அண்ணாமலை என்ன பேசினாலும் மக்களுக்கு உண்மை புரியும்! -"இந்து' என்.ராம்

bb

ரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் டவுட்டன் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் 18-10-22 அன்று "ஒற்றைத் தலைமையின் உயிர்ப்பே!' எனும் தலைப்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற் றது. விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரிகையாளர்கள் "இந்து' என்.ராம், அருணன், எம்.மணி, எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட பலரும் முதல்வரை வாழ்த்திப் பேசினர்.

"இந்து' என்.ராம் பேசும்போது...

nram

"கவர்னர பத்தி அதிகமா விமர்சனம் பண்ண நான் இங்க வரல்ல. ஏன்னா தமிழகத்தில் சட்டம் ஒழுங்குச் சூழல் நல்லாதான் இருக்கு. இத யாரும் மறுக்கமுடியாது. டெல்லிக்கு அதுதான் ரிப்போர்ட் போயிருக்குன்னு கேள்விப்பட்டேன். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என்ன சொன்னாலும் உண்மைய மக்கள் புரிஞ்சுக்கிறாங்க... அவங்க கட்சியில இருக்கக்கூடியவங்ககூட புரிஞ்சுக்கிறாங்க.

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அதுக்கு பல பத்தாண்டுகளா ஒரு அரசியலமைப்புச் சட்டம் உண்டு. இப்ப மட்டும் இல்ல... பல பத்தாண்டுகளா, தேர்தல் ஆணையத்தால வாலாட்டமுடியாது. தி.மு.க.ன்னாலே எதுவும் சொல்லமுடியாது., இப்ப சமீபத்துல தேர்தல் ஆணையத்தின் ஒரு உத்தரவு கூட பார்த்தேன்... பா.ஜ.க. அரசு வந்தபிறகு வெளி யான உத்தரவு அது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விரும்பும் அரசியல் கட்சிகளின் பெயர்களில் மதச்சார்பு எதுவும் இருக்கக்கூடாதுன்னு அந்த உத்தரவு சொல்லுது. மதம் என்ற ஒரு வாசனைகூட இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க. இது யதார்த்தமா இந்தியாவுல? அப்ப பி.ஜே.பி. என்ன? ஆர்.எஸ்.எஸ். என்ன? பி.ஜே. பி.க்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக் கும் உள்ள உறவு என்ன? அதனால இதை ஒரு ஜோக் காதான் கண்டுக்கமுடியும்.

nram

தேர்தலின்போது மதத் தைப் பயன்படுத்தக் கூடாது. நம்ம அரசியலமைப்பு சபை 1948-ஆம் ஆண்டு ஒரு தீர் மானத்தைக் கொண்டுவந்தாங்க

ரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் டவுட்டன் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் 18-10-22 அன்று "ஒற்றைத் தலைமையின் உயிர்ப்பே!' எனும் தலைப்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற் றது. விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரிகையாளர்கள் "இந்து' என்.ராம், அருணன், எம்.மணி, எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட பலரும் முதல்வரை வாழ்த்திப் பேசினர்.

"இந்து' என்.ராம் பேசும்போது...

nram

"கவர்னர பத்தி அதிகமா விமர்சனம் பண்ண நான் இங்க வரல்ல. ஏன்னா தமிழகத்தில் சட்டம் ஒழுங்குச் சூழல் நல்லாதான் இருக்கு. இத யாரும் மறுக்கமுடியாது. டெல்லிக்கு அதுதான் ரிப்போர்ட் போயிருக்குன்னு கேள்விப்பட்டேன். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என்ன சொன்னாலும் உண்மைய மக்கள் புரிஞ்சுக்கிறாங்க... அவங்க கட்சியில இருக்கக்கூடியவங்ககூட புரிஞ்சுக்கிறாங்க.

