2019-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று, பா.ஜ.க.வின் பொன்.ராதா கிருஷ்ணனை தோற்கடித்து எம்.பி. ஆனார். அதன்பின்னர் கொரோனா காலகட்டத்தில் அதனால் பாதிக்கப்பட்டு திடீரெனக் கால மானதையடுத்து, 2021-ல் நடந்த இடைத்தேர்த லில், அவரது மகனும் நடிகருமான விஜய் வசந்த் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தொகுதி மக்களிடம் நன்றி தெரிவிக்கச் சென்றபோது, எனது எம்.பி. சம்பளம் அனைத் தையும் ஏழை மாணவர்களின் கல்விக்கும் விளையாட்டு மேம்பாட்டுக்கும் பயன்படுத்து வேன் என அறிவித்து, அப்படியே செய்துவருகிறார். அதேபோல், அவரது சொந்த செலவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தையும், அரசு மருத்துவமனைகளுக்கு 150 மின்விசிறிகளையும் வாங்கிக் கொடுத்தார்.

ff

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக 3 ஆண்டுகளாகத் தொடரும் விஜய்வசந்த், தொகுதி மக்களிடம் ரப்பர் பூங்கா, தோவாளையில் பூக்களை ஏற்றுமதி செய்வதற்கான தொழிற்சாலை, தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு கேந்திரிய வித்யா லயா பள்ளிகள், விவசாய பல்கலைக் கழகம், சாமித்தோப்பில் விமானநிலையம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

Advertisment

இதையெல்லாம் எம்.பி. நிறைவேற்றி னாரா? என்ற கேள்விகளுடன் தொகுதி மக்களை சந்தித்தோம்.

"சகோதரர் விஜய்வசந்தின் முயற்சிகளுக்கு தடைக்கல்லாக இருப்பது பா.ஜ.க.வினர்தான். பொன்.ராதாகிருஷ்ணனை தந்தையும், மகனும் தோற்கடித்ததால், குமரி மாவட்டத்தில் எந்தத் திட்டப்பணிகளும் நடக்கவிடாமல் தடுப்பதி லேயே குறியாக இருக் கிறார்கள். 3 ஆண்டு களாக மோடி அரசால் நிறுத்தப்பட்ட எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி இதுவரை வழங்கப் படவில்லை. இதனால் தனது சொந்தப்பணத் தில்தான் பல கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிவருகிறார். கன்னியாகுமரி -களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ரூ.15 கோடி ஒதுக்கீட்டில் சீரமைத்தார். தேங்காய்பட்டணம் துறைமுக வாயிலில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, முதல்வரைச் சந்தித்து துறைமுக சீரமைப்புப் பணியினைச் செய்து முடித்தார். இதுவரை ரூ.6.25 கோடியில் பள்ளிக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். 3 கோடி மதிப்பில் பல ஊர் களில் நிழற்குடைகள், கழிப்பறைகள், தெரு விளக்குகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்'' என்றார் காங்கிரஸ் பிரமுகர் சாந்தி.

ff

Advertisment

பத்மநாபபுரம் நகர பா.ஜ.க. நிர்வாகி அனிருதா முருகேசன், "எந்தவொரு தொழிற் சாலையும் இல்லாத இந்த மாவட்டத்தில், தொழிற்சாலை ஒன்றை கொண்டு வருவேன் எனக் கூறி வாக்குக் கேட்டார். ஆனால் வெற்றிபெற்றதும் மறந்துவிட்டார். ரப்பர் பூங்கா, பூ சென்ட் தொழிற்சாலை, தேங்காய் நார் தொழிற்சாலையெல்லாம் என்னானது?. சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடிய பத்மநாபபுரம் அரண்மனை கோட்டைச் சுவர், வாழவிளை பகுதியில் இடிந்து விழுந்து ஓராண்டுக்கு மேலாகிறது. இன்னும் பல இடங்களில் இடிந்துவிழும் நிலையிலுள்ளது. அதை சரி செய்ய எம்.பி.கிட்ட மனு கொடுத்தும் அவர் செய்யல'' என புகார்களாக வாசித்தார்.

கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், "குமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து கேரளாவில் அதானி துறை முகத்துக்கு கொண்டு செல்வதால் இங்கு ஒட்டுமொத்த பருவ நிலையும் மாறியுள்ளது. மலை களை உடைப்பதைத் தடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது எனக் கூறப்படும் நிலையில், தொகுதி எம்.பி.யாக இவர் எந்த முயற்சி யும் எடுக்கவில்லை. நான்குவழிச் சாலைப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக அப்படியே கிடப்பிலுள்ளது. கேட்டால் மண் கிடைக்க வில்லையென்று காரணம் சொல்கிறார்கள். நாகர்கோவில் -தாம்பரம் தினசரி ரயில், திருவனந்தபுரம் -மங்களூர் விரைவு ரயில்களை கன்னியாகுமரிவரை இயக்க எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார்.

dd

குளச்சலை சேர்ந்த பாதிரியார் சர்ச்சில், "குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சூறைக்காற் றால் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். அவர் களை மீட்க ஹெலிபேடு தேவை. அதுபோல் இங்குள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்ய தொலைத்தொடர்பு மையம் கேட்டிருந்தோம். மீனவர்கள் ஆபத்தில் சிக்கும்போது மீட்க கடல் ஆம்புலன்சும், விபத்தில் சிக்கிய படகுகளை மீட்டுவர இழுவைப் படகும் கேட்டிருந்தோம். அவர் செய்து தருவதாக உறுதியளித்ததால் 44 மீனவ கிராமங்களில் அவருக்கே வாக்களித் தோம். எங்கள் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. அவருக்கு வாக்களித்ததால் ஒன்றிய அரசும் எங்களை ஒதுக்கி வைத் துள்ளது'' என்றார்.

