வக்ஃபு வாரியத் துறை யில் நடக்கும் மோசடிகளைக் கட்டுக்குள் கொண்டுவர மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டு முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது. தாரேஸ் அகமது பொறுப் பேற்றவுடன் வக்ஃபு நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், தற்போது அவரும் தனது பொறுப்புகளை சரியாகச் செய்யவில்லையென சர்ச்சை உருவாகியுள்ளது.
வக்ஃபு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட அப்துல் ரஹ்மான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டதால் அவரை நீக்கி, நவாஸ் கனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துறையில் நடக்கும் மோசடிகளைக் கட்டுக்குள் கொண்டுவர மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டு முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது. நவாஸ் கனி வக்ஃபு வாரியத் தலைவராக இருந்தாலும் வக்ஃபு நிர்வாகம் முழுவதும் தாரேஸ் அஹமது கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எம்.கே.என். வக்ஃபிற்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகம் அமைக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர். நிர்வாகத்தில் யார் யார் இருக்கலாம் என்று வக்ஃபு வாரிய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில், குறிப்பாக வக்ஃபு சொத்தை கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பரிவர்த்தனை செய்ததை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
வக்ஃபு சொத்துக்களை பரிவர்த்தனை செய்வது விதிமீறல், குற்றம் என்பதால் பரிவர்த் தனை செய்யவியலாது - மேலும் இதன்மூலம் பல கோடி இழப்பு ஏற்படும் என்று அந்த நிர்வாகத்தை சார்ந்த அஸ்லாம் என்பவர் முறையிட, குற்றச் சாட்டுமீது நடவடிக்கை எடுக்காமல் பரிவர்த்தனை செய்ததை
வக்ஃபு வாரியத் துறை யில் நடக்கும் மோசடிகளைக் கட்டுக்குள் கொண்டுவர மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டு முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது. தாரேஸ் அகமது பொறுப் பேற்றவுடன் வக்ஃபு நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், தற்போது அவரும் தனது பொறுப்புகளை சரியாகச் செய்யவில்லையென சர்ச்சை உருவாகியுள்ளது.
வக்ஃபு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட அப்துல் ரஹ்மான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டதால் அவரை நீக்கி, நவாஸ் கனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துறையில் நடக்கும் மோசடிகளைக் கட்டுக்குள் கொண்டுவர மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டு முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது. நவாஸ் கனி வக்ஃபு வாரியத் தலைவராக இருந்தாலும் வக்ஃபு நிர்வாகம் முழுவதும் தாரேஸ் அஹமது கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எம்.கே.என். வக்ஃபிற்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகம் அமைக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர். நிர்வாகத்தில் யார் யார் இருக்கலாம் என்று வக்ஃபு வாரிய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில், குறிப்பாக வக்ஃபு சொத்தை கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பரிவர்த்தனை செய்ததை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
வக்ஃபு சொத்துக்களை பரிவர்த்தனை செய்வது விதிமீறல், குற்றம் என்பதால் பரிவர்த் தனை செய்யவியலாது - மேலும் இதன்மூலம் பல கோடி இழப்பு ஏற்படும் என்று அந்த நிர்வாகத்தை சார்ந்த அஸ்லாம் என்பவர் முறையிட, குற்றச் சாட்டுமீது நடவடிக்கை எடுக்காமல் பரிவர்த்தனை செய்ததை ரத்துசெய்யாமல் ஆணையை வெளியிட்டுள்ளார் அதிகாரி தாரேஸ் அகமது. மேலும் புதிய நிர்வாகம் அமைக்க வக்ஃபு வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியபிறகும் அதனை அமல்படுத்தாமல், சட்டத்திற்குப் புறம்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீனை சிறப்பு அதிகாரியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
நாகூர் தர்ஹா நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கக் காரணமாக இருந்த அலாவுதீன் ஐ.ஏ.எஸ். மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது. அவரை எம்.கே.என். வக்ஃபிற்கு சிறப்பு அலுவலராக நியமிக்கக்கூடாது என்றும் அந்தப் பகுதி மக்கள் தற்போது எதிர்ப்புக் குரல் தெரிவித்துவருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆசாரே சரீப் வக்ஃபுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இடத்தினை சட்டத்திற்குப் புறம்பாக விற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. விற்பனை செய்தவர்மீது நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று கோரிக்கை இருந்துவருகிறது. அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த வக்ஃபிற்கு சொந்தமான சொத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளதை அகற்றித் தரவேண்டுமென, குற்றச்சாட்டுக்கு ஆளான நிர்வாகி விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டுள்ளார் தாரேஸ் அகமது.
