வேலூரிலிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் (தனி) ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன. இதில் அரக்கோணம், சோளிங்கர் ஆகிய இரண்டு தொகுதிகள் அ.தி.மு.க. வசமும் ராணிபேட்டை, ஆற்காடு தொகுதிகள் தி.மு.க. வசமும் உள்ளன. நான்கு தொகுதிகளுக்கு இரண்டு தரப்பிலும் எம்.எல்.ஏ. சீட் ரேஸில் யார், யார் மோதுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராணிப்பேட்டை

மாவட்டத்தின் தலைநகரான இத்தொகுதியில் வன்னியர்கள்(28%) பட்டியலினம்(26%) இஸ்லாமியர்கள்(20%) முதலியார்கள்(18%) என்ற வரிசையில் வாக்கு வங்கி உள்ளது.

அ.தி.மு.க: முதல்வர் எடப்பாடியின் கருணைப் பார்வை தனக்கு இருப்பதால் சீட் நிச்சயம் என்ற ஆசையில் உள்ளார் ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கித் தலைவரும் தொழிலதிபருமான சுகுமார். இவருக்குப் போட்டியாக வன்னிய சமூக பிரமுகரான சுமைதாங்கி ஏழுமலை ரேஸுக்கு வருகிறார். இதற்கிடையே ராஜ்யசபா எம்.பி.யான முகமது ஜான், நான் சொல்ற ஆளுக்கு சீட் கொடுங்க என எடப்பாடியிடம் பிட்டைப் போட்டிருக்கிறார்.

Advertisment

அ.தி.மு.க. கூட்டணியான பா.ம.க. வலுவாக இருப்பதால் வன்னியர் சங்க செயலாளர் முரளி, சமூகநீதிப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் வக்கீல் ஜானகிராமனும் தே.மு.தி.க.வின் மா.செ. பூட்டுத்தாக்கு நித்தியாவும் ரேஸுக்கு ரெடியாக இருக்கிறார்கள்.

தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான காந்தியை மீறி யாருக்கும் சீட் கிடைக்காது என்றாலும் அப்ளிகேஷனை வாங்கி ஃபில்லப் பண்ணிக் கொடுப்போம் என்ற நிலையில் இருக்கிறார் மாஜி சேர்மன் குட்டி(எ) கிருஷ்ணமூர்த்தி.

ranipettai

Advertisment

ஆற்காடு

அ.தி.மு.க.: பா.ஜ.கவிற்குப் போய்விட்டு மீண்டும் தாய்க்கழகத்திற்கே ரிட்டர்ன் ஆன மாஜி எம்.எல்.ஏ. சீனுவாசன், தனக்கு சீட் கன்ஃபார்ம் என்ற ஷுரிட்டியில்தான் கட்சிக்கே வந்தாராம். ""போய்ட்டு வந்தவர்களுக்கு சீட்டுன்னா நாங்க சும்மாவிடுவோமா'' என உறுமுகிறார் மாஜி நகராட்சித் தலைவியும் மகளிரணி மா.செ.வுமான ராதிகா. அமைச்சர் வீரமணியின் பினாமியான தொழிலதிபர் சாரதி, ந.செ. ஜிம் சங்கர், "அம்மா பேரவை' பிச்சாண்டி ஆகியோரும் ரெடியாக இருக்கிறார்கள்.

நாம கணக்குப் போடுற 40 தொகுதில, இந்த தொகுதி கன்ஃபார்ம் என்ற முடிவுக்கு பா.ம.க. வந்துவிட்டதால், மாஜி எம்.எல்.ஏ. இளவழகன், மா.செ. சண்முகம், முன்னாள் மாநில து.த. ஏ.கே.நடராஜன் ஆகியோர் அன்புமணியே சரணம் என்கிறார்கள். தே.மு.தி.க. ஒ.செ. புண்ணியகோடியும் ஒரு ஓரமாக நிற்கிறார்.

திமுக: சிட்டிங் எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் இந்த முறையும் எம்.எல்.ஏவாகிவிட வேண்டும் என நினைத்தாலும் மக்களிடமிருந்து ரொம்பவே விலகிவிட்டார். உ.பி.க்களிடமிருந்தே எதிர்ப்புக் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. அதனால் மாஜி எம்.எல்.ஏ. சுப்பிரமணியத்தின் மகனும் மாவட்ட மருத்துவ அணியின் அமைப்பாளருமான டாக்டர் சரவணன், ஆற்காட்டாரின் தம்பி மகனான திமிரி கிழக்கு ஒ.செ.அசோக், மேற்கு ஒ.செ.ரமேஷ், ஆற்காடு கிழக்கு ஒ.செ.பாண்டுரங்கன் ஆகியோர் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

