"ஹலோ தலைவரே, தேர்தல் தொடர்பாக வரும் பல்ஸ்ரேட் அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அதிகமாகப் பாதிக்கிறது.''”
"ஆமாம்பா, பா.ஜ.க.வின் பல்ஸ் ரேட்டால் தமிழக பிரச்சாரப் பயணத்தை திடீர்ன்னு அமித்ஷா ரத்து செய்துவிட்டாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரெண்டு நாள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். பா.ஜ.க.வின் மிக முக்கியமான சூத்ரதாரியான இவரோட வருகையை தமிழக பா.ஜ.க.வினர் ரொம்பவும் ஆர்வமாக எதிர்பார்த்தாங்க. அதோட, இவருக் கான பிரச்சாரக் கூட்டங்களையும் ஏக தடபுடலாக ஏற்பாடு செய்தாங்க. ஆனால் அமித்ஷாவோ, கடைசி நேரத்தில் தனது தமிழக பயணத்தை திடீரென ரத்துசெய்துவிட்டார். இதற்கு அவரோட உடல் நலப் பிரச்சினைதான் காரணம்னு சொல்லப் பட்டாலும் உண்மை அது இல்லையாம். பா.ஜ.க. பெரிதும் நம்பிவருகிற உத்தரப்பிரதேசத்தின் பல்ஸ்ரேட், இப்போது பா.ஜ.கவுக்கு வீக்கா இருக்குன்னு மத்திய உளவுத்துறை ஒரு ரிப்போர்ட்டை அனுப்பியதாம். கடந்த தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 71-ஐ பா.ஜ.க.வும் 3-ஐ அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. அப்படிப்பட்ட உ.பி.யில் இப்போது நிலவரம் மோசம்னு தெரிஞ்சி அதிர்ச்சியான அமித்ஷா, தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டு, உ.பி.க்கு பதட்டத்தோடு விரைந்திருக்கிறாராம்.''”
"தி.மு.க. தரப்பிலும் சில தொகுதிகள் மீது நெகட்டிவ் ரிப்போர்ட் வந்ததால் தீவிர கவனம் செலுத்தப்படுகிறதே?''”
"தமிழகத்தில் தி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக தொகுதிகளின் பல்ஸ் ரேட் வந்துகொண்டிருக்கிறதாம். இதற்குக் காரணம், தொகுதிகள் தோறும் சரியான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, பூத் கமிட்டிகளையும் உருவாக்கி, அங்கங்கே பொதுக் கூட்டங்களை, மாநாடுகளைப் போல் நடத்தி, அவற்றில் முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டவர்களும் ஓய்வு உறக்கமின்றி பிரச்சாரத் தில் ஈடுபட்டு வருவதால்தான் இப்படி தெம்பூட்டும் தகவல்கள் வருகிறதுன்னு தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்திருக் கிறார்கள். இதற்கிடையே, பா.ஜ.க. சார்பில் நெல்லையில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக, அங்கு தி.மு.க.வில் உள்ள மறவர் சமூகத்தினர் சைடு அடிப்பதாக ஸ்டாலின் கவனத்துக்கு ரிப்போர்ட் சென்றது. அதேபோல், தருமபுரியில் களமிறங்கி யிருக்கும் பா.ம.க. சௌமியா அன்புமணி தரப்பு, தி.மு.க.வில் இருக்கும் வன்னிய சமூகத்தினரை கன்வின்ஸ் பண்ண முயலும் தகவலும் அவரை எட்டியது. அதனால் இந்தத் தொகுதியில் இருக்கும் தி.மு.க. நிர்வாகிகளை ஸ்டாலின் உஷார்படுத்தி, உற்சாகமாக ஓடச் செய்திருக்கிறாராம்.''”
