"ஹலோ தலைவரே, தீபாவளி சமயத்தில் எடப்பாடிக்கு எதிராக, பல வகையிலும் அணு குண்டுகள் வெடித் திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே... சசிகலா சார்பில், டாக்டர் வெங்கடேஷ் தீபாவளி கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார். அதில் மாஜி மந்திரிகளான விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்துகொண்டு, எடப்பாடிக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்கள். அதில் கலந்துகொண்ட விஜயபாஸ்கர், அ.தி.மு.க.வுக்கு சசிகலா வந்தால், அது சிறப்பான எதிர்கால நிகழ்வாக அமையும் என்று தழுதழுத்துப் போய் பேசினாராம். இன்னொரு பக்கம் எடப்பாடிக்கு எதிராக மறைமுக பவர் யுத்தத்தை நடத்திவரும் மாஜி மந்திரி வேலுமணியும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளைப் பல பகுதிகளில் இருந்தும் அழைத்து, தீபாவளி விருந்து கொடுத்து, அவர்களை அசத்தியிருக்கிறார். இதில் சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. மா.செ.க்கள் ஐந்துபேரும் கலந்துகொண்டு, எடப்பாடியின் ஹார்ட்பீட்டை எகிற வைத்திருக்கிறார்களாம். இவர்களில் பலரும் வேலுமணியின் காலைத் தொட்டு வணங்கி, ஆசிபெற்றது எடப்பாடியின் கோபத்தைப் பல மடங்கு உயர்த்தியிருக்கிறது என்கிறார்கள்.''”
"தி.மு.க. இளைஞரணி மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்திருக்கிறதே?''”
"தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை, அதன் மாநிலச் செயலாள ரான உதயநிதி, சேலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடத்துகிறார். இதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதில் பங்கேற்க, தமிழகம் முழுவதிலுமுள்ள இளைஞர்களை நேரில் சந்தித்து அழைக்கும் வகையில், பிரம்மாண்டமான மோட்டார் சைக்கிள் பேரணியை நவம்பர் 15ல் கன்னியாகுமரியில் துவக்கி வைத்திருக்கிறார் உதயநிதி. இதுவரை இளைஞரணியில் இல்லாத புதிய சிந்தனை இது என்கிறார்கள் உடன்பிறப்புகள். குமரியில் தொடங்கிய இந்த மோட்டார் சைக்கிள் பேரணி, அனைத்து மாவட் டங்களின் வழியாகவும் ஏறத்தாழ 8,647 கி.மீ. தூரம் பயணித்து, இந்தமாத இறுதியில் சென்னையை வந்தடையும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தப் பேரணி மூலம், சேலம் மாநாட்டிற்கு 3 லட்சம் இளைஞர்
"ஹலோ தலைவரே, தீபாவளி சமயத்தில் எடப்பாடிக்கு எதிராக, பல வகையிலும் அணு குண்டுகள் வெடித் திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே... சசிகலா சார்பில், டாக்டர் வெங்கடேஷ் தீபாவளி கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார். அதில் மாஜி மந்திரிகளான விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்துகொண்டு, எடப்பாடிக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்கள். அதில் கலந்துகொண்ட விஜயபாஸ்கர், அ.தி.மு.க.வுக்கு சசிகலா வந்தால், அது சிறப்பான எதிர்கால நிகழ்வாக அமையும் என்று தழுதழுத்துப் போய் பேசினாராம். இன்னொரு பக்கம் எடப்பாடிக்கு எதிராக மறைமுக பவர் யுத்தத்தை நடத்திவரும் மாஜி மந்திரி வேலுமணியும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளைப் பல பகுதிகளில் இருந்தும் அழைத்து, தீபாவளி விருந்து கொடுத்து, அவர்களை அசத்தியிருக்கிறார். இதில் சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. மா.செ.க்கள் ஐந்துபேரும் கலந்துகொண்டு, எடப்பாடியின் ஹார்ட்பீட்டை எகிற வைத்திருக்கிறார்களாம். இவர்களில் பலரும் வேலுமணியின் காலைத் தொட்டு வணங்கி, ஆசிபெற்றது எடப்பாடியின் கோபத்தைப் பல மடங்கு உயர்த்தியிருக்கிறது என்கிறார்கள்.''”
"தி.மு.க. இளைஞரணி மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்திருக்கிறதே?''”
"தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை, அதன் மாநிலச் செயலாள ரான உதயநிதி, சேலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடத்துகிறார். இதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதில் பங்கேற்க, தமிழகம் முழுவதிலுமுள்ள இளைஞர்களை நேரில் சந்தித்து அழைக்கும் வகையில், பிரம்மாண்டமான மோட்டார் சைக்கிள் பேரணியை நவம்பர் 15ல் கன்னியாகுமரியில் துவக்கி வைத்திருக்கிறார் உதயநிதி. இதுவரை இளைஞரணியில் இல்லாத புதிய சிந்தனை இது என்கிறார்கள் உடன்பிறப்புகள். குமரியில் தொடங்கிய இந்த மோட்டார் சைக்கிள் பேரணி, அனைத்து மாவட் டங்களின் வழியாகவும் ஏறத்தாழ 8,647 கி.மீ. தூரம் பயணித்து, இந்தமாத இறுதியில் சென்னையை வந்தடையும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தப் பேரணி மூலம், சேலம் மாநாட்டிற்கு 3 லட்சம் இளைஞர்கள் வரை திரட்டுவதற்குத் திட்ட மிட்டிருக்கிறாராம் உதயநிதி.''”
"எடப்பாடி தரப்பில் தி.மு.க. ஆட்சிக் கெதிராக விவரங்கள் திரட்டப்படுதாமே?''”
"கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அதை கரப்சன், கமிஷன், கலெக்சன் என்கிற முழக்கங்களைக் கொண்டு கடுமையாக விமர்சித்திருந்தார் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின். அதே முழக்கத்தை தி.மு.க. அரசுக்கு எதிராகக் கையில் எடுக்கிறார் எடப்பாடி. இதற்காக இப்போதைய தி.மு.க. ஆட்சியில் முக்கிய துறைகளில் கோலோச்சும் தனக்கு விசுவாசமான ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளின் உதவியுடன் தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் குறித்து அவர் சேகரித்துவருகிறாராம். தேர்தல் நேரத்தில், இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்து வதுதான் அவர் திட்டமாம். அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும் இதே பாணியில் தங்கள் பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துச்செல்ல இருக்கிறார்களாம். எடப்பாடியின் இந்த மூவ்களை, ஆளுங்கட்சித் தரப்பு கூர்ந்து கவனித்துவருகிறது.''”
"நடிகர் விஜய் தரப்பில் பரபரப்பு அதிகம் தெரிகிறதே?''”
"2026-ல் நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, நேரடி அரசியலுக்கு வருகிறாராம் நடிகர் விஜய். அதற்காக, இப்போதிலிருந்தே அரசியல் கட்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார். இதற்காக திராவிடம், தலித்தியம், தேசியம் ஆகிய மூன்றையும் உயர்த்திப் பிடிக்கும் நோக்கில், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகிய தலைவர்களை தனது முன்னோடிகளாக அரசியல் களத்தில் உயர்த்திப்பிடிக்க இருக்கிறாராம் விஜய். இந்த நிலையில், தமிழக இளைஞர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, அவர்களின் உயர் படிப்புகளுக்கு உதவும் பாடநூல்கள் இடம்பெறும் இலவச நூலகங்களை 234 தொகுதிகளிலும் அவர் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து தங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விவரிக்க, விரைவில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் முடிவிலும் நடிகர் விஜய் இருக்கிறாராம். இந்த நூலகங்களுக்காக ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர் படிப்பு கள் தொடர்பான நூல் களை எல்லாம் அவர் தரப்பு சேகரித்து வருகிறது. இதற்கிடையே, தனது லியோ படத்தின் வெற்றி விழாவின்போது, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்; ஒரே ஒரு உலக நாயகன்தான்; ஒரே ஒரு கேப்டன்தான்; ஒரே ஒரு தலதான் என்று அழுத்தமாக நடிகர் விஜய் பேசியதில், ரஜினி, கமல், விஜய்காந்த், அஜித் உள்ளிட்டவர்களின் ரசிகர்களும் நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனராம். இதுவும் விஜய்யின் திட்டமிட்ட ஸ்டேட்மென்ட்டாம்.''”
"டாஸ்மாக்கின் தீபாவளி விற்பனைச் சாதனையை வைத்து தி.மு.க.வுக்கு எதிர் பிரச் சாரத்தை பா.ம.க. கையில் எடுத்திருக்கிறதே?''”.
"ஆமாங்க தலைவரே, இந்த வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ் மாக்கில் 633 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்திருப்பதாக அதன் நிர்வாகம் பெருமிதமாக அறிவித்திருக்கிறது. இப்படி மது விற்பனை தாறுமாறுமாக உயர்வதும், அதனை வெளிப்படையாகச் சொல்வதும், பெண்கள் மத்தியில் தி.மு.க. அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்த நிலையில், டாஸ்மாக் விற்பனையையும், மகளிர் உரிமைத் தொகையையும் இணைத் துக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்படி நடப்பு மாதத்தில் அரசு செலுத்திய தொகை 1,138 கோடி ரூபாயில் பெரும் பகுதி, மது வணிகம் மூலம் அரசுக்கே திரும்ப கிடைக்கும் அவலம் நடந்திருக்கிறது என்றும், இந்தநிலை நீடித்தால் தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அவரது இந்தப் புகாரை மக்களிடம் பா.ம.க.வினர் நேரடியாகப் பரப்பி வரு கிறார்கள்.''”
