"முப்படை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவத்தில் வாங்காத பதக்கங்களே இல்லை. சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுடன் மோதியபோது அவர்களை திருப்பித் தாக்க வேண்டும் என்று உறுதியாக நின்றவர். இவர் பாகிஸ்தான் வான்வெளியில் புகுந்து நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்தான், நரேந்திரமோடியின் ஆட்சியை மறுபடியும் கொண்டுவந்தது'' என பிபினை நினைவுகூர்கிறார்கள் டெல்லி பத்திரிகை யாளர்கள். "சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியபோது அதை எதிர்த்து, "பொதுச்சொத்துக்களை போராட்டம் என்ற பெயரில் சேதப்படுத்துவது தவறு' என பிபின் கொடுத்த குரல், அவரை மோடிக்கு அருகில் கொண்டு சென்றது. "முப்படைகளின் முதல் தளபதி' என்கிற பதவியை மோடி இவருக்குப் பரிசளித்தார்'' என்றும் தெரிவிக்கின்றனர்.

bb

"விபத்துக்குள்ளானபோது இவர் பறந்த ஹெலிகாப்டரான எம்.ஐ.17, உலகத்தில் உள்ள ஹெலிகாப்டர்களில் ஐந்து நட்சத்திர அந்தஸ்தை தரஅளவீடுகளில் பெற்ற ஹெலிகாப்டர். அந்த ஹெலிகாப்டரை ஓட்டிய விமானி பி.ஸ்.சவுகான், இந்தியாவின் தலைசிறந்த பைலட்களில் ஒருவர். அவர் அணிந்திருந்த விமானி உடை தீ பிடிக் காது, அதனால்தான் அவர் சாகாமல் உயி ருக்குப் போராடினார்.

ஒரு ஹெலிகாப் டர் புறப்படும்போதே "நேவிகேஷன் மேப்' எனப்படும் ஒரு அறிக்கை தரப்படும். ஹெலிகாப்டர் எங்கு செல்ல வேண்டும், எப்படிப் பறக்கவேண்டும், எங்கு மலை, மரங்கள் உள்ளது, எவ்வளவு உயரத்தில் பறக்க வேண் டும், இறங்கும்போது மூடுபனி வந்தால் என்ன செய்ய வேண் டும், மூடுபனி எங்கு வர வாய்ப்புள்ளது என்பதெல்லாம், அந்த ரிப்போர்ட் டில் இருக்கும். அதிக பனி இருந்தால் புறப்பட்ட இடத்திற்கே விமானிகள் திரும்ப வருவார்கள். பொதுவாக ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருவதுதான் வழக்கம்.

Advertisment

சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு பத்து நிமிடத்தில்கூட செல்லலாம். ஆனால் பிபினின் ஹெலிகாப்டர் 30 நிமிடம் பயணித்திருக்கிறது. அதற்குக் காரணம் நீலகிரியில் நிலவும் மூடுபனிதான். மூடுபனி தென்பட்டால் விமானிகள் அந்த மேகத்திற்கு உயரே பறப்பார்கள். தனது வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிப் பிழைத்த பிபினுக்கு ஹெலிகாப்டர் பற்றிய அனைத்தும் தெரியும். அவர் ஹெலிகாப்டர் விபத்தில் தனது மனைவியோடும் ராணுவ அதிகாரிகளோடும் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை'' என்கிறார்கள் ராணுவ வல்லுநர்கள்.

ff

பிபின் சென்றது எம்.ஐ.17 என்கிற ரஷ்ய ஹெலிகாப்டர். சமீபத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் ஏகப்பட்ட ராணுவ ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டன. ஏவுகணை தாக்குதல் களை தடுக்கும் அமைப்புகளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. இதே அமைப்பை ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து வாங்கியதற்காக துருக்கி நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை ராணுவ வட்டாரத்தினர் நினைவுபடுத்துகிறார்கள். பாய்ந்து தாக்கவரும் ஏவுகணைகளை கண்டுபிடித்து 250 மைல் தூரம் போய் தாக்கும் எஸ்-400 தடுப்பு சாதனங்களைத் தொடர்ந்து 600 மில்லியன் டாலருக்கு ஏ.கே. 203 என்கிற துப்பாக்கியை ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெறுகிறது.

Advertisment

இந்த ஒப்பந்தங்களில் பிபின் முக்கிய பங்கு வகித்துள்ளார். மோடி அமெரிக்காவிடமிருந்து 96,000 சிக்னல் என்கிற அதி நவீன துப்பாக்கிகளை வாங்கினார். இந்தியாவில் ராணுவம், துணை ராணுவம், போலீஸ் என அனைவருக்கும் 50 லட்சம் துப்பாக்கிகள் தேவை. எனவே அமெரிக்காவின் சிக்னல் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரித்தால் நல்லது என பிபின் தெரிவித்தார். அதற்கு அனுமதி இல்லை என அமெரிக்கா தெரிவித்துவிட்டது.

உடனே பிபின், "அமெரிக்காவின் சிக்னல் துப்பாக்கிக்கு இணையான ஏ.கே.203 துப்பாக்கியை ரஷ்யாவிலிருந்து வாங்கவேண்டும், அத்துடன் அவற்றை இந்தியாவில் தனியார் துறையில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போடலாம்'' என மோடிக்கு ஆலோசனை வழங்கினார். "ரஷ்ய ஹெலிகாப்டர்களான எம்.ஐ.17, எம்.ஐ.19, எம்.ஐ.12 ஆகியவற்றையும் வாங்கி அதை ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் உற்பத்தி செய்யலாம்... கூடவே அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை அமெரிக்கா இந்தியாவிற்கு விற்க மறுக்கிறது, அதையும் வாங்கலாம்'' எனச் சொன்னார்.

bb

அதை ஏற்றுக்கொண்ட மோடி, ஏவுகணை தடுப்பு சாதனங்களை வாங்க 2018-ல் போட்ட ஒப்பந்தத்தோடு, பிபின் சொன்ன அனைத்தையும் சேர்த்து பல மில்லியன் டாலருக்கு ரஷ்யாவுடன் கூடுதல் ஒப்பந்தம் தயார் செய்தார். இதனால் உற்சாகமடைந்த ரஷ்ய அதிபர் புதின், இந்தியா வர சம்மதம் தெரிவித்தார். உத்திரப்பிரதேச அமேதியில் ரஷ்யா, தனியார் பங்களிப்புடன் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கத் தொடங்கிவிட்டது. தனியார் நிறுவனமான எல் அண்ட் டி, ராணுவ டாங்கிகளை உற்பத்தி செய்து வெள்ளோட்டம் விட்டது.

பிபினின் ரஷ்ய ஆதரவால் அமெரிக்கா அதிர்ச்சியும் கோபமும் அடைந்திருந்தது. இந்த நிலையில், மிகவும் பாதுகாப்பான ரஷ்ய தயாரிப்பு ஹெலிகாப்டரில் பயணித்த பிபின், விபத்துக்குள்ளாகி மரணமடைந்திருப்பது, உலக அளவில் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. ரஷ்ய ராணுவத் தொழில்நுட்பம் மீதான அமெரிக்காவின் எதிர்ப்பு நிலையை, இந்த விவகாரத்தில் புறக்கணித்துவிட முடியாது என்கிறார்கள் ராணுவ உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள்.