"கடந்த நக்கீரன் இதழில் வந்த ஒரு கட்டுரை பல்வேறு தாக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த நக்கீரன் இதழில் வெளியான "வேட்டு வைக்கும் உள்ளடிகள்; ஸ்டாலின் கையில் எச்சரிக்கை ரிப்போர்ட்' என்ற அட்டைப்படக் கட்டுரை, தி.மு.க. தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கட்டுரையில், தி.மு.க.வினர் சிலருக்கு ஏற்பட்டி ருக்கும் அதிருப்தியினையும், அப்படிப்பட்ட அதிருப்தியாளர்களை எதிர்க்கட்சிகள் பர்ச்சேஸ் செய்யத் திட்டமிடுவது பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது. இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதி பொறுப்பாளர்களையும் போனில் பிடித்து, நிலைமை எப்படி இருக்கிறது? என்று விசாரித்ததோடு, எந்த வகையிலும் உள்ளடிகளுக்கு இடம் தந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதே கட்டுரையில், 30 கோடிவரை செலவு செய்வதாகச் சொல்லி சீட் வாங்கிய சில காங்கிரஸ் வேட்பாளர்கள், இப்போது ஒத்த பைசாகூட இல்லை என பஞ்சப்பாட்டுப் பாடுவது பற்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்தும் சபரீசனைவிட்டு விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து கூட் டணிக் கட்சியினர் தொகுதியில் வேலை செய்யும் தி.மு.க.வினர், அவர்களை எதற்கும் எதிர்பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.''”
"ஏம்பா, கடந்த இதழ் ராங்கால் பகுதியில் நாம் பேசிக்கொண்ட செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் மோடி டார்கெட் வைத்திருக்கும் ஐந்து பேர் பற்றி பேசிக்கொண்ட நாம், அவர்களைத் தோற்கடிக்க, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கை வைக்கத் திட்டமிடுவது குறித்தும் பதிவு செய்திருந்தோம். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வு களை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அறிவாலயத் தரப்பு, ஆர்.எஸ்.பாரதி மூலம், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. அதில், ’ வாக்குப்பதிவு இயந்திரத்தை கவனியுங்கள். இ.வி.எம். மற்றும் கண்ட்ரோல் யூனிட்டிற்கு இடையே வி.வி.பாட் எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். இதுவரை நடந்த தேர்தல்களில், இ.வி. எம்., வி.வி.பாட் இரண்டு இயந்திரமும் இணைந் தும், கண்ட்ரோல் யூனிட் தனியாகவும் வைத்துப் பயன்படுத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் அவற் றுக்கு மாறாக, மூன்றையும் ஒரே இணைப்பாக வைத்துப் பயன்படுத்த முனைவது முறைகேடுகள் நடக்க வழிவகுக்கும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது உயர்நீதிமன்றம்.''”
"தமிழகத்தில் உள்ள மொழிச் சிறுபான்மை யினரைக் கையில் எடுக்கும் திட்டத்தில் மோடி இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் சௌராஷ்டிரா மக்கள் 3.5 சதவீதமும், உருது மக்கள் 7 சதவீதமும், மராட்டிய சமூக மக்கள் 1 சதவீதமும், தெலுங்கு ரெட்டியார் மக்கள் 4 சதவீதமும் என ஏறத்தாழ 15.5 சத மொழி சிறுபான்மையினர் வாழ்கின்றனர். இவர்களின் வாக்குகளைக் குறிவைத்து மோடி சில வியூகங்களை கொஞ்ச நாளாகவே வகுத்து வருகிறாராம். தமிழகத்தில் உள்ள இந்துத்துவா ஆர்வலர்களை காசி சங்கம நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்று அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றது போல், இந்த சிறுபான்மைச் சமூகத்தினரை அவரவர் சங்கத்தின் மூலம் சரிக்கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.''”
"ஆமாம்பா, இங்குள்ள சௌராஷ்டிர மக்களைச் சரிக்கட்ட, அவர்களை வடநாட்டு யாத்திரைக்கு அழைத்துச்சென்றார்களே?''”
