எப்போது உதயமாகும்ம்? -விருத்தாசலத்தின் ஏக்கக் குரல்

cc

ற்கனவே கொடுத்த உறுதிமொழியின்படி, கடலூரில் இருந்து பிரித்து, விரைவில் விருத்தாசலம் மாவட்டத்தை முதல்வர் உருவாக்க வேண்டும்” என்கிற கோரிக்கைக் குரல் வலுப்பெற்று வருகிறது.

ஒரு காலத்தில் தென்னாற்காடு மாவட்டத் தலைநகராக இருந்தது கடலூர். அதிலிருந்து பின்னர் விழுப்புரமும், அடுத்து கள்ளக்குறிச்சியும் பிரிந்து தனித்தனி மாவட்டங்களாக ஆகிவிட்டன.

vv

மிச்சமிருக்கும் கடலூர் மாவட்டப் பகுதியில் இருந்து விருத்தாசலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் வேண்டும் என்று, அப்பகுதி மக்களும் பல்வேறு அரசியல் கட்சி களும், பொதுநல இயக்கங்களும் கோரிக்கை வைத்ததோடு, அதற்காகப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இதுகுறித்துப் பேசிய மாவட்டவாசிகள் கடலூர் மாவட்டம் கிழக்கு மேற்காக 180 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு கிடக்கிறது. இதன் மேற்கு கடைக்கோடி கிராமங்களான மங்களூர், சிறுப்பாக்கம், அரசங்குடி, சேதுவராயன் குப்பம், பனையாந்தூர், வடபாதி, சித்தேரி, லட்சுமணபுரம், போன்ற ஊர்களுக்கும், மாவட்டத் தலைநகரமான கடலூருக்கும் 180 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இதனால் தங்கள் அத்தியாவசியப் பணிகளுக்காக மக்கள் அங்கே செல்லப் பெரிதாகப் பயணிக்க வேண்டியிருக்கிறது. அங்கு ஒரு வேலையை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் போது அங்கேயே தங்கவேண்டிய கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல, இப்பகுதியில் இருக்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கூட, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கும் சென்றுவர படாதபாடு படுகின்றனர்.

vv

மேலும் மாவட்டத்தில் கடலூர், சித

ற்கனவே கொடுத்த உறுதிமொழியின்படி, கடலூரில் இருந்து பிரித்து, விரைவில் விருத்தாசலம் மாவட்டத்தை முதல்வர் உருவாக்க வேண்டும்” என்கிற கோரிக்கைக் குரல் வலுப்பெற்று வருகிறது.

ஒரு காலத்தில் தென்னாற்காடு மாவட்டத் தலைநகராக இருந்தது கடலூர். அதிலிருந்து பின்னர் விழுப்புரமும், அடுத்து கள்ளக்குறிச்சியும் பிரிந்து தனித்தனி மாவட்டங்களாக ஆகிவிட்டன.

vv

மிச்சமிருக்கும் கடலூர் மாவட்டப் பகுதியில் இருந்து விருத்தாசலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் வேண்டும் என்று, அப்பகுதி மக்களும் பல்வேறு அரசியல் கட்சி களும், பொதுநல இயக்கங்களும் கோரிக்கை வைத்ததோடு, அதற்காகப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இதுகுறித்துப் பேசிய மாவட்டவாசிகள் கடலூர் மாவட்டம் கிழக்கு மேற்காக 180 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு கிடக்கிறது. இதன் மேற்கு கடைக்கோடி கிராமங்களான மங்களூர், சிறுப்பாக்கம், அரசங்குடி, சேதுவராயன் குப்பம், பனையாந்தூர், வடபாதி, சித்தேரி, லட்சுமணபுரம், போன்ற ஊர்களுக்கும், மாவட்டத் தலைநகரமான கடலூருக்கும் 180 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இதனால் தங்கள் அத்தியாவசியப் பணிகளுக்காக மக்கள் அங்கே செல்லப் பெரிதாகப் பயணிக்க வேண்டியிருக்கிறது. அங்கு ஒரு வேலையை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் போது அங்கேயே தங்கவேண்டிய கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல, இப்பகுதியில் இருக்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கூட, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கும் சென்றுவர படாதபாடு படுகின்றனர்.

vv

மேலும் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் வேப்பூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி என ஒன்பது தாலுகாக்களும், திட்டக்குடி, விருத்தாசலம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளும், கடலூர், சிதம்பரம், ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், 16 பேரூராட்சிகள், பண்ருட்டி விருத்தாசலம் நெல்லிக்குப்பம் சிதம்பரம் ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இதில் கடலூர் மாநகர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. மேலும் 14 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியுள்ள இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3203 சதுர கிலோமீட்டர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மாவட்டத்தில் 2 கோடியே 60 லட்சத்து 5914 பேர் வசிக்கின்றனர். தமிழக மக்கள் தொகையில் 3.61 சதவீதம் பேர் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 704 பேர் வசிப்பதாக அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது, மேலும் நெய்வேலி நகரியம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எனவே நீண்டு கிடக்கும் இந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தே ஆகவேண்டும்”என்கிறார்கள்.