இதற்கு முக்கிய காரணம், அந்த நிர்வாகி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வேண்டியவர் என்பதால், அமித்ஷா சிபாரிசு கடிதத்தை மதித்து எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கையே.
அந்தப் பகுதியை சார்ந்த சாதிக் என்பவர், “"ஆக்கிரமிப்பை மீட்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் வக்ஃபு சொத்துக்களை விற்றுவருபவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரிடமே மீண்டும் மீட்கப்பட்ட சொத்தை ஒப்படைத்துள்ளதோடு, குறிப்பாக பா.ஜ.க. தலைமையிலிருந்து யார் பேசினாலும் அதற்கு ஆதரவாக தலைமை அதிகாரி செயல்படுகிறார்''’எனக் குற்றம்சாட்டுகிறார்.
திருச்சியிலிருக்கும் ஒரு கிராமமே வக்ஃபு சொத்து என்று தமிழக அரசின் அப்போதைய அதிகாரியாக இருந்த பரிதாபானு ஆணை பிறப்பிக்க, அப்போதைய சேர்மன் அப்துல் ரஹ்மானும் மைலாப்பூர் கோயில் முதல் பல்வேறு சொத்துக்கள் வக்ஃபு சொத்துக்கள்தான் என்று சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேச, நாடாளுமன்றம் வரை அது எதிரொலித்தது. இந்தியா முழுவதும் வக்ஃபு திருத்தச் சட்டம் வரக் காரணம் பரிதாபானு பிறப்பித்த உத்தரவே என்றும் சொல்வார்கள்.
முறையாக அளவீடு செய்யாமல் இஷ்டத்திற்கு பிறப்பித்த ஆணையால் பல சொத்துக்கள் வக்ஃபு சொத்து என பதிவுத்துறையின் ஆட்சேபனையில் உள்ளன. குறிப்பாக, திருச்சி திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ், "தனது தொகுதிக்கு உட்பட்ட சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளும் இதேபோன்ற சிக்கலில் உள்ளன. காலங்காலமாக வசிக்கும் வீட்டை பதிவுத் துறை ஆட்சேபனை செய்துள்ளது. அதனை நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தும் இதுவரை வக்ஃபு தலைமைச் செயலதிகாரி எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாறாக மத்திய அரசின் திருத்திய வக்ஃபு சட்டத்திற்கு ஏற்ப மாவட்ட ஆட்சியரிடம் குறிப்பிட்ட சொத்து குறித்து அறிக்கை கேட்டு எழுதியுள்ளார். இதனால் காலதாமதம்தான் நடக்குமே தவிர உடனடி தீர்வு காண வாய்ப்பிருக்காது'' என்று தெரிவிக்கிறார் திருவெறும்பூர் எல்லக்குடி பகுதியை சேர்ந்த காந்தி.
சென்னையிலுள்ள நந்தனம் பள்ளிவாசல் வக்ஃபிற்கு சொந்தமான இடத்தினை, நீதிமன்றத் தீர்ப்பை மீறி புதிய நபர்களுக்கு சட்டவிரோதமாகக் குத்தகைக்குவிட பிறப்பித்த உத்தரவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே இந்த வக்ஃபில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப் படையில் நிர்வாகத்தை மாற்றவும் குற்றச்சாட்டு களின் அடிப்படையில் விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக அங்குள்ள கட்டடங்களை வேண்டியவர்களுக்கு வாடகைக்குவிட ஆணை பிறப்பித்துள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு குரல் கொடுத்துவரும் நிலையில், வக்ஃபு நிர்வாக முதன்மை அதிகாரியே தற்போது மத்திய அரசின் சட்டத்திற்கு இணங்கிச் செயல்படுவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பதவிக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்கிற அதிகாரியின் கரிசனமே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில் இருப்பவர்கள்.
