"ஹலோ தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் ஏற்கனவே சொன்னபடி அசுர பலத்துடன் தி.மு.க. ஜெயித்திருப் பது, அக்கட்சியினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கு.''”

"ஆமாம்பா, மக்கள் பணியாற்றும் எண்ணத்தோடு, தேர்தல் களத்தில் இறங்கி, வெற்றிவாகை சூடிய அனைவருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அதேநேரம், காவல்துறை ஒருவகையான பதட்டத்தில் இருக்குதே?''”

stalin

Advertisment

"ஆமாங்க தலைவரே, தி.மு.க. இந்த அளவுக்கு மெஹா வெற்றியைப் பெறும்னு அரசியல் வட்டாரம் எதிர்பார்க் கலை. அதே நேரம், ஆட்சிக்குக் கெட்ட பெயர் வராதபடி தி.மு.க. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செயல்படணும்னு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த ஆரம்பிச்சிட்டார். காரணம்... கமிஷன், உருட்டல் மிரட்டல்னு எந்தவிதமான அராஜகத்திலும் கட்சியினர் ஈடுபட்டுடக்கூடாதேன்னும், அதன்மூலம் ஆட்சியின் இமேஜை அவர்கள் டேமேஜ் ஆக்கிவிடக் கூடாதேன்னும் அவர் யோசிக்கிறார். ஏன்னா, கடந்த காலங்கள்ல தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் என்றாலே யாராவது வீடு கட்டணும்னு வாசல்ல கல்லைக் கொண்டுவந்து இறக்கினாலே, கழுகுக்கு மூக்குல வேர்த்த மாதிரி அவங்க அங்க ஆஜராயிடுவாங்க.''”

"கலைஞர், ஜெ. போன்ற தலைவர்களால் கூட இவங்களை அடக்க முடியலையே!''’

aa

"ஆமாங்க தலைவரே... வீடு கட்ற எஸ்டிமேட்ல சில பர்சண்ட்ட கமிஷனா கேட்பாங்க. கொடுக்கலைன்னா, குடி நீர் இணைப்பும் கழிவு நீர் இணைப்பும் கிடைக்காது. விளக்கெரிக்கக் கூட மின்சார வாரியம் ஒத்துழைக்காது. அந்த அளவுக்கு எல்லாப் பக்கமும் அணையக்கட்டி அல்லாட வச்சிடுவாங்க. இதுக்கு முன்ன எப்படியோ, இது டிஜிட்டல் உலகம். எல்லார் கையிலும் கேமரா செல்போன் இருக்கு. எங்கே யார் எப்படி அத்துமீறினாலும், கொஞ்ச நேரத்தில் அது யார் வழியாகவாவது சமூக ஊடகங்கள்ல பகிரங்கமாகிவிடும். இதை எல்லாம் கணக்குப் போட்டுதான், வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் அடக்கி வாசிக்கணும்னு அறிவுறுத்தப் பட்டு வருது. அதேபோல், இது மாதிரி யான ஏடாகூடம் எங்கேயும் நடந்துடாமப் பார்த்துக்கங்கன்னு காவல்துறையும் உஷார்படுத்தப்பட்டிருக்கு. அதனால் அவங்க ஒருவித கவலையில் இருக்காங்க.''”

"கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அவங்க ஆளுங்க அளவு கடந்து உள்ளாட்சியில் அட்டகாசம் செஞ்சாங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, 2006-ல் தி.மு.க. ஆட்சியிலும் ஆளுங்கட்சி அப்படித்தான் இருந்தது. ஜெயலலிதாவின் 2011-16 ஆட்சிக் காலத்தின் போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அரங்கேற்றிய அராஜகம் எல்லை மீறிப்போனதை நாம் மறந்துவிட முடியாது. இதையறிந்த ஜெ.,’இதற்காகவே ஒரு மீட்டிங்கை போட்டு, உள்ளாட்சி நிர்வாகிகளைக் கடுமையாக எச்சரித்தார். அப்படி ஒரு நிலை இங்கே வந்துடக் கூடாதுன்னுதான், இப்பவே உள்ளாட்சி நிர்வாகிகளின் லகானை பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின். இதில் இவரது முயற்சி எந்த அளவுக்கு எடுபடப் போகுதுன்னு போகப் போகத் தெரியும். ஆனா வெற்றிபெற்ற பலரும் ஏகத்துக்கும் கடன் வாங்கி தேர்தல் செலவு செய்ததோட, சீட் வாங்கவும் நிறைய அள்ளி இறைச்சிருக்காங்க. அவங்க விட்டதை எடுக்காம இருப்பாங்களா?ங்கிற கேள்வியும் இப்ப பரவலா எழுந்திருக்கு.''”

"திமு.க.வின் கூட்டணிக் கட்சிகள், நகராட்சித் தலைவர் பதவி தொடங்கி மேயர் பதவி வரை குறிவச்சாங்களே?''”

"அதுவும் உண்மைதாங்க தலைவரே, மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 4-ந் தேதி நடப்பதால், அதற்கு முன்பாகவே தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கைகளோட அறிவாலயத்தை முற்றுகை இட்டுச்சு. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சி பதவிகளில் பெரும்பாலானவற்றை தி.மு.க.வே கைப்பற்றியிருப்பதால், இந்த பதவிகளுக்கு பெரும்பாலும் போட்டி இருக்கவில்லை. காங்கிரஸ் மட்டும் ஓரிரு மேயர் பதவியையாவது எங்களுக்கு ஒதுக்குங்க. சில நகராட்சித் தலைவர் பதவியையும் எங்களுக்குக் கொடுங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு.''”

