கோவையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் கள ஆய்வுப் பணிகளை மேற் கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல்வேறு துறைகளின் கீழ் ரூ.321.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இரண்டு நாள் பயணத்தில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டது, பட்டாசுத் தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது, பட்டாசுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பட்டாசு விபத்தில் உயிரிழப்போரின் குழந்தைகளுடைய படிப்புச் செலவை அரசாங்கமே ஏற்கும் என்று அறிவித் தது, அரசு குழந்தைகள் காப்பகம் சென்று கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை மாணவிகளுக்கு வழங்கியது என நெகிழவைத்தார் மு.க.ஸ்டாலின்.
இம்மாவட்டத்தில் தான் பங்கேற்ற ஒவ் வொரு நிகழ்ச்சியும் டச்சிங்காக அமைந்துவிட, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை “"மருது சகோதரர்கள் போல இந்த மண்ணுக்குத் தூணாக விளங்கக்கூடிய மாவட்டச் செயலாளர் கள்...''’என பாராட்டியதோடு, வி
கோவையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் கள ஆய்வுப் பணிகளை மேற் கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல்வேறு துறைகளின் கீழ் ரூ.321.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இரண்டு நாள் பயணத்தில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டது, பட்டாசுத் தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது, பட்டாசுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பட்டாசு விபத்தில் உயிரிழப்போரின் குழந்தைகளுடைய படிப்புச் செலவை அரசாங்கமே ஏற்கும் என்று அறிவித் தது, அரசு குழந்தைகள் காப்பகம் சென்று கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை மாணவிகளுக்கு வழங்கியது என நெகிழவைத்தார் மு.க.ஸ்டாலின்.
இம்மாவட்டத்தில் தான் பங்கேற்ற ஒவ் வொரு நிகழ்ச்சியும் டச்சிங்காக அமைந்துவிட, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை “"மருது சகோதரர்கள் போல இந்த மண்ணுக்குத் தூணாக விளங்கக்கூடிய மாவட்டச் செயலாளர் கள்...''’என பாராட்டியதோடு, விருதுநகர் மாவட் டத்தில் புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், கல்லூரி கனவுத் திட்டங் களில் அதிகளவு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதற்காகவே, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனுக்கு நல் ஆளுமை விருது வழங்கினோம்''’என்று ஆட்சியரையும் வாழ்த்தினார்.
ஆட்சிக்கான கள ஆய்வோடு, கட்சிக்கான கழக ஆய்வும் சேர்ந்து நடத்தினால்தான், பயணத்தின் நோக்கம் முழுமையாகும் என்ற திட்டமிடலுடன் விருதுநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளைச் சந்தித்து, 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய போது, “அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒருவகையில் பயன்பெறு கிறது. இதை மக்களுக்கு உணர்த்தும் விதத்தில் நமது பிரச்சாரம் அமையவேண்டும். இளைஞர் கள்தான் எதிர்கால விதைகள். இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற் றுங்கள். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து அரசு செயல்படுத்திவரும் திட் டங்களை விளக்கவேண்டும். விருதுநகரில் உள்ள 7 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமையவேண்டும்''’என்று உற்சாகப்படுத்தினார்.
‘விருதுநகர் மாவட்டத்தின் மீது முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்துவது ஏன்?’ என்ற கேள்வியை தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, அவர் சொன்னது...
