ஓய்வுபெற்ற நீதிபதி ஜெய்சந்திரன் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று நடத்தும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆண்டிற்கான தேர்தல் வாக்குப் பதிவு வருகிற ஞாயிறு (நவ.22) நடைபெறவுள்ளது.
"தேனாண்டாள்' முரளி தலைமையிலான "தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி'யும் டி.ராஜேந்தர் தலைமையிலான "தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி'யும் பலம் கொண்ட மட்டும் மோதுகின்றன. இரு அணிகளும் வாக்காளர்களுக்கு தாராள கவனிப்பு நடத்துவதை கடந்த நவ.14-17 தேதியிட்ட நக்கீரனில் விரிவாக எழுதியிருந்தோம்.
இப்போது கவனிப்பில் விறுவிறுப்பு கூடியுள்ளது. கடந்த 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திறங்கிய முரளியின் பிரதிநிதிகள், ஓட்டுக்கு தலா 5 ஆயிரம் பட்டுவாடா செய்து, ஓட்டுப் போட சென்னைக்கு வந்து செல்லும் செலவு, தங்குமிடம் இவற்றுக்கும் க்யாரண்டி கொடுத்த தால், வாக்காளர்கள் உற்சாகமாகிவிட்டனர். முரளி தரப்புக்கும் வெற்றி நம்
ஓய்வுபெற்ற நீதிபதி ஜெய்சந்திரன் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று நடத்தும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆண்டிற்கான தேர்தல் வாக்குப் பதிவு வருகிற ஞாயிறு (நவ.22) நடைபெறவுள்ளது.
"தேனாண்டாள்' முரளி தலைமையிலான "தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி'யும் டி.ராஜேந்தர் தலைமையிலான "தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி'யும் பலம் கொண்ட மட்டும் மோதுகின்றன. இரு அணிகளும் வாக்காளர்களுக்கு தாராள கவனிப்பு நடத்துவதை கடந்த நவ.14-17 தேதியிட்ட நக்கீரனில் விரிவாக எழுதியிருந்தோம்.
இப்போது கவனிப்பில் விறுவிறுப்பு கூடியுள்ளது. கடந்த 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திறங்கிய முரளியின் பிரதிநிதிகள், ஓட்டுக்கு தலா 5 ஆயிரம் பட்டுவாடா செய்து, ஓட்டுப் போட சென்னைக்கு வந்து செல்லும் செலவு, தங்குமிடம் இவற்றுக்கும் க்யாரண்டி கொடுத்த தால், வாக்காளர்கள் உற்சாகமாகிவிட்டனர். முரளி தரப்புக்கும் வெற்றி நம்பிக்கை கூடியுள்ளது.
கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷாலுடன் மோதி, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராதாகிருஷ்ணன், இந்தமுறை முரளி அணியில் செயலாளர் பதவியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். அதேபோல் இதே அணியில் துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடும் "சிவசக்தி' பாண்டியனும் கந்துவட்டிப் பார்ட்டியான ஆர்.கே.சுரேஷும் மூச்சிரைக்க முட்டி மோதுகின்றனர்.
டி.ஆர்.அணியைப் பொறுத்தவரை செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன்தான் சகலமும் என்றாலும் மீடியாவைச் சந்தித்து அதிர்வேட்டு வெடிப்பது டி.ஆர். மட்டுமே. கடந்த வாரம் நடந்த பிரஸ்மீட்டின் ஓப்பனிங்கிலேயே, “"இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு கண்டெண்ட் கொடுக்கப்போறேன்' என தடாலடியாக ஆரம்பித் தார் டி.ஆர். ’’""தியேட்டர் களுக்கு 8% போடும் உள்ளாட்சி வரியை ஆறு மாசத்துல பாதியா குறைப்போம்னு சொன்னார் அமைச்சர் கடம்பூர் ராஜு. ஆனா சொன்னது என்னாச்சு, காத்தோடு போச்சு. அரசாங்கத்தை நம்புனதால போனோம் நாங்க மோசம், இப்ப போடுறோம் கோஷம். வி.பி.எஃப் கட்டணத்தைக் குறைக்கலேன்னா எழுவேன் வீராவேசமா, விழுவேன் பிரதமர் மோடியின் காருக்கு முன்னால ஆவேசமா''’என பொளந்து கட்டினார் டி.ஆர்.
