ளுங்கட்சி போடும் நல்ல திட்டங்களை அடுத்து வருகிறவர்கள் நிறைவேற்றுவதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும். அப்படிப்பட்ட திட்டங்களைக் கிடப்பில் போட்டுள்ளது ஏன்?'' என்று கேள்வி யெழுப்புகிறார்கள் மூன்று மாவட்ட மக்கள்

கடந்த 9.8.2017-ல் விழுப்புரத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி, விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற 1000 கோடி ரூபாய் செலவில் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். தண்ணீரிலிருந்து உப்புத்தன்மையை நீக்குவதற்காக விரிவான திட்டத்திற்கு 19-11-2020-ல் 1500 கோடி ரூபாய் வழங்குவதாக ஜி.ஓ. வெளியிடப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 17-5-2022ல் மூலதனச் செலவு அதிகமுள்ளதாகக் கூறி இந்த திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ww

முன்னதாக, 21-9-2021 அன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்துவது சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் இந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 2021-22 ஆகிய நிதியாண்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விழுப்புரம் மாவட்டத் திற்கு காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு, மாற்று ஒருங்கிணைந்த நீர்வளங்கள் திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் காவிரி ஆற்றின் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார். இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மிகுந்த கவனத்தோடு ஆய்வுசெய்து காவிரியிலிருந்து குடிநீர் கொண்டுவரும் வழியில் மூன்று இடங்களில் உத்தேச நீர்த்தேக்கம் அமைத்து அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தயாரித்தது.

Advertisment

இந்தத் திட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 113.021 கியூபிக்ஸ் அளவு தண்ணீரும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 148.276 கியூபிக்ஸ் அளவு தண்ணீரும், அதற்கு மேலான நீரை விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகராட்சி களுக்கும், மயிலம், விக்கிர வாண்டி, செஞ்சி, மேல்மலைய னூர், கானை, விக்கிரவாண்டி டவுன் பஞ்சாயத்து ஆகிய பகுதி களுக்கும், அதை ஒட்டியுள்ள 955 கிராமப்புற குடியிருப்புகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்ன சேலம், வடக்கனந்தல், பேரூ ராட்சிகள், சின்னசேலம், கள்ளக் குறிச்சி, ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 154 கிராம குடியிருப்புகளுக்கும் இதன்மூலம் குடிநீர் வழங்கப்போவதாக வரையறை செய்யப்பட்டது.

மேட்டூர் அணையி லிருந்து செக்கானூர் அணையின் மேல் புறம் மேட்டூர் அணையின் கீழ்புறம் ஆசியவற்றுக்கு இடையே உள்ள அட்சரேகை, தீர்க்கரேகை அடிப் படையில் மேட்டூர் அணையின் கீழ்நீரோட்டத்துக்கும் இடையே இடம் தேர்வு செய்யப்பட்டு சீதாமலை, பழைய காவிரி பாலம் வழியாக ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியில் நுழைந்து அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும், அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கும் குடிநீர் கொண்டுவரும் பாதையும் கண்டறியப்பட்டது.

ww

Advertisment

தமிழ்நாடு குடிநீர் வாரிய செயற்பொறியாளர், துணைநீர் புவியியலாளர் ஆகியோர் மேற்படி திட்டங்களை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அளித்தனர். அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த 2,230 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் நீர் கடத்தல், அதன் செலவுகள் கிராமப்புறங்களில் அதிகரிக்கும் என்பதால் அதன் கூடுதல் செலவிற்காக மேலும் 86.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மாவட்ட அளவிலுள்ள 14 முக்கிய துறைசார்ந்த அதிகாரிகள் இந்த திட்ட அறிக்கையில் கையெழுத்திட்டு அதன் அடிப்படையில் அரசு மேற்படி நிதியையும் ஒதுக்கியது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டம் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள கொசப்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்த ஐ.என்.டி.யு.சி. அய்யனார், “தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி திட்டம் எந்த நிலையில் உள்ளது, எப்போது செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தகவல் அலுவலர் சிவசங்கரனுக்கு அனுப்பி, எழுத்து மூலம் தவகல் கேட்டுப் பெற்றுள்ளார்.

