சட்டமன்ற சீட்களை வாங்குவதற்காக அனைத்துக் கட்சியினரும் காலில் வெந்நீரை ஊற்றாத குறையாக பதற்றத்திலும் பரபரப்பிலுமிருக்கின்றனர் முத்துக்குப் பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில்.
கோவில்பட்டி
அ.தி.மு.க.வின் தரப்பில் தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான கடம்பூர் ராஜூக்கே சீட் உறுதி யானதால் ஏற்கனவே வேலையை ஆரம்பித்துவிட்டார். வைட்டமின் “ப“வினால் கட்சியின் நிர்வாகிகள் அத்தனை பேரை யும் கவனித்தாலும் உள்கட்சியின் அதிருப்தியாளர்கள் தற்போது சைலண்ட் மோடிலிருக்கிறார்கள். நகரின் அரசியலில் எதிரணியி லிருக்கும் அ.ம.மு.க.வின் அமைப்பாளர் மாணிக்கராஜாவின் போட்டி, தனது வெற்றிக்கு சவாலாகிவிடுமே என்பதுதான் அவரின் கலக்கம். தி.மு.க. தரப்பிலோ சீட்டுக்காக உ.பி.க்களின் பேனல் வரிசை கட்டுகிறது. தி.மு.க.வின் ந.செ.வான கருணாநிதி, எம்.பி. கனிமொழியே சரணம் என்றிருக்கிறார். அடுத்து அறியப் பட்ட புள்ளியான ராமானுஜ கணேசன். கடந்தமுறை போட்டி யிட்டு 426 வாக்குகளில் வாய்ப்பை இழந்த தொழிலாளர் அணிச் செயலாளரான சுப்பிரமணியம் அந்த அனுதாபம் கைகொடுக்கும் சூழல் என்பதால் ஏ.வ.வேலுவின் மூலமாக காய் நகர்த்து கிறார். அவருக்குச் செக் வைக்கும் வகையில் வருபவர் மாவட்ட விவசாய அணியின் அமைப்பாளரான ராமர் மா.செ. கீதாஜீவனை நம்பியிருக்கிறார்.
அ.ம.மு.க.வின் அமைப்பாளரான கடம்பூர் மாணிக்கராஜாவும் சவால் விடுகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, அமைச்சரின் சொந்த கிராமம் அடங்கிய கயத்தாறு யூனிய னையே தன் வசப்படுத்தி சேர்மனானவர், அந்த யூனி யனில் அ.தி.மு.க.வை உண்டு, இல்லை என்றாக்கியவர். அதே ஜோரில் இம்முறை களத்திற்கு வருகிறார்.
தி.மு.க.வின் கூட்டணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இத் தொகுதியில் ஏழு முறை வென்றதைச் சுட்டிக்காட்டி தொகுதியைப் பெற தீவிர முயற்சியிலிருக்கிறது.
களம் சூடானாலும் தொகுதியின் முக்கியத் தேவையான குடிநீரின் இரண்டாம் பைப்லைன் திட்டம் முற்றுப் பெறாமல் இழுத்துக் கொண்டே போவது தொகுதி மக்களை அதிருப்தியில் வைத்திருக்கிறது.
விளாத்திகுளம்
அ.தி.மு.க.வின் சைடில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான சின்னப்பன் செகண்ட் இன
சட்டமன்ற சீட்களை வாங்குவதற்காக அனைத்துக் கட்சியினரும் காலில் வெந்நீரை ஊற்றாத குறையாக பதற்றத்திலும் பரபரப்பிலுமிருக்கின்றனர் முத்துக்குப் பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில்.
