தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை வடிவமைக்க, கோடிகள் செலவு செய்து அழைத்து வரப்பட்ட தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ ஒன்று லீக்காகியுள்ளது. அது தமிழகத் தேர்தல் முடிவுகளைப் பற்றிய முன்னோட்ட அறிவிப்பா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
டெல்லியில் உயர் வகுப்பினர் கூடி, சோமபானத்தோடு பேசும் பல கிளப்புகள் உள்ளன. அதில் ஒன்றில் பிரஷாந்த் கிஷோர் கலந்துகொண்டார். மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய தேர்தல் நடக்கும் இரண்டு மாநிலங்களில் திரிணா முல் காங்கிரஸ், தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் வேலை செய்யும் பிரசாந்த் கிஷோர், அதுபற்றி அகில இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்துவிட்டு ரிலாக்ஸாக பத்திரிகையாளர்களிடம் பேச ஆரம்பித்தார். அதில் சில துண்டு களை ஒட்டியும் வெட்டியும் பா.ஜ.க.வின் தேசிய சமூக வலைத் தளங்களின் தலைவர் அமித் மாளவியா வெளியிட்டிருக்கிறார்.
“"நரேந்திர மோடிக்கு மேற்குவங்கத்தில் செல்வாக்கு, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அளவிற்கு இருக்கிறதா?' எனக் கேட்டதற்கு...…
""மோடிக்கு, மம்தா அளவிற்கு செல்வாக்கு இருக்கிறது'' என்கிறார் பிரசாந்த்.
"மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் தேர்தலில் நிறைய பணம் விளையாடுகிறதே அது முடிவுகளைப் பாதிக்குமா?' என்கிற கேள்விக்கு...
""யார் பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கிக்கொள்கிறார்கள். யாருக்கு ஓட்டுப் போடணும் என அவர்கள் நினைக்கிறார்களோ, அவருக்கு ஓட்டுப் போடுவார்கள், பணம் எதையும் முடிவு செய்யாது'' என்கிறார்.
"பா.ஜ.க. வேகமாக வளரு வதற்குக் காரணம் என்ன?' எனக் கேட்டதற்கு...
""தலித் வாக்குகளை பாஜக வெற்றிகரமாகக் கையாளுகிறது என பதில் சொல்வதோடு, இதுவரை மேற்குவங்கத்தை ஆண்ட அரசியல் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியோர் மைனாரிட்டி மக்களான முஸ்லிம் களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டிருக் கிறார்கள். இது இந்து மக்களுக்கு ஒருவித கோபத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. இது பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு ஒரு காரணம்'' என்கிறார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே இந்த உரையாடல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது. இதைப்பற்றி ஒரு பெண் பத்திரிகையாளர் பிரசாந்திடம் சொல்ல,… ""இப்படியெல்லாம் கூட செய் வார்களா?'' என்கிற ஆச்சரியத்துடன் முடிகிறது பிரசாந்த் கிஷோரின் பேச்சு.
பா.ஜ.க., இந்தப் பேச்சை வெளியிட்ட தைக் கண்டித்த பிரசாந்த், ""தைரியமிருந்தால் எனது முழுப்பேச்சை வெளியிடுங்கள்'' என சவால்விட்டார்.
அவரது பேச்சை வெளியிட்ட பா.ஜ.க. இணையதளங்கள், "திரிணாமுல் காங்கிரஸ் எடுத்த சர்வேயில் பா.ஜ.க. வெற்றிபெறும் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கடும் போட்டியில் இருக்கிறது' எனச் சொன்னதாகச் செய்திகள் வெளியிட்டன. அதை பிரசாந்த் கிஷோர் மறுத்துள்ளார். ""தமிழகத்தில் தி.மு.க. அமோக வெற்றிபெறும்'' எனத் தெரிவித்துள் ளார்.
இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய "ஈ ஓட்டர்' என்கிற கருத்துக்கணிப்பு நிறுவனத் தலைவர் யஷ்வந்த் தேஷ்முக், ""பா.ஜ.க.வின் உண்மையான வலு என்பது இந்தியா முழுவதுமுள்ள தலித் ஓட்டுகள். மதச்சார்பற்ற கட்சிகள், சிறுபான்மையினரின் வகுப்புவாத அமைப்புகளையும் ஆதரிப்பது, பெரும்பான்மை வகுப்புவாத சக்தியான பா.ஜ.க. வளர உதவி செய்கிறது. பிரதமர் என்கிற வகையில் மோடி அனைத்து மாநில மக்கள் மத்தியிலும் தெரிந்தவர். ஆனால் முதல்வர் என வரும்போது அவர்கள் மம்தாவையும் மு.க.ஸ்டாலினையும் தான் தேர்ந்தெடுப்பார்கள். மோடி, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களுக்கும் முதல்வராக முடியாது. இவையெல் லாம் யாரும் மறுக்க முடியாத உண்மைகள். இதை பிரசாந்த் கிஷோர் ஏன் இந்த நேரத்தில் சொல்ல வேண்டும். தேர்தல் நேரத்தில் வெளிப்படும் எதுவும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்''’என்கிறார்.
பிரசாந்த் கிஷோரின் இந்தப் பேச்சை தமிழகத்தைச் சேர்ந்த டெல்லிவாசிகள் இட்டுக்கட்டி, ""பிரசாந்த், தி.மு.க. தோற்கும் எனச் சொன்னதாக கிளப்பிவிடுகிறார்கள்'' என வருத்தப்படுகிறார்கள் டெல்லி பத்திரிகை யாளர்கள். அதை தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. ஆதரவு மீடியாக்கள் பெரிதாக விக்கிலீக்ஸ் ரேஞ்ச்சுக்கு, "க்ளப்ஹவுஸ் லீக்ஸ் பிரசாந்த் கிஷோர்' எனக் கொண்டு சென்றுகொண்டி ருக்கின்றன.
""ஆங்கிலேயே ரிப்பன் பிரபு காலத்தி லிருந்து தமிழக அதிகாரத்தில் இருந்த உயர்குல பிரமுகர்கள், 1967-ல் தி.மு.க. வந்தவுடன் அதிகாரத்தை இழந்தனர். அதைத் திரும்பப்பெற எடப்பாடி தலைமையில் பா.ஜ.க. ஆதரவு அரசு அமைந்தால்தான் முடியும். எனவே "தி.மு.க. வெற்றியைத் தடுத்து நிறுத்தவேண்டும். தி.மு.க. வெற்றிபெறாது' என பிரசாந்த் கிஷோர் சொன்னதாக கட்டுக்கதை பரப்புகிறார்கள்'' என வருத்தப்படுகிறார் இடதுசாரி இத ழியலாளர் ஒருவர்.