க்சிஜன் தட்டுப் பாட்டில் தவித்த டெல்லி மருத்துவமனைகளின் மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம், ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களிடம் கெஞ்சிக் கேட் பீர்களோ, பிச்சையெடுப்பீர்களோ அல்லது திருடுவீர்களோ தெரியாது, உடனடியாக ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டுமென்று மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தது. ஒரு நீதிபதியே திருடச் சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் தயாரிப்பை விரைவுபடுத்த, முன்னணி ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களுடன் மோடி கலந்தாலோசித்து, ஆக்சிஜன் தயாரிப்பை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண் டார். இச்சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கப் பார்த்த வேதாந்தா நிறுவனத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தங்களை அனுமதித்தால் நாட்டிலுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க, ஆக்ஸிஜன் தயாரித்துத் தருவதாக உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. வேதாந்தாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அர சும், மற்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தூத்துக்குடி மக்களிடம் தமிழக அரசு நடத் திய கருத்துக்கேட்புக் கூட்டத் திலும் ஆலையைத் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். ஸ்டெர்லைட்டுக்குப் பதிலாக வேறு நிறுவனங்களின் மூலம் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாமென நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. மத்திய அரசோ, நாடு முழுக்க ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஸ்டெர்லைட் நிறுவனமோ அல்லது தமிழக அரசே ஆலையைக் கையகப்படுத்தியோ ஆக்சிஜனைத் தயாரிக்கட்டும். எங்களுக் குத் தேவை ஆக்சிஜன் மட்டுமே என்று பிடிவாதம் பிடித்தது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்த ஆட்சேபனையில்லை என்றார் தலைமை நீதிபதி. ஆனால் தமிழக அரசே ஏற்று நடத்தினால், 2018-ம் ஆண்டில் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டது போன்ற அசம் பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது என்று தமிழக அரசு மறுத்தது. இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, "தற்போதைய சூழலில் எந்த ஆலையாக இருந்தாலும் அதன் கட்டமைப்பைப் பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாடு" என்று அடித்துக் கூறினார். மேலும், "ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்திய மக்கள் உயிரிழக்கக்கூடிய சூழலில், வேதாந்தா நிறுவனத் துடனான பிரச்சினைக்காக ஆக்சிஜன் தயாரிப்பை எதிர்ப்பது சரியான வாதமல்ல. உங்கள் கடமையைச் செய்ய மறுக்காதீர்கள்" என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார். தமிழகத்தில் ஆக்சிஜன் போதுமான அளவில் இருப்பதால் மற்ற மாநிலங்களுக்காக தயாரிக்கமாட்டோம் என்பீர்களா எனவும் நீதிமன்றம் கேட்டது.

ster

இதையடுத்தே உச்சநீதி மன்றத்துக்கு பதிலளிப்பதற்காக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய சூழலில், தற்போது உங்களின் கருத்தை அறிவதற்காக இந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளேன்" என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளில் தி.மு.க. தரப்பில், பேசிய கனிமொழி, "இந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமானத்தின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சி ஜன் தயாரிப்புக்கு மட்டும் 4 மாத காலத்துக்கு அனுமதிக்கலாம்'' என்றார். மற்ற கட்சியினரும், ஆக்சிஜன் தயாரிப்புப்பணியை யார் செயல் படுத்துவது என்பதில் மட்டும் சிறிது முரண்பட் டார்களேயொழிய, ஆக்சிஜன் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட்டில் தாமிரம் தயாரிப்புக்கு இடமளிக்கக்கூடாது என்பதில் உறுதியோடு இருந்தார்கள். இதையடுத்து, ஆக்சிஜன் தயாரிப்புப் பணிக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிப்பதாகவும், அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனில், தமிழகத்தின் தேவை போக மிச்சத்தைத்தான் மற்ற மாநிலங்களுக்குப்பகிர வேண்டுமென்றும், ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படவேண்டு மென்றும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இதனைத் தெரிவிக்கவும் ஆக்சிஜன் தயாரிப்புக்கு உச்சநீதி மன்றம் அனுமதியளித்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், "ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது. ஆக்சிஜன் தயாரிப்பை மேற்பார்வையிட தமிழகத்தைச் சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளது.

ster

இதில் நடந்த விவாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மத்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும், அந்த ஆக்சிஜனை மத்திய அரசுதான் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்குமென்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசியைப் பகிர்ந்தளிப்பதில், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவரும் மத்திய அரசு, ஆக்சிஜன் விஷயத் திலும் தமிழகத்தைத் தவிக்கவிடுமென்ற அச்சம் பரவலாக உள்ளது. அத்துடன், ஆக்சிஜன் அனுமதியை வைத்து, ஸ்டெர்லைட் தனது பழைய உற்பத்தியைத் தொடங்கிவிடக்கூடாது என்னும் கோரிக்கை வலுக்கிறது. இதில், தனது உரிமையை தமிழக அரசு விட்டுத்தரக்கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு. காபந்து அரசுக்குப் பிறகு அமையப்போகும் அரசுக்கு கடும் சவாலான நேரம்.

Advertisment

-தெ.சு.கவுதமன்