பா.ஜ.க. அரசு அமல்படுத்தியுள்ள புதிய தேசியக் கல்விக்கொள்கை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. "3-ஆம் வகுப்புக்கு நீட்டு! ஏழை மாணவர் களுக்கு வேட்டு! இதுதான் புதியக் கல்விக் கொள்கை!' என்ற தலைப்பில் 2019 ஜூலை 24-26 தேதியிட்ட நக்கீரனிலேயே விரிவாக அம்பலப்படுத்தியிருந்தோம். அந்த, கல்விக் கொள்கையைத்தான் 2020 புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அமல்படுத்தியிருக்கிறது பா.ஜ.க அரசு. தாய்மொழிக் கல்வி- தொழிற்வாய்ப்புகள்-அதிக நிதி ஒதுக்கீட்டைஅதன் ஆதரவாளர்கள் முன்வைக்க, மும்மொழித் திணிப்பு- அதிக பொதுத் தேர்வுகள்- மாநில உரிமை பறிப்பு போன்றவற்றை முன் வைக்கிறார்கள் அதன் எதிர்ப்பாளர்கள். புதிய கல்விக்கொள்கை சாதகமா? பாதகமா?
தமிழ்வழிக்கல்வியைக் கட்டாயமாக்குகிறதா புதிய கல்விக்கொள்கை?
5-ஆம் வகுப்புவரை தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிப்பதாக பலரும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் கட்டாயமாக பயிற்று மொழி என்று புதிய தேசியக்கல்விக் கொள்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. wherever possible என்கிறார்கள். அதாவது, எங்கெல்லாம் சாத்தியமோ ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழி. எங்கெல்லாம் சாத்தியமில்லை என்று தெரியவில்லை. திட்டவட்டமாக அனைத்து வகைப்பள்ளிகளும் தாய்மொழிதான் என்று புதிய கல்விக்கொள்கை சொல்லவில்லை.
தற்போது, மத்திய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் 66 பக்க ஆவணத்தில் மொழிக்கொள்கை பற்றி பேசும்போது, சமஸ்கிருதத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சமஸ் கிருத்ததில பண்பாட்டுக் கூறுகள், கருத்துகள், விஞ்ஞானம், கணிதம் எல்லாமே இருக்கின்றன. எனவே, தொடக்கக்கல்வியிலிருந்து மேல்நிலைக்கல்வி வரை இந்த மொழியைக்கற்றுக்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தர
பா.ஜ.க. அரசு அமல்படுத்தியுள்ள புதிய தேசியக் கல்விக்கொள்கை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. "3-ஆம் வகுப்புக்கு நீட்டு! ஏழை மாணவர் களுக்கு வேட்டு! இதுதான் புதியக் கல்விக் கொள்கை!' என்ற தலைப்பில் 2019 ஜூலை 24-26 தேதியிட்ட நக்கீரனிலேயே விரிவாக அம்பலப்படுத்தியிருந்தோம். அந்த, கல்விக் கொள்கையைத்தான் 2020 புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அமல்படுத்தியிருக்கிறது பா.ஜ.க அரசு. தாய்மொழிக் கல்வி- தொழிற்வாய்ப்புகள்-அதிக நிதி ஒதுக்கீட்டைஅதன் ஆதரவாளர்கள் முன்வைக்க, மும்மொழித் திணிப்பு- அதிக பொதுத் தேர்வுகள்- மாநில உரிமை பறிப்பு போன்றவற்றை முன் வைக்கிறார்கள் அதன் எதிர்ப்பாளர்கள். புதிய கல்விக்கொள்கை சாதகமா? பாதகமா?
தமிழ்வழிக்கல்வியைக் கட்டாயமாக்குகிறதா புதிய கல்விக்கொள்கை?
5-ஆம் வகுப்புவரை தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிப்பதாக பலரும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் கட்டாயமாக பயிற்று மொழி என்று புதிய தேசியக்கல்விக் கொள்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. wherever possible என்கிறார்கள். அதாவது, எங்கெல்லாம் சாத்தியமோ ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழி. எங்கெல்லாம் சாத்தியமில்லை என்று தெரியவில்லை. திட்டவட்டமாக அனைத்து வகைப்பள்ளிகளும் தாய்மொழிதான் என்று புதிய கல்விக்கொள்கை சொல்லவில்லை.
தற்போது, மத்திய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் 66 பக்க ஆவணத்தில் மொழிக்கொள்கை பற்றி பேசும்போது, சமஸ்கிருதத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சமஸ் கிருத்ததில பண்பாட்டுக் கூறுகள், கருத்துகள், விஞ்ஞானம், கணிதம் எல்லாமே இருக்கின்றன. எனவே, தொடக்கக்கல்வியிலிருந்து மேல்நிலைக்கல்வி வரை இந்த மொழியைக்கற்றுக்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று ஒரு பெரிய பத்தியே எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ், தெலுங்கு, கன்னடம், உள் ளிட்ட பிற மொழிகள் அதர் க்ளாசிக்கல் லாங்வேஜ் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பார்கள். அதோடு, கூடுதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். இதன்மூலம் சமஸ்கிருதத்தை அனை வரும் படித்தாக வேண்டிய கட்டா யம் உருவாக்கப்படுகிறது. செம் மொழித் தமிழில் உள்ள 63 நாயன் மார்கள் பற்றியோ, 12 ஆழ்வார் களைப்பற்றியோ, அகநானூறு, புறனானூறு பற்றியோ ஏன் சொல்லவில்லை. தாய்மொழிக் கல்வி என்பதை ஆங்கில மீடியத்தில் பாடம் நடத்தும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வியாளர்களே ஏற்க மறுக்கிறார்கள்.