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அதுக்கு பல பத்தாண்டுகளா ஒரு அரசியலமைப்புச் சட்டம் உண்டு. இப்ப மட்டும் இல்ல... பல பத்தாண்டுகளா, தேர்தல் ஆணையத்தால வாலாட்டமுடியாது. தி.மு.க.ன்னாலே எதுவும் சொல்லமுடியாது., இப்ப சமீபத்துல தேர்தல் ஆணையத்தின் ஒரு உத்தரவு கூட பார்த்தேன்... பா.ஜ.க. அரசு வந்தபிறகு வெளி யான உத்தரவு அது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விரும்பும் அரசியல் கட்சிகளின் பெயர்களில் மதச்சார்பு எதுவும் இருக்கக்கூடாதுன்னு அந்த உத்தரவு சொல்லுது. மதம் என்ற ஒரு வாசனைகூட இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க. இது யதார்த்தமா இந்தியாவுல? அப்ப பி.ஜே.பி. என்ன? ஆர்.எஸ்.எஸ். என்ன? பி.ஜே. பி.க்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக் கும் உள்ள உறவு என்ன? அதனால இதை ஒரு ஜோக் காதான் கண்டுக்கமுடியும்.

nram

தேர்தலின்போது மதத் தைப் பயன்படுத்தக் கூடாது. நம்ம அரசியலமைப்பு சபை 1948-ஆம் ஆண்டு ஒரு தீர் மானத்தைக் கொண்டுவந்தாங்க. அதுல என்ன இருக்கு?

எந்த அரசியல் கட்சியும், அரசியல் காரணங்களுக்காக, தேர்தல் காரணங்களுக்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடாதுன்னு இருக்கு. அந்த தீர்மானத்துக்கு மரியாதை கொடுத்தாங்களா? தேர்தல் ஆணையம் ஏதாவது செய்றாங்களா?

வெறுப்பு அரசியல். முஸ்லிம் மக்களுக்கு எதிராக... கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக பல விவாதங்கள் நடக்கிறது. பல உரைகள் சமூக ஊடகங்களிலும் வருது. தேர்தலின்போது அது நேரடியாக இல்லைன்னாலும், மறைமுகமாக அந்த விஷயத்தைத்தான் எழுப்புறாங்க பா.ஜ.க. தலைவர்கள். சில முஸ்லிம் கட்சித் தலைவர் களும் செய்றாங்க, அது உண்மைதான். முஸ்லிம் லீக்னு ஒரு கட்சி இருக்கு. அதனால பேரளவுக்கு இந்த வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் எல்லாம் போடுறாங்க. அத அமல்படுத்துறது இல்ல. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களுடைய செகண்ட் டெர்ம் நன்றாக ஆரம்பித்துவிட்டது. அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் என்னன்னா... அவருடைய உழைப்பு.

கலைஞர் ஒருதடவை சொன்னாரு. "உழைப்பு என் றால் ஸ்டாலின்'. இது மிகைப்படுத்திச் சொல்லக்கூடிய விஷயம் இல்ல. எல்லாரும் பாக்குறோம். வெளியூர்ல இருந்து வர்றாரு, அடுத்த நாளே ஆய்வுக்குப் போறாரு. இது ஒரு அரசியல் தலைவ ருக்கு அற்புதமான குணம் என்று நினைக்கிறேன்.

அவரோடு பேசும்போது வெளிப்படையா ஒரு விஷயம் தெரியுது. எதற்காக தி.மு.க.வும், அந்த அணியில் இருக்கக்கூடிய பல கட்சிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தார்கள். அசெம்ப்ளில நல்ல மெஜாரிட்டி இருக்கு. என்ன நமக்கு வேலை? வெறுமனே அடுத்த தேர்தல்ல வெற்றிபெறுவதா நம்முடைய நோக்கம்? பல அரசியல் கட்சிகள், பல அரசியல் தலைவர்கள், "பிராமிஸ் பண்ணிட்டோம், அத அமல்படுத்துறதுக்கு இன்னும் டைம் வேணும்'னுதான் சொல்லுவாங்க.

nn

ஆனால் முதல்வரின் அறம் என்னவென்றால்... உடனே சொன்னத செய்யமுடியலன்னா, அதுக்கான ஆழமான காரணத்தை ஆராய்ந்து, வெளியிடவேண் டும். ஆனா, நீண்டகால அளவிலாவது அதை அமல் படுத்தவேண்டும். ஒரு வாக்குறுதி தந்துட்டோம்.... நாம் நம்மாலான சிறந்ததைச் செய்யவேண்டும். நிறைய சவால்கள் வரலாம், நிறைய திருப்பங்கள் வரலாம், பல தடைகள் வரலாம். மத்திய அரசு பல தடைகளைப் போடுறது எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாடு ஒரு ஸ்பெஷல் கேஸ். கேரளா, அது ஒரு ஸ்பெஷல் கேஸ்.

