யாருக்குத் தொகுதி? வரிந்துகட்டும் கட்சிகள்! தென்காசி மாவட்ட ரேஸ்!

tenkasi

தென்காசி

தென்காசியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான செல்வமோகன்தாஸ் பாண்டியன் இ.பி.எஸ். ஆதரவாளர் என்பதால் அவருக்கு தென்காசி தெற்கு மா.செ.பொறுப்பு தரப்பட்டது. அப்போதே ஜோரில் தொகுதியைத் திரும்பவும் பெற்றுவிடலாம் என்ற திடமான நம்பிக்கையில் தேர்தலின் பொருட்டு தென்காசி தொகுதியின் கட்சிப் பொறுப்பாளர்களின் கி.க.செ.க்களுக்கு மூவாயிரம், பேரூர் செ.க்களுக்கு ஐந்தாயிரம், நகர கழக செயலாளர்களுக்கு பத்தாயிரம், ஒ.செ.க்களுக்கு பதினைந்தாயிரம், அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஜவுளி என கவனிப்பை அள்ளி வீசியிருக்கிறார்.

ஆனால் சிட்டிங்கிற்கு ஆப்புவைக்கும் வகையில் இறங்கியிருக்கிறார் அண்மையில் அ.தி.மு.க. பக்கம் வந்த நெல்லை கருப்பசாமி பாண்டியன். தி.மு.க. ஆட்சியின்போது கானா தென்காசியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அ.தி.மு.க.வின் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரிடமும் கானா, தன் வேண்டு கோளை வைத்ததால் தொகுதி அவர் வசமாகும் என்ற நம்பிக்கையில் இப்போதே தென்காசி தொகுதியிலுள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து தனக்கான ஆதரவைத் திரட்டி வருகிறாராம்.

tenkasi

கானாவின் இந்தச் செயல்பாடுகளை அறிந்த எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ், ஒருவேளை தென்காசி தொகுதியைக் கட்சி மேலிடம் கானாவுக்குக் கொடுத்துவிட்டால் தனது மா.செ. பொறுப்பில் வருகிற ஆலங்குளத்தில் சீட் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தென்காசி தொகுதியில் தன் கட்சியின் அனைத்துப் பொறுப் பாளர்களையும் கரன்சியால் கவனித்தது போன்று ஆலங்குளம் தொகுதியின் அனைத்துப் பொறுப் பாளர்களையும் கரன்சியால் அட்வான்சாக வளைத்து வைத்திருக்கிறாராம்.

அதேசமயம் தி.மு.க.விலோ, அக்கட்சியின் தெற்கு மா.செ.வான சிவபத்மநாபன் கனிமொழியின் தீவிர ஆதரவாளர். அவர்மூலம் தென்காசி யைப் பெற்றுவிடலாம் என்று காய்நகர்த்துகிறார். அவருக்குச் செக் வைக்கிறார் பாவூர்சத்திரத்தின் தி.மு.க. புள்ளியான ஆர்.கே. காளிதாஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்டாலினை வர வழைத்து பாவூர்சத்திரத்தில் தி.மு.க.வில் தென் மண்டல மாநாட்டை நடத்திப் பிரபலமானவர் ஆர்.கே.காளிதாஸ். தெட்சிணமாற நாடார் சங்கத்தின் தலைவரும் கூட என்றாலும் தொகுதியில் பரவலாக அறியப்பட்ட வி.ஐ.பி. என்பதால் இப்போதே தென்காசியைப் பெற மூவ

தென்காசி

தென்காசியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான செல்வமோகன்தாஸ் பாண்டியன் இ.பி.எஸ். ஆதரவாளர் என்பதால் அவருக்கு தென்காசி தெற்கு மா.செ.பொறுப்பு தரப்பட்டது. அப்போதே ஜோரில் தொகுதியைத் திரும்பவும் பெற்றுவிடலாம் என்ற திடமான நம்பிக்கையில் தேர்தலின் பொருட்டு தென்காசி தொகுதியின் கட்சிப் பொறுப்பாளர்களின் கி.க.செ.க்களுக்கு மூவாயிரம், பேரூர் செ.க்களுக்கு ஐந்தாயிரம், நகர கழக செயலாளர்களுக்கு பத்தாயிரம், ஒ.செ.க்களுக்கு பதினைந்தாயிரம், அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஜவுளி என கவனிப்பை அள்ளி வீசியிருக்கிறார்.