களத்தை விறுவிறுப்பாக்கும் "தேனாண்டாள்' முரளி நம்மிடம், “""எனது தந்தை இராம.நாராயணனிடம் சினிமா தொழில் கற்ற எனக்கு சின்னத் தயாரிப்பாளர்களின் வலி தெரியும். அதனால் இந்தமுறை உறுதியான முடிவு எடுத்து சிறந்த வலிநிவாரணியாக இருப்போம். நான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சங்க நலனுக்காக மத்திய-மாநில அரசு களுடன் இணக்கமாக இருப்பதுதான் நல்லது''’என்கிறார்.
"பவர்ஃபுல்லான வினியோகஸ் தர்கள் சங்கத்தின் தலைவராக டி.ஆரும் செயலாளராக மன்னனும் இருப்பதால், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை. எனவே இவர்களின் வேட்புமனுவை டிஸ்மிஸ் பண்ண வேண்டும்'’ என எதிர்ப்புக் கொடி பிடித்தவர், இப்போது துணைத்தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் சிங்காரவேலன்.
அப்போது இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போதோ முரளி அணியின் ராதா கிருஷ்ணன் நம்மிடம் பேசும்போது, “""முக்கால்வாசி பஞ்சாயத்துகள் நடப்பதே தயாரிப்பாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும்தான். "விஷாலின் இரட்டைத் தலைமையே சங்கத்தில் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம்' என அப்போது சொன்ன டி.ஆருக்கு இப்போது மட்டும் இரட்டைப் பதவி கேட்கிறதா? ஜெயித்து ஒரே மாதத்தில் "சிம்பு சினி ஆர்ட்ஸ்' சார்பில் 15 லட்சம் கொடுப்பேன். நலிந்த வினியோகஸ் தர்களுக்கு உதவுவேன்னு சொன்ன டி.ஆர். ஜெயிச்சு ஆறு மாசமாச்சு, சொன்னது என்னாச்சு? இதுவு மில்லாம தியேட்டர் அதிபர்கள் சங்கத்திலும் மெம்பரா இருக்கார் டி.ஆர். எங்கள் அணி ஜெயித்தால் சீனியரான பாரதிராஜா தலை மையிலான நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் தாய் சங்கத்தில் இணைக்க முயற்சிப்போம், அவர்களின் ஆலோசனையையும் கேட்போம்''’என்றார்.
பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் முரளி அணியின் சந்திரபிரகாஷ் ஜெயினின் காஸ்ட்லியான கவனிப்பால் கட்டுண்டு கிடக்கின்றனர் வாக்காளர்கள். சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கும் முக்கால்வாசி தயாரிப்பாளர்கள் தன்னிடம் ஃபைனான்ஸ் வாங்கியிருப்பதால், தனது வெற்றி உறுதி என நம்புகிறார் சந்திரபிரகாஷ் ஜெயின்.
"யார் தலைவரா ஜெயித்தாலும் சரி, நான் துணைத்தலைவராவது உறுதி' என்பதில் உறுதியாக இருக்கிறார் சிங்காரவேலன்.
"தங்களுக்கு டஃப் ஃபைட் கொடுப்பது சுயேட்சை தேனப்பன்தான்' என முரளியே ஓப்பனாக சொல்லிவரும் நிலையும் இருக்கிறது. இதனால் கடைசிக்கட்ட நிலவரப்படி "கொதிப்பில் டி.ஆர்., தகிப்பில் முரளி, திகைப்பில் தேனப்பன்' என விறு விறுப்பாக இருக்கும் களத்தில், முந்தும் முரளியை பின்தொடர்கிறார் தேனப்பன்.
-பட்டேல்
படங்கள்: ஸ்டாலின்