திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என நான்கு தொகுதிகள் உள்ளன. வாணியம்பாடி நகரம், உதயேந்திரம், ஆலங்காயம் பேரூராட்சிகள், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி ஒன்றியத்தின் சில பகுதிகள் இந்த தொகுதிக்குள் வருகின்றன. நகர்ப்பகுதியில் இஸ்லாமியர்கள், பட்டியலின சமூகம், முதலியார்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். கிராமப்புறங்களில் வன்னியர்கள் அதிகம்.
இந்தத் தொகுதியில் 1962-ல் தி.மு.க., 67-ல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியச் செயலாளராக இருந்த அப்துல் லத்தீப் ஐந்துமுறை இந்த தொகுதி யில் நின்று 1971, 1977, 1996, 2001-ல் சுயேட்சை யாகவும், தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி வைத்தும் வெற்றிபெற்றுள்ளார். 1980-ல் அ.தி.மு.க., 1984-ல் அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அப்துல்மஜித், 1989-ல் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல்சமத், 1991-ல் அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சம்பத், 2002-ல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வடிவேல், 2006-ல் தி.மு.க. கூட்டணியில் லீக் கட்சியின் அப்துல்பாசித், 2011, 2016, 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் அ.தி.மு.க.வே வெற்றிபெற்று வருகிறது. இந்தத் தொகுதியில் கணிசமாக இஸ்லாமியர்கள் இருப்பதால் 96, 2006, 2011, 2016, 2021 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியே சீட் வாங்கு கின்றது.
தற்போது இந்தத் தொகுதியின் எம்.எல். ஏ.வாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளார். கல்வி நிறுவனங்கள், ஒப்பந்ததாரர் என இருப்பதால் வசதிக்குக் குறைவில்லை, எதிர்க் கட்சியாக இருப்பதால் தன்னால் தொகுதிக்கு எதையும் பெரியதாக செய்யமுடியவில்லை என கைவிரிக்கிறார். தொகுதிக்கு பெயர் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை, சட்டமன்ற அலுவலகத்துக்குக்கூட வருவதில்லை. "இந்தத் தொகுதியில் தி.மு.க.வில் மா.செ. தேவராஜுக்கு சீட் தந்தால் நான் தலைமையிடம் வலியுறுத்தி மீண்டும் போட்டியிட சீட் கேட் பேன். தேவராஜ் வேட்பாளர் இல்லையென்றால் நான் கேட்கமாட்டேன், தலைமை நிற்கச் சொன்னால் நிற்பேன்'' எனச் சொல்கிறது எம்.எல்.ஏ. செந்தில்குமார் தரப்பு. தேவராஜை எதிர்த்து செந்தில்குமார் நிற்பேன் எனச் சொல்லக் காரணம், ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் செந்தில்குமார் நிற்க முயன்ற போது, அவரை கவுன்சிலராகக்கூட வெற்றிபெற விடாமல் தேவராஜ் தோற்கடித்துள்ளார். அதற்குப் பழிவாங்கவே அப்படியொரு முடிவில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வீரமணி மா.செ.வான பின், 2011-ல் சம்பத்குமார், 2016-ல் நிலோபர் கஃபில், 2021-ல் செந்தில்குமாருக்கு சீட் தர சிபாரிசு செய்தார், அவர்களும் வெற்றிபெற்றார்கள். ஒருவ ருக்கு ஒருமுறைக்கு மேல் சிபாரிசு செய்யமாட் டார். மாவட்டத்தில் தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். கடந்த முறை அமைச்சராக இருந்த நிலோபர் கஃபிலாலே வீரமணியின் குடைச்சல் களைத் தாங்கமுடியவில்லை. அதற்கு முன்பு எம்.எல்.ஏ.வாக இருந்த சம்பத்குமாருக்கும் அதே நிலைமைதான். இப்போது அவர் கைகாட்டும் நபருக்கே சீட் தரும் நிலையில் கட்சித் தலைமையுள்ளது. அந்த வகையில் சிட்டிங் எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு மீண்டும் சீட் கிடைக்க சிபாரிசு செய்யமாட்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் எம்.பி. தொகுதியில் நின்று தோல்வியைச் சந்தித்த மருத்துவர் பசுபதி சீட் எதிர்பார்த்து வீரமணியை வலம்வருகிறார். எம்.பி. தேர்தலின்போது அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்யவைத்து தேர்தலில் நிறுத்தப்பட்டார், 10 கோடிவரை செலவிட்டும் தோல்வியைச் சந்தித்தார். இப்போது வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட் கேட்கிறார், வீரமணியும் அவரை டிக் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அதேநேரத்தில் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபில் சீட் கேட்டுவருகிறார். அவர்மீது சீட்டிங் புகார்கள் இருப்பதால் அவருக்கு கிடைக்கவாய்ப்பில்லை என்கிறார்கள். கடந்த தேர்தலின்போது சீட் கேட்டு கிடைக்காமல் போன மாவட்ட மகளிரணிச் செயலாளர் மஞ்சுளா கந்தன் சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்றுத்தாங்க என வீரமணியை வலம்வருகிறார்.