"உண்மையான காரணம்னு சொன்னா... கடந்த எம்.பி. தேர்தல்ல தமிழ்நாட்டுல ரொம்ப வும் குறைஞ்ச ஓட்டுல, வெறும் 4379 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சாரு காங்கிரஸ் வேட் பாளர் மாணிக்கம் தாகூர். ரிசல்ட் சொன்னப்ப, கடைசி வரைக்கும் இழுத்துக்கோ பறிச்சுக் கோன்னு இருந்தது, தளபதி மனசை ரொம் பவே உறுத்திருச்சு. ரெண்டு அமைச்சர் இருந் தும்.. திட்டங்கள் மூலம் மக்களுக்கு இத்தனை வசதி பண்ணிக் கொடுத்தும்.. இந்தமாதிரி ஏன் நடந்துச்சுங்கிற கேள்வி இன்னும் இருந்துக் கிட்டே இருக்கு. இந்த மாவட்டத்துல தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிற இடத்துல பட்டாசுத் தொழிலாளர்களோட வாக்குகள் இருக்கு. இன்னொரு விஷயம்.. "சிவகாசி' திரைப்படம் ரிலீஸுக்கு முன்னால ப்ரமோஷனுக்காக.. 2005ல இங்கேயிருக்கிற பட்டாசு ஆலைக்கு வந்தாரு விஜய்.. அப்ப பட்டாசுத் தொழிலாளர்களை சந்திச்சாரு. இது நடந்து 19 வருஷமாச்சு. இப்ப விஜய் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. இத எல்லாம் கணக்குப் போட்டுத்தான்.. இதுவரைக்கும் எந்த முதலமைச்சரும் கால்வைக்காத பட்டாசு ஆலைக்குள்ள சி.எம்.ங்கிற கெத்தோடு போயிருக்காரு எங்க தளபதி. பலவீனமா இருக்கிற இந்த மாவட்டத்தைச் சரி பண்ணுனா தமிழ்நாட்டையே சரி பண்ணுன மாதிரின்னு அவரு மனசுல தோணிருக்கும் போல.
தி.மு.க.வுல இளைஞரணி, மகளிரணின்னு 23 அணிகள் இருக்கு. அதுனால.. கட்சில இருக்கிற 100 பேருக்கும் ஏதாவது ஒரு அணி யில் பொறுப்பு கிடைச்சிருக்கும். எல்லா அணியையும் நல்லா வேலை வாங்குங்க. யாரா இருந்தாலும், அவங்க தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப செயல்பட்டு, தனியா மினிட்ஸ் போட்டுக்கங்க. பெரிய பொறுப் புல இருக்கவங்க.. கீழே இருக்கவங்கள நல்லா வேலை வாங்கி, கட்சிக்கு உழைப்பாளியா மாத்துங்க. அந்த மாதிரி உழைக்கிறவங்க, உங்களுக்கு போட்டியா வந்திருவாங்கன்னு நினைக்காதீங்கன்னு, தளபதி ரொம்ப அழகா பேசினாரு. ஆனா.. இதெல்லாம் நடக்க ணும்ல?''’என்று நடப்பு அரசியலை அறிந்து பேசிய அந்த நிர்வாகி, " தி.மு.க.வுக்கு பெண் கள் வாக்கு வங்கி நிரந்தரமா இருக்கணும்கிற ஒரே சிந்தனையோடு அரசுத் திட்டங்களை செயல்படுத்துறாரு. அதுல வெற்றியும் கிடைச் சிட்டு வருது. இதுல ஒரே ஒரு குறை. மதுவிலக்கு குறித்து தி.மு.க. தரப்புல மேல இருக்கவங்களோ, கீழ இருக்கவங்களோ, ஒருவார்த்தை கூட பேசல. அந்த நினைப்பே இல்ல. ஏன்னா... மது விலக்குன்னு சொன்னா, குடிக்கிற ஆண்கள் ஓட்டு விழாம போயிரும். இது தேர்தல் அனுபவத்துல தி.மு.க. தெரிஞ்சு கிட்ட விஷயம். அதனால.. மதுவிலக்குங்கிற பேச்சுக்கே தி.மு.க.வுல இடம் இல்ல''’என்று நேர்மையாகப் பேசினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து, அரசியல் களத்தில் யாரும் நெருங்கமுடியாத அளவுக்கு, இப்போ திருந்தே பீடுநடை போட ஆரம்பித்திருக் கிறார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.