"ஆமாங்க தலைவரே, சௌராஷ்டிரா மக்களைப் பொறுத்தவரை அவர்களிடையே ஒரு பழக்கம் உள்ளது. இந்த சமூக மக்களின் வாக்குகள் வேண்டும் என்றால் அவர்களுக்கான சங்கமே சொல்லவேண்டும். அந்த வகையில் இங்குள்ள சௌராஷ்டிரா சங்கத்தினரின் மூலம் அச்சமூக மக்கள் 5000 பேரை டூருக்கு அழைத்துச் சென்றி ருக்கிறார்கள். குறிப்பாக, அவர்களை கஜினிமுகமது படையெடுத்து அழித்த சோமநாதபுரம் ஆலயம் மற்றும் குஜராத்தில் உள்ள சில இடங்களுக்கு அழைத் துச்சென்றனர். இதற்கான செலவை குஜராத் அரசு ஏற்றுக்கொண்டதாம். இதன்மூலம் அவர்கள் மனதைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் தாமரைத் தரப்பு ஆர்வம் காட்டியதாம். அதேசம யம், மதுரை எம்.பி.யும், நாடாளுமன்ற உறுப்பினரு மான சு.வெங்கடேசனின் மனைவியும் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் பா.ஜ.க.வின் முயற்சியை முறியடித்து, மதுரைப் பகுதியில் கணிசமாக உள்ள இந்த சமூக மக்களின் வாக்கைப் பெற, அவர் தீவிரம் காட்டிவருகிறாராம்.''”
"இதே சமூகத்தைச் சேர்ந்த கீழடி அகழ் வாராய்ச்சி நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மட்டும் தாமரைத் தரப்பு அலைக்கழிச் சிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் தொன்மையையும், நாகரிக வரலாற்றை யும் வெளிக்கொண்டு வந்தவர் அமர்நாத் ராம கிருஷ்ணா. இவரும் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவரை பிரதமரின் செயலாளர் மூலமாக மோடி கலந்துகொண்ட சௌராஷ்டிரா சங்கம நிகழ்ச்சியில், அவருடன் கலந்துகொள்ளும் படி கட்டாயப்படுத்தினர். இதன்மூலம் சௌராஷ் டிர சமூகத்தினரின் வாக்குகளை ஈர்க்கமுடியும் என்று தாமரைத் தரப்பினர் கணக்குப் போட்டிருந் தனர். ஏற்கனவே அகழ்வாராய்ச்சி விவகாரத்தில், டெல்லியால் அலைக்கழிக்கப்பட்ட அனுபவத்தால் அதிருப்தியில் இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டாராம். அதை மனதில் வைத்துக்கொண்டு, அவருடைய மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் மூன்று மாதங்களுக்கு முன்பு, அவரை வேண்டுமென்றே டெல்லிக்குப் பணியிட மாற்றம் செய்திருக்கிறது மோடி அரசு.''”
"அ.தி.மு.க.வே தன் கைக்கு வரப்போகிறது என சசிகலா விட்ட உதாரெல்லாம் என்ன ஆச்சுன்னு அவங்க தரப்பே கேட்குதே?''”
"நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. தன் கைக்கு வந்து விடும் என்றும் கடந்த 1 மாதமாக உதார் விட்டுக் கொண்டிருந்தார் சசிகலா. ஆனால் பிரச்சார திசைக்கே அவர் போகவில்லை. அதேபோல் இந்த தேர்தலில் தன் சிபாரிசில் பா.ஜ.க.வில் 2 பேருக்கு சீட் வாங்கித் தருவதாகவும் சொல்லிக்கொண்டி ருந்தார். அதுவும் நடக்கவில்லை. இப்படி அவரை யாருமே சீண்டாததால், அவரை சந்திக்கவரும் கூட்டமும் காணாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் என்னவென்றால், ஜெயலலிதா மறைவுக் குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக அறிவுஜீவிகள் டீம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த டீம், பா.ஜ.க. தலைமையிடம், சசிகலாவின் பின்னால் முக்குலத்தோர் சமூகம் இருப்பதாகக் கணக்குப் போடாதீர்கள். அவர் வெறும் ஜீரோதான். அதனால் ஓ.பி.எஸ்., தினகரன் இருவரை மட்டுமே கூட்டணிக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, இதைப் பரிசீலித்த பா.ஜ.க. தலைமை, சசிகலா இனி நமக்குக் கொஞ்சமும் தேவையில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாம். இதனால் இப்போது தனிமையில் தவிக்கும் சசிகலா, ஆறுதலுக்காக தினகரன், திவாகரன் உள்ளிட்ட சொந்தங்களுக்கு போன் அடித்தாலும், அவர்களிடமிருந்தும் ரெஸ்பான்ஸ் இல்லையாம்.''”