கோவில்பட்டி
அ.தி.மு.க.வின் தரப்பில் தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான கடம்பூர் ராஜூக்கே சீட் உறுதி யானதால் ஏற்கனவே வேலையை ஆரம்பித்துவிட்டார். வைட்டமின் “ப“வினால் கட்சியின் நிர்வாகிகள் அத்தனை பேரை யும் கவனித்தாலும் உள்கட்சியின் அதிருப்தியாளர்கள் தற்போது சைலண்ட் மோடிலிருக்கிறார்கள். நகரின் அரசியலில் எதிரணியி லிருக்கும் அ.ம.மு.க.வின் அமைப்பாளர் மாணிக்கராஜாவின் போட்டி, தனது வெற்றிக்கு சவாலாகிவிடுமே என்பதுதான் அவரின் கலக்கம். தி.மு.க. தரப்பிலோ சீட்டுக்காக உ.பி.க்களின் பேனல் வரிசை கட்டுகிறது. தி.மு.க.வின் ந.செ.வான கருணாநிதி, எம்.பி. கனிமொழியே சரணம் என்றிருக்கிறார். அடுத்து அறியப் பட்ட புள்ளியான ராமானுஜ கணேசன். கடந்தமுறை போட்டி யிட்டு 426 வாக்குகளில் வாய்ப்பை இழந்த தொழிலாளர் அணிச் செயலாளரான சுப்பிரமணியம் அந்த அனுதாபம் கைகொடுக்கும் சூழல் என்பதால் ஏ.வ.வேலுவின் மூலமாக காய் நகர்த்து கிறார். அவருக்குச் செக் வைக்கும் வகையில் வருபவர் மாவட்ட விவசாய அணியின் அமைப்பாளரான ராமர் மா.செ. கீதாஜீவனை நம்பியிருக்கிறார்.
அ.ம.மு.க.வின் அமைப்பாளரான கடம்பூர் மாணிக்கராஜாவும் சவால் விடுகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, அமைச்சரின் சொந்த கிராமம் அடங்கிய கயத்தாறு யூனிய னையே தன் வசப்படுத்தி சேர்மனானவர், அந்த யூனி யனில் அ.தி.மு.க.வை உண்டு, இல்லை என்றாக்கியவர். அதே ஜோரில் இம்முறை களத்திற்கு வருகிறார்.
தி.மு.க.வின் கூட்டணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இத் தொகுதியில் ஏழு முறை வென்றதைச் சுட்டிக்காட்டி தொகுதியைப் பெற தீவிர முயற்சியிலிருக்கிறது.
களம் சூடானாலும் தொகுதியின் முக்கியத் தேவையான குடிநீரின் இரண்டாம் பைப்லைன் திட்டம் முற்றுப் பெறாமல் இழுத்துக் கொண்டே போவது தொகுதி மக்களை அதிருப்தியில் வைத்திருக்கிறது.
விளாத்திகுளம்
அ.தி.மு.க.வின் சைடில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான சின்னப்பன் செகண்ட் இன்னிங்ஸிற்காக வரிந்துகட்டுகிறார். முன்னெப் போதுமில்லாமல் அன்றாடம் கிராமங்களுக்குச் சென்று மக்கள் தரிசனத்தை நடத்துகிறார். இடைத்தேர்தலில் எம்எ.ல்.ஏ.வானவர் தொகுதிக்குக் குறிப்பிட்டவாறு எதையும் செய்யவில்லையே என்பது மக்களின் ஆதங்கம்.
அடுத்து எக்ஸ் சேர்மனான காந்தி காமாட்சி. மாவட்ட பஞ்சாயத்துக் குழு தலைவரான சத்யா. முன்னாள் எம்.எல்.ஏ.வான என்.கே.பெருமாளின் மகனும் எக்ஸ் விளாத்திகுளம் ஒன்றிய சேர்மனுமான என்.கே.பி.வரதராஜப்பெருமாள் என வரிசை கட்டுகின்றனர். மேற்படி நான்கு பேர்களும் ரெட்டியார் சமூகம் என்பதால் தொகுதியில் மெஜாரிட்டியான அவர்களின் வாக்குகளையே குறிவைக்கின்றனர். இவர்கள் அமைச்சர் கடம்பூர்ராஜூவின் தயவிலிருப்பவர்கள்.
