"ஹலோ தலைவரே, நடிகர் விஜய் தரப்பு அ.தி.மு.க. மீது கடும் எரிச்சலில் இருக்கிறது.''”

"ஆமாம்பா, ஒரு போஸ்டரை ஒட்டி, நடிகர் விஜய் பற்றிய சர்ச்சையை எழுப்பிவிட்டார்களே!''”

rr

"உண்மைதாங்க தலைவரே, இன்னும் அரசியல் கட்சியை தொடங்காத நடிகர் விஜய், தமிழக அரசியல் கட்சிப் பிரமுகர்களான பா.ஜ.க., அண்ணாமலை, ஓ.பி.எஸ்., டாக்டர் அன்புமணி, ஜி.கே.வாசன், டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்றத் தேர்த லில் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவார்னு ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது போன்ற மாடலில், மதுரைப் பகுதி முழுக்க ஒரு போஸ்டரை சிலர் ஒட்டியிருந்தனர். இதைப் பார்த்துப் பலரும் சிரிக்க, இன்னும் சிலர் ’என்னய்யா இது? இப்படியெல் லாமா லந்து பண்றது?’என்ற ரீதியில் தலையில் அடித்துக்கொண்டார்கள். இதனால் பரபரப்பு பற்றிக்கொண்டது. இதையறிந்த விஜய் ரசிகர்மன்றத் தலைவர் புஸ்சி ஆனந்த், ’"எங்கள் தரப்பு இந்த போஸ்டரை ஒட்டவில்லை. இப்படி ஒரு பொய்ச் செய்தியைப் பரப்புவது அறமற்ற செயல்'னு அவசர கதியில் மறுப்பு தெரிவித் தார். இந்த போஸ்டரால் டென்ச னான நடிகர் விஜய், அதன் பின்னணியைப் பற்றி விசாரிக்கச் சொன்னார். அப்போதுதான், இது அ.தி.மு.க. ஐ.டி. விங்க் செய்த விஷமம்னு அவருக்குத் தெரியவந்ததாம்.''”

Advertisment

"அ.தி.மு.க. தரப்பு, இப்படியொரு போஸ்டர் விளையாட்டை எதற்காக விளையாடுச்சாம்?''”

’"அதாவது, தங்களுக்கு சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது என்ற நம்பிக்கை அ.தி.மு.க.வுக்கு எப்போதுமே உண்டு. அதே சமயம், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கடந்த 2019லிதேர்தலில் கூட்டணி வைத்ததால், அந்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்குத் திசைமாறிய தாகவும் அவர்கள் கருதுகிறார்கள். தற்போது, பா.ஜ.க.வுடனான தங்களின் உறவை முறித்துக் கொண்டதால், தங்களை விட்டு விலகிச்சென்ற சிறுபான்மைச் சமூகத்தினர் மீண்டும் தங்களை ஆதரிக்க முன்வருவார்களா? என்பதைத் தெரிந்து கொள்ள எடப்பாடி திட்டமிட்டாராம். இதற்காக சிறுபான்மை மக்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டி ருக்கிறது. அதன் முடிவின்படி, அவர்கள் அ.தி.மு.க. வை ஆதரிக்க முன்வரவில்லை என்பது தெரிய வந்தோடு, அவர்களில் ஒரு பகுதியினர் ’நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவரை ஆதரிப் போம்’ என்று சொல்லியிருந்தார் களாம். இதனால், நடிகர் விஜய்யை பா.ஜ.க. ஆதரவாள ராகக் காட்டி, மத அரசியலுக்குள் அவரை சிக்கவைத்தால், சிறு பான்மை சமூக மக்கள், விஜய்யை வெறுப்பார்கள் என்று நினைக் கிறாராம் எடப்பாடி. இந்த எண்ணத்தில்தான், தங்கள் ஐ.டி. விங் மூலம் இப்படியொரு பரபரப்பை மதுரையில் அவர் பற்ற வைத்திருக் கிறார் என்று நடிகர் விஜய்யிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் அ.தி.மு.க. மீது கடுமையாக எரிச்ச லடைந்த விஜய், அவர்களின் சகுனித் தனத்தை அம்பலப்படுத்தலாமா? இல்லை அப்படியே கடந்துசென்று விடலாமா? என்று இப்போது தீவிர மாக ஆலோசித்துக்கொண்டிருக் கிறாராம்.''”

rr

Advertisment

"காவிரி நீருக்காக பா.ஜ.க. நடத்த இருந்த போராட்டம் திடீரென நிறுத்தப்பட்டிருக்கிறதே?''”

