ஹலோ தலைவரே, இரண்டு கழகங்களும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு, தேர்தல் அறிக்கை களையும் வெளியிட்டிருக்கு.''’’
""தேர்தல் களம் இனி அனல் பறக்குமே?''’’
""அ.தி.மு.க. சைடில் பல தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வு அதிருப்தி ஓயலை. தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை சித்ரா விவகாரத்தில் அடிபட்ட, பெரம்பலூர் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வனுக்கு, பலத்த எதிர்ப்பை மீறி சீட் கொடுக்கப்பட்டிருக்கு. அவரிடம் வைத்திலிங்கத்தின் உறவினரான எஸ்.ஐ. தவமணி போய் கணிசமாகக் கறந்திருக்காராம். இதேபோல் விளாத்திகுளம், தஞ்சாவூர்னு பல இடங்களிலும் வசூல் வேட்டை நடந்திருக்கு. குறிஞ்சிப்பாடியில் வேட்பாளரை மாற்றவேண்டிய நிலைமை. தன்னோட அரசியல் ஆலோசகரான சுனில் தரப்பே, பலரிடமும் கணிசமாகக் காசு வாங்கியதாகவும் -சொன்னபடி சீட் கொடுக்கலைன்னும் புகார்கள் வர, ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம் எடப்பாடி.''’’
""தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்படி?''’’
""அங்கேயும் சில அதிருப்திகள் வெளிப்பட்டிருக்கு. திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், சீட் கிடைக்காததால கட்சி மாறிட்டாரு. விருகம்பாக்கம் தொகுதியை எதிர்பார்த்த கே.கே.நகர் தனசேகரன், தன் ஆதரவாளர்களோடு வந்து அறிவாலயம் வாசலிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தி பேட்டி கொடுத்தாரு. சீட் எதிர்பார்த்து மா.செ.க்களை கவனிச்ச பலர், லிஸ்ட்டில் பேர் இல்லாததால் நொந்து போயிருக்காங்க. ஆனாலும், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ள பலரும் பலமானவங்கன்னும் அ.தி.மு.கவுக்கு சவாலா இருக்காங்கன்னும் எடப்பாடி பழனிசாமிகிட்ட உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்குதாம். குறிப்பா, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்தான் வேட்பாளரை முடிவு செய்யும்னு தி.மு.க.விலேயே பேச்சு இருந்த நிலையில், வழக்கமான தி.மு.க. பாணி வேட்பாளர் பட்டியலாக ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் இருந்தது. இதில் தி.மு.க.வின் புதுமுக வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே ஸ்டாலினிடமிருந்து சிக்னல் வந்திடிச்சி. ஆனாலும், பட்டியல் லீக் ஆகாமல் சைலண்ட் மோடிலேயே இருந்தாங்க. லிஸ்ட் வெளியானதுமே டிஜிட்டல் பேனர்களோடு களத்துல இறங்கிட்டாங்க.''’’
""அ.தி.மு.க. இதை எப்படி எதிர்கொள்ளப் போகுது?''’’
""தி.மு.க. சார்பில் பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட தொகுதிகள் எது எதுன்னும், தங்களுக்கு வீக்கான தொகுதிகள் எது எதுன்னும் லிஸ்ட் எடுத்திருக்கிறார் எடப்பாடி, அதன்படி டஃப் அதிகமா இருக்கும் தொகுதிக்கு மட்டும் ஏற்கனவே முடிவெடுத்த படி 40 சி’வீதம் அள்ளி இறைக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் அந்தளவு கவனிப்பு இருக்காதாம்.''’’
""அப்புறம் எப்படி ஜெயிக்க முடியும்?''’’
""அதற்காகத்தானே அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங்மெஷின்னு சொல்லப்பட்டிருக்கு. வழக்கம்போல, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்றாங்கன்னு அ.தி.மு.க. வெயிட் பண்ணுச்சி. மார்ச் 13-ந் தேதி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டாரு. தமிழர்களுக்கு 75% வேலை வாய்ப்பு, கேஸ் மானியம், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு கைக்கணினி, இந்து கோவில்கள் புனரமைப்புக்கு 1000 கோடி ரூபாய்னு எந்த சைடிலும் கேப் விடாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உள்ளடக்கியதா தேர்தல் அறிக்கை வெளியானது. வழக்கம்போல தேர்தல் களத்தின் கதாநாயகனாக அது முன்னிறுத்தப்பட்டது. தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும், கூட்டணி பலமும் சேர்ந்து 150 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றியைக் கொடுக்கும்னு எடப்பாடிக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்குதாம்.''’’
""அந்த வெற்றிவாய்ப்பைத் தடுக்கத்தான் வாஷிங்மெஷின் அறிவிப்பா?''’’