பேராசிரியர் அருணன் நன்றாக அந்தக் கருத்தை வெளிப்படுத்துனாரு. இந்துக்கள்தான் இங்கு பெரும்பான்மை சமூகம். இந்துக்களுக்கு எதிராகவா திராவிட இயக்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றது?

மனு தர்மம் -அதை எதிர்ப்பது ஒண்ணு. ஆனா மக்கள்தொகையில பல பிரிவுகள் இருக்கறது. அதையெல்லாம் ஒன்றிணைத்து எடுத்துட்டுப் போகவேண்டியதுதான் நம் கடமை. திராவிட இயக்கத்துக்கு அது ஒரு குறிக்கோள் என்று சொல் வேன்... முதல்ல இருந்தே. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா - இவர்களை பலர் விமர்சனங்கள் செஞ்சா கூட, அந்தத் தொடர்ச்சி இருக்கும், சில கொள்கை வித்தியாசங்கள் இருக்கும்.

மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஒரு பிடிப்பு இருந்தது. அத தொடரணும்னுதான் முதலமைச்சர் அவருடைய பணியை இன்னிக்கு செய்றார். இன்னொரு விஷயமும் சொல்லணும். பல கூட்டங்கள்ல அது வராது. இந்து பத்திரிகைல ஒரு ஸ்டோரி வந்தது. தி.மு.க. தலைவர்கள், சில அமைச்சர்களின் செயல்களால் ஸ்டாலின் வேதனைப்படுகிறார்னு.

அருணன் சொன்னாரு, எல்லாத்தையும் முதல்வர் நேர்மையா, வெளிப்படையா பேசு றாருன்னு. பலகோடி மக்கள் ஆதரவு தர்ற ஒரு கட்சி யில பெரிய ரகசியங்களை எல்லாம் வச்சுருக்க முடியாது. ஆனா மக்களுக்கு பல உண்மைகளை, கடுமையான உண்மையா இருந்தாக்கூட அதச் சொல்றது... அரசியல் தலைமைக்கு நல்ல குணம் என்று நினைக்கிறேன்.

அவரு என்ன சொன்னாரு? "தினமும் எனக் குத் தூங்கமுடியல. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் எனக்குத்தான் பொறுப்பு. என்னைத் தான் விமர்சிப்பாங்க. என்னைத்தான் கண்டிப்பாங்க. நான் மத்தளம் மாதிரி... ரெண்டு பக்கமும் அடிச் சிட்டே இருக்காங்க...''ன்னு சொன்னது சிறந்த ஒரு குணம். அவருக்கு அந்த கஷ்டத்த குடுக்காதீங்க. யாராயிருந்தாலும், ஒரு கட்சியில பல கருத்துகள் வரும், பல சர்ச்சைகள் வரும். ஆனா அந்தக் கட்சிய ஒற்றுமையா எடுத்துட்டுப் போறது முதல்வருடைய பொறுப்பு.

சமீபமா இலவசப் பொருட்களைப் பற்றிய விமர்சனங்கள் வருது. ஃப்ரீபீ என்றால் தேவையில் லாத விஷயங்களை, தகுதியில்லாதவங்களுக்குக் குடுக்கிறது. ஆனா மக்களுக்கான பல ஆதாயங்கள் இருக்குல்ல... அத ஃப்ரீபீன்னு கொச்சைப்படுத்திச் சொல்றாங்க. இதை மடத்தனம் என்று சொல்ல லாம். அதாவது... பொதுவிநியோக அமைப்பு. தமிழ் நாட்டுக்கு அது இருக்கு. அது என்ன ஃப்ரீபீயா? கல்வியில பல ஆதாயங்கள் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கிடைக்குது. இது இலவசமா?

அதனுடைய ரிசல்ட் என்னவென்றால்... "ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம்'ன்னு ஒண்ணு இருக்கு. ஹையர் எஜுகேஷன். ஸ்கூல் முடிச்சிட்டு 100 பேர் இருந்தாங்கன்னா... அதுல இருந்து அடுத்த நிலைக்குப் போகலாம். காலேஜுக்கோ, பல்கலைக்கழகத்துக்கோ ஐ.ஐ.டி.க்கோ போகலாம்.