தக்கலையை சேர்ந்த ரவி, "குமரி மாவட்ட மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. தக்கலையில் மேம்பாலம் கேட்டபோது கட்டித் தருவதாகக் கூறினார். செய்யவில்லை. காமராஜர் பேருந்து நிலையத் தை புதிய இடத்துக்கு கொண்டுசெல் லக் கேட்டிருந்தோம். சுற்றுலாத் தளம் என்பதால் விமானநிலையம் உருவாக்கக் கேட்டிருந்தோம். எதையும் நிறைவேற்றைவில்லை'' என்றார்.

கவிதா என்பவர் கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான இளைஞர் கள் கலந்து கொண்ட வேலை வாய்ப்பு முகாமை நடத்தி, ஒவ்வொரு முகாமிலும் 500 பேர்வரை தேர்வு செய்யப்பட்டு பெரிய நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். அரசு மருத்துவமனையில் நல்லதொரு கட்டமைப்பை உருவாக்கிவருகிறார். தனது எம்.பி. சம்பளத்தை முழுமையாக ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும், கல்விக்கும் செலவழித்து வருகிறார். கிராமங்களில் கண்மாய்களைத் தூர்வாரிக் கொடுத்துள்ளார். நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் அவரது அலுவலகத்தில் தரப்படும் மனுக்களைப் பெற்று குறைகளை அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்துவருகிறார்'' என்றார்.

மக்கள் சொல்லும் நிறை, குறைகளைப் பற்றி எம்.பி. விஜய்வசந்த்திடம் கேட்டோம். "ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் மோடியிடமிருந்து எந்த நிதியை எதிர்பார்க்க முடியும்? எந்த நிதியைத்தான் எதிர்க்கட்சி எம்.பி. தொகுதிகளுக்கு ஒதுக்கு கிறார்? இருந்தாலும் ஒன்றிய அரசிடமிருந்து போராடி வாங்கிய நிதியில், 4 வழிச்சாலை ஒப்பந்தக்காரர்கள் பணியை முடிக்காமல் சென்றதால் ஒன்றிய அரசிடம் பேசி மறு ஒப்பந்தம் போடவைத்து, அதற்காக கூடுத லாக ரூ.1,041 கோடி நிதி ஒதுக்கும்படி செய்துள்ளேன்.

சாலைக்கு உள்ளூரிலிருந்து மண் எடுக்க முடியாததால் பக்கத்து மாவட்டங்களிலிருந்து மண் எடுக்க முதல்வரைச் சந்தித்துப் பேசி அனுமதி வாங்கியதையடுத்து, தற்போது அந்தப் பணியும் விரைவாக நடக்கிறது.

கன்னியாகுமரி -நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், குழித்துறை ரயில் நிலையங்கள் 100 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் 380 கோடியில் 5 ரயில்வே மேம்பாலங்களுக்கான பணி நடக்கிறது. 12 மீனவர் கிராமங்களில் தூண் டில் வளைவு கடலரிப்பு தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தூத்தூர், கொட்டில்பாடு கடற்கரை கிராமங்களில் திடீரென்று ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் போர்க்கால அடிப் படையில் உடனடியாக ரூ.30 லட்சம் செலவில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. திருவட்டாரில் ஆற்றைக் கடக்க வசதியாக ரூ.75 லட்சம் செலவில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இப்படி சொல்லிக்கொள்ள ஏராளம் இருக்கு. மோடி அரசு பாகுபாடு காட்டுவதால்தான் மக்களுக்கு வருமானத் தைக் கொண்டுவரக்கூடிய எந்தத் திட்டத்தையும் கேட்டு வாங்கி நிறை வேற்ற முடியவில்லை. நான் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் சம்பந்தபட்ட துறை அமைச்சர்களிடம் நேரடியாக பலமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால் அதற்கு பச்சைக்கொடி காட்ட வேண்டிய பிரதமர் மோடி மௌனமாக இருக்கிறார்.

கண்டிப்பாக இரண்டு தொழிற் சாலைகள் கொண்டுவருவேன் என்றேன். இதற்காக 20 முறை முயற்சி செய்தேன். ஆனால் 200 முறை முயற்சி செய்தாலும் மோடி அதை நிறைவேற்றித் தரமாட் டார். ஏதோ பழைய கட்டடங்களுக்கு வெள்ளையடிப்பது போல் பழைய திட்டங்களை சீரமைக்க மட்டும் கொஞ்சம் நிதியை நமக்கு ஒதுக்குகிறார். எம்.பி.யாகி சொகுசா இருக்க எனக்கு தேவையில்லை. அடிப்படைத் தேவைகூட இல்லாமலிருக் கும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அடுத்து ஆட்சி மாற்றம் வந்தால்தான் நம்முடைய எண்ணங்களும் மக்களின் தேவைகளும் நிறைவேறும். அதற்கான காலம் கனிந்துள்ளது'' என்றார் நம்பிக்கையுடன்.

அவர் நம்பும் ஆட்சிமாற்றம் நடந்து மக்களின் தேவைகள் பூர்த்தியாகுமா என்பதை வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலே தெளிவுபடுத்தும்.