அரக்கோணம் (தனி )

ranipettai

அ.தி.மு.க.: தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரவிக்கு மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாகும் நினைப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த நினைப்புக்கு, ரவியின் சீட்டிங் மகிமைகளைச் சொல்லி ஆப்பு வைக்கிறார்கள் ர.ர.க்கள். இதனால் மாவட்ட வழக்கறிஞர் அணியில் உள்ள முரளிகிருஷ்ணன், மாஜி எம். எல்.ஏ. பவானி கருணாகரன், மாஜி கவுன்சிலர் பொன்.பார்த்திபன், வக்கீல் நரசிம்மன் ஆகியோர் சீட் கனவில் உள்ளனர்.

தி.மு.க.: கடந்த இடைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் பவானி வடிவேல். ரிசர்வ் தொகுதியில் நிற்கும் இவரது கணவர் வடிவேல் வன்னியர் என உ.பி.க்கள் எதிர்ப்புக் கொடி பிடித்ததால் லிஸ்டில் இருந்த ராஜ்குமார், எழில் இனியன் ஆகிய இருவரில் ராஜ்குமாருக்கு டிக் அடித்தது தலைமை. ஆனால் ராஜ்குமாரால் வெற்றி பெற முடியவில்லை. பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவரும் இடைத்தேர்தலில் வாய்ப்பை இழந்தவருமான அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் பட்டதாரி எழில் இனியனுக்கு இந்த முறை இனிப்பான சேதி வந்து சேரலாம் என்கிறார்கள். மாஜி ஐ.ஏ.எஸ்.சான சிவகாமியும் சீனில் இருக்கிறார்.

காங்கிரசுக்கு என்றால் வக்கீல் ரவி, ராஜ்குமார், நரேஷ்குமார், ஆகியோரும் வி.சிக்களுக்கு என்றால் தமிழ்மாறன், இளம்சேகுவேரா, மா.செ.கௌதமன் ஆகியோர் ஆவலாக உள்ளனர்.

அ.ம.மு.க.வில் நெமிலி ஒ.செ.மணிவண்ணன், நகர்மன்ற மாஜி சேர்மன் கண்ணதாசன் ஆகியோரும் புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தியும் மல்லுக்கட்டுகிறார்கள்.

சோளிங்கர்

அ.தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ. சம்பத் குமாரை ஓவர்டேக் பண்ணி, இடைத் தேர்தலில் அமைச்சர் வீரமணி, மா.செ.ரவியால் பறிபோன வாய்ப்பை கேட்ச் பண்ணியே தீருவேன் என்கிறார் பெல் கார்த்திகேயன். கிழக்கு ஒ.செ. ஏ.எல்.விஜ யன், காவேரிப்பாக்கம் ஒ.செ. கார்டன் ராஜா போன்றோர் முண்டா தட்டுகிறார் கள். கூட்டணிக் கட்சியான பா.ம.க.வில் இப்போதே கள வேலைகளை ஆரம்பித்து விட்டனர். மாநில து.பொ.செ.சரவணன், மா.செ.கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க செயலாளர் தீனதயாளன் ஆகியோரும் தைலாபுரத்தின் கருணைக்காக காத்திருக்கிறார்கள்.

2011-ல் இத்தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த தே.மு.தி.க. மனோகரனுக்கு விஜயபிரபாகரனின் ஆசி உள்ளது. "அவரு அரக்கோணம், நான் இந்த தொகுதிக்காரன்' என்கிறார் ஒ.செ. யுவராஜ்.

தி.மு.க.: ""கூட்டணிக் கட்சி என்ற முறையில் எனக்கு சீட் வாங்கித்தாங்க, இல்லேன்னா நான் நேரடியா தி.மு.க.வில் சேர்ந்து சீட் வாங்கிக்குறேன். இது சம்பந்தமா மா.செ. காந்திகிட்டயும் பேசிட்டேன்''’’ என காங்கிரஸ் வி.ஐ.பி.யான முனிரத்தினம் பகீர் கிளப்பினார். அவருக்கு உத்தரவாதம் அளித்து சமாதானப்படுத்தியுள்ளாராம் கே.எஸ்.அழகிரி

கட்சி ஆரம்பிக்கும் முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ. சோளிங்கர் ரவி, தெம்புடன் களத்திற்கு வருகிறார்.

அ.ம.மு.க.வில் வக்கீல் பார்த்திபன் மட்டுமே ஒரே சாய்ஸாக இருக்கிறார்.

-து.ராஜா