இந்தக் கோரிக்கையை முதல்வரும் ஏற்றுக்கொண்டதால், புதிய மாவட்டத்தை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த சூழலில், மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள மங்களூர், நல்லூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களை, மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார், வெலிங்டன் ஏரி பாசனப் பகுதி விவசாய சங்க தலைவர் கொத்தட்டை ஆறுமுகம். இது பற்றிச் சொல்லும் அவர் “ மங்களூர் ஒன்றியத்தில் 66 கிராம ஊராட்சிகள் உள்ளன. நல்லூர் ஒன்றியத்தில் அறுபத்தி நான்கு கிராம ஊராட்சிகள் உள்ளன. மொத்தம் 130 ஊராட்சிகள். இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட துணை கிராமங்கள் சுமார் 400-க்கும் மேல் இருக்கின்றன. இவ்வளவு பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து, பெண்ணாடத்தை தலைநகரமாகக் கொண்டு மூன்றாவதாக புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும்.

vv

அதேபோன்று திட்டக்குடி, தாலுகாவில் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் பெண்ணாடம் வருவாய் குறு வட்டத்தில் மட்டும் 44 வருவாய் கிராமங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வேப்பூர் தாலுகாவில் 52 வருவாய் கிராமங்கள் மட்டுமே உள்ளன. எனவே 109 அதிக அளவு வருவாய் கிராமங்கள் உள்ள திட்டக்குடி தாலுகாவைப் பிரித்து, பெண்ணாடம் பகுதியில் புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும். எனவே இதையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்''’என்கிறார் அழுத்தமாக.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கோடங்குடி சுப்பிர மணியனோ, "கடலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். சமீபத்தில் கூட எங்கள் கட்சி மாநாடு நடந்த போது அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. காரணம் கடலூர் மேற்கு பகுதி யில் உள்ள கிராம மக்கள் மாவட் டத் தலைநகரமாக கடலூருக்கு சென்று வருவதற்கு குறைந்த பட்சம் 500 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இப்படி மக்கள் படும் துன்பங்கள் ஏராளம்'' ’என்றார் ஆதங்கத்தோடு.

cc

”பண்ருட்டி -விருத்தாசலம் -குறிஞ்சிப்பாடி ஆகிய தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களைப் பிரித்து நெய்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஒரு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும்”-இது, தமிழக வாழ் வுரிமைக் கட்சி பிரமுகர் நெய் வேலி முருக னின் வேண்டு கோள். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, "உங்கள் தொகுதியில் ஸ்டா லின்'’என்ற நிகழ்ச்சிக்காக இந்தப் பகுதிக்கு வந்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் பெரும் வர வேற்பளித்தனர். அப்போது சஞ்சனா என்ற சிறுமி மைக்கைப் பிடித்து “"விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இது நீண்டநாள் கோரிக்கை'” என்று பேசினார். இதைக் கேட்ட ஸ்டாலின், "சிறுமி சஞ்சனா பேசியதை கேட்டு நான், அதில் ஐக்கியமாகி விட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபிறகு, நிச்சயம் விருத்தாசலம் மாவட்டம் உருவாக்கப் படும்''’என்று உறுதியளித்தார். அவர் முதல்வராகி ஓராண்டு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு நடைமுறைக்கு வருமா என்று காத்திருக்கிறார்கள் மக்கள்.

இதுகுறித்து திட் டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்ச ருமான சி.வி. கணேசனிடம் நாம் கேட்ட போது, "தமிழக முதல்வர் மக்களின் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்று வார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மிகவும் உறுதியாக உள்ளார். எனவே மாவட்ட பிரிப்பு நடைமுறைக்கு வரும். அதில் புதிய ஒன்றியங்கள் தாலுகா உருவாவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். அதையும் முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்''’என்றார் அழுத்தமான குரலில்.

மக்களின் எதிர்பார்ப்பை விரைந்து நிறைவேற்றுவாரா முதல்வர்?

விவசாயிகளை மோதவிடும் கால்வாய் திட்டம்!

ரோடு மாவட்டத்தில், நடந்துவரும் கீழ்பவானிக் கால்வாய் சீரமைப்புத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தாற்போல் எழுந் திருப்பதால், திட்டம் கோமாவில் இருக்கிறது.

vv

இந்த நிலையில் சுமுக நிலை யை உருவாக்க, அமைச்சர் முத்து சாமி களமிறங்கினார். முதலில் எதிர்ப்பாளர்களின் கருத் தைக் கேட்ட அமைச்சர், 19 ஆம் தேதி, இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் விவசாய சங்கப் பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டம், ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. அப்போது விவசாயிகள் சங் கத் தலைவர் பெரியசாமி தலைமையி லான விவசாயிகள்...”கடந்த 9-ஆம் தேதி செயற்பொறியாளர் அலுவலகத் தை முற்றுகையிட்டு, கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அப்போது செயற்பொறியாளர் மே 15-ஆம் தேதி அனைத்து வேலைகளும் தொடங்கப் படும் என்று உறுதி அளித்தார். ஆனால் வேலைகள் தொடங்கப்படவில்லை. கால்வாயை சீரமைக்க தமிழக அரசு நபார்டு வங்கி மூலம் ரூபாய் 710 கோடி மதிப்பீட்டில் தொடங்கிய இந்தத் திட்டத்தை, நிறுத்தி வைத்தால் எப்படி?'' என்றார்கள் காட்டமாய்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்தரப்பு விவசாயி கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அவர்களில் ஒருவரான விவசாயி விஜயகுமாரிடம் நாம் கேட்டபோது "இந்தத் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, சிப்காட் தொழிற்சாலை கழிவு நீரும் உள்ளே வர வாய்ப்புள்ளது. எங்கள் பாசனப் பகுதியில் பல்வேறு இடங் கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயைத் தூர்வாரினாலே போதுமானது'' என்றார் அழுத்தமாய். அரசு என்ன செய்யப்போகிறது?

-ஜீவாதங்கவேல்

nkn280522
இதையும் படியுங்கள்
Subscribe