கலைஞர் கால அரசியல் தலை வரும், ஆளுமைமிக்க பெண் நிர்வாகியுமான தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவி மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே முற்றாக விலகுவதாக தலைமைக்கு கடிதம் கொடுத்திருப் பது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற 2022, செப் 21-23 நக்கீரன் இதழ் இறுதிச் சுற்று பகுதியிலேயே சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சிப் பதவியிலிருந்து விலகுவது பற்றி பதிவுசெய்திருந்தோம்.
இந்தக் கடிதம் பற்றித் தெரிந்ததும், கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன், "என்ன சுப்புலட்சுமி, இப்படியொரு முடிவெடுத்துட்டியே'' எனக் கூறி வருத்தப்பட்டி ருக்கிறார். முதல்வர் ஸ்டாலினும் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என சுப்புலட்சுமியிடம் கூறியிருக்கிறார். தி.மு
கலைஞர் கால அரசியல் தலை வரும், ஆளுமைமிக்க பெண் நிர்வாகியுமான தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவி மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே முற்றாக விலகுவதாக தலைமைக்கு கடிதம் கொடுத்திருப் பது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற 2022, செப் 21-23 நக்கீரன் இதழ் இறுதிச் சுற்று பகுதியிலேயே சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சிப் பதவியிலிருந்து விலகுவது பற்றி பதிவுசெய்திருந்தோம்.
இந்தக் கடிதம் பற்றித் தெரிந்ததும், கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன், "என்ன சுப்புலட்சுமி, இப்படியொரு முடிவெடுத்துட்டியே'' எனக் கூறி வருத்தப்பட்டி ருக்கிறார். முதல்வர் ஸ்டாலினும் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என சுப்புலட்சுமியிடம் கூறியிருக்கிறார். தி.மு.க. சீனியர்கள் முதல் தொண்டர்கள் பலரும் சுப்புலட்சுமி கட்சிப் பொறுப்பில் நீடிக்கவேண்டும் என ஆதங்கமாகக் கூறுபவர்களுக்கு "என் வேதனைக்கான மருந்துதான் எனது ராஜினாமா' என பதில் கொடுத்துள்ளார்.
1980-களில் தி.மு.க.வில் இணைந்த சுப்பு லட்சுமி ஜெகதீசன் அப்போது மாநிலம் முழுக்க கட்சியின் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவது, கட்சித் தலைமை அறிவிப்புப்படி போராட்டங்களில் கலந்துகொள்வது என ஒவ்வொரு நாளும் கணவன், மனைவி இருவரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். அப்போது அவர்களின் ஒரே மகனான சிறுவன் ஜெயப் பிரகாஷை வீட்டில் கவனிக்க முடியாமல் பள்ளி விடுதியில் சேர்த்துப் படிக்கவைத்தார்கள்.
1992 ஜெ. ஆட்சியில், விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கொடுஞ்சட்டமான தடாவில் கணவன் மனைவி இருவரும் கைதுசெய்யப்பட்டு வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் விடுதலைக்காக முழுமையாக சட்டப் போராட்டம் நடத்தினார் கலைஞர். கட்சிக்காக சுப்புலட்சுமி செய்த தியாகம் தொடர்ந்து மதிக்கப் பட்டுத் தான் வந்தது. மாவட்ட அளவில் உள்ளூர் அரசியல் அவரை வேதனையடைய வைத்து இறுதியில் கட்சியிலிருந்தே விலக நேர்ந்துள்ளது.
பொதுவெளியில் எந்த கருத்தையும் கூறாமல் அமைதியாக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசனை நேரில் சந்தித்தோம்.தொலைபேசி அழைப்புகளுக்கு இயல்பாகப் பதில் சொல்லிவந்த அவரிடம் பேசினோம்.
"என் விலகல் கடிதத்தில் உள்ள கருத்துகளைத் தாண்டி கட்சி விவகாரம் எதுவும் இல்லை" என்றவரிடம்...
சரி, இப்போது உங்கள் மனநிலை எப்படியுள்ளது? தி.மு.க.வில் இல்லாத சுப்புலட்சுமியின் மனநிலை என்ன?
"யார் சொன்னது நான் தி.மு.க. இல்லை என்று? கட்சியில் உறுப்பின ராக மட்டும்தான் இல்லை. நான் எப்போதும் கடைப்பிடிப்பது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரின் கொள்கைகளே. அதுதான் எனது ரத்த நாளங்கள்.''
இவ்வளவு காலம் அரசியல், பொது வாழ்க்கையில் இருந்துள்ளீர்கள். அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?
"மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சில செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் மகன் மனநல மருத்துவமனை வைத்து நடத்துகிறார். அதனுடன் தற்கொலை தடுப்பு இயக்கம், கணவன், மனைவி குடும்பப் பிரச்சனைகளுக்கு உளவியல் சார்ந்த தீர்வுகள் ஏற்படுத்துவது, போதை மறுவாழ்வு மையம் போன்றவற்றை ஏற்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க தனி அமைப்பு ஒன்றை நடத்த உள்ளோம். இது ஒருபுறமிருக்க, எனது அரசியல் பயணம் எப்போதும் தொடரும். என்ன அது கட்சி அரசியலாக இருக்காது.
கட்சிக்கு வெளியே இருந்து சுதந்திரமாகப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளேன். திராவிட இயக்கங்கள், இடதுசாரி முற்போக்கு அமைப்புகள், பொதுநல அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்வேன். பெரியாரின் கொள்கைகள் என்றும் தேவை என்பதை, அண்ணா, கலைஞரின் கருத்துக்கள், திராவிட இயக்கத்தால் மக்கள் பெற்ற பயன், பெண்கள், ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு கொடுத்துள்ள சட்ட பலன்கள், பாதுகாப்பை மக்களிடம் எடுத்துரைப்பேன். சனாதன, மதவாத பா.ஜ.க.வை நமது திராவிட மண்ணில் கால்பதிக்க விடாமல் எப்போதும் போராடுவேன்.
தொடர்ந்து நான் சுதந்திரமாக அரசியலில் இயங்கிக்கொண்டேதான் இருப்பேன், மறைந்த தலைவர் கலைஞர், இப்போது கழகத்தின் ஆட்சி நிர்வாகத்தை சிறப்பாகச் செய்யும் தம்பி தளபதி மு.க.ஸ்டாலின் மீதும் நான் வாழ்ந்த தி.மு.கழகம் மீதும் எப்போதும் அன்பும், மாறாப் பற்றும் கொண்டிருப்பேன்'' என புன்னகையுடன் கூறினார்.