"ஹலோ தலைவரே, தேர்தல் பத்திரங்கள் மூலமும் பா.ஜ.க.வின் ஊழல்கள் அம்பலமாகி வருகிறதே?''
"தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ,க.வுக்கு அதிக நிதி கொடுத்திருப்பவை மருந்து நிறுவனங்கள்தானாம். குறிப்பாக, ஒன்றிய சுகாதார அமைச்சராக இருந்த ஜே.பி. நட்டாவும், தமிழகத்தில் அப்போது அ.தி.முக. ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரும் கைகோத்துக்கொண்டு, கொரோனா நோயாளிகளிடம் 'ரெம்டெசிவிர்' மருந்தை அதிக அளவுக்கு விநியோகித்தார்களாம். இந்த மருந்தே பல உயிரிழப்புகளுக்குக் காரண மானது என்ற பேச்சும் அப்போதே பரவலாக எழுந்தது. இப்படி மருந்து நிறுவனங்களிடம் நட்பு பாராட் டிய வகையில், பா.ஜ.க.வுக்கு அவர்கள் தரப்பில் இருந்து கணிசமான நிதி, தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்திருக் கிறது. இதேபோல் பா.ஜ.க.வுக்கு வந்த ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தின் முதுகிற்குப் பின்னாலும் ஓர் ஊழல் ஒளிந்திருக்கிறது. அவை எல்லாமும் விரைவில் அம்பலமாகும் என்று டெல்லித் தரப்பில் இருந்தே பகீரூட்டும் தகவல்கள் வருகின்றன.''
"தமிழகத்தின் சில தொகுதிகளில் கடைசி நேரத் தேர்தல் களம் வித்தியாசமாக இருப்பதாகச் சொல்கிறார்களே?''
"உண்மைதாங்க தலைவரே, பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. எளிதாக கரையேறும் சூழல் இருந்தாலும் ஒரு சில தொகுதிகளில் அது கடும் போட்டியைச் சந்திக்கும் என்கிறார்கள். எடுத்துக் காட்டாக, தேனியில் பா.ஜ.க. கூட்டணியில் களமிறங்கிய அ.ம.மு.க. தினகரன் குடும்பத்தோடு அங்கே டேரா போட்டு, தேர்தல் வேலை பார்த்து வருகிறார். பணப் பட்டுவாடா நிகழ்த்துவது சிக்கலாக இருப்பதால், ஆர்.கே.நகர் பாணியில், அவர் தரப்பினர் வாக்காளர்களுக்கு 50 ரூபாய் நோட்டுகளை விநியோகித்து வருகிறார்கள். அதைத் தேர்தலுக்குப் பிறகு கொடுத்தால், தலா ரூபாய் 4 ஆயிரம் தருவதாக அவர்கள் சொல்லிவருகிறார்களாம். ஆனால்...''”
"ஆனால்...?''”
"அங்கே பல பகுதியிலும் இருக்கும் வாக்காளர்களோ, ஆர்.கே. நகரில் இப்படி 20 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்களுக்குப் பட்டை நாமம் போட்ட உங்கள் கதையெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறார்களாம். எனினும் கடைசிக்கட்டத்தில் பெரிய அளவில் கரன்சிப் பாசனத்தைப் பாய்ச்சி வெற்றி பெற்றுவிடலாம் என்று தினகரன் நம்பிக்கை யோடு இருக்கிறாராம். இதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சௌமியா அன்புமணி போட்டியிடும் தருமபுரியிலும் நிலவரம் டஃப்பாக இருக்கிறது என்கிறார்கள். அ.தி.மு.க. தரப்பு ஈரோட்டிலும், விருதுநகரிலும் தீவிரமாக வேலை பார்ப்பதால், அங்கும் நிலவரம் கடுமையாக இருக்கிறதாம். வேலூரில் பா.ஜ.க. தரப்பில் களமிறங்கிய ஏ.சி.எஸ். சற்று டஃப் காட்டிய போதிலும், அங்கே தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சுதாரித்துக் கொண்டு அவரை ஓவர்டேக் செய்கின்றனவாம்.''”