"மதுபானக் கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவாலைப் போலவே கைதான ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்க்கு ஜாமீன் கிடைத்திருக் கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, டெல்லி அரசு கையில் எடுத்த மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை, தற்போது கெஜ்ரிவாலைக் கைது செய்தது போலவே, அவருக்கு முன்னதாகவே அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களைக் கைது செய்தது. அப்படி கைதானவர்களில் ஒருவரான ஆம் ஆத்மி எம்.பி.யான சஞ்சய் சிங், கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைபட்டிருந்தார். இவரிட மிருந்து சட்ட விரோதப் பணம் எதையும் அமலாக்கத்துறை கைப்பற்ற வில்லை. இந்த நிலையில் சிக்கலான வழக்காகக் கருதப்பட்ட இதில் இருந்து, சஞ்சய்சிங்கை உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறது. வெளியில் வந்த சஞ்சய்சிங்கிற்கு பலமான வரவேற்பைக் கொடுத்திருக் கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். இந்த மதுபான வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் ஜாமீன், இவ்வழக்கில் சிக்கியிருக்கும் மற்றவர்களுக்கும் பொருந்தும் என்பதால், விரைவில் கெஜ்ரிவாலுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அங்கே நிலவுகிறது. இந்த வழக்கின் போக்கு, இதே அமலாக்கத்துறையிடம் சிக்கியிருக்கும் தி.மு.க. செந்தில் பாலாஜிக்கும் சாதகமாக அமையும் என்கிற எதிர்பார்ப்பு அவர் தரப்புக்கும் வந்திருக்கிறதாம்''”
"மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் அரசு வழங்கிவரும் ஓய்வூதியம், இந்த மாதம் கிடைக்கலைங்கிற புகார்க்குரல் எழுகிறதே?''”
"மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கி வருகிறது தி.மு.க. அரசு. இது ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி டான்னு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். ஆனால் இம்மாதத் தொகை யாருக்கும் வரவில்லையாம். இதுகுறித்து, தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை மக்கள் இயக்கத்தின் பொதுச்செய லாளரும், மாற்றுத் திறனாளியுமான ஈரோடு வள்ளிநாராயணன், தமிழக அரசின் சமூக நலத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டிருக்கிறார். அதிகாரிகளோ, "இது தேர்தல் நேரம். நன்னடத்தை விதிகள் அமலில் இருபதால் இந்த மாதம் ஓய்வூதியம் வராது' எனச் சொல்லியிருக்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு மட்டும் ஓய்வூதியம் அனுப்புகிறீர்களே என்று அவர் திருப்பிக்கேட்க, அவரை ஒருமையில் பேசி விரட்டியிருக்கிறார்கள். இருந்தும் வள்ளிநாயகம், இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு புகார் அனுப்ப, இத னை கவனித்த அவர், இந்த ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண் டும் என மாவட்ட கலெக்டர் களுக்கு உத்தரவிட்டி ருக்கிறார். இருந்தும், இதன்மீது ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் ஓய்வூதியம் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். இது தி.மு.க.வுக்கு எதிராகப்போகும் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.''”