"சேலம் எம்.எஸ்.எம்.இ. மோசடி விவகா ரத்தில் பா.ஜ.க. தரப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அண் ணாமலை மறுத்திருக் கிறாரே?''”
"சேலத்தில் எம். எஸ்.எம்.இ. என்ற அமைப்பின் பெயரில் சிறு, குறு கடன்கள் பெற்றுத் தருவதாகக் கூறி, பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் மெகா மோசடி விவ காரத்தில் நடிகை நமீதாவும் அவர் கணவரும் சம்மந்தப்பட்டிருப் பதைக் கூட நம் நக்கீரன்தான் முதன்முதலில் வெளிச் சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் விசாரணை நடந்துவரும் நிலை யில், இந்த மோச டிக்கும் பா.ஜ.க.வுக் கும் தொடர் பில்லை. இது குறித்து பா.ஜ.க. தரப்புதான் முதன் முதலில் புகார் கொடுத்தது என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலை மறுப்பு தெரிவித்திருக் கிறார். ஆனால் பா.ஜ.க. தரப்பு வழக்கறிஞரான பால்கனகராஜ்தான், இந்த விவகாரத்தில் சிக்கிய முத்துராமனுக்கு பெயில் பெட்டிசன் போட்டிருக்கிறார். இந்த மோசடி விவகாரத்தில் தொடர்புடையை மஞ்சுநாத் என்கிற பா.ஜ.க. பொறுப்பாளர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் பலரும் பா.ஜ.க. தொடர்பில் இருப்பதோடு, இந்த விவகாரத்தில் அண்ணாமலைக்கு 18 கோடி ரூபாய்வரை கொடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையில் கொடுக்கப்பட்ட வாக்குமூலம் உறுதி செய்திருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தரப்பு கடும் அதிருப்தியை மக்கள் மத்தியில் சம்பாதித்திருக்கிறது.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். ராஜ்பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் ஏகத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதில் தொடர்புடைய ரௌடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ராஜ் பவன், ஒன்றிய உள்துறைக்கும் ரிப்போர்ட் அனுப்பியதால், என்.ஐ.ஏ.வின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலை யில், உடனடியாக கருக்கா வினோத் மீது 3 செக்சன் களில் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், விரைவில் விசா ரணையை தொடங்க இருக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், இதன் ஒருகட்டமாக, ரௌடி கருக்கா வினோத்தை தங்கள் கஷ்டடியில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறதாம். சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தி.மு.க. அரசுக்கு எதிராக ஏதோ ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்று காவல்துறையிலேயே டாக் அடிபடுகிறது.''”
___________
இறுதிச் சுற்று!
"அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்ஹெட் களைப் பயன்படுத்த ஓ.பி.எஸ்.ஸுக்கு தடைவிதிக்க வேண்டும்' என்று எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை ஏற்று, இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஓ.பி.எஸ்., "என்னையும் எனது ஆதரவாளர் களையும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், எனக்கு எதிராக இடைக்கால தடை விதித்தது சட்டவிரோதம். அதனால் இடைக்கால தடையை நீக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டி ருந்தார். ஓ.பி.எஸ்.ஸின் இந்த மேல்முறையீட்டு வழக்கு வியாழக்கிழமை (16-11-2023) சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் தனக்கு சாதகமான உத்தரவு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்ஓ.பி.எஸ். இந்த நிலையில்... தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் கிடப்பிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்திருப் பதில் தமிழக அரசுக்கும் ஆளுநருக் கும் மோதல் வெடித்தபடி இருந்தன. ஆளுநரின் எதேச்சதிகாரத்தை ஜீரணிக்க முடியாமல் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "ஆளுநர்கள் மக்கள் பிரதிநிதிகள் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒரு அரசாங்கம் நிறை வேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏற்புடையதில்லை'' என்று எச்சரித்த துடன் ஆளுநர் பதிலளிக்க அவ ருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஆளுநர் ரவி (இது குறித்து கடந்த இதழில் விரிவாக எழுதியிருக்கிறோம்). இந்த நிலையில், ஒப்பதலளிக்காமல் கிடப்பில் வைத்திருந்த சட்ட மசோதாக்களை 16-ந் தேதி வியாழக்கிழமை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியிருக் கிறார். இதே மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தால் ஒப்புதலளித்துத்தான் ஆகவேண் டும். அதனால், திருப்பி அனுப்பப் பட்ட சட்ட மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்ற சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் 18-ந் தேதி சனிக்கிழமை கூட்டப்படுகிறது.
-இளையர்