"ஹலோ தலைவரே, இதுவரை தேர்தலில் நின்றிராத பிரியங்கா காந்தி, முதல்முறையாக கேரளாவில் களமிறங்குகிறார்.''”
"ஆமாம்பா, ராகுலுக்கு பதிலாக அவர் வயநாடு தொகுதியில் நிறுத்தப்பட்டி ருக்கிறாரே?''’
"உண்மைதாங்க தலைவரே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யிலுள்ள ரேபரேலி தொகுதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் ஒருசேர போட்டி யிட்ட ராகுல்காந்தி, இந்த 2 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடினார். ஏதாவது ஒரு தொகுதியில் இருந்துதான் இவர் நாடாளுமன்றம் செல்லமுடியும் என்பதால், ரேபரேலி வெற்றியைக் கையில் வைத்துக்கொண்டு, வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியைக் கைகழுவினார் ராகுல். இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராகுல் போட்டியிட்ட தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று கேரளாவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் முண்டியடித்தனர். இதனால் வேட்பாளரைத் தேர்வு செய்வ தில் காங்கிரஸ் தலைமைக்கு இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில், "சகோதரி பிரியங்காவை நிறுத்தலாம். நான் செய்ய வேண்டிய கடமைகளை அவர் நிறைவேற்றட்டும். நம் கட்சியில் வேறு யார் அங்கே நின்றாலும், மக்களின் நம்பிக்கையைப் பெறு வது கடினம்' என, ராகுலே தன் சகோதரிக்கு சிபாரிசு செய்தாராம்.''”
"பிரியங்கா முதலில் தயக்கம் காட்டினார் என்கிறார்களே?''”
"தேர்தல் பிரச்சாரங்களில் பலமுறை ஈடுபட்ட அனுபவமுள்ள பிரியங்கா, இதுவரை நேரடியாக தேர்தலில் போட்டியிட்டதில்லை. அவரை களமிறக்க சிலமுறை முயற்சிகள் நடந்தபோதும், அவற்றை பிரியங்கா தவிர்த்து வந்திருக்கிறார். அதேபோல் இந்த முறையும் தவிர்க்கப் பார்த்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களோ, வயநாடு மக்கள் காங்கிரஸ் மீதும், ராகுல் மீதும் வைத்துள்ள நம்பிக்கை யால்தான் ராகுலை இரண்டாம் முறையாகவும் வெற்றிபெற வைத்தனர். ஆனால், ராகுல் இந்தத் தொகுதி மூலம் கிடைத்த பதவியை கைவிட்டு விட்டதால், வயநாடு மக்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் நின்றால்தான், இந்த ஏமாற்றத்தை ஈடுகட்டமுடியும் என்றெல்லாம் பிரியங்காவிடம் சொல்லியிருக்கிறார்கள். ராகுலும் இதையே அவரிடம் வலியுறுத்தினாராம். அத னால்தான் இந்தமுறை வயநாட்டில் களமிறங்க பிரியங்கா சம்மதம் தெரிவித்தார் என்கிறார்கள். பிரியங்கா பெயர் அறிவிக்கப்பட்ட மறுநாளே, கேரள மக்கள், இந்திராகாந்தியே போட்டியிடுவ தாகக் கருதி அவரைக் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் பிரியங்காவை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக நடிகை குஷ்புவை களமிறக்க முடிவு செய்துள்ளதாக மலையாள சேனல் ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப் பானது. ஆனால் குஷ்புவோ, பிரியங்காவை எதிர்த்து நானா? என அலறியதால், பிரியங்கா வை எதிர்த்து தங்கள் மாநில மகளிர் அணித் தலைவர் நவ்யா ஹரிதாஸை களமிறக்கியுள்ளது பா.ஜ.க. இதனால் இப்போதே வயநாடு தேர் தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.''”
"உதயநிதியின் செயல்பாடுகள் ஸ்டாலினை வியக்க வைக்கிறதே?''”