ஆனால் சிட்டிங்கிற்கு ஆப்புவைக்கும் வகையில் இறங்கியிருக்கிறார் அண்மையில் அ.தி.மு.க. பக்கம் வந்த நெல்லை கருப்பசாமி பாண்டியன். தி.மு.க. ஆட்சியின்போது கானா தென்காசியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அ.தி.மு.க.வின் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரிடமும் கானா, தன் வேண்டு கோளை வைத்ததால் தொகுதி அவர் வசமாகும் என்ற நம்பிக்கையில் இப்போதே தென்காசி தொகுதியிலுள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து தனக்கான ஆதரவைத் திரட்டி வருகிறாராம்.

tenkasi

கானாவின் இந்தச் செயல்பாடுகளை அறிந்த எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ், ஒருவேளை தென்காசி தொகுதியைக் கட்சி மேலிடம் கானாவுக்குக் கொடுத்துவிட்டால் தனது மா.செ. பொறுப்பில் வருகிற ஆலங்குளத்தில் சீட் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தென்காசி தொகுதியில் தன் கட்சியின் அனைத்துப் பொறுப் பாளர்களையும் கரன்சியால் கவனித்தது போன்று ஆலங்குளம் தொகுதியின் அனைத்துப் பொறுப் பாளர்களையும் கரன்சியால் அட்வான்சாக வளைத்து வைத்திருக்கிறாராம்.

அதேசமயம் தி.மு.க.விலோ, அக்கட்சியின் தெற்கு மா.செ.வான சிவபத்மநாபன் கனிமொழியின் தீவிர ஆதரவாளர். அவர்மூலம் தென்காசி யைப் பெற்றுவிடலாம் என்று காய்நகர்த்துகிறார். அவருக்குச் செக் வைக்கிறார் பாவூர்சத்திரத்தின் தி.மு.க. புள்ளியான ஆர்.கே. காளிதாஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்டாலினை வர வழைத்து பாவூர்சத்திரத்தில் தி.மு.க.வில் தென் மண்டல மாநாட்டை நடத்திப் பிரபலமானவர் ஆர்.கே.காளிதாஸ். தெட்சிணமாற நாடார் சங்கத்தின் தலைவரும் கூட என்றாலும் தொகுதியில் பரவலாக அறியப்பட்ட வி.ஐ.பி. என்பதால் இப்போதே தென்காசியைப் பெற மூவ்களைத் தொடங்கியிருக்கிறாராம்.

மா.செ.வான சிவபத்மநாபனுக்கு தென்காசியின் உட்கட்சியிலேயே எதிர்ப்பு. சுயநலம் காரணமாக கட்சிப் பொறுப்புகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே கொடுத்த தால் பொறுப்பு கிடைக்காத தி.மு.க.வினர் அதிருப்தியிலிருக்கின்றனர். அதோடு அனை வரையும் அரவணைக்கும் போக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு வேறு. முன்பு தி.மு.க.வின் மா.செ.வாக கானா இருந்தபோது தென்காசிக்கான மா.செ. பொறுப்பிலிருந்த துரைராஜை விடுவித்துவிட்டு சிவபத்மநாபனுக்கு அந்தப் பொறுப்பு தரப்பட்டதால், அதிருப்தியான துரைராஜின் தென்காசி நகர தி.மு.க ஆதர வாளர்கள் ஸ்லீப்பிங் செல்கள் போன்றிருக் கின்றனர்.

