"நவரசா' ஒன்பது உணர்வுகளின் அடிப்படையில் ஒன்பது கதைகள். ஒன்பது இயக்குநர்கள். சூர்யா, அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி என பெரிய நடிகர்கள், மணிரத்னம் தயாரிப்பு என பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டு விறுவிறுவென எடுக்கப்பட்டு நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகியும்விட்டது.

படம் எடுத்தவர்கள் ஒன்பது உணர்வுகளின் அடிப்படையில் கதைகளை எழுதி எடுத்திருந்தாலும், பார்த்த பெரும்பாலானோருக்கு ஏற்பட்ட ஒரே உணர்வு ஏமாற்றம். 30 முதல் 40 நிமிட நேர அளவில் எடுக்கப்பட்டிருந்த ஒன்பது படங்களில் எந்தப் படமுமே மிகச்சிறப்பாக இல்லை என்பதே பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் சொல்வது.

சூர்யா-கௌதம்மேனன் கூட்டணியில் உருவான "கிட்டார் கம்பி மேலே நின்று' படம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களை சோதித்திருக்கிறது. இப்படி, "நவரசா' பார்த்த ரசிகர்களுக்கு ஒரு ஃபீலிங் என்றால்... தயாரித்த மணிரத்னம், ஜெயேந்திரா இருவருக்கும் வேறு ஃபீலிங். "எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஒன்றுகூடி ஒரு ரூபாய்கூட ஊதியம் பெறாமல் தம் நேரத்தையும், உழைப்பையும் நல்கி நவரசாவை உருவாக்கிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி. உங்களுடைய இந்தப் பேராதரவால் ஆறு மாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டுத் தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது.

cc

Advertisment

உதவி என்பதைத் தாண்டி, நம் கலைக் குடும்பத் தினருக்கு நம் அன்பை, அக்கறையை, நன்றியை உணர்த்த முடிந்தது. பெருமையில் நன்றியுணர்ச்சியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறோம் நாங்கள்; நீங்களும்தானே? நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சியில்லை. மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம்'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆம், கொரோனா பெருந் தொற்று காரணமாக திரைத்துறை முடங்கியுள்ளதால் நலிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் இந்தத் திரைப்படமானது எடுக்கப்பட்டது. இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருமே சம்பளம் இன்றி இப்படத்தில் பணியாற்றினர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

நயனின் அடுத்த டீசர்!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்'. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்துவந்த சூழலில்... கொரோனா பரவல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது இயல்புநிலை மெல்லத் திரும்பி வரும் சூழலில், மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. இளைஞர்களின் பல்ஸ் அறிந்த இயக்குநர், வெர்ஸடைலான ஹீரோ, இரண்டு முன்னணி நாயகிகள் எனப் பல காரணங்களால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்னும் ஓரிரு வாரங்களில் மொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இப்படத்தின் டீஸர், பாடல்கள் உள்ளிட்ட பல அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

சோகத்தில் ஆழ்த்திய "ஆனந்தம்!'

பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஆனந்த கண்ணன், புற்றுநோய் காரணமாக ஆகஸ்ட் 16 நள்ளிரவு காலமானார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். திரைத்துறைப் பிரபலங்கள் பலரோடு நல்ல நட்புறவைக் கொண்டிருந்த ஆனந்த கண்ணனின் திடீர் மரணம் திரைத்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம்வயதிலேயே ஊடகத்துறையில் உச்சம்தொட்ட ஆனந்த கண்ணன் கடந்துவந்த பாதை பூப்பாதையாக இருந்துவிடவில்லை.

cc

சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனந்த கண்ணன், சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி மூலமாக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பின், தன்னுடைய மனைவியின் படிப்பிற்காக மனைவியோடு சென்னை வந்த அவர், சென்னையில் பல தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், தமிழக மக்களுக்குப் பரிச்சயமில்லாத அவரது வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு அவருக்கு நிராகரிப்பு களையே பதில்களாகத் தந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சன் மியூசிக் சேனலில் வாய்ப்பு கிடைக்க, தன்னுடைய செயற்கைத்தனமற்ற நகைச்சுவை மற்றும் ட்ரெண்டி தோற்றம் ஆகியவற்றின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறத் துவங்கினர். விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களையும் நேர்காணல் செய் துள்ளார். ஒரு கட்டத்தில் முன்னணி விஜே அந்தஸ்திற் கும் உயர்ந்த ஆனந்த கண்ணன், இன்றும் ரசிகர்களின் நினைவிலிருந்து மறையாத வெகுசில 90களின் விஜேக்களில் ஒருவராக உள்ளார். விஜே கரியர் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து நடிப்பிலும் தடம் பதித்த இவர், தன்னுடைய மனைவியின் கல்வி முடிந்த பிறகு மீண்டும் சிங்கப்பூர் திரும்பினார்.

அங்கு மரபுக் கலைகளைக் கற்றுக்கொடுக்க ஏ.கே.டி என்ற நிறுவனத்தை உருவாக்கி இளம் தலைமுறை யினர் மத்தியில் மரபுக்கலைகளைப் பரவலாக்கும் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டார். அதற்காக ஆனந்தக்கூத்து என்ற பாடத்திட்டத்தை உருவாக்கி அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார். தன்னுடைய தனிப்பட்ட கலைப்பயணத்தைத் தாண்டி, இத்தகைய கலைச்சேவை புரிந்துவந்த ஆனந்த கண்ணனின் இழப்பு தமிழ் கலையுலகத்தின் இழப்புமே.