சமமான கற்றல் வாய்ப்பை கொடுக்கிறதா?
Equitable and Inclusive Education என்று இதில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படின்னா, சமமாக எல்லோரையும் இணைத்து கல்விக் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் 1 கிலோமீட்டருக்குள் ஒரு அரசு பள்ளி இருக்கிறது. இந்த, பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லை, பாடத்திற்கு ஒரு ஆசிரியர் இல்லை என்ற பற்றாக்குறை நிலவிவருகிறது. சமமான கற்றல் வாய்ப்பை கொடுக்க நினைத்தால் ஏற்கனவே உள்ள பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களையும் கட்டமைப்பு வசதிகளையும்தானே உருவாக்கிக்கொடுக்கவேண்டும்? ஆனால், இதுபற்றி புதிய கல்விக் கொள்கை எதையுமே பேச மறுக்கிறது.
10லிருந்து 15 பள்ளிகளை இணைத்து பள்ளிவளாகம் (school complex) என்று உருவாக்கப் போகிறார்கள். அனைத்து, வள மையங்களும் இதில் இருக்குமாம். ஃபிசிகல் எஜுகேஷன் டீச்சரோ, ஓவிய டீச்சரோ, மியூசிக் டீச்சரோ ஒரு பள்ளிக்கென்று நிரந்தரமாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளிக்கு வந்து பயிற்சி கொடுத்துவிட்டு வருவார்கள் என்கிறது பு.தே. கல்விக்கொள்கை. ஆனால், தனியார் பள்ளிகளில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு ஆசிரியர்கள் இருப்பார்கள். இது, எப்படி ஒரு சமமான கற்றல் வாய்ப்பாக இருக்கும்?
அடுத்து, 2 கோடி பேர் பள்ளிக்கல்வியில் இல்லை. அவர்கள் இடை நிற்றல் ஆகி வெளியில் இருக்கிறார்கள். பள்ளியிலேயே சேராமல் இருக்கிறார்கள். அவர்களை, பள்ளிக்குள் கொண்டுவரப்போகிறோம் என்கிறார்கள். நல்ல விஷயம்தான். அதே நேரத்தில், தமிழகத்துக்கு இந்தப் பிரச்சனை இல்லை. 99 சத வீதத்திற்குமேல் தமிழகத்தில் பள்ளியில் சேர்ந்துவிட்டார்கள். சேர்ந்தபிறகு, விடுபட்டவர்கள் என்றால் 4 லிருந்து 5 சதவீதம் மாணவர்கள்தான் இருப்பார் கள். காரணம், நமது மாநிலக் கல்விமுறை. ஏன் விடுபட்டார் கள் என்று கண்டுபிடித்து மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்துவிடலாம்.
மற்ற மாநிலங்களில்தான் அதிகமாக பள்ளியில் சேராமல் இடை நிற்றல் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் களை பள்ளியில் சேர்ப்பதை உறுதிப்படுத்தாமல் இவர்கள் படிப்பதற் கான ஏற்பாடுகளை செய்வோம் என்கி றார்கள். அதாவது, பள்ளியிலும் இவர்கள் சேர்ந்து படிக்கலாம். பள்ளியில் சேர்ந்து படிக்கமுடியாதவர்கள் ஆன்லைனில் படித்துக்கொள்ளலாம். இதற்காக திறந்தவெளி தொலைதூரக்கல்வியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
3-ஆம்வகுப்பு ஏ கிரேடு, 5-ஆம் வகுப்புக்கு பி கிரேடு, 8-வதுக்கு சி கிரேடு என மூன்றுவிதமான தேர்வுகளை ஆன் லைனிலேயே படித்து தேர்வு எழுதலாம். ஆகமொத்தம், குடும்பச்சூழல் காரணமாக பள்ளியில் சேராத, இடைநிற்றல் மாணவர் களை ஆன்லைன் வழியே என்ரோல் செய்து எல்லோரும் பள்ளிக்கூடத்துக்கு வந்து விட்டார்கள் என்று கணக்கு காட்டப்போகிறது மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை.
மலைகிராமம், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிள்ளை களைப் பள்ளிக்கு கொண்டுவந்துதானே கல்வியை கொடுக்கவேண்டும்? அதுவும், கம்ப்யூட்டர் வசதியில்லாத குழந்தைகள் தொலைதூர அடிப்படையில் எப்படி கற்றுக்கொள்ளமுடியும்?
