்தப் பிரச்சினையா இருந்தாலும், கவலைப்படாதீங்க, எங்கிட்ட வாங்க... எதாயிருந்தாலும் நான் பார்த்துக்கறேன்னு அவர்களிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.''”
"அமைச்சர் துரைமுருகன் முதல்வரை சந்திக்க முடியாமல் தவிக்கிறாரே?''”
"தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் துரைமுருகனை விலகச் சொல்லி தி.மு.க. தலைமை நிர்பந்தம் கொடுத்துவருவது குறித்து, கடந்தமுறை நாம் பேசிக்கொண்ட செய்திகள் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. தி.மு.க.வின் புதிய பொதுச்செய லாளராக டி.ஆர்.பாலுவும், புதிய பொருளாளராக அமைச்சர் எ.வ.வேலுவும் செப்டம்பர் 15-ல் பொறுப்பேற்கவிருக்கிறார்கள். தி.மு.க. கொடுத்த அதிர்ச்சியால் துரைமுருகன் ரொம்பவே அப்-செட்டாகியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும்போது, "வருகிற சட்டமன்றத் தேர்தல் வரையிலாவது என்னை பொதுச்செயலாளராக நீடிக்கவிடுங்கள். அதன் பிறகு அப்படியே விலகி அமைதி யாகிவிடுகிறேன், ஒரு கௌரவமாக இருக்கும்' என்று அவரிடம் கேட்டுக்கொள்ளவிருக்கிறாராம்.''”
"ஓரணியில் தமிழ்நாடு என்கிற திட்டத்தை தி.மு.க. கையில் எடுத்திருக்கிறதே?''”
"மண், மொழி, மானம் காக்க இணைவோம் எனும் முழக் கத்தோடு, ஓரணியில் தமிழ்நாடு என்ற கருத்தரங்க நிகழ்வை அண்ணா அறிவாலயத்தில் நடத்தினார் தொழில்துறை அமைச்சரும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா. அதையொட்டி செய்தியாளர்களிடமும் பேசிய அவர், ’"இதுவரை எவ்வளவோ நலத் திட்டங்களை இந்த அரசு செய்திருக்கிறது. அவை மக்களிடம் போய்ச் சேர்ந்ததை சரி பார்க்கும் முயற்சியில் நம் முதல்வர் இறங்கியிருக்கிறார். தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத் திற்காக நீங்களெல்லாம் ஓரணியில் நிற்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வியை 2 கோடி குடும்பங்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணியை இப்போது தொடங்கியிருக்கிறோம். தமிழினத்தின் எதிரிகள், துரோகிகள் அனை வரையும் முறியடிக்க வேண்டும். இதற்காகத்தான் தமிழ்நாடு ஓரணியில் திரளவேண்டும் என்கிறோம். இந்தப் பயணம் ஜூன் 25-ல் தொடங்கி யிருக்கிறது'’என்றார். இதற்கான முன்னெடுப்பை தி.மு.க.வின் ஐ.டி. விங்க், பென் அமைப்பு, ஐ பேக் ஆகியவை எடுத்துள்ளனவாம். ஜூலை 1ஆம் தேதி இந்த பயணத்தை முறைப்படி ஸ்டாலின் தொடங்கிவைக்கவிருக்கிறார்.''
"அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி.க்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறதே?''”
"தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கென தனி அலுவலக அறை திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அந்த அறையைத் திறந்துவைத்து, கனிமொழிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். கனிமொழியிடம் மேலும் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைப்பதற் காகவே இந்த அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கனிமொழியிடம் இருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை,. துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதிக்கு கொடுக்க, தலைமை முடிவு எடுத்திருப்பதாக தி.மு.க. வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி நடக்கும்போது, கனிமொழியை மையப்படுத்தி எதிர்மறை விமர்சனங்கள் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக, தலைமைக் கழகத்திலேயே கனிமொழிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு அதிகாரத்தை ஸ்டாலின் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.''
"அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் தாக்கப் பட்டதாக ஒரு செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறதே?''”
"அ.தி.மு.க.வில் மாஜி மந்திரி செல்லூர் ராஜு பதுக்கி வைத்திருந்ததில் ஒரு 200 கோடி ரூபாய் காணவில்லையாம். அதேபோல் மாஜிக்களான உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்து 100 கோடியும், வீரமணியிடமிருந்து 200 கோடியும், சரோஜாவிடமிருந்து 50 கோடியும் என இவர்களிடமிருந்து பெரும் தொகை எடுக்கப்பட்டிருக்கிறதாம். இவ்வளவு தொகையும் ஒரு முன்னாள் அ.தி.மு.க. மந்திரி இவர்களிடம் கொடுத்துவைத்த பணமாம். இந்தப் பணத்தை அவர் திருப்பிக் கேட்டபோது, இவர்கள் கொடுக்கவில்லை என்பதால், அவர் மும்பையில் இருந்து ஆட்களை இறக்கி, இவர்களைத் தனி இடத்தில் வைத்துத் தாக்குதல் நடத்தி, கும்மி எடுத்துவிட்டாராம். இப்படி ஒரு செய்திதான், இப்போது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்தத் தகவல் உண்மையா? வதந்தியா? என்கிற பட்டிமன்றமும் அ.தி.மு.க.வில் நடந்துவருகிறதாம்.''”
