ளுங்கட்சியான தி.மு.க.வால் ஒரு தொகுதிகூட வெற்றிபெற முடியாமல் போன மாவட்டங்களில் ஒன்று கோவை. இதில் பொள்ளாச்சி நிலவரம் தனி கட்டுரையாகத் தரப்பட்டுள்ளது. மேட்டுப்பாளை யமும் கிணத்துக்கடவும் நம்பிக்கை தந்து ஏமாற்றின. கிணத்துக்கடவு தொகுதியில் நள்ளிரவுவரை முன்னி லையில் இருந்த தி.மு.க. பிரபாகரன் அதிகாலையில் மிகக்குறைந்த வாக்குகளில் தோல்வியடைந்தார். ஏன் என்பது பற்றி தி.மு.க. தொண்டர்களிடம் பேசினோம்.

kovai

கிணத்துக்கடவு

"கிணத்துக்கடவைக் குறிவைத்து கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பல கோடிகளை செலவுசெய்து நிர்வாகிகள் முதல் தொண்டர்கள்வரை உற்சாகமாக வைத்திருந்தார். ஆனால், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மதுக்கரை ஒன்றியச் செயலாளர்கள் ராஜசேகரன், ஈ.பி.ராஜேந்திரன் ராணிசித்ரா, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் ஆகியோர் "தொகுதியில் உள்ள தங்களில் ஒருவருக்கோ, குறிச்சி பிரபாகரனுக்கோ சீட் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வேலை பார்க்கமாட்டோம்' என்றும் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர் .

Advertisment

பிரபாகரன் கடந்த முறையே வெற்றி வாய்ப்பை அ.தி.மு.க.விடம் விட்டுக் கொடுத்தவர் என்ற சர்ச்சையும் இருந்தது. இம்முறை சீட் கொடுத்தபோது, லோக்கல் ஆட்களின் நிர்பந்தமும் சேர்ந்தது. அதனால் அவர் நாகராஜன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் கூறுவதை மட்டுமே கேட்டுவந்தார். மாவட்ட பொறுப்பாளரை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் வெற்றி வியூக மாக மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி சொன்னதையும் கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் பொறுப்பாளர் தயாநிதிமாறன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், ஆலோசனைகளிலும், உதயநிதி பிரச்சாரத்திலும் ஒத்துழையாமை இயக்கம்தான். கிணத்துக்கடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரன் ஜெயித்தால், மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதிக்கு தலைமையிடம் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் ஒன்றியச் செயலாளர்கள் கூட்டமைப்பு வேலுமணியின் மைத்துனர் புல்லட் ராஜாவுடன் டீலிங் பேசி எங்கெங்கு யார், யாரை சரிக்கட்ட வேண்டும் என்று லிஸ்ட் கொடுத்து குழிபறிக்கும் வேலையில் இறங்கினர்.

இதையும் மீறி குறிச்சி பகுதியின் வாக்கு களை எண்ணும்போது தி.மு.க. வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் 14 ஆயிரம் ஓட்டுகள் அதிகம்பெற்று முன்னணிக்கு வந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் எக்ஸ் மினிஸ்டர் தாமோதரனிடம்... "கவலைப்பட வேண்டாம், மதுக்கரை ஒன்றிய வாக்குகளை எண்ணும்போது நாம் வெற்றிபெற்றுவிடுவோம்' என்று கூறி சமாதானம் செய்தார் புல்லட் ராஜா. அப்படியேதான் நடந்தது.

Advertisment

குறிப்பாக கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் நாகராஜன், மதுக்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மதுக்கரை மத்திய ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வசிக்கும் ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் மட்டும் கூடுதலாக சுமார் 850 வாக்குகளை அதிகம் பெற்றது அ.தி.மு.க. இதே போல் இதுவரை அ.தி.மு.க. அதிக வாக்குகளை வாங்காத கிணத்துக்கடவு பேரூராட்சி, வடபுதூர் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் அதிக ஓட்டுக்களை வாங்கியது அ.தி.மு.க. கடைசியில், 1095 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வி அடைந்தது''’என்றனர் வேதனையுடன்.

kovai

2016-ல் குறிச்சி பிரபாகரன் மீது தெரிவிக்கப்பட்ட புகாரால், கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்தது. அதன்பின் அவரும் கட்சி நிகழ்வுகளில் ஆக்டிவாக இல்லை. ஆறு மாதத்திற்கு முன்பு கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர்தான் கட்சிப் பணிக்கு வந்தார் பிரபாகரன். அவரும் மாவட்ட பொறுப்பாளருக்கு எதிராக கோஷ்டியை வளர்க்கத்தான் செலவு செய்தார். இதையெல்லாம் தலைமை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒன்றியச் செயலாளர்களை நம்பி சீட் கொடுத் தது. ஒன்றியச் செயலாளர் தரப்பிலேயே தோற்கடித்துவிட்டனர் என்கிறார்கள் தொகுதி தி.மு.க.வினர்.