"இந்தத் தேர்தலில் தன் கட்சியினர் யாரை ஆதரிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய் சூசகமாக தெரிவித்திருப்பதாகச் சொல்கிறார்களே?''”
"தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், இந்தத் தேர்தலில் தான் யாரை யும் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். எனினும் யாருக்கு வாக்களிப்பது என்று தன் கட்சியினருக்கு அவர் சூசகமாகத் தெரிவித்திருக்கிறாராம். அதாவது "கோட்' என்ற படத்தில் நடித்துவரும் விஜய், அந்தப் படத்துக்கான ‘"விசில் போடு'’ என்ற பாடலை 14ஆம் தேதி மாலை வெளியிட்டிருக்கிறார். இதற்கான ப்ரோமோ முதல்நாள் வெளியிடப்பட்டது. அதில், மைக் சிம்பலை அவர் காட்டியிருக்கிறார். இந்தத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியினருக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே அவரை ஆதரிப்பதுபோல் அந்த ப்ரமோ இருப்பதாக அவரது ரசிகர்களும் தொண்டர்களும் சொல்லி வருகிறார்கள்.''”
"நாம் பேசிய பிறகு தி.மு.க. பேச்சாளர்கள் பலருக்கும் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, இந்தத் தேர்தலில் தங்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ளாத ஆதங்கம் தி.மு.க. பேச்சாளர்களுக்கு இருப்பது குறித்து, கடந்தமுறை நாம் பேசிக்கொண்டோம். இதையறிந்த தி.மு.க. அமைச்சர்களும் மா.செ.க் களும், அவர்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக் கிறார்கள். குறிப்பாக, தி.மு.க.வின் தலைமைக்கழகப் பேச்சாளரான கடலூர் கு.வாஞ்சிநாதனை, அமைச் சர் பொன்முடி, விழுப்புரம் நாடாளுமன்ற வேட் பாளரான சிறுத்தைகள் ரவிக்குமாருக்குப் பிரச் சாரம் பண்ணச் சொல்லியிருக்கிறார். இதை ஏற்றுக் கொண்ட வாஞ்சிநாதன், தினமும் காலை மாலை இருவேளைகளிலும் ரவிக்குமாரின் பிரச்சார வாகனத்தில் இருந்தபடி, தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு, வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறாராம். அமைச்சர் பொன்முடியைப் போலவே பலரும், தி.மு.க. பேச்சாளர்களை ஆர்வமாகக் களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.''”
"முதல்வருடன் ஒரே மேடையில் கோவை யில் பிரச்சாரம் செய்த ராகுல், தங்கள் கட்சிப் பிரமுகர் ஒருவரை மேடையில் ஏற்றவேண்டாம் என்று சொல்லியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அந்த பிரச்சார மேடையில் ராகுலுடன் யார் யார் இடம்பெறுகிறார்கள் என்று ஒரு பட்டியலை காங்கிரஸ் நிர்வாகிகள் எடுத்து வைத்திருந்தனர். இதை வாங்கிப் பார்த்த ராகுல், அந்தப் பட்டியலில் இருந்த காங்கிரஸின் முன்னாள் செயல் தலைவரான மயூரா ஜெயக்குமா ரின் பெயரை அடித்துவிட்டு இவரை மேடையேற்ற வேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். எதனால் இப்படி என நாம் விசாரித்த போது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் விவகாரத்தில், இந்த மயூரா பெயரும் அடிபட்டதாம். இதை அறிந்ததால்தான் கவனமாக அவரை மேடையில் ராகுல் தவிர்க்கச் சொல்லிவிட்டார் என்கிறார்கள். இந்தப் பிரச் சினையை முன்னதாகவே உணர்ந்த மயூராவும், ராகுல் நிகழ்ச்சி நடந்த ஏரியாவில் தலையைக் காட்டவில்லையாம்.''”