"செய்தித்துறை கூடுதல் இயக்குநர் பதவி காலியாக இருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, செய்தித்துறைக்கு டெபுடேசனில் வந்த கூடுதல் இயக்குநர் சாந்தி ஓய்வு பெற்றுவிட்டதால், அவர் வகித்த பதவி காலியாக இருக்கிறது. இந்த நிலையில், அந்த பணியிடத்தை நிரப்ப, சிப்காட் நிறுவனத்திலிருந்து புதிதாக ஒரு அதிகாரியை டெபுடேசனில் அனுப்பி வைக்க, செய்தித்துறைக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் சிப்காட் நிர்வாக இயக்குநரான செந்தில்ராஜ் ஐ.ஏ.எஸ். இதைக்கண்டு செய்தித் துறை அதிகாரிகள் கடும் எரிச்சலடைந்திருக் கிறார்கள். காரணம், இப்படி, வேறு துறையில் இருந்து செய்தித்துறைக்கு அதிகாரிகள் வந்துகொண்டிருந்தால், செய்தித்துறையில் உள்ள அதிகாரிகளின் பதவி உயர்வுகள் என்ன ஆவது என்கிறார்கள். குறிப்பாக, இதனால் தி.மு.க. அதிகாரிகள்தான் பெரிதும் பாதிக்கப்படு கிறார்களாம். எனவே, பிறதுறை அதிகாரிகள் டெபுடேசனில் செய்தித்துறைக்கு வந்தால், அதை துறையின் உயரதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது என்கிற குரல் துறை முழுக்க எதிரொலிக்கிறது.''
"கச்சத்தீவு பிரச்சனையை மோடி கையிலெடுத்தது அந்த கட்சிக்கே பேக் ஃபயர் ஆகிடுச்சாமே?''
"ஆமாங்க தலைவரே, கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸையும், தி.மு.க.வையும் டார்கெட் பண்ணி தமிழக பா.ஜ.க. தலைவரிலிருந்து பிரதமர்வரை அரசியல் செய்ய, அதே நேரத்தில் அருணாச்சல பிரதேசத்திலுள்ள 30 நகரங்களுக்கு சீனா பெயர் மாற்றம் செய்து அறிவித்தது பரபரப்பாகிடுச்சு. மோடி ஆட்சியில் ஏற்கெனவே மூன்றுமுறை இப்படி சீனா அறிவித்தும் இந்தியத் தரப்பில் வலுவான எதிர்ப்பில்லை. இதைக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், "இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்தும் காப்பாற்றத் துணிவில்லை, சீனாவை எதிர்க்கவும் துணி வில்லை'ன்னு மோடியை கடுமையா தாக்கியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயோ, 2015ஆம் ஆண்டு, மோடி அரசு, வங்கதேச அர சோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தால், வங்க தேசத்துக்கு 10,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை தாரை வார்த்திருக்காங்க. இது எந்த விதத்தில் நியாயம்?' என்று கேள்வியெழுப்ப, பா.ஜ.க. தரப்போ பதில் சொல்ல முடியாமல் சைலண்ட் மோடுக்கு போயிடுச்சு.''”
"நானும் ஒரு முக்கிய மான தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன், கடந்த நக்கீரன் இதழில் வெளி யான அட்டைப்படக் கட்டு ரையில், தன்னைப் பற்றி வந்த செய்திக்கு சபா நாயகர் அப்பாவு மறுப்பு தெரிவிக்கிறார். அவர் என்ன சொல்றாருன்னா, நெல்லையில் என் மகனுக்கு சீட் கேட்டது உண்மைதான். அதே நேரம், அங்கே காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக் கப்பட்டதும், நான்தான் அவருக்கு முதல்ல போன்பண்ணி வாழ்த்தைச் சொன்னேன். அவ ருக்கு எங்க ஆதரவாளர்கள் எதிரா இருக்காங் கன்னு எதிர்க்கட்சியினர் வேணும்னே கிளப்பி விடறாங்க. ஆனா, நெல்லை வேட்பாளர் எங்க வீட்டுக்கு வந்து என்னை சந்திச்சார். மகிழ்ச்சி யாக உரையாடினோம். அப்ப என் வாழ்த்துக் களை உளப்பூர்வமாக அவருக்குத் தெரிவிச்சேன். அவருக்காக என் ஆதரவாளர்களும் என் மகனின் ஆதரவாளர்களும் ஆர்வமா தேர்தல் வேலை பார்த்துக்கிட்டிருக்காங்க’ என்று சொல்கிறார்.''”