சிங்காநல்லூர்

கடந்த 2016 தேர்தலின்போது, கோவையில் தி.மு.க ஜெயித்த ஒரே தொகுதி. இப் போது ஆளுங் கட்சியான நிலையில், அதே நா.கார்த்தி ஏன் தோற்றார்?

அவர் கடும் உழைப்பாளி. அவருக்கு எதிர் வேட்பாளராய் அ.தி.மு.க.வில் நின்றார் எக்ஸ் கிழக்கு மண்டல தலைவராய் இருந்த கே.ஆர்.ஜெய ராமன். இந்நிலையில், கார்த்தி மீண்டும் ஜெயித்தால் அமைச்சராகிவிடுவார் என தி.மு.க.வின் பொங்கலூர் பழனிசாமி தரப்பு கவலை கொண்டது. அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராமன் தனது சமுதாயத்தவர் என்ற பாசமும் பொங்கலூரார் தரப்புக்கு இருந்தது. கார்த்திக்குடன் ஒருநாள்கூட பொங்கலூர் பழனிசாமி பிரச்சாரம் செய்யவில்லை. சவுரிபாளையம் 1-வது பகுதி கழகச் செயலாளர் சேரலாதன், 2-வது பகுதி கழகச் செயலாளர் மீன்கடை சிவா, 3-வது பகுதி செயலாளர் கே.கே.சாமி ஆகியோரும் பிரச்சாரத்திற்கு வரவேயில்லை. உள்ளடியால் சிங்காநல்லூரை அசிங்கமாகத் தோற்றுள்ளது தி.மு.க.

கோவை வடக்கு

கோவை வடக்கு தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக நின்றார் கள உழைப்பாளியான வா.ம. என அழைக்கப்படும் சண்முகசுந்தரம். தொடர்ந்து ஐந்துமுறை வடவள்ளி பேரூராட்சி தலைவராக ஜெயித்தவர் இவர். இந்த வடக்கு தொகுதியில் 2016-ல் போட்டியிட்ட மீனாலோகு தன்னை எப்படி கட்சியினரே தோற்கடித்தார்கள் என்பதை கலைஞர்-ஸ்டாலின் முன்னிலையில் அப்போதே கதறலுடன் சொன்னவர். ஆனால், அவர் உள்பட "இங்குள்ள கட்சி நிர்வாகிகள் பலரும் உள்ளடி அரசியலில் தேர்ந்தவர்கள்' என்கிறார்கள் தி.மு.க.வினர்.

இதுவே, கோவை தெற்கிலிருந்து வடக்குக்கு மாறிவந்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜூனனுக்கு 3,000 ஓட்டுக்களில் வெற்றிபெற காரணமாய் அமைந்துவிட்டது... என்கிற உடன்பிறப்புகள், "முதல்வராகிவிட்ட தளபதிதான் களை எடுக்கவேண்டும்' என்கிறார்கள்.

kovai

கவுண்டம்பாளையம்

மாவட்ட பொறுப்பில் உள்ள பையா (எ) கிருஷ்ணனை வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்ததுமே, "வெற்றி வேட்பாளர் கிருஷ்ணன்' என்று எல்லோரும் சொல்லிவிட்ட நிலையில்... கிருஷ்ணன் பம்பரமாக சுற்றிவந்தார். அவருக்கு சாட்டையாக இருக்கவேண்டிய வீரகோபால் கதர் சட்டையை அணிந்துகொண்டு வெளியே வந்து விட்டு... மீண்டும் தன் மோட்டார் கம்பெனிக்கே வந்து விடுவார்.

"இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் செய்த களைப்பு... என மற்றவர்களிடம் சொல்லியபின் தூங்கச் சென்று ஒட்டுமொத்தமாக தி.மு.க.வை தூங்கவைத்துவிட்டார் வீரகோபால்'' என்கிறார்கள் தூக்கத்தை இழந்த உ.பி.க்கள்.

வால்பாறை

வால்பாறை தொகுதியில் தி.மு.க. வேட்பாள ராக நிறுத்தப்பட்ட குனியமுத்தூர் ஆறுமுகத்தை எதிர்த்துநின்றவர் அமுல் கந்தசாமி. வால்பாறை மலைப்பகுதியில் தி.மு.க. கட்சியில் இணைந்த வால்பாறை தங்கம் செய்த பிரச்சாரம் மலையில் தீவிரப்பட்டிருந்தாலும், கீழே உள்ள ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வுக்கு யாரும் ஓட்டளிக்காத வேலையை மாவட்ட பொறுப்பாளரான தென்றல் செல்வராஜ் பார்த்துக் கொண் டார்.

