"ஹலோ தலைவரே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே வகுக்க ஆரம்பித்துவிட்டதே.''”

"ஆமாம்பா, நடிகர் விஜய்யின் த.வெ.க.விலும் இது தொடர்பான பரபரப்பு தெரியுதே?”

rr

"உண்மைதாங்க தலைவரே, தங்கள் ஆதரவைப் பெருக்கி, சட்டமன்றத் தேர்தலில் அதி காரத்தைக் கைப்பற்றிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் விஜய். இந்த நிலையில், அவர், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச ஆரம்பித்துவிட்டார் என்றும், அவர்கள் அணியில், 80 தொகுதிகளில் த.வெ.க. கட்சி நிற்க இருக்கிறது என்றும் குபீர் தகவல்கள் புறப்பட்டன. இதைக்கண்டு எரிச்சலான விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பது, அப்பட்ட மான பொய்ச் செய்தி என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். இளைஞர்கள் மத்தியில் தனக்கு பெரிய அளவில் ஆதரவு இருப்பதாகக் கருதும் விஜய், முதலில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் தனக்கு இருக்கும் செல்வாக்கை கணிக்க விரும்புகிறாராம். மேலும், தேர்தலுக் குள் மற்ற அரசியல் கட்சிகளுக்கு நடுவே தான் விஸ்வரூபம் எடுக்கவேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார் என்கிறார்கள். எனவே, முதற்கட்டமாக அவர், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாராம். அதற்கான பயணத் திட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் பரபரப்பாகச் செய்துவருகிறார்கள். அதற்கு முன்னதாக, தங் கள் கட்சிக்கு முறைப்படி மா.செ.க்களை நியமிக்கவும் விஜய் ஆலோசனை நடத்திவருகிறாராம்.''”

"மா.செ.க்கள் நிய மனம் எப்படி இருக்கு மாம்?''”

Advertisment

"தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் நியமிக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். ஏற்கனவே விஜய் ரசிகர் மன்றத்தில் ஆக்ட்டிவாக செயல்பட்டவர்களை அந்தப் பதவிகளுக்குத் தேர்வு செய்யலாமா என்றும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்கிற ஆலோ சனைக் குரலும் அக்கட்சியின் நிர்வாகிகளிட மிருந்து எழுந்திருக்கிறது. இதற்கு விஜய் தயக்கம் காட்ட, விக்கிரவாண்டி மாநாட்டில் நீங்கள் பேசும்போது, நம்மைத் தேடி வருபவர்களை அரவணைப்பதுடன் அவர்களுக்கு அதிகாரத்தில் பங்குதருவதும் முக்கியமானது என்று நீங்கள்தானே சொன்னீர்கள். எனவே, நம்மைத் தேடிவரும் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுக்கு கட்சிப் பணிகளிலும் உரிய இடத்தை அளிப்பதுதானே சரியாக இருக்கும் என்று முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தார்களாம். இதைத் தொடர்ந்து, 80 சதவிகித மா.செ. பதவிகளை விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 20 சதவிகித பதவிகளை மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் விஜய் பகிர்ந்தளிக்கவிருக் கிறாராம். த.வெ.க. கட்சியினர் இப்போது அதிகார ’கிக்கில் இருக்கிறார்கள்.''”

"திரையுலக பிரபலங்களுக்கு இது போதாத காலம் போல இருக்குதே?''

rr

Advertisment

"ஆமாங்க தலைவரே, சமீபகாலமா பஞ்சாயத்து, குடும்பத்துக்குள்ள விவாக ரத்துன்னு அடுத்தடுத்து எதாவது பிரச்சனை லைம்லைட்டுக்கு வந்துக்கிட்டே இருக்குது. இப்பத்தான் ஜெயம் ரவி குடும்பத்துல விவாக ரத்து வழக்கு பிரச்சனை பெருசா ஓடிட்டு இருந்துச்சு, அடுத்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவி இருவரும் 11 ஆண்டுகால மண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்தது பரபரப்பா பேசப்பட்டது. இப்ப அதே குடும்பத்தில், ஜி.வி.பிரகாஷின் மாமாவும் பிரபல இசையமைப் பாளருமான ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், திருமணமாகி 29 ஆண்டுகள் கழித்து மனைவி சாய்ராபானுவை பிரிந்துவிட்டதாக அறிவித்திருப்பது தமிழ் திரையுலகை மட்டுமல்லாது இந்திய திரையுலகையே அதிரவைத்திருக்கிறது. இப்படியான விவாகரத்து செய்திகள், திருமணமான திரைப் பிரபலங்களோட மனசுல, தங்களோட திருமண வாழ்க்கை குறித்த பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கு.''

"நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கியதில் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் நடந்திருக்குதாமே?''

rr

"ஆமாங்க தலைவரே, ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை நடிகை கஸ்தூரி வளர்த்துவருகிறாராம். அவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் மனைவி காமாட்சி சுவாமிநாதன், "நடிகை கஸ்தூரிக்கு ஆட்டிஸம் பாதிப்புடன்கூடிய ஒரு மகன் இருக்கிறார். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கையே சவாலான ஒன்று. நானும் கஸ்தூரியைப்போல் ஓர் சிறப்பு குழந்தையின் அம்மாதான். எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, கஸ்தூரியின் ஜாமீன் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு மனிதாபிமானத்தோடு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்திருக்கிறதாம்.''

"மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்காமே? ஆச்சர்யமாயிருக்குதேப்பா...''

rr

"கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதென்னவோ உண்மைதான் தலைவரே... ஆனால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது நியூயார்க் நீதிமன்றத்தில்! அமெரிக்காவில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தங்கள் பெறுவதற்கு இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின் குழுமம் தீவிரமா முட்டி மோதுச்சு. அதுக்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ2,100 கோடி லஞ்சம் தரவும் அதானி குழுமம் ஒப்புக்கொண்டதாம். ஆனால் இந்த தகவல்களையெல்லாம் மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து அதானி குழுமம் முதலீடுகளைப் பெற்றதுங்கறதுதான் அவர்மேல அந்நாட்டோட குற்றச்சாட்டு. இந்த வழக்கில் அதானியின் உறவினரான சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட் டப்பட்டிருக்காம். ஏற்கெனவே ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அதானிக்கு சப்போர்ட்டா இருந்த மோடி, இப்ப சர்வதேச அளவுல தன்னோட நெருங் கிய நண்பருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எப் படி சமாளிக்கப்போறார்னுதான் எல்லாரும் எதிர்பார்க்கறாங்க. நம்ம ஊர் புலனாய்வு அமைப்புகள்தான் அதானி மேல விசாரணை பண்ணியிருக்கணும். ஆனால் இப்ப நியூயார்க் நீதிமன்றம் சாட்டைய சுழற்றியிருக்கு.''

"கள்ளக்குறிச்சி சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருக்கிறதேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கொடூரம் அரங்கேறி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்தது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்துவந்தனர். எனினும் இந்த வழக்கானது சரியாக விசாரிக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தபடியே இருந்தது. இதன் பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதிகளும், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும், காவல்துறையினரும் இருந்ததால்தான் இப்படி என்றார்கள். அதேசமயம், இந்த கள்ளச் சாராயத்திற்கான மூலப்பொருள் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்திருப்பதால், இதில் காவல்துறையைத் தாண்டி, சி.பி.சி.ஐ.டி. போலீசால் உண்மைகளைக் கண்டறிய முடி யாது என்கிற கருத்தும் பலராலும் முன்வைக்கப் பட்டது. எனவே, இந்த விஷச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டின.''”

"உண்மைதான்...''”

"விசாரணையின்போது, பா.ம.க. தரப்பிலிருந்து அழுத்தமான வாதங்கள் முன் வைக்கப் பட்ட நிலையில்... அரசுத் தரப்போ "சம்பவத் துக்கு காரணமான நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாமல் தடுக்கும் நோக்கில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள் ளது' என்றது. எனினும் வழக்கை விசாரித்த, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வோ, ’"பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட எஸ்.பி. அடுத்த மாதமே தாம்பரத் துக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட் டுள்ளார். எனவே, இதைக் கண்துடைப்பு நடவடிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது. தவறு இழைத்த அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில், மாநில அரசு அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் மீதான வழக்குக்கு தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருக்கிறது. இது தமிழக அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் முடிவில் இருக்கிறது.''”

"கோவையில் காங்கிரஸ் கட்சியினருக் குள்ளேயே கடும் மோதல் நடந்திருக்கிறதே?''”

"அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடந்த வாரம் கோவைக்கு வந்திருந்தார். பர்சனல் வேலையாக வந்த அவர், வந்த வேலை முடிந்ததும் டெல்லிக்கு கிளம்பிவிட்டார். அதற் காக அவர் கோவை ஏர்போர்ட் சென்ற போது, அவரை, தமிழக காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாரும் அவரது ஆதரவாளர்களும் வழியனுப்பி வைக்கத் திரண்டனர். அவர்களைப் போலவே, கோவை மாவட்ட மகளிர் காங்கிரசாரும், அக்கட்சியின் கோஷ்டித் தலைவர் கள் சிலரின் ஆதரவாளர்களும் ஏர்போர்ட்டில் குவிந்திருந்தனர். இவர்கள் கே.சி.வேணுகோபாலை வழியனுப்ப முனைந்தபோது, மயூரா அவர்களைத் தடுத்து தக ராறில் இறங்கினாராம். அப் போது, மகளிர் காங்கிரசாரை அருவருப்பான வார்த்தை களால் அர்ச்சனை செய்தா ராம் மயூரா. இதனால் அந்த ஏர்போர்ட்டில் ஏக ரகளை நடக்க, அவர் தரப்பால் எதிர்த்தரப்பினர் தாக்கப் பட்டிருக்கிறார்கள். இது காங்கிரஸில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியிருக் கிறது.''