தொடர்ந்து கடந்த 2016 தேர்தலில் வாய்ப்புக்கேட்டு கிடைக்காமல்போன புதூரின் தனஞ்செயன் இம்முறை தனக்கு, இல்லாவிட்டால் தன் மனைவியும் புதூர் ஒன்றிய சேர்மனுமான சுசிலா தனஞ்செயன் இருவரில் ஒருவருக்காக சீட் பெற அமைச்சர் கடம்பூர் ராஜூவை நம்பி யிருக்கிறார். அடுத்து மாவட்டக் கவுன்சிலரும் புதூர் அ.தி.மு.க.வின் ஒ.செ.வுமான ஞானகுருசாமி என க்யூ நீள்கிறது.
தி.மு.க. வின் தரப்பிலோ கடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வசந்தம் ஜெயக்குமார் கனி மொழியை வெகுவாக நம்புகிறார். அண்மையில் தி.மு.க.வில் ஐக்கியமான மார்க்கண்டேயன், கடந்த இடைத் தேர்தலில் மெகா கூட்டணிகளை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு தனக்கான ஆதரவு வாக்குகளை நிரூபித்தவர் என்பதால் நம்பிக்கையோடு இருக்கிறார். தொடர்ச்சியாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் மார்க்கண்டேயன் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் சைடிலிருப்பவர்.
எக்ஸ் எம்.எல்.ஏ. ஆர்.கே.பெருமாளின் மகனான ஆர்.கே.பி. ராஜசேகரன் இடைத் தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காமல் போனதால் இம்முறை தீவிர முயற்சியிலிருக்கிறார்.
தேவர் வாக்குகளை மெஜாரிட்டியாகக் கொண்ட கோவில்பட்டியில் அச்சமூகம் சார்ந்த மாணிக்கராஜாவும் தி.மு.க.வின் சுப்பிரமணியன் இருவரும் நின்றால் அந்த வாக்குகள் சிதறும். அதனால், தான் சார்ந்த நாயக்கர் வாக்குகள் மூலம் கரையேறிவிடலாம் என்ற கணக்கிலிருக்கும் அமைச்சர் கடம்பூர்ராஜூ, ஒருவேளை கோவில்பட்டித் தொகுதி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டு வைகோ மகன் துரை வையாபுரி களம் கண்டால் நாயக்கர் சமூக வாக்குகள் சிதறும். அது தனக்குச் சிக்கலாகிவிடும் என்ற எண்ணத் தில் கோவில்பட்டியை விடுத்து அடுத்த ஆப்ஷனாக விளாத்திகுளத்திலிறங்குவது என்ற மூடிலிருக்கிறாராம்.
ஒட்டப்பிடாரம் (தனி)
கடந்த இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பை பறிகொடுத்த அ.தி.மு.க.வின் மோகன் வடக்கு மா.செ.வும் அமைச்சருமான கடம்பூர் ராஜின் பாசத்துக்குரியவர். அவரது சிபாரிசின்படி மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவர் பதவி கிடைக்க அதில் சமாதானமான மோகன் இந்த முறையும் வாய்ப்புக்காக அமைச்சரை மலையளவு நம்பியிருக்கிறார்.
அவருக்கு செக் வைக்கும் வகையில் டஃப் கொடுக்கிறவர் மாவட்ட ஆவின் சேர்மனான சின்னத்துரை. கட்சித் தலைமையான எடப்பாடி பழனிசாமியிடமே சீட் குறித்து மூவ்செய்து வருவதால் உற்சாக மூடிலிருக்கிறார் சின்னத்துரை.
தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான சண்முகையா, இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரம், பணபலம் இவைகளையும் மீறி உ.பி.க்களின் தேர்தல் பணியால் எம்.எல்.ஏ.வானவர். தொகுதியின் மேற்கு ஒ.செ.வும்கூட. இந்த முறையும் சீட்டை வாங்கிவிட கட்சித் தலைமையை நம்பியிருக்கிறார்.
