சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலுள்ள 113 அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இத்துடன் இணைவுபெற்றுள்ளன.
பெரியார் பல்கலையில், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வில் ஜூலை 14-ஆம் தேதி, எம்.ஏ., வரலாற்றுத்துறை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு, 'தமிழகத்தில் கி.பி. 1880 முதல் 1947 வரையிலான விடுதலை போராட்டம்' என்ற பாடத்தேர்வு நடந்தது.
இதில் ஒரு மதிப்பெண் பகுதியில், வரிசை எண். 11-ல், 'தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப் பட்ட சாதி எது?' என்ற வினா கேட்கப்பட்டு இருந் தது. இதற்கு, மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜனங்கள் என நான்கு விடை வாய்ப்புகள் வழங்கப் பட்டிருந்தன.
தேர்வில் சாதிரீதியாக கேட்கப்பட்ட இந்த வினா குறித்த தகவல் வெளியான உடனேயே, சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் இருந்தும் கடும் கண்டனங்கள் கிளம்பின. கையறுநிலைக்குத் தள்ளப்பட்ட பல்கலை நிர்வாகம், தவறுக்கு வருத்தம் தெரிவித்து அ
சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலுள்ள 113 அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இத்துடன் இணைவுபெற்றுள்ளன.
பெரியார் பல்கலையில், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வில் ஜூலை 14-ஆம் தேதி, எம்.ஏ., வரலாற்றுத்துறை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு, 'தமிழகத்தில் கி.பி. 1880 முதல் 1947 வரையிலான விடுதலை போராட்டம்' என்ற பாடத்தேர்வு நடந்தது.
இதில் ஒரு மதிப்பெண் பகுதியில், வரிசை எண். 11-ல், 'தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப் பட்ட சாதி எது?' என்ற வினா கேட்கப்பட்டு இருந் தது. இதற்கு, மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜனங்கள் என நான்கு விடை வாய்ப்புகள் வழங்கப் பட்டிருந்தன.
தேர்வில் சாதிரீதியாக கேட்கப்பட்ட இந்த வினா குறித்த தகவல் வெளியான உடனேயே, சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் இருந்தும் கடும் கண்டனங்கள் கிளம்பின. கையறுநிலைக்குத் தள்ளப்பட்ட பல்கலை நிர்வாகம், தவறுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. பல்கலை பதிவாளர் (பொறுப்பு) கோபி விரிவான விளக்க அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ''பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள்களை வடிவமைக்க, பிற பல்கலை அல்லது வேறு பல்கலையுடன் இணைவுபெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த, அனுபவமிக்க ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிடமிருந்து ஒவ்வொரு பாடத்திற்கும், தலா இரண்டு செட் வினாத்தாள்கள் தயாரித்து பெறப்படும். அந்த வினாத்தாள்கள் பல்கலை பாடத்திட்டத்திற்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதா? ஏதேனும் பிழைகள் உள்ளனவா? என்பதை சரிபார்க்க, பல்கலை தரப்பில் கூர்ந்தாய்வுக்குழு உள்ளது. இந்தக் குழு சரிபார்த்த பிறகே, பெறப்பட்ட மாதிரி வினாத்தாள்களிலிருந்து ரேண்டமாக ஒன்றை தேர்வுசெய்து அச்சகத்திற்கு அனுப்பிவைக்கின்றோம். தேர்வுக்கூடத்தில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் கட்டு திறக்கப்படும். இடையில் யாரும் வினாத்தாள்களைத் திறந்துபார்க்க முடியாது.