தி.மு.க.வின் ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் தேவேந்திரனுக்கு சீட் வாங்கித் தருவதாக வெயிட் டான உறுதி அளித்திருந்திருக்கிறார் தென்றல். சீட் கைமாறிவிட்டதால் "அ.தி.மு.க. அமுல் கந்தசாமியிடம் தி.மு.க. தரப்பு கைகோத்து சூரியனை மலைக்குமேலே போக வைத்துவிட்டது' என்கிறார்கள் உ.பி.க்கள்.

மேட்டுப்பாளையம்

"கட்சியில் சுறுசுறுப்பானவர் என்ற பெயரோடு தி.மு.க.வில் டி.ஆர். சண்முகசுந்தரம் களத்தில் நின்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் நின்றார் எக்ஸ் எம்.பி. ஏ.கே.செல்வராஜ். செல்வராஜை சுற்றி பிரசாரப்படை எந்தநேரமும் இயங்கிக்கொண்டிருக்க... தனி ஓர் ஆளாய் ஓட்டுக்கேட்டு தொகுதிக்குள் உலாவந்தார் டி.ஆர்.எஸ். அவருக்கு ஆதரவாய் ஓட்டுக் கேட்கவேண்டிய எக்ஸ் எம்.எல்.ஏ. அருண்குமார், வேட்பாளராக போனமுறை நின்ற ஆனைகட்டி சுரேந்தர் ஆகியோர், பிரச்சார மழைக்கு வாக்கு சேகரிப்பு என்ற பள்ளி நிழ-ல் பெயருக்குக்கூட ஒதுங்கவேயில்லை. இதுதான் தி.மு.க. தோற்றுப் போன கதை'' என்கிறார்கள் உ.பி.க்கள்.

kovai

சூலூர்

"கொங்கு ஈஸ்வரன் கட்சியில் பிரீமியர் செல்வத்திற்கு சூலூர் தொகுதியில் தி.மு.க. ஆதரவு இருந்தாலும், ஏனோ நிற்பதற்கு தயக்கம் காட்டினார் செல்வம். அ.தி.மு.க. வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வாகவும் இருந்த கந்தசாமி நின்றார். செல்வமோ, தி.மு.க.வினரை பிரச்சாரம் செய்ய அழைக்கவேயில்லை. மாறாக அவர் சார்ந்த சமுதாயத்தின் தொழிலதி பர்களிடம், தேர்தல் வசூல் என சில "சி'களை சம்பாதித்து விட்டு ஒதுங்கிக்கொள்ள... கந்தசாமி கோல் அடித்துவிட்டார்'' என்கிறார்கள் கோபமாய்.

கோவை தெற்கு

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் நின்றதால், வி.ஐ.பி. தொகுதியானது கோவை தெற்கு. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மயூரா ஜெயகுமாரும், தாமரை வேட்பாளராக வானதி சீனிவாசனும் மும்முனை போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் மயூரா முதல் இரண்டு சுற்றுகளில் முன்னிலை வகித்தார். பின்னர் கமல் முன்னேறினார்... கடைசியில், வானதி வென்றார்.

1 லட்சத்து 20,000 வாக்குகளைக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தில் இந்தமுறை 60,000 ஓட்டுக்களே பதிவாகின. "மீதமுள்ள 60,000 ஓட்டுகள் ஏன் பதிவாகவில்லை?' என்கிற கேள்விக்கு தொகுதி இஸ்லாமிய மக்கள் சொன்னது...

இந்த தொகுதி மக்கள், எஸ்.பி. வேலுமணி மூலம் நிறைய நல்லதை பெற்றிருப்பதால்தான்... நாங்கள் வீட்டிலேயே இருந்து விட்டோம்... என்கிறார்கள்.

தொண்டாமுத்தூர்

மினிஸ்டர் வேலுமணியின் தொகுதி இது. அவரை ஜெயிக்க லோக்கலில் ஆட்களே இல்லை என்பதை அறிந்து ஜல்லிக்கட்டு புகழ் கார்த்திகேய சிவசேனாதிபதி நிற்க வைக்கப்பட்டார் சூரியனில். "எஸ்.பியே கொஞ்சம் கூடுதலாக தொகுதிக்குள் இறங்கி வேலை செய்யும் அளவுக்கு டஃப் கொடுத்தார் சேனாதிபதி...' என்கிற உடன்பிறப்புகள்.. ஆயினும் 40,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வேலுமணி வெற்றி பெற... சேனாதிபதி முகமில் லாமல் இறங்கிவிட்டார்..

முன்பே நாம் ஒருமுறை சொன் னதுதான்... "தி.மு.க.வை தோற்கடிக்க தி.மு.க.காரனைத் தவிர, எந்த கட்சிக்கார னாலும் முடியாது' என்பதுதான் அது.