ஜனவரி 22-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபி ஷேக விழா ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்றுவருகின்றன. ராமர் கோவில் திறப்பு விழாவின் கதாநாயகனாக மோடியை முன்னிறுத்தி கட்சியளவிலும் மத்திய அரசின் சார்பிலும் பெரும் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்து மதத்தைச் சேர்ந்த பிரபல சங்கராச்சாரியார்கள் சிலரும், சில ஆன்மிக குருக்களும் மோடியை முன்னிறுத்தும் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துவருவதோடு விழாவைப் புறக்கணிப்பதாக வும் தெரிவித்துள் ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூரி பீடத் தின் சங்கராச்சார் யார் ஸ்ரீ நிச்சலானந்த சரஸ்வதி, "ராமர் சிலையைத் தொட்டு மோடி பிரதிஷ்டை செய்வதைப் பார்த்து நாங்கள் கை தட்ட வேண்டுமா? “இப்போதிருக்கும் அரசின் முயற்சி புனிதமான கோயிலைக் கட்டுவதை மையமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ஒரு கல்லறையைக் கட்டுவதில்தான் ஆர்வமாக இருக்கிறது. பாரம்பரியமான ஒரு கோவில் கட்டுவதன் புனிதம், மரியாதை இந்தத் திட்டத்தில் இல்லை. உரிய மரியாதை இல்லாத ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டாம் என்ற அடிப்படையில் நிகழ்வைப் புறக்கணிக்கிறோம்''’ என்றிருக்கிறார்.
உத்தரகாண்டிலுள்ள உத்தரம்நாய ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி, அயோத்தி நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். “"நாங்கள் மோடிக்கு எதிரான வர்கள் அல்ல, ஆனால் தர்மசாஸ்திரத்துக்கு எதிராகவும் இருக்க விரும்பவில்லை. இந்து மதத் தின் அடிப்படை நூலான வேத நூல்கள், ஆசாரியத்துவம் பிராமண சாதிக்கு மட்டுமே சொந்தமானது என்கின்றன. ராமர் கோவி-ன் குருவாக ஒரு சூத்திரரை நியமித்திருப்பது, வேத அடிப்படையி-ருந்து விலகுவதாக இருக்கிறது''” என்கிறார்.
இந்த மடத்தின் வலைத்தளம், "ஒரு காலத்தில் தேர்தல் ஆதாயத்துக்காக மோடி, சங்கராச்சாரியாரின் ஆசிர்வாதத்தைப் பெற்றார். ஆனால் தற்போது சனாதனத்தை மதிப்புக் குறைவுக்கு ஆளாக்கும் அதர்ம பாத்திரத்தை வகிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் இந்து தர்மத்தின் உயர்ந்த தர்ம குருக்கள் பங்கேற்காதது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு மதப் பின்னடைவு'’எனக் குறிப்பிட்டுள்ளது.
சிருங்கேரி சங்கர மட சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த மகா சுவாமிகள் மட்டும் வித்தியாசமாக, “"அயோத்தியில் நடைபெறும் பிராண பிரதிஷ்டையில் அனைவரும் பங்கு பெறவேண்டும்'’என்று சொல்- தன் ஆசீர் வாதங்களைத் தெரிவித்துள்ளார். எனினும், அவர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்குபெறுகிறாரா,… இல்லையா… என்பதை உறுதி செய்யவில்லை.
சிருங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச் சாரியார், ஸ்ரீபாரதி தீர்த்தரோ, “ராமர் கோவில் கட்டுமானம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தாலும், "கட்டுமானம் முழுமையடையாத ஒரு கோவி-ல் இறைவனை பிரதிஷ்டை செய்வது பொருத்த மற்றது'’என்கிறார். மேலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய மசூதி அயோத்தியில் கட்டப்படுவது குறித்தும்” இவர் கவலை தெரிவிக்கிறார். ராம் மந்திர் அறக்கட்டளை, தங்களிடமோ, தங்கள் பிரதிநிதிகளிடமோ ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக கோவிலைக் கட்டியதற்கும் வருத்தம்கொள்கிறார். மேலும் அந்த பீடத் தின் வலைத்தளம், “மோடி அரசு இரட்டைத் தன்மை கொண்டிருப்பதாகவும், அரசியல் ஆதாயங்களுக்காக இந்து உணர்வு சுரண்டப் படுவதாகவும்” குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
துவாரகா சாரதா பீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியாரான ஸ்ரீ சதானந்த சரஸ்வதி, “ ராமர் கோவில் திறப்புவிழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என வெளிப்படையாக அறி வித்துள்ளார். “"ஜனவரி மாதம் ராமர்கோவில் திறப்பு விழாவுக்கு பொருத்தமானதில்லை, மங்களமான ராமரின் பிறந்த நாள் வரும் ராமநவமியில் கோவிலைத் திறக்கலாம். இப்போது கோவில் திறப்பு விழா முடிவுசெய்யப்பட்டதற்கான காரணம் முழுக்க முழுக்க அரசியலே. ஆன்மிகம் இல்லை. ராம நவமியின்போது திறப்பு விழாவை வைத்தால், தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிவிடும். இவர்கள் அதனைப் பயன் படுத்திக்கொள்ள முடியாது. தவிரவும் கட்டுமானம் முடியாத கோவிலுக்கு திறப்பு விழா நடத்த அவசரப்படுவதற்கு என்ன காரணம்?''” எனக் கூறி, திறப்பு விழாவைப் புறக்கணிப்பதற்கான காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி இந்து மதத்தின் பிரதான சங்கராச்சாரியார்கள் தரப்பி-ருந்து ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பியிருப்பது மோடி தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சங்கராச்சாரியார்கள் தரப்பை சமாதானப்படுத்தவும், முடிந்தால் விழாவில் பங்குகொள்ள வைக்கவும் என்ன செய்யலா மென்ற வியூகங்களை கட்சி யோசிக்க ஆரம்பித் துள்ளது.
அதேசமயம்... கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்றவையும் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பா.ஜ.க. விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளன. காங்கிரஸ், "ராமர் கோவில் திறப்பு விழாவை பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஒரு அரசியல் திட்டமாக மாற்றுகின்றன'' என குற்றம்சாட்டியுள்ளது. மம்தாவோ, "இதர சமூகங்களை விலக்கிவைக்கும் கொண்டாட் டங்களை தான் ஆதரிப்பதில்லை'' என ராமர் கோவில் விழாவைப் புறக்கணிப்பதற்கான காரணத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாலுபுறமிருந்தும் எழும் விமர்சனச் சறுக்க--ருந்து மீளும் வழிகளை மோடியும், அமித்ஷாவும் வேகமாக ஆலோசித்து வருகிறார் கள்.