நெல்லை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் சீட் ரேஸ் பரபரக்கிறது. இதில் அம்பா சமுத்திரம் தொகுதி பற்றி சில இதழ்களுக்கு முன் நக்கீரன் பதிவிட்டிருந் தது. மற்ற தொகுதிகளின் ரேஸ்..
திருநெல்வேலி
பரணி பாயும் திருநெல்வேலி பூமியின் தொகுதியைப் பெறுவதில் கட்சிப் புள்ளிகளிடையே மியூசிக்கல் சேர் ஓட்டம் அமர்க்களப்படுகிறது. "தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தொகுதி, எந்தக் கட்சிக்கு அல்வா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்' என்ற போதும், "அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்' என கட்சி அல்வா கொடுத்துவிடக்கூடாதென ஒவ்வொரு கட்சியிலும் பெரும்புள்ளிகள் சீட் வாங்க முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆளும்தரப்பான அ.தி.மு.க.வில், தச்சை கணேசராஜா, மா.செ. என்ற கெத்தில், "தனக்குத் தொகுதி நிச்சயம்' என்ற நம்பிக்கையிலிருக்கிறார். அமைப்புச்செயலாளரும் ஆவின் சேர்மனுமான சுதா.பரமசிவன் அரசியலில் சைலண்ட் புள்ளி. கட்சித் தலைமையான எடப்பாடியாரின் தயவிலிருப்பவர். அவைத் தலைவர் சங்கரலிங்கம், மாநில மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், எக்ஸ் மேயர் புவனேஸ்வரி, எக்ஸ் யூனியன் சேர்மனான கல்லூர் வேலாயுதம், பாசறையின் மாவட்டத் தலைவர் கார்த்திக் என்று அ.தி.மு.க.வின் வி.ஐ.பி. பொறுப்பாளர்களின் க்யூ கச்சை கட்டுகிறது.
அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பங்குபோடும் வகையில் டி.டி.வி.யின் அ.ம.மு.க.வின் அமைப்புச் செயலாளரான பால்கண்ணன் அடிப்படையில் அ.தி.மு.க.விலிருந்து வந்தவரென்றாலும், ஆரம்பம் தொட்டு டி.டி.வி.யின் கட்சியிலிருப்பவர். கூட்டணி என்று வந்தாலும் நெல்லையைப் பெற்றுவிட தீவிர முயற்சியி லிருப்பவர்.
தி.மு.க.வின் சைடிலிலோ அரசியல் பகடியில் சிக்காத சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஏ.எல்.எஸ்.லட்சுமணனுக்கு டஃப் கொடுக்கிறார் 2006-ன் எக்ஸ் எம்.எல்.ஏ.வான மாலை ராஜா. நெல
நெல்லை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் சீட் ரேஸ் பரபரக்கிறது. இதில் அம்பா சமுத்திரம் தொகுதி பற்றி சில இதழ்களுக்கு முன் நக்கீரன் பதிவிட்டிருந் தது. மற்ற தொகுதிகளின் ரேஸ்..
திருநெல்வேலி
பரணி பாயும் திருநெல்வேலி பூமியின் தொகுதியைப் பெறுவதில் கட்சிப் புள்ளிகளிடையே மியூசிக்கல் சேர் ஓட்டம் அமர்க்களப்படுகிறது. "தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தொகுதி, எந்தக் கட்சிக்கு அல்வா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்' என்ற போதும், "அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்' என கட்சி அல்வா கொடுத்துவிடக்கூடாதென ஒவ்வொரு கட்சியிலும் பெரும்புள்ளிகள் சீட் வாங்க முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆளும்தரப்பான அ.தி.மு.க.வில், தச்சை கணேசராஜா, மா.செ. என்ற கெத்தில், "தனக்குத் தொகுதி நிச்சயம்' என்ற நம்பிக்கையிலிருக்கிறார். அமைப்புச்செயலாளரும் ஆவின் சேர்மனுமான சுதா.பரமசிவன் அரசியலில் சைலண்ட் புள்ளி. கட்சித் தலைமையான எடப்பாடியாரின் தயவிலிருப்பவர். அவைத் தலைவர் சங்கரலிங்கம், மாநில மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், எக்ஸ் மேயர் புவனேஸ்வரி, எக்ஸ் யூனியன் சேர்மனான கல்லூர் வேலாயுதம், பாசறையின் மாவட்டத் தலைவர் கார்த்திக் என்று அ.தி.மு.க.வின் வி.ஐ.பி. பொறுப்பாளர்களின் க்யூ கச்சை கட்டுகிறது.
அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பங்குபோடும் வகையில் டி.டி.வி.யின் அ.ம.மு.க.வின் அமைப்புச் செயலாளரான பால்கண்ணன் அடிப்படையில் அ.தி.மு.க.விலிருந்து வந்தவரென்றாலும், ஆரம்பம் தொட்டு டி.டி.வி.யின் கட்சியிலிருப்பவர். கூட்டணி என்று வந்தாலும் நெல்லையைப் பெற்றுவிட தீவிர முயற்சியி லிருப்பவர்.
தி.மு.க.வின் சைடிலிலோ அரசியல் பகடியில் சிக்காத சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஏ.எல்.எஸ்.லட்சுமணனுக்கு டஃப் கொடுக்கிறார் 2006-ன் எக்ஸ் எம்.எல்.ஏ.வான மாலை ராஜா. நெல்லையில் கால்நடைக் கல்லூரி, நெல்லையப்பர் ஆலய தங்கத்தேர் உருவாக்கம், தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் போன்றவை இவரது கோரிக்கைகளால் கலைஞரால் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. ஐ.டி. விங்கின் மாநில துணை செயலாளரான சுப்பிரமணியன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் என ரேஸ் நீள்கிறது.
பாளையங்கோட்டை
அ.தி.மு.க. தரப்பில் விஜிலா சத்யானந்த், ஜெ.பேரவையின் மா.செ. ஜெரால்டு, அ.தி.மு.வின் பாளை பகுதி செயலாளர் ஜெனி, மகபூப் ஜான், அவைத்தலைவர் சங்கரலிங்கம் என்று கச்சை கட்டுகிறார்கள். கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய மக்கள் என்று மைனாரிட்டி சமூகத்தவர்கள் நிறைந்திருக்கும் பாளையில் அரசு ஊழியர்கள் ஏராளம் என்ற நிலையிலிருக்கும் இத்தொகுதி தி.மு.க.விற்கு அனுசரணையாக இருப்பது.
தி.மு.க.வின் தரப்பிலோ, சிட்டிங் எம்.எல்.ஏ.வான டி.பி.எம். மைதீன்கான் அடுத்த இன்னிங்சிற்கும் முயன்றுவருகிறார். கட்சித் தலைமையால் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருக்கும் மாநகர மா.செ.வான அப்துல்வகாப், கலைஞர் தென்பக்கம் வரும்போதெல்லாம், எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும் தி.மு.க.வின் பரம்பரை வழி குடும்பத்தின் சித்திக் ஆகியோரும் விடா முயற்சியிலிருக்கிறார்கள். இவர்களுடன் மாவட்ட மாணவரணிச் செயலாள ரான காஜாமுகம்மது. முன்னாள் மேலப்பாளையம் பகுதி செயலாளர் வி.எஸ்.டி. சாகுல் அமீது போன்றவர்களும் ரேஸிலிருப்பவர்கள்.
அ.ம.மு.க.விலோ, மேலப்பாளையம் பகுதி செயலாளரும் எக்ஸ் மண்டல சேர்மனுமான ஹைதர்அலி. அ.ம.மு.க.வின் அம்மா பேரவை செயலரும் சென்னைவாசியுமான சுரேஷ்குமாரும் போட்டியிலிருப்பவர்கள்.
இதனிடையே இம்முறை, பாளை தொகுதியைப் பெற தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி முயன்றாலும், நெல்லைப் பகுதியின் அதன் மாவட்ட நிர்வாகிகளுக்கிடையே யான உட்கட்சி விவகாரம் நீடிப்பது தடைக்கல்லாக உள்ளதாம்.
