ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பாக பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பு, கடந்த வாரத்தில் அனைவரிடத் திலும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அந்த அறிவிப்பில், 'மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (ஈஏரஆ) ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட பொது அறிவிப்பு' என்ற தலைப்பின்கீழ், 'நீச்சல் குளம்/ சுரங்க திட்டங்கள்/ உள்கட்டமைப்பு/ மொத்த தண்ணீர் சப்ளையர்கள்/ நகர்ப்புற பகுதிகளில் அரசு தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள்/ குரூப் ஹவுசிங் சொசைட்டி கள்/ குடியிருப்பு அப்பார்ட் மெண்ட்களுக்கான குடிநீர் & வீட்டுப் பயன்பாடு உள்பட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு. தற்போதுள்ள எல்லா நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களும் 30.06.2022-க்குள் ஈஏரஆ-விலிருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனுமதி பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 30.06.2022-க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பம் சமர்ப்பிப்பதற் காக ரூ.10,000 பதிவுக் கட்டணத்தைச் செலுத்துவதின் பேரில் 30.06.2022க்குள் தங்களது நிலத்தடி நீர் எடுப்பதைப் பதிவு செய்வதற்கு எல்லா தற்போதைய பயன்பாட்டாளர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஈஏரஆலிருந்து சஞஈ பெறாமல் நிலத்தடி நீரைத் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று இருந்தது.
இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இயற்கை யாகக் கிடைக்கும் நிலத்தடி நீரைப் பயன்படுத்து வதற்குக்கூட, வீட்டு போரிங்குகளுக்கும், விவசாயக் கிணறுகளுக்கும் 10,000 ரூபாய் கட்டணம் வசூலிக் கிறார்களே என்ற விமர்சனம் சமூகவலைத்தளங் களில் எழுந்தது. உடனே பா.ஜ.க. தரப்பில், ஈஏரஆ அமைப்பு வெளியிட்ட பொது அறிவிப்பை தவறா கப் புரிந்து கொண்டதாகவும், இந்த அறிவிப்பு, இந்தியாவிலுள்ள சுமார் 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமானது என்றும், தமிழ்நாட் டுக்குச் செல்லாது என்றும் பதில் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பிலும் சாதகமான விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, நீர் ஆராய்ச்சியாளர் பேராசிரி யர் ஜனகராஜனிடம் கேட்டபோது, "நேஷனல் கிரவுண்ட்வாட்டர் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு 1997-ல் கொண்டுவரப்பட்டது. அப்போதைய சூழலில், கோதுமை மிகுதியாக விளையக்கூடிய பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவருவதை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. நீர்ப்பற்றாக் குறையால் பாதிக்கப்படும் கோதுமை உற்பத்தியைச் சரிசெய்வதற்காக ஆலோசித்த மத்திய அரசு, அவ்விரு மாநிலங்கள் மட்டுமல்லாது, உத்தரப்பிரதேசம், குஜ ராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டையு, டாமன் உள்ளிட்ட மாநிலங்களிலும், சில யூனியன் பிரதேசங் களிலும் உள்ள குறிப்பிட்ட சில ஏரியாக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. சென்ட்ரல் கிரவுண்ட்வாட்டர் போர்ட், சென்ட்ரல் கிரவுண்ட்வாட்டர் அத்தாரிட்டி ஆகியவற்றின்மூலம் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத் தியது. நிலத்தடி நீர்ப் பயன்பாட்டைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, உரிய அனுமதி பெற்ற பின்பே பயன்படுத்தச் செய்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏற்கெனவே உரிய அரசு ஆணை களின்மூலம் நிலத்தடி நீர்ப்பயன்பாட்டை கட்டுப் படுத்திவருவதால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது'' என்றார்.
ஒன்றிய அரசின் செயல்பாடு நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான செயல்பாடாகத் தெரிந்தாலும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் அளவுக்கு நிலைமை சென்றதற்கு காரணம் என்னவென்றும், ஒன்றிய அரசின் செயல்பாட்டிலிருக்கும் நம்பகத் தன்மை குறித்தும் பார்த்தாகவேண்டியுள்ளது. குடிதண்ணீர், விவசாயம் என இரண்டின் பயன் பாட்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. 1990-களில் உலகமய மாக்கலுக்குள் இந்தியா இணைந்தபின்னர், இந்த காட்சியில் மாற்றம் ஏற் பட்டது. நிறைய மல்ட்டி நேஷனல் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் சாரைசாரையாக நுழைந்தன. அந்நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்த ஒன்றிய, மாநில அரசுகள், அவர்களுக்கான நில எடுப்பு, நிலத்தடி நீர்ப்பயன்பாடு என அனைத்திலும் தாராளம் காட்டின. ஆக, விவசாயத்துக்கும் குடிநீருக்குமே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட நிலத்தடி நீர், தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்காக, ராட்சத போர்களின்மூலம் வெகுவாக உறிஞ்சப் பட்டது. இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு களைக் கண்காணிக்க அரசு இயந்திரங்கள் தவறின. இதன்காரணமாக நிலத்தடி நீரின் அளவு வெகுவாகக் கீழிறங்கத் தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண் டான் சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா குளிர்பானக் கம்பெனியிடமிருந்து தாமிரபரணி ஆற்றைக் காப்பாற்ற நீதிமன்றம் வரை சென்று போராடவேண்டியிருந்தது. இது ஒரு உதாரணம் தான். இதைப்போல ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான தொழில் நிறுவனங்கள் நிலத்தடி நீரை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவதுதான் இங்கே பிரச்சனையே. விவசாயத்துக்குப் பயன்படுத்தப் படும் நீர், நிலத்துக்குத்தான் போகிறது என்பதால் அதனால் இழப்பில்லை. குடிநீர்ப் பயன்பாட்டுக்கும் பெரிய அளவில் செலவாகப்போவதில்லை. ஆக, தொழில் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தினாலே நிலத்தடி நீரைப் பாதுகாப்பது எளிது.
இப்போதைய ஒன்றிய அரசு, ஒரே நாடு, ஒரே கார்டு, ஒரே தேர்தல் என்பது போல் நாடு முழு மைக்கும் நீர் வளத்தைத் தங்கள் வசம் கொண்டு வரப் பார்க்கிறதோ என்ற அச்சமும் எழுகிறது. மக்களுக்கு இலவசமாகத் தரவேண்டிய குடிநீரை, பாட்டில்களில் விற்பனை செய்யும் அரசு, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களுக்கு தாரைவார்க்கவும் தயங்காது. இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்.