தி.மு.க. கடந்த நான்கு தேர்தல்களாகத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிக்கே இந்த தொகுதியை ஒதுக்குவது, மூன்று தேர்தலிலும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் போட்டியிடா தது, கூட்டணிக் கட்சிக்கு தொகுதியைத் தந்து தொடர்ந்து தோற்றுவருவது கட்சியினரை அதிருப்தியடையச் செய்துள்ளது. 2002-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர்அனீபா களமிறக்கப்பட்டு, உருது பேசும் முஸ்லிம்கள் - தமிழ் பேசும் முஸ்லிம் பிரச்சனை யால் தோல்வியடைந்தார்கள். அதன்பின் தி.மு.க. நேரடியாகக் களமிறங்கவில்லை. தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவிடம், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நம்ம கட்சியைச் சேர்ந்த யாராவது ஒருவர்தான் போட்டியிடவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். அவரும் தலைவரிடம் சொல்கிறேன் என நம்பிக்கை தந்துள்ளார். வாணியம் பாடி தொகுதியைவிட ஆம்பூரில் இஸ்லாமி யர்கள் அதிகம் என்பதால் கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகளுக்கு ஆம்பூரைத் தந்துவிட்டு இந்தமுறை தி.மு.க.வே நேரடியாகப் போட்டி யிடலாம் என கூறப்படு கிறது. எப்படியும் இந்தமுறை உதயசூரியன்தான் போட்டியிடும் என உறுதியாகியுள்ளதால் தி.மு.க.வில் சீட் வாங்கும் போட்டி இப்போதே மும்முரமாக உள்ளது.
திருப்பத்தூர் மா.செ.வும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான தேவராஜுக்கு தனது சொந்த ஊர் அமைந்துள்ள வாணியம்பாடி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக வேண்டுமென்பது ஆசை. தன் சாதிக்காரர்கள் அதிகமுள்ள தொகுதி, சிறுபான் மையின வாக்குகள் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது என்கிற நம்பிக்கையில், 2021-ல் தேர்தலில் வாணி யம்பாடி தொகுதியை தேவராஜ் கேட்டார். தி.மு.க. வுடன் கூட்டணியிலிருந்த லீக் கட்சியும் கேட்ட தால் வாணியம்பாடியை கூட்டணிக் கட்சிக்குத் தந்துவிட்டு ஜோலார்பேட்டையில் தேவராஜை நிறுத்தியது. இது வாணியம்பாடி தொகுதி தி.மு.க.வினரை அதிருப்தியடையச் செய்தது. உதயசூரியன் சின்னம் இல்லாததால் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றார். தற்போது ஜோலார் பேட்டை எம்.எல்.ஏ.வாக தேவராஜ் இருந்தாலும் அந்த தொகுதிக்கு தேவையானதைச் செய்தாலும் வரும் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியை வாங்கிப் போட்டியிடவேண்டும் என மாவட்ட மாணவரணி அமைப்பாளரான தன் மகன் பிரபா கரனை களமிறக்கி கோவில் திருவிழா, கட்சிக்காரர் கள் குடும்ப நிகழ்ச்சி, தொகுதிப் பணிகள் என வேலை செய்துவருகிறார். வாணியம்பாடி வேண்டும் என தலைமையிலும், அமைச்சர் வேலுவிடமும் முறையிட்டு வருகிறார் தேவராஜ்.
வாணியம்பாடி நகரமன்றத் தலைவரின் மகனும், நகரச்செயலாளருமான சாரதிகுமாரும் இந்த தொகுதியைக் குறிவைக்கிறார். 2019, 2024 எம்.பி. தேர்தலில் தி.மு.க. கதிர்ஆனந்த் வெற்றிபெற முக்கியக் காரணம் வாணியம்பாடி, ஆம்பூர் சிறுபான்மையின வாக்கு கள்தான். வாணியம்பாடி யில் 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கித் தந்து தனது மகன் வெற்றிக்கு காரணமாக இருந்தது ந.செ சாரதிகுமார்தான் என அவர் மீது தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச் சர் துரைமுருகனுக்கு நல்லெண்ணம். அவரின் குட்புக்கில் உள்ளதால் அவரும், எம்.பி. கதிர்ஆனந்த், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவும் தனக்கு சிபாரிசு செய்வார்கள் என நம்பிக்கையுடன் உள்ளார்.
கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆலங்காயம் மேற்கு ஒ.செ. ஞானவேலன், தளபதி அறிவாலயம் என்கிற பெயரில் கட்சி அலுவலகம் கட்டி கட்சியினருக்கு, மக்களுக்கு அடிக்கடி உதவிகள் வழங்குகிறார். இவரது மனைவி ப்ரியதர்ஷினி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக இருக்கிறார். தேர்தலில் எவ்வளவு வேண்டுமானா லும் செலவுசெய்கிறேன் எனக்கு சீட் வாங்கித் தாருங்கள் என பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்ச கன் மூலமாக சீட் பெற முயற்சிக்கிறார். இந்த மூவருக்குள் சீட் பெற கடும்போட்டியே நடக்கி றது. இவர்களைப்போல் தி.மு.க. நிர்வாகி தேவி .வெங்கடாச்சலம் உட்பட சிலர் சீட் கேட்கும் வரிசையில் உள்ளார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி யிலுள்ள காங்கிரஸ் கட்சி இத்தொகுதியை கேட்கவுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச்செயலாளர் விஜய்இளஞ்செழி யன், சிறுபான்மையின பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்லம்பாஷா, மாவட்டத்தலைவர் பிரபு உள்ளிட்டோர் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளார்கள்.
தொகுதியில் ஆளும்கட்சிக்குள் கோஷ்டி சத்தம் அதிகமாக இருக்கிறது. இங்கு யாருக்கு சீட் தரலாம் என கட்சித் தலைமை முடிவெடுக் கும் முன்பு இந்த கோஷ்டி சண்டையை ஒழிக்க வேண்டும். இல்லையேல் நேரடியாக உதயசூரியன் களமிறங்கினாலும் எதிராளிக்கு களம் சாதக மாகிவிடும் என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.