ராதாபுரம்
"அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கே வாய்ப்பு' என்ற அடிப்படையில் எம்.எல். ஏ.வான இன்பதுரை, தொகுதியிலுள்ள கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் கரன்சியால் நன்றாக கவனித்திருக்கிறாராம். இவரைத் தொடர்ந்து கட்சியின் அமைப்புச் செயலாளரும், தொகுதியில் அறிமுகமான வருமான ஏ.கே. சீனிவாசன் இம்முறை தொகுதியைப் பெற மேல்மட்டம் வரை காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.
தொகுதியின் கோரிக்கையான திசையன்விளையைத் தாலுகாவாக மாற்றினாலும், 1965-ன் போது முதல்வர் காமராஜ் வறட்சியான ராதாபுரம் தொகுதியின் 52 குளங் களும் நிரம்பும் வகையில் அமைந்த பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளின் தண்ணீர் தற்போது முழுமையாக எட்டாமல் 30 குளங்களுக்கு மட்டுமே எட்டுவதால் மீதமுள்ள குளங்களை நம்பியுள்ள விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கோபம் விவசாயிகளிடம் எதிரொலிக்கிறது.
தி.மு.க.வின் தரப்பிலோ, இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றி கடந்த தேர்தலில் வெறும் 49 வாக்குகளில் வாய்ப்பைப் பறிகொடுத்த அப்பாவு ரேஸில் இருக்கிறார். மறுவாக்கு எண்ணிக்கையில் முன்னணி பெற்றும் தனக்கான வெற்றி அறிவிப்புக்கான சட்டரீதியான போராட்டத்தை தொடர்ந்துவருபவருக்கு 2021 களம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கொரோனா காலத்திலிருந்தே மக்கள் நிவாரணப் பணிகள் உதவிகளைச் செய்த காரணத்தால் அரசால் எட்டு வழக்குகளுக்குள்ளானவரும், ஒ.செ.வுமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் நம்பிக்கை கொண்டுள்ளார். மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும் தி.மு.க.வின் ஐ.டி. விங்கில் தீவிரமாகச் செயல்படுபவருமான கிரகாம்பெல், தனது பள்ளி- கல்லூரி அமைப்பின் மூலம், இயலாதவர்களின் கல்விக்கு உதவுவது, கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி என ஸ்டாலினின் கவனத்தைப் பெற்றிருக்கிறார். தொகுதிகளைப் பெற அவரவர் ரூட்களில் வாகனங்கள் டாப்கியரில் பறக்கின்றன.
நாங்குநேரி
எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும் நாங்குநேரித் தொகுதியின் சீட்டைப் பெற அங்கு நடந்த இடைத்தேர்தல் போன்ற பரபரப்பு அனைத் துக் கட்சியினரிடமும் தொற்றியுள்ளது.
அ.தி.மு.க.வின் சார்பில் இடைத்தேர்தல் மூலம் செலவின்றி எம்.எல்.ஏ.வான ரெட்டியார்பட்டி நாராயணன் அதே ஜோரில் தீவிர முயற்சியிலிருக்கிறார். எம்.எல்.ஏ. என்ற கெத்தில் கட்சியினரையும், நிர்வாகிகளையும் அனுசரிக்கவும் உதவும் போக்கும் அவரிடம் இல்லாததால் கட்சியினர் உட்பட நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனராம். ஆனாலும் தலைமையில் தனக்கு ஆதரவு என்ற பிம்பத்தோடு இருப்பதால் செகண்ட் இன்னிங்ஸ் நிச்சயம் என்றும் நம்புகிறார். இவருக்கு நேர் எதிர்கோட்டிலிருப்பவர் ஒ.செ. விஜயகுமார். இவர்களுக்குள் ஏழாம் பொருத்தம். "ஓ.பி.எஸ். தயவால் சீட் பெற்றுவிடலாம் என்ற திட்டத்தில் எம்.எல்.ஏ. எதிரணியான மா.செ. தச்சை கணேசராஜாவின் பக்கம் நிற்பதால் வாய்ப்பு தவறாது' என்ற திட்டத்திலிருக்கிறார் ஒ.செ.விஜயகுமார்.