அதுகுறித்து அய்யனார், "நான் கேட்ட மேற்படி திட்டம் குறித்த தகவலுக்கு, குடிநீர் வடிகால் வாரியம் வழங்கியுள்ள பதிலில், இந்த திட்டத்தினைச் செயல்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர், விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஆகியோரிடம் திட்டத்தின் கால அவகாசங்கள் குறித்து உரிய ஆணை பெற்று ஒப்பந்தப் புள்ளி இறுதிசெய்யப்பட்ட பிறகு விவரம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி போதாது. அதன்காரணமாக 2023-ஆம் ஆண்டு இதற்கான திட்டப் பணிகளில் செலவின பட்டியல் மாற்றம் செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு திருத்தப்பட்டு, தற்போது 2,706 கோடிக்கு திட்டம் தயார் செய்யப்பட்டு, வேலூரிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தபிறகு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மாநில அளவிலான தொழில்நுட்பக் குழுவினர் அனுமதி கிடைத்தவுடன், அரசிடமிருந்து உரிய ஆணை பெற்று ஒப்பந்தப் புள்ளி இறுதிசெய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள் ளப்படும்” என்று பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது'' என்கிறார்.

ww

"மிகவும் பின்தங்கிய கிராமங்கள் அதிகம் உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு சுதந்திரம் பெற்று 100 ஆண்டு களை நெருங்கும் நிலையிலும் இன்னும் நல்ல குடிதண்ணீர் தேவையை எந்த அரசும் நிறைவேற்றவில்லை. திட்டச் செலவினங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே ஒழிய திட்டம் வரவில்லை என்பது வெட்கக் கேடாக உள்ளது'' என்கிறார் வாழ்வுரிமை கட்சிப் பிரமுகர் அடங்குணம் சசிகுமார்.

விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் நம்மிடம், "தண்ணீருக்கும் பாசனத்திற்கும் தத்தளிக்கிறது விழுப்புரம் மாவட்டம். தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதாகக் கூறுகிறது அரசு. கடந்த ஆட்சியின்போது தென்பெண்ணை ஆற்றில் தாளவானூர் - ஏனாதிமங்கலம் இடையே 22 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை, 2021 மழை வெள்ளத்தின்போது உடைந்துபோனது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதே இடத்தில் தரமான அளவில் தடுப்பணை கட்டக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தோம் அமைச்சர் பொன்முடி வந்து பார்வையிட்டார். மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இன்னும் அந்த இடத்தில் தடுப்பணை கட்டவில்லை. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 75 கோடி ரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு அனுப்பியுள்ளோம். அரசு அனுமதிக்காக ddகாத்திருக்கிறோம்'' என்கிறார்கள்.

காவிரியின் உபரிநீர் கடலில் சென்று வீணாகாமல் அதை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் சரபங்கா நீரேற்றும் திட்டம் வகுக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து வெளி வரும் உபரிநீரை நீரேற்று பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் வறண்டுகிடக்கும் 100 ஏரிகளுக்கு வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டு, 565 கோடி செலவில் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. கடந்த 2020 மார்ச் 4-ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார். இந்தப் பணிகள் இன்றுவரை முடிக்கப்படவில்லை. தற்போது காவிரி உபரிநீர் தினசரி சுமார் ஒன்றரை லட்சம் கனஅடி அளவுக்கு கடலில் சென்று வீணாகிறது. இதைக்கொண்டு தமிழகத்தின் தண்ணீர்த் தேவை முழுவதையும் நிறைவுசெய்யலாம். ஆனால் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லாததால் மேட்டூரிலிருந்து வெளிவரும் உபரிநீரை தமிழகத்திலுள்ள பெரிய பாசன ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் கால்வாய்மூலம் கொண்டுசெல்ல வழிவகுக்கவில்லை''’என்கிறார்.

"மக்களுக்கு அத்தியாவசிய அடிப்படை வசதி என்பது குடிக்க தண்ணீர், நடக்க நல்ல சாலை, இரவு நேரங்களில் தெருக்களில் மின்சார வெளிச்சம். அதிலும் மக்கள் குடிக்கும் தண்ணீர் அதிக முக்கியத்துவம் உடையது. நடைமுறையில் அத்த கைய திட்டத்தைச் செயல்படுத்தாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது அரசு. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி போராடவேண்டிய பல்வேறு கட்சிகள் பல்லக்கு தூக்கிக்கொண்டு இருக்கின்றன. தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதாக வார்த்தைகளில் வித்தைகாட்டி வருகிறது என்பதுதான் நிதர்சன உண்மை''’என்கிறார் பா.ஜ.க. பிரமுகர் உடையாநத்தம் மணிவண்ணன்.