"துணை முதல்வராக்கப்பட்டிருக்கும் உதயநிதி, ஊன் உறக்கம் மறந்து களப்பணி களில் தூள் கிளப்பிவருவதை, தி.மு.க. சீனியர்கள் ஆச்சரியமாகப் பார்க்கிறார்களாம். தி.மு.க. இளைஞரணியை முன்னிலைப்படுத்தி வரும் அவர், கட்சி சீனியர்கள் எதிர்பார்த்தபடி அவர் களை அலட்சியம் செய்யாமல், அவர்களிடமும் மிகுந்த இணக்கமாக நடந்துகொள்வதால் அவர்கள் இப்போது வெகு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிக பயணச் சுமை தராமல், அவருக்கு பதில் உதயநிதியே கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சி களுக்காக தமிழகம் முழுக்க சுற்றி வருகிறார். கட்சித் தொண்டர்களும் முழுமனதாய் அவரை உற்சாகமாக வரவேற்று மகிழ்கிறார்கள். அதேபோல் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. என கட்சி சீரமைப்புக்காக எடுக்கப் பட்ட முடிவையும் உதயநிதி, ஒத்திவைத்து விட்டதால், மா.செ.க்கள் தரப்பும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இப்படி உதயநிதி சகல விதத்திலும் ஸ்கோர் செய்துவருவதை கட்சியின் சீனியர் களே வியந்துபோய் தன்னிடம் சொல்வதை, ரொம்பவே ரசித்து வருகிறாராம் ஸ்டா லின்.’ஆனாலும், சனாதனத்தை எதிர்த்த உதய நிதி, திருந்துவதற்காக திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றிருக்கிறார் என்று பா.ஜ.க. தமிழிசை கிண்டலடித்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தேதி கொடுக்கும் உதயநிதி, போகிற இடங்களில் அங்குள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிவதோடு, தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் எந்த அளவுக்குச் சென் றுள்ளது என்பதையும் விசாரித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் விசிட் அடித்த உதயநிதி, அங்கு கிரிவலப் பாதையில் ஆய்வுகளை மேற்கொண் டார். கார்த்திகை மகாதீபத்திற்கான முன்னேற் பாடுகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இதை எல்லாம் அறிந்த பா.ஜ.க. தமிழிசை, "சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று பவன்கல்யாண் சொன்னது, தம்பி உதயநிதியின் மனதில் தைத்துவிட்டது. அதனால் தவறைத் திருத்திக்கொள்வதற்காக அவர் கிரிவலம் சென்றுள்ளார்' என்று கிண்டலாய் விமர்சித் தார். அதே வேகத்தில் இதற்கு பதிலடி தந்திருக் கும் உதயநிதி, ’"கிரிவல பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதா என்றுதான் ஆய்வு செய்தோம். அக்கா குதூகலிப்பது போல இது கிரிவலம் அல்ல; சரிவலம்'’என்று பஞ்ச் கொடுத்திருக்கிறார்.''”
’"கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங் களை நடிகர் விஜய் தரப்பு அணுகி வருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, பெரிய அளவில் விஷச் சாராய மரணம் அரங்கேறிய கள்ளக்குறிச்சியை யாராலும், மறந்துவிட முடியாது. எனவே இந்தப் பகுதியிலேயே தங்களது ’தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தி, மதுவுக்கு எதிராகத் தாங் கள் இருப்பதாக நடிகர் விஜய் காட்டிக்கொள்ள நினைக்கிறாராம். அதனால்தான் இந்த மாநாட் டை விக்கிரவாண்டி அருகில் அவர் நடத்து கிறார் என்கிறார்கள். இந்த மாநாட்டில், கள்ளச் சாராய மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தினர் சிலரையாவது மேடை ஏற்றிவிட வேண்டும் என்று விஜய் தரப்பு தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறதாம். இதற்காக பண பேரமும் நடந்துவருகிறது. ’நடந்த துயரத்தை உங்கள் அரசியல் வியாபாரத்துக்குப் பயன்படுத்த நினைக்காதீர்கள். உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம்’ என்று பாதிக்கப்பட்ட குடும்பத் தினர் பலரும் ஒதுங்கியிருக்கிறார்கள். இருப் பினும் ஒரு சிலரையாவது தங்கள் மேடையில் ஏற்றிவிடவேண்டும் என்று மும்முரமாகக் களமிறங்கி இருக்கிறதாம் விஜய் தரப்பு.''”
