தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிபெற பிரபலம் மட்டும் போதாது, மக்களை ஈர்க்கும் சித்தாந்தமும் கோட்பாடுகளும் வேண்டும். அது தமிழ் மொழியின் உணர்வையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். மறைந்த எம்.ஜி.ஆரின் வெற்றியும் அப்படித்தான் அமைந்தது.
அதே எம்.ஜி.ஆர் பாணியில், கொள்கை, மொழி ஆகியவற்றை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு அரசியலில் பழம்தின்று கொட்டைபோட்ட பழைய பிற கட்சி அரசியல் வாதிகளைப் புறந்தள்ளிவிட்டு, ”மிஸ்டர் கிளீன்” இமேஜுடன் இருக்கும் அதிகாரிகளையும், மக்க ளோடு மக்களாக ஊழலுக்கு எதிராகச் செயல்படும் சமூக செயற்பாட்டா ளர்களையும் உள்ளடக்கிய கட்சியாக மக்கள்முன் நிற்கத் தயாராகிறார் விஜய் என்கிறார் த.வெ.க. கட்சியின் முக்கிய நபர் ஒருவர்.
விஜய்யின் அரசியல் திட்டம் குறித்து அவரும் இன்னும் சில நபர்களும் பேசும்போது, “"தமிழ் நாட்டு அரசியலில் 2021வரை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு பெரும் கட்சி களே ஆதிக்கம் செலுத்திவந்தன. கூட்டணிகளுடன் அக்கட்சிகள் 70 முதல் 80 சதவிகித வாக்குகளைப் பெற்றன. விஜய் குறிவைப்பது 2026 தேர்தலில் 18% லிருந்து 25% வாக்குகள். இது விஜய் கட்சிக்கு செமிபைனல்தான். விஜய்யின் முதல்வர் இலக்கு 2031 சட்டமன்றத் தேர்தல்தான்.
ஜெயலலிதா, கலைஞர் இறப்பிற்குப் பிறகு ஒரு வெற்றிடம் இருந்தது. அது மு.க. ஸ்டாலினால் நிரப்பப்பட்டுவிட்டது. அதேசமயம் அ.தி.மு.க.வில் ஒற்றுமையின்மையால் அங்கு வெற்றிடம் இருப்பது தெரிகிறது. களத்தில் தீவிரமாக இறங்கினால் கட்டா யம் இலக்கை அடைந்தே தீருவோம். அதற்கு ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சிகள் செய்யும் வேலைகளை திரும்பத் திரும்ப செய்யவேண்டிய தில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய்.
த.வெ.க. என்று கட்சிப் பெயரை அறிவித்து விட்டு மாநாட்டு வேலையைத் தொடங்கிய உடனேயே அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரும் தாவ ரெடியாகினர். முதல் ஆளாக வந்த செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யைப் பார்த்து பேசிய விதமே அவருக்குப் பிடிக்கவில்லை. "உங்க மாநாட்டுக்கு 1 லட்சம் ஆட்களை அழைத்து வருகிறேன்' என்றார். அவரின் முகத்தில் அடித்தாற் போல், "நான் கேட்கவே இல்லையே. ஆட்களைத் திரட்டுகிற வேலையெல்லாம் இங்கு வேண்டாம்... நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட முக்கிய புள்ளி ஒருவர், விஜய்யை சந்திக்க விரும்ப, அவரை கொஞ்சம் பொறுக்கச் சொல்லி அனுப்பிவைத்தார். நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத், மருது அழகுராஜ் இன்னும் பலர் விஜய்யிடம் சந்திக்க தேதி கேட்க, அதற்கு புஸ்ஸிஆனந்த், "நான் கட்சியின் மேனேஜர்தான், இந்த மாதிரியான முடிவெல்லாம் தலைவரின் சீக்ரட் டீம்’தான் முடிவெடுக்கும்' என்றிருக்கிறார்.
அந்த சீக்ரெட் டீமில் 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 4 ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தற்போது பணியிலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் உள்ளனர். இவர்களின் அனுமதியில்லாமல் கட்சிக்குள் யாரும் வரமுடியாது.
விஜய் இவர்களிடம், "கட்சியின் கட்ட மைப்பை தி.மு.க.வில் உள்ளது போன்று அமைக்கும் படியும், அதேசமயம் அவர்கள் ஸ்டைலில் வேட்டி, சட்டை அணிவதோ, மாலை போடுவதோ கூடாது. நம் கட்சியில் அனைவருமே பேண்ட் சட்டைதான் போடவேண்டும். பிற அரசியல் கட்சிகளிலிருந்து யாரும் வேண்டாம். புதிதாகப் படித்த இளைஞர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஐ.ஐ.டி பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் இவர்களை கட்சிக்குள் கொண்டுவர முக்கியத் துவம் கொடுங்கள். திரைத்துறையினர், எழுத் தாளர்கள், உண்மையான சமூக செயற் பாட்டாளர்களை ஒருங்கிணைத்து கட்சியின் முகத்தை மிஸ்டர் க்ளீன் இமேஜுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்' என இவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
கிரானைட் கொள்ளையைத் தடுத்து நிறுத்தியவரும், மக்களிடம் செல்வாக்கு மிக்கவரு மான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை கட்சிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்து, அவரோடு மேடையேறத் தயாராகிவிட்டார். "ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்து ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் திருச்சியில் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அன்று விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி மேடை யேறுகிறார் சகாயம். இது முதல் டுவிஸ்ட்தான்.
அக்டோபர் மாதம் மதுரையில் த.வெ.க.வின் மிகப்பிரம்மாண்டமான 2-வது மாநாடு நடக்கவுள்ளது. மதுரையிலிருந்துதான் "மக்கள் என் பக்கம்'’என்ற தலைப்பில் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக தேர்தல் பிரச்சாரப் பயணம் தொடங்குகிறார். 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள். 488 பேரூராட்சிகள் என பெரிய சுற்றுப்பயண லிஸ்ட்டே ரெடியாகிவிட்டது
பெரியார் வாழ்ந்த வீடு, காமராசர் வாழ்ந்த வீடு, முத்துராமலிங்க தேவர், கக்கன், இராஜாஜி, அண்ணா, ஜீவானந்தம், பாரதியார் வீடு, நேசமணி, ம.பொ.சி வீடு, அஞ்சலையம்மாள், அழகு முத்துக்கோன், இரட்டைமலை சீனிவாசன், மருது சகோதரர்கள் வாரிசுகள், வ.உ.சி., திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, ஒண்டிவீரன், காயிதே மில்லத், வேலுநாச்சியார், வாஞ்சிநாதன் ஆகியோர் வாழ்ந்த வீடுகள் அல்லது அவர்களது வாரிசுகளை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார். இது மக்களிடத்திலும் அரசியல் வட்டாரத்திலும் ஒவ்வொரு நாளும் பேசுபொருளாகும். 2026 தேர்தலில் விஜய்யின் தாக்கம் மிக அழுத்தமாக இருக்கும்''’என்றார் உறுதியோடு.
பொறுத்திருந்து நாமும் பார்க்கலாம்!