தொகுதியின் வடக்கு ஒ.செ.வும் ஒட்டப்பிடா ரம் பஞ்சாயத்துத் தலைவருமான இளையராஜா தெற்கு மா.செ. அனிதாவின் சிபாரிசின் மூலம் காய்களை நகர்த்தி வருபவர். தொகுதியின் கிழக்கு ஒ.செ.வான காசிவிஸ்வநாதன் சீட்டைப் பெற மா.செ. கீதாஜீவன் மூலம் ரேஸைத் தொடங்கியிருக்கிறார்.
ஸ்ரீவைகுண்டம்
மூன்றாம் முறையாக எம்.எல்.ஏ.வாகி இருக்கும் அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் தூத்துக்குடி மா.செ.வு.மான சண்முகநாதனுக்குத் தொகுதி உறுதி என்றானதால் வைட்டமின் "ப'வின் துணையை மட்டும் நம்புகிறார். தன்னுடைய எம்.எல்.ஏ. நிதியின் மூலமாக ஒருசில பணிகளை மட்டுமே தொகுதியில் செய்தவர். தன்னுடைய பண்டாரவிளைப் பகுதிக்கு அதிகம் செய்திருக் கிறார். பிற பகுதிகளில் முக்கிய தேவைகளைக் கவனிக்காதவர் என்ற அதிருப்தி நீடிக்கிறது.
""தாமிரபரணியாற்றில் தூர் வாரப்படாததால் விவசாயத்திற்கு பயன்படாமல் 400 கன அடி நீர் வீணாகக் கடலில் கலப்பதைக் கண்டுகொள்ள வில்லை. பொறியாளர்களான ரெகுநாதன், வினோத் இருவரும் ஆளும் கட்சியினரின் சப்போர்ட்டால் பல வருடங்களாக நிலையாக ஸ்ரீவைகுண்டத்திலேயே நீடிப்பதால் ஆளும்கட்சியின், விவசாயி களுக்கே தண்ணீர் மடைகள் திறக்கப்படுகின்றன. மற்ற விவசாயிகளுக்கு வறட்சிதான்'' என் கிறார் விவசாயிகளின் பொறுப்பாளரான வழக்கறிஞர் முத்து ராமலிங்கம்.
தி.முக.வின் தரப்பிலோ மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் உமரிசங்கர். தலைமைப் பொ.குழு உறுப்பினான சொர்ணகுமார், மாநில இளைஞரணி து.செ.வான ஜோயல் கட்சித் தலைமையின் தொடர் டச்சிலிருப்பதால் சீட்டுக்காகக் கடும் முயற்சியெடுக்கிறார்.
கூட்டணியான காங்கிரசும் எம்.எல்.ஏ. பொறுப்பிலிருந்த தொகுதி என்பதால் காங்கிரஸ் எக்ஸ் எம்.எல்.ஏ.வான ஊர்வசி செல்வராஜின் புதல்வரான ஊர்வசி அமிர்தராஜ் சீட் உறுதி என்ற நம்பிக்கையுடன் தொகுதியில் பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்டக் காங்கிரசின் தலைவரான முரளிதரன். எக்ஸ் எம்.எல்.ஏ.வான சுடலையாண்டி போன்றவர்கள் ரேசிலிருப்பவர்கள்.
கட்சி தொடங்கும் விறுவிறுப்பினால், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தொகுதியின் சீட்டைப் பெறும் முயற்சிகள் வேகமெடுக்கின்றன எக்ஸ் பேரூராட்சித் தலைவரும் மன்ற வட்டார கி.செ.வு.மான மன்றத்தின் கந்த சிவசுப்பு, கருங்குளம் ஒ.செ.வான மகாராஜன் போன்றவர்கள் சீட் சீனில் வருகின்றனர். தற்போது நான்கு முனைத் தாக்குதலில் இருக்கிறது ஸ்ரீவைகுண்டம்.
