யானைக்கவுனி வினாயகம் மேஸ்திரி தெருவில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டது சென்னையையே திடுக்கிடவைத்தது. தலீல்சந்த்தின் மருகமளான ஜெயமாலா, அவளது சகோதரர்கள்மேல் போலீஸின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. இதைத்தான் அன்று கொலையும் செய்வாள் பத்தினி என்றார்களோ!?
சென்னை யானைக்கவுனி வினாயகம்மேஸ்திரி தெருவில் நடந்த மூன்று கொலைகளும், ராயபுரம் கொய்யா அகமது தனது உறவினர் அன்சாருதீனை துப்பாக்கியால் சுட்டு மிரட்டியது பரபரப்பை உண்டாக்கியது. அதே காவல் மாவட்டத்தில் மளிகைக்கடையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவத்தைப் பற்றியும், தலைநகரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் என்ற தலைப்பில் (நவம்பர் 7-10) நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சென்னை யானைக்கவுனி, வினாயகம் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலீல்சந்த். பைனான்ஸ் நிறுவன அதிபரான இவருக்கு, புஷ்பாபாய் என்ற மனைவியும், ஷீத்தல் என்ற மகனும் பிங்கி என்ற மகளும் உள்ளனர். ஷீத்தல் மனைவியைப் பிரிந்து பெற்றொருடன் வாழ்ந்துவருகின்றார்.
சத்தமில்லாமல் நடந்த கொலை
திருமணமாகி அதே பகுதியில் வசித்து வரும் மகள் பிங்கி, கடந்த நவம்பர் 13 அன்று இரவு, தன் பெற்றோர்க்கு பலமுறை போன் செய்தும் யாருமே போனை எடுக்காத நிலையில், வீட்டுக்கு பார்க்க வந்திருக்கிறார். வீட்டில் சோபாவில் ரத்த வெள்ளத்தில், நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டநிலையில், மூன்று பேரும் கொலைசெய்யப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிங்கியின் கதறல் சத்தம் கேட்டு அங்குவந்த சுற்றுவட்டாரத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் மூன்று பேரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரி சோதனைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவம
யானைக்கவுனி வினாயகம் மேஸ்திரி தெருவில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டது சென்னையையே திடுக்கிடவைத்தது. தலீல்சந்த்தின் மருகமளான ஜெயமாலா, அவளது சகோதரர்கள்மேல் போலீஸின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. இதைத்தான் அன்று கொலையும் செய்வாள் பத்தினி என்றார்களோ!?
சென்னை யானைக்கவுனி வினாயகம்மேஸ்திரி தெருவில் நடந்த மூன்று கொலைகளும், ராயபுரம் கொய்யா அகமது தனது உறவினர் அன்சாருதீனை துப்பாக்கியால் சுட்டு மிரட்டியது பரபரப்பை உண்டாக்கியது. அதே காவல் மாவட்டத்தில் மளிகைக்கடையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவத்தைப் பற்றியும், தலைநகரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் என்ற தலைப்பில் (நவம்பர் 7-10) நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சென்னை யானைக்கவுனி, வினாயகம் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலீல்சந்த். பைனான்ஸ் நிறுவன அதிபரான இவருக்கு, புஷ்பாபாய் என்ற மனைவியும், ஷீத்தல் என்ற மகனும் பிங்கி என்ற மகளும் உள்ளனர். ஷீத்தல் மனைவியைப் பிரிந்து பெற்றொருடன் வாழ்ந்துவருகின்றார்.
சத்தமில்லாமல் நடந்த கொலை
திருமணமாகி அதே பகுதியில் வசித்து வரும் மகள் பிங்கி, கடந்த நவம்பர் 13 அன்று இரவு, தன் பெற்றோர்க்கு பலமுறை போன் செய்தும் யாருமே போனை எடுக்காத நிலையில், வீட்டுக்கு பார்க்க வந்திருக்கிறார். வீட்டில் சோபாவில் ரத்த வெள்ளத்தில், நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டநிலையில், மூன்று பேரும் கொலைசெய்யப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிங்கியின் கதறல் சத்தம் கேட்டு அங்குவந்த சுற்றுவட்டாரத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் மூன்று பேரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரி சோதனைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண், பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் ஆகியோர் விசாரணையைத் தொடங்கினர்.