இந்த விகிதத்துல தமிழ்நாட்டோட நம்பர் என்ன? கிட்டத்தட்ட 52 சதவிகிதம். இந்தியா முழு வதற்குமான சராசரி இதுல பாதிதான். அதனு டைய சாராம்சம் என்ன? இந்தக் கொள்கையினால மக்களுக்கு வாய்ப்பிருக்கு. குறிப்பாக திராவிட இயக்கம் அதைக் கொண்டுவந்ததுனால மக்களுக்கு இன்று வாய்ப்பு இருக்கின்றது. எந்த பகுதியில இருந்து, ஏழைக் குடும்பங்கள்ல இருந்து வந்தாலும் அவங்களுக்கு ஒரு வாய்ப்பிருக்கு. அதை இம்ப்ரூவ் பண்ணலாம். பல முன்னேறிய நாடுகள்ல இந்த சதவிகிதம் 70, 80, 90 கூட வரும். அந்த குறிக் கோளை நோக்கித்தான் தமிழகம் போயிட்டிருக்கு.

இந்த மாதிரி நல்ல வளர்ச்சி இருக்கக்கூடிய பகுதிகள்ல இன்னும் முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம். தமிழ்நாடு திராவிட மாடல் என்பது ஒரு விவாதத்துக்கு வந்திருக்கு. ஒரு புக்கூட வந்திருக்கு, திராவிட முன்னுதாரணம்... "த திராவிடியன் மாடல்'. அதனுடைய சுருக்கம் என்னவென்றால்... "சமூக நீதி யுடனான வளர்ச்சி.' விவசாயத் துறையிலயும் தொழில்துறையிலும், தகவல் தொழில்நுட்பம் போன்ற சேவைத்துறையிலயும்... நிலையான வளர்ச்சி. அந்த வளர்ச்சி இருந்தாதான் வேலை வாய்ப்புகள் ஏற்படும். அப்போதான் மக்களுடைய வாழ்க்கை நிலைமையை இன்னும் மேல மேல எடுத்துட்டுப் போகமுடியும்.

அதேநேரத்துல... சமூக நீதி... சமுதாயத் துறையில நீதி, அது ரெண்டையும் இணைத்துப் பண்ணுவதாலதான் தமிழகம் இன்னைக்கு இந்தியாவுல முதல் மூன்று இடங்களில் இருக்கு. அதுல பல விஷயங்களப் பார்க்கலாம்..

ஆயுள் சராசரி, பிறப்பு விகிதம், கல்வியறிவு விகிதங்களில் தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் ரொம்ப இடைவெளியில்ல. அதனால இன்றைக்கு... இந்த சாதகத்தை வைத்துக்கொண்டு நல்ல அரசைக் கொடுக்கமுடியும். அதுதான் நமது முதலமைச்ச ருடைய பணி. அதுதான் அவருடைய கனவு. இன்னும் செய்யவேண்டும் என்ற அந்த ஆர்வம் இருக்கிறதுதான் ஒரு நல்ல தலைவருடைய குணம்.

பேராசிரியர் அருணன் சொன்னது மாதிரி, ஒரு கொள்கைப் பிடிப்பு இருக்கு. அதே நேரத்தில் எல்லா விஷயத்துக்கும் முரட்டுத்தனமா மோதவேண் டியது இல்ல. அதாவது, மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பல துறைகளில் தேவை. அதை ஒரு புத்திசாலித்தனமாக எடுத்துக்கொண்டு போகவேண் டிய தேவையிருக்கிறது. ஏன்னா, இன்னைக்கு அந்த மாதிரிதான் அரசியல் போக்கு இருக்கு.

அதேநேரம்... வகுப்புவாதம். இந்துத்துவா, இந்தித் திணிப்பு, நீட் திணிப்பு -இதையெல்லாம் எதிர்க்கக்கூடிய தேவை, மக்களுக்கான தேவையை ஒட்டியது என்று நினைக்கிறேன். அந்தப் பாதை யிலதான் முதலமைச்சர் தமிழகத்தை வழி நடத்துவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.''

-தொகுப்பு: சுப்பிரமணியன்

தா.மகாராஜன்

nkn051122
இதையும் படியுங்கள்
Subscribe