"இருப்பினும் விஜய் கட்சியின் தொண்டர் களை மழை பயம் துரத்துகிறது என்கிறார்களே?''
"அண்மையில் பெய்த மழைக்கே அவர்களின் மாநாட்டுத் திடல் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது. இருந்தும் சளைக்காமல் அதனை சரிசெய்யும் பணியில் இருக்கிறார்கள். இருந்தபோதும் மாநாடு நடக்க இருக்கும் 27ஆம் தேதி வாக்கிலும் மழை வரலாம் என வானிலை மையமும், வெதர்மேன்களும் மிரட்டி வருவதால், மாநாடு நடக்கும் போது மழை வந்தால் என்ன ஆவது என்கிற பயம், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களைத் துரத்து கிறதாம். மாநாட்டுத் தேதியை பாண்டிச் சேரியில் இருக்கும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர்தான் குறித்துக் கொடுத்தாராம். அதனால் அவரை அக்கட்சியின் நிர்வாகிகள் இப்போது திட்டித் தீர்க்கிறார்களாம். இதற்கிடையே, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி குடமுருட்டி சேகரின் தம்பிக்கு, விஜய் கட்சியில் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அந்த குடமுருட்டி சேகர், ஒருவரை எரித்துக்கொன்றதாக அவர் மீது திகி லூட்டும் வழக்கே இருக்கிறதாம். அதேபோல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இவர்மீது மூன்று குண்டர் சட்டமும், ஒரு கஞ்சா வழக்கும் போடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட இவரின் தம்பியை திருச்சி மாவட்டத்துக்கு பொறுப்பாளராக விஜய் நியமித்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவர் விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருந்தவர். இதுபோன்ற நிகழ்வுகளும் விஜய் கட்சியினரை சங்கடப்படுத்தி வருகிறதாம்.''”
’"ஒருவழியாக தமிழக கவர்னர் ரவியை மாற்றும் முடிவிற்கு டெல்லி வந்திருக்கிறது என்கிறார்களே?''
"ஆமாங்க தலைவரே, தமிழக அரசோடு தொடர்ந்து மோதல் போக்கைக் கையாண்டு, நீதிமன்றம் வரை கண்டனத்தை சம்பாதித்திருக்கும் கவர்னர் ரவியை, இனியும் ராஜ்பவனில் வைத்திருக்க வேண்டாம் என்கிற முடிவிற்கு ஒன்றிய அரசு வந்திருக்கிறதாம். அண்மையில், அவர் கலந்துகொண்ட தூர்தர்சன் நிகழ்ச்சியில், அவர் சொல்லியதால்தான் தமிழ்த் தாய் வாழ்த்தில் ’திராவிட’ என்று வருகிற வரியை, தவிர்த்துவிட்டுப் பாடினார்களாம். இது தமிழக மக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கும் தகவல் டெல்லிக்குச் சென்றதால், தூர்தர்சனை உடனடியாக இதற்கு மன்னிப்பு கேட்க வைத் திருக்கிறார்கள். ஆனால் தூர்தர்ஷன், தான் தவறு செய்ததாக மன்னிப்புக் கேட்டுள்ளது. கவர்னர் நாலட்ஜ் இல்லாமல் தூர்தர்ஷன் இப்படிச் செய்யுமா? எல்லாம் செட்-அப்தான். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது "திராவிட நல் திருநாடும்' வரியைத் தவிர்த்த போது, கவர்னர் புன்முறுவலுடன் இருப்பார். வீடியோ வைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். இதைத் தொடர்ந்தே இந்த மாற்றல் முடிவிற்கு டெல்லி வந்திருக்கிறது என்கிறார்கள். நிலைமை யை அறிந்த ரவி, தன்னை பஞ்சாப் கவர்னராக ஆக்கும்படி கேட்கிறாராம். காரணம், டெல்லியில் செட்டிலாகும் மனநிலையோடு அங்கே அவர் பங்களா கட்டி வருகிறார். அதேபோல், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகச் செல்லவும் அவர் விரும்புகிறாராம். ரவிக்குப் பதில் முன்னாள் மத்திய அமைச்சரான வி.கே.சிங்கை, தமிழக கவர்னராக அமர்த்தும் முடிவிலும் டெல்லி இருக்கிறதாம்.''”