கொலைக்கான காரணம் என்ன?
முதல்கட்ட விசாரணையில் ராஜஸ் தான் மாநிலத்தைச் சேர்ந்த தலீல்சந்த் கடந்த 30 வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னை வந்து பைனான்ஸ் தொழில் செய்துவந்துள்ளார். குடும்பத்தில் சொத்துப் பிரச்சனையும் உள்ளது. எனவே கொலைக்குக் காரணம் சொத்துப் பிரச்சனையா, தொழில் தகராறா,…ஷீத்தலுக்கும் அவரது மனைவிக்குமான தாம்பத்திய பிரச்சனையா… என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
ஷீத்தல் மனைவி ஜெயமாலா சமீபத்தில் பிரிந்துசென்றதால், ஐந்து கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கேட்டு மிரட்டல் விடுத்துவந்தது பிங்கி மூலம் போலீசாருக்குத் தெரியவந்தது. கொலைசெய்யப்பட்ட மூன்று பேரின் நெற்றிப்பொட்டிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. எனவே தூரத்திலிருந்து சுட்டிருக்க வாய்ப்பில்லை. அருகிலிருந்தபடி, துப்பாக்கியை நெற்றியில் வைத்து சுட்டிருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்ததும் போலீசாருக்கு முதல் க்ளூ கிடைத்தது.
ஜீவனாம்ச தகராறு
ஷீத்தலுக்கு 14 வருடங்களுக்கு முன்பு புனேவை அடுத்த ஷோலாப்பூரைச் சேர்ந்த ஜெயமாலாவுடன் திருமணமானது. ஷீத்தலுக்கும் ஜெயமாலாவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. திருமணமான சில வருடங்களுக்குப் பின் னர் ஷீத்தலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தாம் பத்ய உறவில் பிரச்சனையும் இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இதனைப் பொறுக்கமுடியாத ஜெயமாலா புனே நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் அங்குள்ள காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவாகரத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஜீவனாம்ச தொகை அளிப்பது தொடர்பாக இரு வீட்டு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
கோட்டைவிட்ட போலீஸ்
இதில் ஜெயமாலா தரப்பிலிருந்து சுமார் 5 கோடி ரூபாய் வரை கேட்டுள்ளனர். இதுதொடர் பாக இரு குடும்பத்தினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள் பயன்படுத்தும் பி.பி.இ. எனப்படும் பாதுகாப்பு உடையுடன் இருவர் தலீல்சந்த் வீட்டிற்கு வந்துள்ளனர். வந்த இருவரும் ஷீத்தலை தனியறையில் கட்டிப்போட்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக யானைக்கவுனி காவல் நிலை யத்தில் தலீல்சந்த் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார்குறித்து விசாரணை நடத்தியதில் ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ் மற்றும் விலாஸ் ஆகிய இருவர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
யானைக்கவுனி போலீசார் இது குடும்ப சண்டை விவகாரம் எனக் கருதி புகாரைப் பெற்றதற் கான சான்றிதழ் மட்டுமே கொடுத்துள்ள னர். இந்த புகார் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது, போலீசார் இந்த வழக்கில் அப்போதே நட வடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது.
கணவனையும் அவர் பெற்றோரையம் தனது சகோதரர்களும் அடியாட்களும் சுட்டுக்கொல்வதை நேரில் பார்க்க வேண்டும் என ஜெயமாலா கூறியதால், சம்பவ இடத்தில் அவரும் இருந்தார் என்கிறது போலீஸ் தரப்பு. சிசிடிவி பதிவுகள் மூலம், வீட்டுக்கு வந்தவர்களைத் தேடி புனே விரைந்த தனிப்படை போலீசார், கைலாஷ், விஜய்உத்தம் மற்றும் ரவீந்திரநாத் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புள்ள ஜெயமாலா, ராஜுஷிண்டே, விலாஸ் ஆகியோரை தேடிவருகின்றனர்.
லோக்கல் தாதா உதவி?