இந்த அதிருப்தியை அறிந்த மா.செ. சிவபத்மநாபன் தற்போது அடுத்த ஆப்ஷனாக பார்வையை அவர் பொறுப்பில் வரும் ஆலங்குளம் பக்கம் திருப்பியிருக்கிறார்.

tenkasi

கடையநல்லூர்

தி.மு.க.வின் கூட்டணியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான முகம்மது அபுபக்கர் தொகுதியில் எந்தவித அதிருப்திக்கும் ஆளாகாதவர். தொகுதியின் எந்த ஒரு மூலையிலும் மக்கள் பிரச்சினை என்றால் பாகுபாடின்றி உடனே ஸ்பாட்டிற்குப் போகும் அபுபக்கர் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். அரசை எதிர்த்து போராட்டமென்றாலும் அவர் சளைத்ததில்லை. அதனால் தொகுதியைத் தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தி.மு.க.வின் மேலிடம் வரை பேசி முடித்துவிட்டதால் அவரது ஆதரவாளர் கள் தொகுதியில் இப்போதே தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டனர். ஆனால் எம்.எல்.ஏ. சார்ந்த முஸ்லிம் கட்சியின் மேலிடத்திலோ இரு பிரிவாகச் செயல்படுகின்றனராம்.

கடையநல்லூர் தி.மு.க.விற்கு ஒதுக்கப்படலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், கட்சி மேலிடத்திலுள்ள தனக்கு வேண்டப்பட்ட முக்கியப் புள்ளிகளிடம் பேசி வரும் தி.மு.க.வின் மாநில வர்த்தக அணி து.செ.வான அய்யாத்துரைப் பாண்டியன், தொகுதியைப் பெற கடும் முயற்சியிலிருக்கிறார். ஏற்கனவே தொகுதி முழுக்க கொரோனா நிவாரண உதவிகளைச் செய்தது தனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறாராம், கடையநல்லூர், இல்லாவிட்டால் தென்காசி என்பது அவரது சாய்ஸாம்.

அ.தி.மு.க.விலோ மறைந்த எக்ஸ் அமைச்சரும், தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செந்தூர்பாண்டியனின் மகன் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி கடையநல்லூர் தொகுதியை உள்ளடக்கிய தென்காசியின் வடக்கு மா.செ. பொறுப்பிலிருப்பவர்.

மேலிட செல்வாக்கின் மூலம் கடைய நல்லூரை வசமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தத் தீபாவளியின்போது தொகுதியின் கி.க. செ.க்களுக்கு மூவாயிரம், பேரூர் செயலாளர்களுக்கு ஐந்தாயிரம், நகர கழக செயலாளர்களுக்குப் பத்தாயிரம், ஒ.செ.க்களுக்கு பதினைந்தாயிரம் என வைட்டமின் “ப“ கவனிப்பும், ஜவுளிகளும் கொடுத்து வளைத்து வைத்திருக்கிறாராம்.

அதேசமயம், கடையநல்லூர் தொகுதியைச் சார்ந்த அ.ம.மு.க.வின் தென்காசி மா.செ.வான பொய்கை மாரியப்பன், அ.ம.மு.க. சார்பில் நிற்க முயற்சிப்பதால் அ.தி.மு.க.விலிருந்து அ.ம.மு.க. விற்கு வந்தவர்கள் மற்றும் அ.தி.மு.க.விற் குள்ளிருக்கும் அவரது கணிசமான ஆதரவு வாக்குகள் பொய்கை மாரியப்பன் வசம் திரும்பும். இதனால் அ.தி.மு.க.வின் மா.செ. குட்டியப்பா விற்கு கடுமையான செக் ஆகும் என்ற பேச்சும் கிளம்புகிறது.