"தமிழக பா.ஜ.க.வினர் பற்றி ஹெச்.ராஜா, தங்கள் தேசியத் தலைமைக்கு புகார் அனுப்பி யிருக்கிறாரே?''””
"லண்டன் சென்றிருக்கும் தமிழக பா.ஜ.க. நிர்வாகி நவம்பரில் திரும்ப இருக்கிறார். அதுவரை கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட சர்ச்சை நாயகரான ஹெச்.ராஜா, நவம்பருக்குப் பின் டம்மியாகிவிடுவார் என்பதால் அவரைக் கட்சி நிர்வாகிகள் தொடங்கி, யாரும் மதிப்பதில்லையாம். உறுப்பினர் சேர்ப்பு, கட்சிக் கூட்டங்களை நடத்துதல் என்று இவர் யாரிடம் தீவிரமாகப் பேசினாலும் அவர்கள் கொட் டாவி விடுகிறார்களாம். இதனால் அப்செட்டான ராஜா, இதுகுறித்து டெல்லிக்கு ஒரு ஆதங்க அறிக்கையை அனுப்பிவைத்திருக்கிறாராம். பா.ஜ.க.வின் தேசியத் தலைமையோ, அடுத்து தமிழக பா.ஜ.க. தலைவராக யாரைக் கொண்டுவந்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை அமைப்பார்கள்? என்கிற யோசனையில் இருக்கிறதாம். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மகாராஷ்டிர தேர்தலில் பா.ஜ.க. தோற்றுவிட்டால், அங்கு துணை முதல்வராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரரான தேவேந்திர பட்நாவிஸை பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக நியமிக்கும் ஆலோசனையிலும் அக்கட்சி இருக்கிறதாம். அப்படி தேசியத் தலைமை மாறும்போது, தமிழகத் தலைவரையும் மாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்களாம்.''”
"கருவூலத்துறையில் சலசலப்பு தெரியுதே?''”
"தமிழக அரசின் நிர்வாகத்தில் மிக முக்கியத்துறைகளாகக் கருதப்படுவதில், கருவூலத்துறையும் ஒன்று. நிதித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் இந்தத் துறை அடக்கம். இதில் பணிபுரியும் அலுவலர்கள் காலநேரம் பார்க்காமல் உழைத்து வருபவர்கள். இந்த நிலையில், இத்துறையில் கணக்கு அலுவலராக 32 ஆண்டுகாலம் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். தனது பணிக் காலத்தில் எந்த ஒரு சின்ன கெட்டபெயரும் எடுக்காதவர் இவர். பொதுவாக, இத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும் நாளில், அலுவலகத்தில் ஒரு சின்ன பிரிவு உபச்சார விழாவை ஏற்பாடு செய்து, அதில் துறையின் ஆணையராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கலந்துகொண்டு, பாராட் டுரை வழங்கி கௌரவப்படுத்தி அனுப்பி வைப்பார். அந்த வகையில், உமாசங்கர் ஓய்வு பெறுவது குறித்து, துறையின் ஆணையர் நாகராஜன் ஐ.ஏ.எஸ். சிடம் ஏனைய அதிகாரிகள் தெரிவித்து, பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதி கேட்டபோது, விழா வெல்லாம் வேண்டாம். என்று மறுத்த நாக ராஜன், உமாசங்கரை அழைத்து அலுவலக வராண்டாவில் நிற்கவைத்து, ஒரு பொன்னாடையைப் போர்த்தி அனுப்பி வைத்துவிட்டாராம். இது உமாசங்கரை அவமானப்படுத்தும் செயல் என, ஒட்டுமொத்தத் துறை அதிகாரிகளும் குமுறுகிறார்களாம்.''”