"தென்சென்னை அ.தி.மு.க. மா.செ. விருகை ரவிமீது ஏகக்கடுப்பில் இருக்கிறாராமே எடப்பாடி?''
"தென்சென்னையில் அ.தி.மு.க. சார்பில், மாஜி மந்திரி ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்த்தன் களமிறங்கியிருக்கிறார். இவருக்காக தேர்தல் வேலை பார்த்துவரும் மா.செ.வான விருகை ரவியிடம், இந்தத் தொகுதியில் உள்ள 520 வாக்குப்பதிவு மையங்களுக்கும் தலா 5 ஆயிரம் வீதம், 9 தடவை ஜெயவர்த்தன் பணம் கொடுத் திருக்கிறார். அதாவது, மொத்தம் 2 கோடியே 34 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறாராம் ஜெயவர்த் தன். ஆனால் விருகை ரவியோ, அதில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாயை அமுக்கிக்கொண்டு, மிச்சத்தை மட்டும் கட்சியினருக்குப் பகிர்ந்து கொடுத்திருக் கிறாராம். இதேபோல், பகுதிச் செயலாளர்களும், வட்டச் செயலாளர்களும் தங்கள் பங்கிற்கு பணத் தை சுருட்டியிருக்கிறார்களாம். இது தொடர்பான பஞ்சாயத்து எடப்பாடியிடம் போக, கடுப்பான அவர், நம்ம வேட்பாளரை ஜெயிக்கவைக்க வேண்டிய மா.செ.க்களே, இப்படித் தில்லுமுல்லு செய்தால் என்ன அர்த்தம்?' என்று ஏகத்துக்கும் அர்ச்சனை நடத்தினாராம்.''”
"பா.ஜ.க.விலும் இப்படிப்பட்ட பஞ்சாயத்துகள் நடந்துக்கிட்டிருக்கே?''”
"தென்சென்னையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தமிழிசைக்காக கடைசிக்கட்ட தேர்தல் செலவுகளைச் செய்வதற்காக, மாவட்ட பா.ஜ.க. தலைவர்களான காளிதாஸ், சாய் சத்யன் ஆகியோரிடம் தலா ரூபாய் 50 லட்சம் வீதம், பா.ஜ.க. அக்கவுண்டில் இருந்து பணத்தைக் கொடுத் திருக்கிறார் அக்கட்சியின் அமைப்புச் செயலாள ரான கேசவ விநாயகம். ஆனால், இதெல்லாம் எதுக்குக் காணப்போகிறது? என அந்த மாவட்டத் தலைவர்கள் அடம்பிடித்த நிலையில், வேட் பாளரான தமிழிசை சௌந்திரராஜனும் தனது பங்காக, இரு மாவட்ட தலைவர் களுக்கும் தலா 1 என்ற கணக்கில் கன மான பெரிய ஸ்வீட்ஸ் பாக்ஸ்களைக் கொடுத்தாராம். அப்படியிருந்தும் தொகுதியிலுள்ள அடிமட்டத் தொண்டர்களுக்கும் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் இந்தப் பணத்தில் பாதியளவுக்குக்கூட பணம் போய்ச் சேரவில்லையாம். அதனால் கமலாலயத்தில் இது தொடர் பான பஞ்சாயத்துக்கள் அணி வகுத்து நிற்கிறதாம்.''’