புதிய கல்விக்கொள்கையை வகுக்கும் கொத்தாரி கமிஷனில் சொல்லப்பட்ட சாத்தியமில்லாத அம்சங்களை நிறுவப் பார்க்கும் மத்திய அரசு, ஒரு பள்ளியில் என்னென்ன கட்டமைப்பு வசதிகள் இருக்கவேண்டுமோ அனைத்து வசதிகளும் இருக்கவேண்டும் என்ற பொதுப்பள்ளி முறை பரிந்துரையை ஏன் அமல்படுத்த வில்லை? இன்றைக்கு இருக்கும் நிலையை நீடிக்கச்செய்கிறது புதியக்கல்விக்கொள்கை. இதில், என்ன புதிதாக சொல்கிறது? இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை தொடர்கிறது என்கிறார்கள் கல்வி வல்லுநர்கள்.
குலக்கல்வியை உருவாக்கும் தொழிற்கல்வி!
இதையெல்லாம், சுட்டிக்காட்டும் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “பிரிகேஜியிலிருந்து 2-ஆம் வகுப்புவரை ஃபவுண்டேஷனல் எனப்படும் அடிப்படைக்கல்வி தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துறாங்க. 6, 7 ,8 ஆம் வகுப்புகளில் ஒரு தொழிலில் முழுமையான ஆர்வம் வரக்கூடிய அளவுக்கு படித்துவிட வேண்டுமாம். அந்த, ஊரில் இருக்கக்கூடிய எந்த தொழிலை அக்குழந்தை தேர்ந்தெடுக் கிறதோ அந்தத்தொழிலில் பாண்டித்யம் பெற்ற தொழிற்கலைஞர் இருப்பார் அல்லவா? அந்த தொழிற்கலைஞர் வந்து தொழில் குறித்து வகுப்பறையில் சொல்லிக் கொடுப்பார். 10 நாட்கள் இண்டன்ஷிப் வேறு உள்ளது. அதாவது, 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்கள் அந்த தொழில் நடக்கும் இடங்களுக்கு சென்று நேரில் பார்த்து கற்றுக்கொண்டு வருவார்கள். ஆக மொத்தத்தில், பள்ளிப்பாட மதிப்பெண் மட்டும் இருந்தால் போதாது தொழிற் பயிற்சியில் என்ன மதிப்பெண் என்பதும் முக்கியம்.
ஒரு குழந்தைக்கு ஒரு தொழில் குறித்த ஆர்வத்தை 8ஆம் வகுப்பிற்குள்ளேயே உருவாக்கிவிட்டால் அந்தக்குழந்தை எப்படி மேற்கொண்டு படிக்கும்? கல்வியின் செயல்பாட்டில் எப்படி அக்கறையும் ஆர்வமும் வரும்? இந்தியா போன்ற சாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பு, பொருளாதார கட்டமைப்பு கொண்ட நாட்டில் பள்ளிக் கல்வியிலேயே தொழிலை கற்றுக் கொள்ளவேண்டும் என்று எப்படி சொல்கிறீர்கள்?
சமீபத்தில், குடுகுடுப்பைக்காரர்கள் சமூகத்திலிருந்து 12 ஆம் வகுப்புத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியை அந்த ஊரே அந்தச்சமூகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தச்சூழலில், தொழிற்கல்வி தேவையா? குலக்கல்வியைத்தானே உருவாக்குகிறது?
கல்லூரிக்கு போகவே தடை!
9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க தேர்வுமுறையை மாற்றி 10ஆம் வகுப்புக்கும் 12ஆம் வகுப்புக்கும் போர்டு எக்ஸாம் வைக்கிறோம். வருடத்துல 2 முறை தேர்வு. மெயின் தேர்வு, துணை தேர்வு. இதில், எது பெஸ்ட் மார்க்கோ எடுத்துக்கலாம் என்கிறார்கள். ஆனால், நீட் தேர்வுபோல 12 ஆம் வகுப்புக்குப்பிறகு கல்லூரியில் சேர நேஷனல் ஆப்டியூட் டெஸ்ட்டில் தேர்ச்சிபெறவேண்டும் என்கிறார்கள்.
இது, மன அழுத்தத்தை ஏற்படுத்தாதா? நீட் தேர்வு கொண்டுவந்தபிறகு அரசுப்பள்ளி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரமுடியவில்லை. அதேநிலையைத்தான், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியிலும் உருவாக்கு கிறார்கள்.
ஆகமொத்தம், கல்லூரிக்கே வந்துவிடக்கூடாது என்று தடைபோடுகிறது இக்கல்விமுறை. மாநில அரசின் உரிமைகளை பறித்து சமூகநீதிக்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் இக்கல்விமுறையை தமிழக அரசு நிராகரிக்கவேண்டும்'' என்கிறார் அவர்.
ஏணிபோல் இருக்கும் கல்விமுறையை தடைதாண்டு தல் போல் மாணவர்களுக்கு தடைகளை உருவாக்கி எதிர்காலத்தை பின்னோக்கி கொண்டுசெல்ல இருக்கிறது புதிய கல்விக்கொள்கை. என்பதே பலரது கருத்தும்.
-மனோசௌந்தர்