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கான முன்னெடுப்பு களை அரசு செய்துவருகிறது. குறிப்பாக சென்னை மண்டலம் தவிர கோவை திருச்சி, மதுரை ஆகிய மூன்று மண்டலங்களின் குவாரி உரிமங்கள், மயிலாடு துறையைச் சேர்ந்த ராஜப்பா வுக்கு வழங்கப்படவிருக்கின்றன. அவர் மூலம் பரவலாகத் துணை ஒப்பந்தங்கள், தொழில் பலம் கொண்ட நபர்களுக்கு வழங்கப் பட உள்ளன. அதில் கரூர் முதல் கோவை வரை உள்ள மணல் குவாரிகளை, கரூர் மாவட் டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கே.சி பழனிச்சாமிக்கு, துணை ஒப்பந்தம் மூலம் வழங்கவிருக்கிறார்களாம். காரணம், அரசியல்வாதியாகவும், தொழிலதிபராகவும் கொடிகட்டிப் பறந்த பழனிச்சாமி, கொரோ னா காலகட்டத்திற்குப் பிறகு பொருளாதார ரீதியில் நொடித்துப் போயிருக்கிறாராம். எனவே, அவருக்குத் தெம்பூட்டும் வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதர வால் அவருக்கு இந்த மணல் ஒப் பந்தம் வழங்கப்படவிருக்கிற தாம். மேலும் ராஜப்பா மணல் காண்ட்ராக்ட் தனக்கு கிடைக் கும் என பல தரப்பிடம் அட்வான்ஸ் தொகை வாங்கிக்கொண்டிருக் கிறார். இதை அறிந்த ராமச்சந்தி ரன், கரிகாலன், ரத்தினம் டீம் அதை தடுக்கும் முயற்சியில் தீவிர மாக செயல்பட்டு வருகிறதாம்.''

_______________

விளக்கம்!

கடந்த நவம்பர் 13-15 தேதியிட்ட நக்கீரன் இதழில் 'இருட்டு அறை... போதை புகை... சிவசாமி லீலைகள்!' என்ற தலைப்பில், மலேசிய பயிற்சியாளர் சிவசாமியின் மெய்யுணர்வுப் பயிற்சி தொடர்பாக வெளியான கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் குறித்து மெய்யுணர்வுப் பயிற்சி மையத்தின் பொருளாளர் தர்மராஜா விளக்கமளித்தார். இந்த பயிற்சி வகுப்பை 25 ஆண்டுகளாக நடத்திவருகிறோம். பணிக்கு செல்பவர்கள் கலந்துகொள்வதற்கு ஏதுவாக இருக்குமென்பதற்காகத்தான் ஒவ்வொரு நாளும் மாலை முதல் நள்ளிரவு வரை பயிற்சி வகுப்பு நடத்துவதாகத் தெரிவித்தார். இந்த பயிற்சி வகுப்பில் கணவன், மனைவி என ஜோடியாக வருபவர்களைப் பிரித்து மற்றவர்களோடு ஜோடியாக நிற்க வைப்பது குறித்த குற்றச்சாட்டுக்கு, ஒரு வருக்கொருவர் தெரிந்தவர்கள் பக்கத்து பக்கத்தில் நிற்கக்கூடாதென்பதற் காகவே பிரிந்து நிற்க வைக்கிறோம் என்றார். ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கும்படி செய்கிறீர்களா? எனக் கேட்டதற்கு, 'அன்பின் அரவணைப்பு' என்ற செஷனில் மட்டும் அப்படி அரவணைக்கும்படி சொல்கிறோம் என்றார். தெரியாத ஆண், பெண்ணை கட்டிப்பிடிக்கச் சொல்வது தவறல்லவா? எனக் கேட்டதற்கு, தெரியாத ஆணையோ பெண்ணையோ கட்டிப்பிடிக்கச் சொல்வது கிடையாது என மறுத்தவர், ஒரே குடும்பத்திலிருந்து வரும் உறவினர்களுக்குள் தான் கட்டிப்பிடிக்கும்படி செய்கிறோம். சகோதர சகோதரிகள், அம்மா மகன் என்ற உறவுகளில் தான் இதனை செய்யச் சொல்கிறோம் என்றார். ஆனால் இன்னொரு ஆணை கட்டிப்பிடிக்கும்படி செய்தார்கள் என்று அதில் கலந்துகொண்டவரே குற்றம்சாட்டியிருக்கிறாரே என்றதற்கு, அது மிகைப்படுத்தி சொல்வது என மறுத்தார். அதேபோல், நிதி வசூல் செய்வது குறித்த குற்றச்சாட்டுக்களையும், அப்படியெல்லாம் வசூலிப்பதே கிடையாதென்று மறுத்தார். இறுதி நாளில் நகைகளையெல்லாம் அணிந்து வரும்படி சொல்வது குறித்து கேட்டதற்கு, இறுதிநாளில் புகைப்படம் எடுப்பதற்காகத்தான் நகைகளை அணிந்துவரும்படி சொல்கிறோம் என்றார்.

-ஆர்