"ஆசிரியர்கள், அரசு ஊழியர் களுக்கான தபால் வாக்குகளில் ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்குதாமே''
“"ஆமாங்க தலைவரே, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் கள், அரசு ஊழியர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நடத்தப்பட்டதோடு, அந்த பயிற்சி வகுப்பின் போதே அவர்களது தபால் வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 20, 30 அறை களில் வாக்கு எந்திரத்தைக் கையாளுவதற் கான பயிற்சி தரப்பட்ட நிலையில், ஐந்தே வாக்குப் பதிவு எந்திரங்கள் மட்டும் கொண்டுவரப்பட்டதால், பலருக்கும் பயிற்சி திருப்தியாக இல்லையென்ற அதிருப்தி எழுந்திருக் கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பலருக்கும் வாக்குச் சீட்டுகள் இல்லை. அதாவது ஒரு நாடாளு மன்றத் தொகுதியில் சுமார் 14,000 பேர் பயிற்சி பெற்றால் அதில் மூன்றிலிரு பங்கினர் தபால் வாக்கு கள் பதிவுசெய்ய முடியாதபடி நிலைமை இருக்கவே, அவர்கள் கொதிப்படைந்து சாலைமறியலில் ஈடு பட்டிருக்கின்றனர். பின் மாநில தேர்தல் ஆணையத் துக்குத் தகவல் தெரிந்து அனைவருக்கும் வாக்களிக் கும் வாய்ப்பு பெற்றுத்தரப்படுமென்ற உறுதி மொழிக்குப் பின்பே போராடியவர்கள் கலைந்து சென்றிருக்கின்றனர். அரசு ஊழியர்களில் பெரும் பான்மை வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு விழு மென்பதால் திட்டமிட்டே இந்த குளறுபடி நடந் திருக்கிறதா என பலரும் சந்தேகமடைந்திருக்கின்றனர்.''€
"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கிய மான தகவலைப் பகிர்ந்துக்கறேன். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின்படி, திருச்சி ஸ்ரீரங்கம் அருகிலுள்ள எட்டரை அ.தி.மு.க. ஊராட்சித் தலைவர் திவ்யா அன்பரசன் வீட்டை முற்றுகையிட்ட தேர்தல் பறக்கும் படையினர், அங்கே ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளும் அங்கே சென்று சோதனையிட்டதோடு, ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யாவிடம், அது வாக்காளர்களுக்கு விநியோ கிப்பதற்காகப் பதுக்கப்பட்ட பணமா என்றெல்லாம் தீவிர மாக விசாரணை நடத்தினர். இந்த திவ்யா, அ.தி.மு.க. வடக்கு மா.செ.வும் முன் னாள் அமைச்சரு மான பரஞ்சோ தியின் தம்பி மனைவியாம்.''’
______
இறுதிச் சுற்று!
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும் சமூக செயற்பாட்டாளருமான அரிபரந் தாமனை என்.ஐ.ஏ. மூலம் கைது செய்ய முடிவெடுத்துள்ளது பா.ஜ.க. தலைமை.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், "தமிழ்நாடு பொது மேடை 2024' என்ற அமைப்பின் சார்பில் "நீதித்துறையை நிலைகுலையச் செய்யும் பா.ஜ.க. அரசு' என்ற கட்டுரை நூலை வெளியிட்டுள்ளார். மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் நீதித்துறையின் சுதந்திரத்தில் குறுக்கிட்டு வருகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் இந்நூலில் விளக்கியுள்ளார் அரி பரந்தாமன். இந்நிலையில், பா.ஜ.க. மாநில சட்டப்பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் குமரகுரு, சென்னை மாநகர காவல் ஆணையரிடமும், தேசிய புலனாய்வு முகமையிடமும், பிரதமர் மோடியை அவதூறாகவும், இறையாண்மைக்கு எதிராகவும் அரி பரந்தாமன் புத்தகத்தில் எழுதியுள்ளதாகவும், இவரை உடனே கைது செய்யவேண்டுமென்றும் புகார் கொடுத்துள்ளார்.
"நீதிபதி அரிபரந்தாமனை கைதுசெய்யத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயலை கடுமையாக கண்டிக்கிறோம். கருத்துரிமையையும், நீதித்துறை யின் சுதந்திரத்தையும் காக்க வேண்டும். சமூக செயற்பாட்டாளர்களுக்கும், ஜனநாயக இயக்கங்களுக்கும் விடப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை, தமிழகத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங் கிணைந்து போராடி வெல்வோம்'' என்றார் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்.
-ஜீவாதங்கவேல்