t

ஆலங்குளம்

தென்காசி, கிடைக்கவில்லை என்றால் ஆலங்குளம் என்ற எண்ணத்திலிருக்கும் தி.மு.க. வின் தெ.மா.செ. சிவபத்மநாபன், ஆலங்குளத்தை வசமாக்க அத்தொகுதி எம்.எல்.ஏ.வான பூங்கோதை ஆலடி அருணாவின் சகோதரன் தமிழ்வாணனைக் கொண்டு அவரது ஏற் பாட்டிலேயே கட்சி யின் தெ.மாவட்ட தொகுதிகளின் அனைத்துப் பொறுப் பாளர்களையும் வர வழைத்து ஆலங்குளத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள் ளார். இதனால் ஏற்பட்ட சர்ச்சைதான், சிட்டிங் எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவை மருத்துவமனையில் அட்மிட் ஆக வைத் தது. அ.தி.மு.க.விலோ தெ.மா.செ.வும் தென்காசித் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான செல்வமோகன்தாஸ் பாண்டி யன், தென்காசி கிடைக்கவில்லை என்றால் ஆலங் குளம் என்ற சாய்சில், ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்களை ஏற்கனவே வளைத்திருப்ப தால், அவரை மீறித் தொகுதி, ஆலங்குளம் நகரின் அ.தி.மு.க. புள்ளிகள் வசம் போக வாய்ப்பில்லை என்ற தகவலும் கிளம்புகிறது.

சங்கரன்கோவில் (தனி)

ஆளுந்தரப்பு மேலிடம், சிட்டிங் அமைச்சர்களை டிஸ்டர்ப் பண்ணுவதில்லை என நினைப்பதால் சங்கரன்கோவில், தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான ராஜலட்சுமிக்கே ஒதுக்கப்பட்டுவிட்டது என்ற பேச்சுக்கள் நகரின் அ.தி.மு.க. சர்க்கிளில் றெக்கை கட்டுகின்றன.

அதற்கேற்ப முதற்கட்டமாக அமைச்சர் ராஜலட்சுமி தொகுதியிலுள்ள அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களையும் வளைக்கும் வகையில், கி.க.செ.க்கள், பிரதிநிதிகளுக்கு ஐந்தாயிரம், பேரூர் செயலாளர்களுக்கு பத்தாயிரம் அடுத்து நகர, கழக மற்றும் ஒ.செ.க்கள் என அவரவர் ரேஞ்சிற்கு ஏற்ப தொகைகள் சுவீட் மற்றும் ஜவுளி வகைகள் என தீபாவளி அன்பளிப்புகள் தரப்பட்டுள்ளன.

தொகுதியின் அமைச்சர் அந்தஸ்து என்பதால் தொகுதிக்கு எத்தனையோ திட்டங்கள் நலப்பணிகள் கொண்டுவரலாம். ஆனால் அமைச்சர் ராஜலட்சுமியோ நகரின் பிரதானப் பணிகளை மேற்கொள்ளவில்லை. சங்கரன்கோவில் நெல்லையுடனே இருக்கவேண்டும். தென்காசி மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது என்று தொகுதி மக்கள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வரை சென்றும் விஷயத்தை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை. இதில் அவர் மீதான அதிருப்தி உண்டு.

தி.மு.க.விலோ எக்ஸ் அமைச்சரும் முன்னாள் எம்.பி.யுமான தங்கவேல், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியின் து.அமைப்பாளர் ராஜதுரை, ராஜையா, கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் மறைந்த அமைச்சர் கருப்பசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றியைப் பறிகொடுத்த அன்புமணி கணேஷ் என்று வரிசைகட்டுகிறது. தொகுதிக்கான திட்டம், மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு உழைக்கக்கூடிய புதிய வேட்பாளர்களே தொகுதியின் தற்போதைய சாய்ஸாக எதிரொலிக்கிறது.