""தி.மு.க.வுக்கு இந்தமுறை பெண்களிடம் செல்வாக்கு அதிகமாக இருக்கு. அதனால், அ.தி.மு.க.வின் நிரந்தர வாக்கு வங்கியா இருந்த பெண்களைத் தக்க வைக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கு. அதே நேரத்தில், அ.தி.மு.கவின் 2011, 2016 அறிக்கைகளில் வெளியிடப்பட்ட இலவச செல்போன், கல்விக்கடன் ரத்து, மோனோ ரயில் திட்டம் இதையெல்லாம் சொன்னீங்களே.. செய்தீங்களான்னு தி.மு.க. தரப்பில் ட்ரெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.''’’
""தேர்தல் களத்தில் மல்லுக்கட்டு இன்னும் பலமா இருக்கும்னு எதிர்பார்க்க லாமா?''’’
""கூட்டணிக் கட்சிகளைக் கையாள்வதில் இந்த முறை அ.தி.மு.க. சொதப்பிடிச்சி. தே.மு.தி.க வெளியேறிய நிலையில், த.மா.கா தனக்கான 12 தொகுதிகளை எதிர்பார்த்தது. ஜி.கே.வாசனும் ரொம்பவே நம்பினார். ‘"நமக்குள் என்னங்க…பட்டியலை அனுப்புங்க… நான் பார்த்துக்கறேன்'னு எடப்பாடி சொல்லியிருக்காரு. ஆனா பா.ஜ.க, பா.ம.க.வோடு பேச்சுவார்த்தை நடத்திய அ.தி.மு.க., வாசன் கேட்டும் நேரம் ஒதுக்கலை. கடைசியா, த.மா.கா.வுக்கு 6 சீட்டு, அதுவும் இரட்டை இலைச் சின்னம்னு ஒதுக்கப்பட்டதில் வாசனுக்கு படுஏமாற்றமாம். எடப்பாடியோ, ஏற்கனவே வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்ததைச் சுட்டிக்காட்டி விட்டு, உங்களுக்கு இருக்கும் வாக்குகளின்படி பார்த்தால், 3 சீட்டுதான் தந்திருக்கணும்னும் சொல்லிட்டாராம்.''
""“2016-ல் இரட்டை இலையில் நிற்கச்சொன்ன ஜெ.விடம், அதுக்கு நாங்க ஆள் இல்லைன்னு சொல்லிவிட்டு வெளியே வந்து. மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தவராச்சே ஜி.கே.வாசன்?''’’
""ஆமாங்க தலைவரே, ஜெ.வை எதிர்த்த நம்மால, எடப்பாடியை எதிர்க்க முடியலையேனு த.மா.கா.குள்ளேயே அதிருப்தி குரல்கள் கேட்குது. கேட்ட தொகுதிகளும் கிடைக்கலை. வாசனின் தீவிர விசுவாசியாக இருக்கும் கோவை தங்கத்துக்காக வால்பாறை தொகுதி கேட்கப்பட்டது. கோவை தங்கத்திடம்தான் தொகுதி லிஸ்ட்டையும் சீலிட்ட கவரில் அ.தி.மு.க. கொடுத்து அனுப்பியது. வாசனும் தங்கமும் லிஸ்ட்டைப் பிரித்துப் பார்த்தால் அதில் வால்பாறையே இல்லை. அமைச்சர் வேலுமணி ஆப்பு வச்சிட்டாராம். வால்பாறையில் சுயேட்சையாகப் போட்டியிடும்படி கோவை தங்கத்தின் ஆதரவாளர்கள் வலியுறுத்தறாங்களாம்.''’’
""அ.தி.மு.க.வால் கைவிடப்பட்ட தே.மு.தி.க. அப்படி இப்படின்னு ஒருவழியா அ.ம.மு.க. கூட்டணியில் 60 தொகுதிகளுக்கு செட்டில் ஆயிடிச்சே..?''’’
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி, அ.ம.மு.க.வுடனும் இழுபறி இருந்த நிலையில், தனித்துப் போட்டியிடுவதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் தயக்கம் காட்டியிருக்காங்க. தேர்தல் புறக்கணிப்பு பற்றியும் அவங்க வலியுறுத்த விஜயகாந்த் குடும்பம் ஆடிப்போயிருச்சி. அ.ம.மு.கவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் 14-ந் தேதி உடன்பாடு ஏற்பட்டு, 60 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட தினகரனுக்கும் பிரேமலதாவுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 200 சி வரை நிதி கேட்டிருக்கு தே.மு.தி.க தரப்பு. அ.ம.மு.க.விலோ தொகுதிக்கு 1சினு 60சியை உறுதிப்படுத்தியதாம். விஜயகாந்த் முதன்முதலில் ஜெயித்த விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா களமிறங்குறாரு.''’’
""மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலும் களமிறங்கிட்டாரே?''’’
""கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடுறாரு. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மயூராஜெயக்குமாரும் பா.ஜக.வில் வானதி சீனிவாசனும் போட்டியிடுறாங்க. கமலுக்கும் வானதிக்கும் போட்டி கடுமையா இருக்கும்னும், ஒரு தரப்பின் ஆதரவு ஓட்டை இன்னொரு தரப்பு பிரிக்கும் வாய்ப்பு இருப்பதால், கோவை தெற்கு தொகுதி மீது கவனம் திரும்பும்னும் சொல்லப்படுது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் தாராபுரத்தில் களமிறங்க, ஹெச்.ராஜா காரைக்குடியில் போட்டியிடுறாரு. குஷ்புவை ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்தியிருக்காங்க. இதுதான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வாக்குரிமை உள்ள தொகுதி.''’’
""தி.மு.க.வில் சீட் கிடைக்காமல் விலகி, அ.தி.மு.கவில் சேர்ந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணனுக்கு, கட்சியில் சேர்ந்த அடுத்த நிமிடமே சீட் ஒதுக்கப்பட்டிருக்கே?''’’
""தனது தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கியதால், மதுரையில் வேறு தொகுதியை எதிர்பார்த்தார் சரவணன். ஆனா தி.மு.க. மா.செ.க்கள் தளபதி, மூர்த்தி இருவருமே அவருக்கு சப்போர்ட்டா இல்லை. தன்னைவிட வலுக்குறைந்த வேட்பாளரை அறிவிச்சிருப்பதா அதிருப்தி யடைந்து, பா.ஜ.க.வோடு உடனடியா டீல் பேசி, சீட் வாங்கிட்டாரு. கட்சியில் சேர்ந்தவுடனேயே சீட் டான்னு எல்.முருகன்கிட்ட செய்தியாளர்கள் கேட்டப்ப, அவர் நேற்றே ஆன்லைனில் சேர்ந்துட்டாருன்னு சிரிப்பை அடக்கமுடியாமல் சொன்னாரு எல்.முருகன். அதுபோல, திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்பே வேட்புமனு தாக்கல் செஞ்சிட்டாரு. கட்டுக் கோப்பான கட்சின்னு பெயர் எடுத்த பா.ஜ.க.வில் வேட்பாளர் தேர்வு நிலைமை இதுதான்.''
""சி.பி.எம்.மின் வேட்பாளர் பட்டியலில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் உ.வாசுகி, அ.சௌந் தர்ராஜன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் எவரின் பெயரும் இடம் பெறலையே?''’’
""ஆமாங்க தலைவரே, இந்த முறை கட்சியின் மாவட்ட கமிட்டிகள், மாநிலத் தலைவர்களை விட்டுட்டு, தங்கள் பகுதியில் இருக்கும் கட்சியின் களப் போராளிகளை செலக்ட் பண்ணிடிச்சி. குறிப்பாக மதுரையில் உ.வாசுகியா? பொன்னுத்தாயாங்கிற விவாதம் வந்தது. பொன்னுத் தாயி உத்தபுரம் தீண்டாமைச் சுவர் விவகாரத்திலும், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்திலும் களத்தில் மக்களைத் திரட்டிப் போராடி, தன் ஆற்றலை நிரூபித்தவர். அதனால் அவரையே செலக்ட் பண்ணிட்டாங்க. மாவட்ட கமிட்டியின் தேர்வுக்கு எதிரா, புதிதா ஒருவரை வேட்பாளர் பட்டியலில் திணிக்கும் வழக்கம் சி.பி.எம். கட்சியில் இல்லை. அதேபோல் அறிவிக்கப்பட்டிருக்கும் 6 வேட்பாளர்களும் மக்கள் பிரச் சினைகளுக்காகப் போராடியவங்க. தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாலும் வலுவான கூட்டணி அமைந்ததாலும், வெற்றியை எளிதாகப் பெறலாம்ங்கிற எண்ணத்தில் காம்ரேடுகள் உற்சாகத்தில் இருக்காங்க.''’’
""நான் ஒரு வருத்தமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். புரட்சிகர இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு திரையுலகத்தைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கு. தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த ஜனநாதன், தன் முதல்படமான "இயற்கை'க்கு, சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர். அதைத்தொடர்ந்து "ஈ', "பேராண்மை', "புறம்போக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், கடைசியாக விஜய்சேதுபதியை வைத்து "லாபம்'’ என்ற படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்துவந்த நிலையில், எடிட்டிங் சூட்டில் இருந்து 11 -ந் தேதி மதியம் வீட்டிற்குச் சாப்பிடப்போனவர், அங்கேயே, மயங்கி விழுந் தார். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை பலனில்லாமல் 14-ந் தேதி மரணம் அடைந்தார். நக்கீரனின் தீவிர வாசகர் அவர். தன் எழுத்துகளாலும் நக்கீரனில் பங்களிப்பு செலுத்திய மக்கள் கலைஞர் ஜனநாதன்.''’’