எனவே சர்ச்சைக்குரிய இந்த வினா குறித்து பல்கலைக்கு எந்தவிதமான உள்நோக்கமோ, நேரடித் தொடர்போ கிடையாது. இந்த வினாவால் யாருக்கேனும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்கு பல்கலை நிர்வாகம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது,'' என்று பதிவாளர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக திரா விடர் விடுதலைக் கழகத் தலை வர் கொளத்தூர் மணி, ''பெரியார் பல்கலைக்கு வெளி யேயுள்ள ஆசிரியர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்ட தாக சொன்னாலும்கூட, வினாத்தாள் அச்சாவதற்கு முன்பாக, அதைச் சரிபார்த் திருக்கவேண்டிய பொறுப்பு பல்கலைக்கு இருக்கிறது. சர்ச்சைக் குரிய அந்த கேள்விக்கு கொடுக்கப் பட்ட விடைகளில், ஒரு காலத்தில் நாடார் சாதிதான், பட்டியல் பிரிவிலிருந்தது. அந்த சமூகத்தின ருக்கு எதிராக உள்நோக்கத்துடன் இந்த கேள்வி யை வைத்திருக்கவேண்டுமெனக் கருதுகிறோம்.
பா.ஜ.க. தமிழ்நாட்டில் சாதியை வைத்து தான் அரசியல் செய்கிறது. பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மனநிலையில் இருக்கிறார். வாரணாசி யில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்தபோது, தமிழ்நாட்டிலிருந்து எந்த ஒரு துணைவேந்தரும் கலந்துகொள்ளாதபோது, ஜெகநாதன் மட்டும்தான் அதில் கலந்துகொண்டார். இவர்தான், கலைஞர் ஆய்வுமையத்தில் வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்த, கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்தார். சாதிரீதியான வினா கேட்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்,'' என்றார்.
இது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், பெரியார் பல்கலைமீது தாமாக முன்வந்து ஒரு புகாரை பதிவுசெய்துள்ளது.
அந்த புகாரில், ''பெரியார் பல்கலை வரலாற்றுத்துறை தேர்வில் வழங்கிய வினாத்தாளில் இடம்பெற்ற குறிப்பிட்ட ஒரு கேள்வி, பாடத்திட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை. 'ஷெட்யூல்டு கேஸ்ட்' என்பதை தமிழில் 'ஆதிதிராவிடர்' என்றுதான் குறிப் பிடவேண்டும். தாழ்த்தப்பட்டோர் என்றோ, அரிஜன் என்றோ குறிப்பிடக்கூடாது. இதுதொடர்பான அரசு உத்தரவுகளை மதிக்காமல், பல்கலை அதிகாரிகள் கடமையைச் செய்யத் தவறியிருக்கிறார்கள்,'' என்று தெரிவித்துள்ளது.
மேலும், கடமையைச் செய்யத் தவறிய பெரியார் பல்கலை துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், வரலாற்றுத்துறைத் தலைவர் ஆகியோருக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது ஆணையம்.
வரலாற்றுத்துறை மாணவர் களுக்கான இதே வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில், வரிசை எண். 10-ல், "பெரியார்' என்ற பட்டத்தை ஈ.வெ.ரா.விற்கு வழங் கியவர் யார்?” என்ற வினா கேட்கப்பட்டுள்ளது. இதற்கு, சரோஜினி நாயுடு, டாக்டர் தர்மாம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, அன்னிபெசண்ட் ஆகிய நான்கு விடை வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. இந்த நான்கு விடை வாய்ப்புகளுமே தவறானவை. நீதிக்கட்சி யின் பெண் தலைவர்களுள் ஒருவரும், பெண்கள் விடுதலைக்காக வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவருமான அன்னை மீனாம்பாள்தான், 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கினார்.
சாதி, மதம், கடவுளுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிவந்த பெரியாரின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகமே, சாதி, இந்துத்துவா கொள்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொள்வதாகக் கவலை தெரிவிக் கிறார்கள் கல்வியாளர்கள். பெரியார் பல்கலை யில் சிதிலமடைந்திருக்கும் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பையுமே விரைவாக சீரமைக்கவேண்டும் என்ற குரலும் இப்போது பலமாக ஒலிக்கத்தொடங்கியிருக்கிறது.