தை புத்தாண்டின்போது வீட்டின் முன்னே பொங்கலிட்டு சூர்ய பகவானுக் குப் படையலிட்டு வழிபடுவது தமி ழர்கள் வழக்கம். அதேபோல் தெரு வில் பொங்கல் வைத்து புதுப் பொங்கல் பானை பொங்காமல் போனதால், வேதனை யடைந்த கிராம மக்கள் 120 ஆண்டுகளாக தைப்பொங்கலே கொண்டாடாமலிருக்கும் விநோத கிராமம் பற்றிய தகவலறிந்து அந்தக் கிராமத்திற்கு விரைந்தோம்.
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் நகரம் தாண்டி ஒதுங்கிக் கிடக்கிறது கேளையாப்பிள்ளையூர் கிராமம். சுமார் 350-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட 1300-க்கும் கூடுதலான மக்களை உள்ள டக்கியது. கிரா மத்தின் வாழ் வாதாரமே விவசாயம், பீடி சுற்றுதல், விவசாய கூலித் தொழில் களாகும். மூன்று தலை முறைகளுக்கு முன்பு தமிழர் களின் முக்கிய திருநாளான தைத் திருநாளில் கேளை யாப்பிள்ளையூர் கிராமத் தினர் வழக்கம்போல் தெருக்களில் மஞ்சள் குலை, கரும்புகளால் அலங்கரித்து புதுப் பானையில் பொங்கலிட்டிருக்கிறார்கள்.
ஆனால் பானை கொதித்ததே தவிர வழக்கம்போல் பொங்கல் பானை பால் பொங்கி வழியவே இல்லை. வெகுநேரம் பானை பொங்காமல் போக மிரண்டுபோன மக்கள் மனச் சஞ்சலமடைந்திருக்கிறார்கள்.
மறு வருடம் முதல் தைப்பொங்கல் வைக்காமல் தவிர்த்து தொடர்ந்து 120 வருடங்களாக தைத்திருநாளில் பொங்கல் வைக்கவேயில்லையாம்.. நாம் கேளை யாப்பிள்ளையூர் சென்றபோது அந்த கிராமம் ஆழ்ந்த அமைதி யிலிருந்தது. தெருவீதிகளும் வெறிச். 90 வயது கடந்த பெரியவர்களான முத்துக் கிருஷ்ணன், சுப்பையா, செல்லம்மாள், கனி, உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசினோம்.
"நாலஞ்சு தலைமுறைக்கு முன்ன சாதி சனம், மக்க, கொஞ்சப்பேரு தானிருந்தாங்க. எங்க முப்பாட்டன்க காலத்தில அறுவடையான புளியதரட்டி சம்பா அரிசிய, தைப் பொங்கலன்னைக்கு மாடுகளைக் குளிப்பாட்டி பூப்போட்டு சூரியன் உதிக்கும்போது வழக்கமா தெருக்கள்ல பொங்க வச்சாக. ஆனா, ஏனோ, ஊர்ல பொங்க வைச்ச அத்தனை பொங்கப் பானையும் பொங்காமப் போனதால, பயந்துபோன பெரியவங்கல்லாம் ஒன்னுகூடி "தெய்வகுத்தமா தெரியுது. அதனால தை பொறப்பன்னைக்கு பொங்க வைக்க வேணாம்'னு முடிவு எடுத்திட்டாக.
வழக்கமா தை பொறந்த மூணாம் செவ்வாக்கெழம அன்னைக்கி எங்க முன்னோர்க குலதெய்வமான இந்த உச்சினி மாகாளியம்மன் கோயில் கொடை விழா நடத்திருக்காக. அப்ப ஊர் சனங்க தெரண்டுவந்து பொங்கல் வைச்சு குலவையிட்டதில் பொங்கப்பானை பொங்கியிருக்கு. அந்தக் கொடை விழாவுல வழக்கம்போல 14 சாமியாடிக சாமியாடுவாக. அப்ப ஊர்க்காரர் ஒருத்தர் வந்து சாமியாடிக கால்ல விழுந்து கும்பிட்டு,
"கோயில்ல பொங்க வைச்சா பொங்கப்பானை பொங்குது ஆத்தா. ஆனா தைப் பொறப்பனைக்கி விசேஷம்னு வழக்கமா தெருவுல பொங்க வைச்சா பொங்கப்பான பொங்கலத்தா. கொதிச்சுக்கிட்டேயிருக்கே. தெய்வகுத்தமா?'ன்னு கும்பிட்டுக் கேட்டுருக்காராம். அப்ப 14 சாமியாடிகளும் ஒன்னா சேர்ந்து.
"நீ எனக்கு தை செவ்வாயன்னைக்கு கொடை குடுத்து பொங்க வைக்கறல்ல. அதோட முடிச்சுக்கோ... போ'ன்னு ஓங்காரமா சாமியாடிக அருள்வாக்கு சொல்லிருச்சாம். அப்பயிருந்தே தை பொறப்பன்னைக்கு நாங்க மத்தவங்கள மாதிரி பொங்கலிடுறத நிறுத்திட்டோம்.
120 வருஷமா நாலஞ்சு தலைமுறையா கிராமத்தில நாங்க தை மாசப் பொறப்பன்னைக்கு ஊர்ல பொங்க வைக்கிறத நிறுத்திட்டோம். தீபாவளி கொண்டாடுதோம். பொங்கல் கொண்டாடுறதில்ல. அதனால நாலஞ்சு தலைமுறையா தைப்பொங்கல்னா என்னான்னு தெரியாததாயிருச்சி. அப்ப ஊரே வெறிச்சோடிக் கெடக்கும்யா. அந்த நாளன்னைக்கி ஊர்க்காரவுக திருச்செந்தூருக்குப் பாத யாத்திரை போயிடுவாக''’ என்றார்கள்.
-செய்தி, படங்கள்: ப.இராம்குமார்