"இந்தத் தகவலை எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது? அது இருக்கட்டும். அ.தி.மு.க.வில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. கொஞ்சம் கொஞ்சமாக உள் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்துவருகிறது. அதைப்போலவே, அ.தி.மு.க. விலும் சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி. முதற்கட்டமாக செய்தி சேனல்களில் பேசுவதற்கு ஒரு தனி டீமும், இணைய தளங்களில் பேசுவதற்கு ஒரு தனி டீமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களைத் தவிர வேறு யாரும் சமூக ஊடகங்களில் தலைகாட்டக்கூடாது என்றும் எடப்பாடி சொல்லியிருக்கிறாராம். காரணம், சிலர் பா.ஜ.க.வை சகட்டுமேனிக்கு விமர்சித்து, கூட்டணியில் நெருக்கடிகளை அதிகரித்துவருகிறார்களாம். அதேபோல் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறவிருக்கிறதாம். அப்போது அ.தி.மு.க.வி-ருந்து ஒரு சிலர் வெளியேற்றப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று கிசுகிசுக்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள்.''”
"தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் டெல்லி சென்றிருக்கிறாரே?''”
"தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லிக்கு கிளம்பிச் சென்று பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்திருக்கிறார். தமிழக பா.ஜ.க.வில் மாநில தலைவர், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிந்து பல மாதங்களாகிவிட்டன. ஆனால், மாநில நிர்வாகிகள் இன்னும் நியமிக்கப்படாம-ருக்கின்றனர். அதற்குக் காரணம், மாஜி மாநில நிர்வாகியின் ஆதர வாளர்கள் செய்துவரும் ரகளைகள்தான். அதனால், அவரின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் நயினாருக்கு தயக்கம் இருந்ததால், பட்டியல் தயாரிப்பதில் திணறல் ஏற்பட்டது. இந்த நிலையில், மாநில நிர்வாகிகளை நியமிக்கும்படி டெல்லி அறிவுறுத்தியது. அதனால், மாஜி நிர்வாகியின் ஆதரவாளர்கள் சிலரை சேர்த்து ஒரு பட்டியலையும், அவர்கள் இல்லாமல் ஒரு பட்டியலையும் தயாரித்து டெல்லிக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். நயினாருடன் பா.ஜ.க.வின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமும் சென்றிருக்கிறார். இதற்கிடையே ’எங்களுக்குப் பதவி கொடுக்காவிட்டால் கேசவவிநாயகத்தின் அந்தரங்க நீலப்படங்களை வெளியிடுவோம்’ என்று, சென்னையில் இருக்கும் சில பா.ஜ.க. புள்ளிகள் அவரை மிரட்ட ஆரம்பித்திருக் கிறார்களாம்.''”.
"ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியிருக்கே...''
"ஆமாங்க தலைவரே... சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், ஜூன் 25-ஆம் தேதி நடைபெற்ற, தாய்லாந்தில் யானைகள் சிறப்பு முகாமில் சிறப்புப் பயிற்சிபெற்ற யானைப் பாகன்கள், வனக்காவலர்களுக்கு பாராட்டும் சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார். அந்நிகழ்வில் வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழந்தது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது வழக்கமான ஒன்றுதான் என்று பதில்சொல்ல, மனித உயிர் குறித்து அலட்சியமாகப் பதில்சொல்வதாக பத்திரிகையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கெனவே போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோதும் இதுபோன்ற பிரச்சனையொன்றில் சிக்கினார். அப்போதே அவரது அமைச்சர் பதவி பறிபோகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கடைசியில் பதவியைப் பறிக்காமல், இலாகா மாற்றத்துக்கு உள்ளானார். தற்போதும் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பொறுப்பாகப் பதிலளிப்பதற்குப் பதில் அலட்சியமாகப் பதிலளித்தது முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குப் போக, ராஜகண்ணப்பன் மீது கோபத்தில் உள்ளாராம். இதனால் அமைச்சர் ராஜகண்ணப்பனின் பொறுப்புக்கு ஆபத்து வர லாம் என்று கட்சியினர் யூகம் தெரிவிக்கின்றனர்''.
"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நான் பகிர்ந்துக்கறேன். நடிகை மீனா பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாகச் சேர்வதற்கு முன்பே அவருக்கு அங்கே முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அறிவிக்கப்பட இருக்கும் மாநில நிர்வாகிகள் பட்டியலில் குஷ்புவுடன் மீனாவும் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நேரத்தில், நடிகை மீனாவும் கலந்துகொண்டார். அப்போதே மீனாவை கட்சிப் பொறுப்புக்கு கொண்டு வரவேண்டும் என்று மோடி கருதினாராம். எனவே, மீனாவை மாநில பொறுப்புக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இதைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க.வின் மத்திய மந்திரிசபையில் விரைவில் அமைச்சராக்கப் படுவார் என்றும் பா.ஜ.க. தரப்பிலேயே சொல்கிறார்கள்.''’