"கோவை காங்கிரஸில் அதிரடிக் காட்சிகள் அரங்கேறியிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் பதவி யிலிருந்து மயூரா ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என கோவை மாநகர மாவட்ட காங்கிரசில் அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முதன்மை நிர்வாகிகள் உட்பட பெருந்திரளாகக் கூடி இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது குறித்துக் கேட்டபோது, தனது உதவியாளரான கருப்பசாமிக்கு மாவட்டத் தலைவர் பொறுப்பைக் கொடுத்து, கோவை மாநகர் காங்கிரசையே அவரது கட்டுப்பாட்டிற்கு மயூரா கொண்டுவந்து விட்டார். அதோடு, கட்சிக்கு விசுவாசமான பலரைப் புறக்கணித்தும் ஒதுக்கியும் வருவ தோடு, கட்சி மீது ஈடுபாடே இல்லாத நபர் களை கட்சிப் பதவிகளில் அவர் நியமித்திருக் கிறார். அதனால் தொடர்ந்து அதிகார துஷ்பிர யோகத்தில் ஈடுபட்டுவரும் மயூராவை பதவியிலிருந்து நீக்கியே ஆகவேண்டும் என்றுதான், இப்படி எல்லோருமாகக் கூடித் தீர்மானம் போட்டிருக்கிறோம் என்கிறார்கள்.''
"வேலுமணியோட சத்ரு சம்கார யாகத்துக்கு உதவப்போய் கடம்பூர்ராஜு இக்கட்டுல சிக்கியிருக்காரு தலைவரே..''”
"அதென்ன சமாச்சாரம்''…”
"பா.ஜ.க. மேல்மட்டம் அ.தி.மு.க. உறவை விரும்புது. பா.ஜ.க. துணையோட எடப்பாடி யின் பொதுச்செயலாளர் பதவியைக் காலிபண்ணிட்டு, நாமே பொதுச்செயலாள ராயிட்டா கட்சியைக் கைப்பற்றிரலாம்னு, கடந்த வாரம் மாஜி வேலுமணி, கடம்பூர்ராஜு கூடப் போயி திருச்செந்தூர் ஆலயத்தில எதிரியை வீழ்த்துகிற சத்ரு சம்ஹார யாகத்தைப் பண்ணிட்டு வந்திருக்கார். இந்த விஷயம் காதுக்குப் போய், வேலுமணிக்கு கடம்பூராரும் உதவியாயிருந்ததை நினைச்சு கொதிச்சுப் போயிட்டாராம் எடப்பாடி. தளவாய் போலவே கடம்பூராரோட மா.செ. மற்றும் அமைப்புச் செயலாளர் பதவிகளைக் காலிபண்ணத் திட்டம்போட்டிருக்கார். இது தெரிஞ்சு கடம்பூராருக்கு உள்ளுக்குள் உதறலாயிருச்சாம். அப்படியெதுவும் நடந் துடக்கூடாதுனு கடந்த வெள்ளிக்கிழமை தன்னோட வீட்ல, விசேஷ பூஜை நடத்தியிருக்காராம். விஷயம் வெளிய தெரியாமலிருக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்க முள்ள திருவண்ணாமலை பெருமாள் கோயில் பட்டரை வரவைச்சு தெய்வ அனுக்கிரஹத்தைக் கேட்டிருக்கார் கடம்பூர் ராஜு.''””
"நானும் என் காதுக்கு வந்த காங்கிரஸ் பற்றிய ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில் சத்தியமூர்த்திபவனில் காங் கிரஸ் நிர்வாகிகளிடம் மிகுந்த கவலை யோடு பேசிய, அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இங்கே நாம் ரகசியமாக விவாதிக்கும் விசயங்கள் கூட புலனாய்வு பத்திரிகைகளுக்குச் சென்று விடுகிறது. உளவுத்துறை நண்பர்களிடம், இது பற்றிக் கேட்டபோது, , எங்கள் தரப்பிலிருந்து எதுவும் லீக் ஆகவில்லை. உங்கள் கட்சியிலிருந்துதான் லீக் ஆகிறது என்று சொல்கிறார்கள். நம்மை உளவு பார்க்கும் அந்த கருப்பு ஆடுகள் யாருன்னு தெரியவில்லையே என்று அதிகமாகப் புலம்பினாராம்.''