"சென்னை மேயர் பதவியை மையமா வச்சி, ரகசிய காய் நகர்த்தல்கள் எல்லாம் நடந்துச்சே?''”

"உண்மைதாங்க தலைவரே, சென்னை மேயராக தனது ஆதரவாளர் ஒருவரை அமர்த்தணும்னு ஆரம்பத்தில் இருந்தே காய் நகர்த்தினார் அமைச்சர் சேகர்பாபு. மேயர் கனவோடு வட்டச் செயலாளர் புஷ்பராஜ், தனது மனைவிக்கு சீட் கேட்க, அவருக்கு சீட்டே தரப்படலை. கவிதா நாராயணன் என்பவரை மேயராக்கும் எண்ணத்தில் அமைச்சர் களமிறங்கிய நிலையில், கவுன்சிலருக்கு நின்ற கவிதா நாராயணன், தோல்வியைத் தழுவி அமைச்சருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார். இதன் பின்னரும் மனம் சோராத அமைச்சர் சேகர் பாபு, தனது அடுத்த சாய்ஸான 74-ஆவது வார்டு கவுன்சிலர் பிரியாவை மேயராக்கிடணும்னு அழுத்தம் கொடுத்துக் கிட்டிருக்காரு.''

jeyalkumar

Advertisment

"சரிப்பா, தேர்தல் ரிசல்ட் பற்றி பா.ஜ.க. தரப்பின் மனநிலை என்னவாம்?''”

"ஆமாங்க தலைவரே, வெற்றியின் எண்ணிக்கை ரொம்பவும் குறைவுன்னாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்குன்னு தமிழகத் தலைவர் அண்ணாமலை குஷியாயிட்டார். தன்னைச் சந்திப்பவர்களிடம், பா.ஜ.க.வில் எனக்கு முன்பாக இருந்த தலைவர்கள் யாராவது, இந்த அளவுக்கு பா.ஜ.க.வுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்திருக்காங்களா?ன்னு அவர் கேட்டுக்கிட்டே இருந்தார். ஆனால் அந்தக் கட்சியிலேயே இருக்கும் சீனியர்களோ, இவர் தலைமையின் லட்சணம் எங்களுக்குத் தெரியாதா. கோட்டைன்னு சொன்ன கோவையில் 70-க்கும் மேற்பட்ட வார்டுகளில் டெபாஸிட் பறிபோயிடிச்சு. நாகர்கோவில் மாநகராட்சியும் கைவசமாகல. பல இடங்களில் காங்கிரஸ் ஸ்கோர் பண்ணிடிச்சி. ஒரு வேட்பாளர் வெறும் ஒரே ஒரு வாக்கைப் பெற்றிருக்கார். இன்னொரு வேட்பாளர் ஒரு ஓட்டு கூட வாங்கலை. இதுதான் எங்க நிஜ நிலவரம்னு எரிச்சல் படறாங்க.''”

"கொங்கு மண்டலத்தில் தி.மு.க. இந்த அளவு வெற்றி பெறும்னு யாரும் கணிக்கலையே?''

"வெற்றி பெற என்ன செய்ய ணும்னு சரியா கணித்து வச்சிருந்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. கோவை மாவட்ட பொறுப்பாளரா அவரை ஸ்டாலின் நியமிச்சதும் ஃபீல்டில் இறங்கி, வேலுமணி வியூகத்துக்கு டஃப் கொடுத்தாரு. பூத் கமிட்டி கூட்டத்தையே மாநாடு போல நடத்தி, "நாமதான் ஜெயிக்கிறோம். நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்னு தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தி, அதேபோல ஜெயிக்க வச்சிருக்காரு. கோவைன்னாலே இப்ப செந்தில் பாலாஜியும் ஹாட்பாக்ஸும்தான் பேசுபொருளாகியிருக்கு. அதேபோல, சேலம் மாவட்ட பொறுப்பாளரா நியமிக்கப்பட்ட கே.என்.நேருவும் எடப்பாடி கோட்டையைத் தகர்த்து சூரியனை உதிக்க வச்சிருக்காரு. இந்த இரண்டு மந்திரிகளும்தான் உள்ளாட்சித் தேர்தலில் ராஜாக்கள்.''

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தி.மு.க. தொண்டரை அடித்து உதைத்து அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற விவகாரத்தில், கைதான அ.தி.மு.க. மாஜி மந்திரி ஜெயக்குமார், இப்போது பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு கம்பி எண்ணிவருகிறார். பெயில் வாங்க முயற்சிக்கும் ஜெயக்குமார் மீது, தேர்தல் நேரத்தில் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கும் தயாராக இருக்கு. அதேபோல் மீனவர்களுக்கு அரசு மானியத்தில் வழங்கும் பெட்ரோலை வெளி மார்க்கெட்டில் விற்ற குற்றச்சாட்டும் அவர் மீது பதியப்பட்டிருக்கு. மேலும் அவர் வருமானத்துக்கு அதிகமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறையும் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக, பொறியில் அகப்பட்ட எலி மாதிரி தவிக்கிறார் ஜெயக்குமார்.''’