வக்பு வாரிய அமைச்சர் நாசரோ, மீண்டும் பதவிக்கு வந்துள்ளதால் எந்த சர்ச்சையிலும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக எதிலும் தலையிடாமல் இருந்துவருகிறார். வக்ஃபு வாரிய சேர்மன் நவாஸ் கனியும் அதே மனநிலையில். எனவே வக்ஃபு நிர்வாகத்தில் நடக்கும் முறை கேடுகள், முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை நிவர்த்திக்க எந்த நடவடிக்கையும் இருக்காது என்கிற மனநிலையில் உள்ளனர் இஸ்லாமியர்கள்.
அனைத்து வக்ஃபு சொத்துக்களும் பெரும் பாலும் உருது மொழி பேசும் இஸ்லாமியர்கள் தானமாகத் தந்தது மற்றும் அவர்கள் நிர்வகித்து வந்த வை. தி.மு.க.வின் அனு தாபிகளாக இருந்துவந்த இவர்கள் கடந்த நான்காண்டுகளாக அவர் களுக்கு எந்த நன்மையும் கிடைக்காத நிலையில் ஏன் பா.ஜ.க.விற்கு ஆதரவாக இருந்து வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடாது என்கிற எண்ண ஓட்டத்தில் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி மூலம் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வக்ஃபு தலைமை அதிகாரி தாரேஸ் அகமதுவிடம் கேட்டபோது, "எம்.கே.என். வக்பு நிர்வாகம் தொடர்பாக எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விண்ணப்பங்கள், வாரியத்தில் விசாரணை செய்து நிலுவையில் உள்ளது. இறுதிமுடிவு விரைவில் எடுக் கப்படும். ஆஷாரே ஷரீப் வக்ஃபில் ஆக்கிரமிப்பாளர் கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' ’என்றார். அதேபோல், தேன்கனிக்கோட்டை யாரப் தர்ஹா வக்ஃபில் முறையாகத்தான் அனைத்தும் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வக்ஃபு நிர்வாகங்களை பாதுகாக்கும் தன்னார்வலரும் வழக்கறிஞருமான கோபாலகிருஷணன், "நான்கு வார காலத்தில் எம்.கே.என் வக்ஃபிற்கு நிர்வாகம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இது வரை நிர்வாகம் அமைக்கவில்லை. மேலும், ஆசாரே ஷரீப் வக்ஃபில் தற்போதைய நிர்வாகத்தினர் மீது இடங்களை விற்றதாகக் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அதனை விசாரித்து தனிக் குழு அமைத்து மீட்கப்பட்ட இடத்தை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. தலையீடு என்கிற காரணத்தினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று குற்றம்சாட்டுகிறார்.
இன்னும் சில இஸ்லாமிய சமூகத்தினரோ, "தாரேஸ் அகமதுக்கு வக்ஃப் வாரிய தலைமை அதிகாரி பொறுப்பு கூடுதல் பொறுப்பாகவே அளிக்கப்பட்டுள்ளது. பொறுப்பேற்ற இந்த 8 மாத காலத்தில் இந்த அலுவலகத்துக்கே வந்ததில்லை'' என வருத்தப்படுகின்றனர்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியம் பா.ஜ.க.வினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் திறம்படச் செயல்பட்டால்தான் மாறும். இல்லையெனில் வக்ஃபு விவகாரத்தில் தி.மு.க.வினர் இரட்டை வேடம் என்று அ.தி.மு.க. கூறும் குற்றச்சாட்டு உண் மையானதாக மாற வாய்ப் புள்ளது.