தான் சார்ந்த தேவர் சமூக வாக்குகள் தொகுதியிலிருப்பதால் "இலைக்கட்சி கூட்டணியோடு கரையேறிவிடலாம்' என்ற திட்டத்தில் தொகுதியைப் பெறப் பிரயத்தனப்படுகிறார் பா.ஜ.க.வின் தென்மண்டலப் பொறுப்பாளரான நயினார் நாகேந்திரன். ஆனால் தேவர் சமூகத்தவர்களில் பெரும்பானவர்கள் சசிகலா ஆதரவாளர்கள் என்பது நயினார் நாகேந்திரனை யோசிக்க வைத்திருக்கிறதாம். "தாமரை நின்றால் இலைப் புள்ளிகள் தேர்தலில் ஒத்துழைப்பின்றி சைலண்ட் ஆகிவிடுவார்கள்' என்றும் தொகுதியில் பேச்சுண்டு.
"1989-ன்போது தி.மு.க. எம்.எல். ஏ.வான உள்ளூர்வாசி ஆச்சியூர் மணிக்குப் பின்பு 30 வருடமாக நாங்குநேரி தி.மு.க.விற்கு ஒதுக்கப்படவில்லை. கூட்டணிக் கட்சி களுக்கே ஒதுக்கப்பட்டாலும் அக்கட்சியின் இறக்குமதி வேட்பாளர்களே எம்.எல்.ஏ.வாகியுள்ளனர்' என்ற ஆதங்கம் தொகுதி உ.பி.க்களிடையே பலமாக எதிரொலிக்கிறது. இம்முறை தொகுதி தி.மு.க.விற்கு ஒதுக்கப் படவேண்டும் என்ற தீவிரத்தி லிருக்கிறார்கள் உ.பி.க்கள்.
வர்த்தக அணி இணைச் செயலாளரான கிரகாம்பெல். ஒ.செ. சுடலைக்கண்ணு, களக்காடு ஒ.செ. பி.சி.ராஜன் ஆகியோருக்கு ஆசை உள்ளது. "கட்சியின் மூலமான வாய்ப்பு என்பது தி.மு.க.வின் தொழில்நுட்ப அணிப் பொறுப்பாளரான ஆரோக்ய எட்வின் பக்கம் சாதகமாக இருக்கிறது' என்கிறார்கள் கட்சியினர். தூத்துக்குடி எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட மகளிரணி செயலாளர் கனிமொழிக்காக தேர்தல் பிரச்சாரத்தைத், தீவிரமாக மேற்கொண்டவர் ஆரோக்ய எட்வின். அதனால் "கனிமொழி தயவில் தலைமை சீட் ஒதுக்கும்' என்ற நம்பிக்கையிலிருக்கிறார்.
கடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வாய்ப்பை இழந்த ரூபி மனோகரன், இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு இணையாகச் சளைக்காமல் “நூறு’"சி' வரை காலிபண்ணியவர். இம்முறை கூட்டணி சார்பில் தொகுதியைப் பெறுவதில் தீவிரம் காட்டுகிறார். அதுதொடர்பாக தனது நிலை பற்றிய கோரிக்கையை. தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடமும் வைத்துள்ளாராம். காங்கிரஸ் தலைமையிலும் பிரஷர் கொடுத்துவருகிறாராம். தொகுதி கிடைக்காத பட்சத்தில் சுயேட்சையாகவும் களமிறங்கும் திட்டமுள்ளதாம் ரூபியிடம்.
"தொகுதியின் ஒவ்வொரு குளத்திற்கும் தனிக் கால்வாய். களக்காட்டில் வாழைத்தார்களைப் பதமாக வைப்பதற்கான குளிர்சாதன வசதி செய்யப்படும்' என்று இடைத்தேர்தலில் ஆளும்கட்சி கொடுத்த வாக்குறுதிகள் பேச்சோடு நிற்பது தொகுதியின் ஆதங்கம். கடந்த காலங்களைவிட தற்போது நாங்குநேரியின் பருவ நிலையோ மாற்றத்திலிருக்கிறது.
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்