வாசுதேவநல்லூர் (தனி)

தனித் தொகுதியான வாசுதேவநல்லூரின் சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான மனோகரன் மேலிட திட்டப்படி தனக்கே சீட் கிடைக்கும் எம்.எல்.ஏ.வுக்கே சீட் என்பதால் கட்சியின் பிற எம்.எல்.ஏ.க்களைப் போன்று தொகுதியின் அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் தீபாவளிக் கவனிப்பை நடத்தி குஷிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பம் முதல் ஒ.பி.எஸ்.சின் ஆதரவாளரானவர். இவரை எதிர்த்து அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான டாக்டர் துரையப்பாவும் முண்டுகிறார். மறைந்த முன்னாள் அமைச்சரான செந்தூர்பாண்டியனின் நெருங்கிய நண்பர். அதனால் அவரின் மகனும், அ.தி.மு.க.வின் வடக்கு மா.செ.வான குட்டியப்பாவின் மூலம் காய்களை நகர்த்தும் துரையப்பா, ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவராலும் அறியப்பட்டவர். நம்பிக்கையுடனிருக்கிறார்.

மனோகரன் சிட்டிங் எம்.எல்.ஏ. என்பதோடு சரி. தொகுதியின் விவசாயிகளின் முக்கியத் தேவையான தொகுதி மட்டுமல்லாது கிழக்கே விருதுநகர் மாவட்டம் வரை பயன்தரக்கூடிய செண்பகவல்லியம்மனின் அணையைச் செப்பனிட நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொகுதியின் ஆதங்கம்.

தி.மு.க.விலோ கொரோனா காலத்தில் தவித்த மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளைச் செய்து பரவலாக அறிமுகமான மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் பொன்ராஜ். மாவட்ட மருத்துவ அணியின் துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, மாவட்ட துணைச்செயலர் மாடசாமி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராசையா என வரிசை போகிறது.

அம்பாசமுத்திரம் (அம்பை)

தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான முருகையா பாண்டியன் அடுத்த ரவுண்ட் வருவதற்காக ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளராக இருந்து, பின்னர் இ.பி.எஸ். பக்கம் சாய்ந்த தால் தற்போது தொகுதியைப் பெறுவதில் ஓ.பி.எஸ். தனக்கு மறுப்புச் சொல்லமாட்டார் என்று நம்புகிறாராம். அதே நேரத்தில் தன்னுடைய எம்.எல்.ஏ. காலத்தில் தொகுதிக் கென்று எந்த ஒரு பிரதான பணிகளையும் மேற்கொள் ளாதவர் முருகையாபாண்டியன் என்ற அதிருப்தி நிலவு வதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறார், இத்தொகுதி யின் அ.தி.மு.க. எக்ஸ் எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையா. அ.ம.மு.க.விற்கு மாறி வந்த பெரும்பாலானோர்களோடு தானும் அ.தி.மு.க.வில் இணைந்த நிகழ்ச்சியைப் பெரிய அள வில் இ.பி.எஸ்.சைக் கொண்டு நடத்தியதால் அவருக்கு இம் முறை வாய்ப்பு என்கிறார்கள். கரன்சிக்கு வறுமையில்லாத இசக்கி சுப்பையாவின் மக்களுடனான அணுகுமுறையும், தேர்தலில் அவருக்குச் சாதகமாகும் என்ற பேச்சும் உண்டு.

தி.மு.க.வின் கிழக்கு மா.செ.வான ஆவுடையப்பன் அம்பையின் எக்ஸ் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் இறங்கிவந்து பேசுமளவுக்கு சகஜமான அணுகுமுறையைக் கொண்டவர். பரவலாக அறியப்பட்டவர் என்பதால் அம்பையை அவர் குறிவைக்கிறார். ஆனால் தொகுதி, கூட்டணியான கம்யூ னிஸ்ட் அல்லது காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

மாவட்டத்தில் தொகுதிகளைப் பெற கட்சியின ரிடையே மாரத்தான் ரேஸே நடக்கிறது.

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்

nkn281120
இதையும் படியுங்கள்
Subscribe