தூத்துக்குடி
சீட் பெறுவதில் ஓட்டமும் நடையுமாக நகர்கிறது தூத்துக்குடி. ஒருவரை ஒருவர் மிஞ்சுகிற அளவுக்கு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறு கின்றன.
அ.தி.மு.க. தரப்பில் எக்ஸ் அமைச்சரும், அ.தி.மு.க.வின் அமைப்புச் செ.வு.மான சி.த. செல்லப்பாண்டியன் கட்சித் தலைமையிலும், இ.பி.எஸ். உடனும் நேரடித் தொடர்பு வைத்திருப்பவர். முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், மா.செ. சண்முகநாதனின் நண்பருமான பி.டி.ஆர்.ராஜகோபால். அவர் மூலம் சீட் பெற முண்டுகிறார். ஆனால் சண்முகநாதனோ தனது விசு வாசியான இன்னாள் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவரான சுதாகருக்கு அனுசரணையாக இருக்கிறார்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் குருதிப்புனல் இன்றளவும் காயாத நிலையில், களம் இலைக்குச் சாதகமாக அமையுமா என்ற சந்தேகம் ரத்தத்தின் ரத்தங்களின் மனதில் நெருடலாய் இருக்கிறதாம்.
தி.மு.க.வில் ஏறத்தாழ வடக்கு மா.செ.வும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவனுக்கே என்ற டாபிக் உ.பி.க்களிடம் நிலவுகிறது. ஆனால் அவருக்குச் செக் வைக்குமளவுக்கு கிளம்பியிருக்கிறார் அவரின் தம்பியும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன். ஒரே குடும்பத்திற்குத்தானா சீட் என்ற முணுமுணுப்பும் உடன்பிறப்புகளிடம் இருக்கிறது. இவர்களைத் தாண்டி சீட்பெறுவதில் வேகத்தைக் காட்டுகிறார் மாநில இளைஞ ரணி து.செ.வான ஜோயல். தூத்துக்குடி வாசிகளுக்குச் தொல்லை தந்த ஆட்சியர் அலுவலக நெடுஞ்சாலை டோல் கேட்டை மேற்கே வாகைகுளம் அருகே நகரவைத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜோயல்.
திருச்செந்தூர்
அ.தி.மு.க.வின் தரப்பில் தொடர்ந்து சீட்டிற்காக மோதிவரும் தொகுதியின் செய லாளரும் தொழிலதிபருமான வடமலைப் பாண்டியன் தனக்கு அல்லது யூனியன் சேர்மனான தனது மனைவி இருவரில் யாருக்காவது சீட்டைப் பெற அமைச்சர் கடம்பூர்ராஜின் சிபாரிசிலிருக்கிறார். அண்மையில் மா.செ. சண்முகநாதனால் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பதவியில் அமரவைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் போன்ற வர்கள் ரேசிலிருக்கின்றனர்.
தி.மு.க.விலோ தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக நீடிக்கிற தெற்கு மாவட்ட செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணன் பக்கம் காற்றடிக்கிறது. தொகுதிப் பிரச்சினை என்றால் உடனுக்குடன் தலைகொடுக் கும் அனிதா, ஆரம்பம் தொட்டே கிராமப்புறங்களில் கோலப் போட்டிகள் மற்றும் இளைஞர் களின் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, ஆண் பெண்களுக்குப் பரிசுகளையும் வழங்குவதோடு கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கான பணி களையும் கட்சிப் போராட்டங்களையும் முன்னெடுத்தும் அரசியலையும் தாண்டிய அனுசரணைப் போக்குடன் செயல்படுகிறார். தொகுதியில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்கும் உதயசூரியனில் போட்டியிடும் ஆர்வம் உள்ளது.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்