ஜெயமாலாவின் சகோதரன் கைலாஷ் கடந்த ஒரு மாதமாக சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் காட்டூரில் கூட்டாளிகளுடன் தங்கி கொலைக்கான திட்டம் வகுத்ததாகத் தெரிகின்றது. துப்பாக்கியால் சுடும்போது சத்தம் வராமலிருக்க சைலன்ஸர் பொருத்திய பிரத்யேக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதும், சென்னையைச் சேர்ந்த ஓர் ராணுவ அதிகாரிக்குச் சொந்தமான கார் பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த பிரபல தாதாவுக்கும், இந்தக் கொலை யில் தொடர்புள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னையைப் பொருத்தவரை சைலண்டாக நடக்கும் பல கட்டப்பஞ்சாயத்தில், சென்னையை சேர்ந்த ரவுடிகளும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த சில தாதாக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வடசென்னை, சோழவரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் முகாமிடுவர். ரியல்எஸ்டேட் தொடர்பான அனைத்து கட்டப்பஞ்சாயத்துகளிலும், சர்வ சாதாரணமாக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
-அரவிந்த்
______________
துட்டுக்கேத்த துப்பாக்கி!
பொதுவாக ஒருவர் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவேண்டும். சென்னை யைப் பொருத்தவரை மாநகர காவல் ஆணையர் அனுமதி தேவை. அதுவும் 0.22 எம்.எம் துப்பாக்கி தான் வைத்துக்கொள்ளமுடியும். ஆனால் சர்வசாதாரணமாக 6 எம்.எம் முதல் 9 எம்.எம் வகை துப்பாக்கிகள், கள்ளச்சந்தையில் வலம் வருகின்றன.
துப்பாக்கி விஷயத்தில் இரண்டு வகையினர் உண்டு. வெளிநாட்டுத் தயாரிப்புகளில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு, ஸ்பெயின் நாட்டுத் தயாரிப்பான ஸ்டார் கன் 9 எம்.எம். பிஸ்டல்கள், இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான ஜெரிகோ 941 வகையான டபுள் ஆக்சன் துப்பாக்கிகள், இத்தாலி தயாரிப்பான பெராட்டா 92, ஜெர்மனி தயாரிப்பான சவூர் வகை துப்பாக்கிகள் கொஞ்சம் காசை தாராளமாக செலவுசெய்தால் கிடைக்கும் என்கிறார்கள்.
கைத்துப்பாக்கி பெரும்பாலும் ஆறு பகுதிகளும் தனித்தனியாக ஸ்கிராப் மூலம் வரவழைக்கப்பட்டு, இங்கு அசெம்பிள் செய்யப்படுகின் றன. வேறு மிஷின்கள் அசெம்பிள் செய்ய இறக்குமதி செய்யும்போது அதில் இந்த ஆறு பகுதிகளும் கலந்து வருவதால் சுங்கத்துறையோ, காவல் துறையோ இதை எளிதில் கண்டு பிடிக்க முடிவதில்லை. இந்த வகைத் துப்பாக்கிகள் பெரும்பான்மையாக மும்பை, கேரள மாநிலம் கொச்சின், தமிழகத்தில் தூத்துக்குடி, சென்னைத் துறைமுகம் வழியாகவும், வங்கதேசம், நேப்பாளத்தில் இருந்து இந்தியாவின் மேற்குவங்கம் மாநிலம் வழியாக மற்ற மாநிலங்களுக்கும் வருகின்றன.
அதேபோல இலங்கையிலிருந்து கள்ளத்தோணி வழியாகவும் சில மீன்பிடி படகுகள் மூலமும் வருகின்றன. சில புரோக்கர்கள் மூலம் சமூகவிரோத கும்பல் கையில்சேர்கிறது. பெரும்பாலும் ஜெயில் நட்பில்தான் எங்கு கிடைக் கிறது, என்ன விலையென ஒரு வருக்கொருவர் அறிந்துகொள் கிறார்கள்.
நாட்டுத் துப்பாக்கி ஐந்தாயிரம் ரூபாய் முதல் எழுபது ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றது. வெளிநாட்டு நவீன துப்பாக்கிகள் ஆரம்பவிலை ஒருலட்சம் ரூபாய் முதல் வெரைட்டியாக கிடைக்கின் றது. இந்த விவகாரத்தை தனிப்படை அமைத்துக் கண்டுபிடிக்காவிட்டால், கௌபாய் பட வில்லன், ஹீரோக் களைப் போல ஆளாளுக்கும் துப்பாக்கியை கையில்வைத்துக் கொண்டு சுட்டுக்கொள்வதில்தான் போய்முடியும்.