"காவிரி நீருக்காக கடைமடை டெல்டா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார் கள். இவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வும் கருப்பு முருகானந்தம் தலைமை யில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்துவந்தன. இந்த நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் அகில இந்திய நிர்வாகிகளான பி.எல்.சந்தோஷ், எங்கள் மாநிலத்துக்கு எதிராக எதற்கு போராடவேண்டும்? காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தருவது என்பது நடக்காத காரியம். எனவே எங்கள் கர்நாடக மக்கள் எரிச்சல் அடையும் வகையில் தமிழக பா.ஜ,.க. போராடவேண்டாம் என்று அண்ணா மலையிடம் சொல்ல, அண்ணா மலையும் கர்நாடகத்தின் மீதான விசுவாசத்தால் ’போராட்டத்தை நிறுத்துங்கப்பா’ என்று பிரேக் பிடித்து விட்டாராம்.''”

"தி.மு.க. எம்.பி.யான ஜெகத் ரட்சகனைக் குறிவைத்து வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையும் அவ ருக்கு சம்மன் அனுப்ப ரெடியாகுதே?''’

rr

"ஆமாங்க தலைவரே, ஜெகத் ரட்சகன் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் ரெய்டு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங் களையும் அவர்களிடமிருந்து அமலாக்கத்துறை வாங்கியிருக்கிறது. தற்போது அதை வைத்து சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா? என்று ஆராய்ந்து வருகிறார்களாம். இதைத் தொடர்ந்து ஜெகத் தரப்புக்கு அமலாக்கத் துறையும் சம்மன் அனுப்பத் தயாராகிவிட்டதாம். இதனால் நெருப்பு வளையத்தில் இருக்கிறார் ஜெகத் என் கிறார்கள் அவரது வழக்கறிஞர்களே. இதற்கிடை யே, சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக கடந்த மாதம் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, நீர்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரை கைது செய்யத் திட்டமிட்டி ருக்கிறதாம் அமலாக்கத்துறை. நீர்வளத்துறையைச் சேர்ந்த திலகம் என்கிற அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டபோது,கோடிக்கணக்கில் மாமூல் வாங்கியவர்கள் பற்றிய தகவல்களும் கிடைத் திருக்கிறதாம். இதையொட்டி சில பெரும்புள்ளி களும் குறி வைக்கப்பட்டிருக்கிறார்களாம்.''”

"அப்படி இருந்தும் மணல் மாஃபியாக்களின் ராஜாங்கம் இப்போதும் தொடர்கிறதே?”

rr

"மணல் அதிபர்களைக் குறிவைத்து அண்மையில் ரெய்டு நடவடிக்கையில் தீவிரம் காட்டியது அமலாக்கத்துறை. இதைத் தொடர்ந்து சம்பந்தபட்ட மணல் அதிபர்களான கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய மூவரும் துபாய்க்குப் பறந்துவிட்டார்கள். அங்கி ருந்தே அவர்கள் தங்கள் குவாரிகளை இயக்கி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் மணல் எடுத்த ஒரு சில இடங்களில் ஆற்றுப் பகுதிகள் சரிசெய் யப்படாமல் இருக்கிறதாம். அவற்றை சரிசெய்யுமாறு நீர்வளத்துறை அதி காரிகளிடம் அமலாக்கத்துறை கோரிக் கை வைத்தும் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்களாம். இதனிடையே ஒரு கனிமவள அதிகாரிக்கு பணமுடை ஏற்பட, அதையும் அந்த மணல் அதிபர்கள் அங்கிருந்தே சரிசெய்தார்களாம். அவர்கள் தலைமறைவாக இருந்தாலும் அவர் களின் பரிபாலனம் நடந்துகொண்டுதான் இருக்கிறதாம்.''

"தமிழகம் முழுக்க இருக்கும் ஊராட்சிகளில் சாதி வன்மம் கோலோச்சுவதாக பகீர் புகார் எழுந்துவருகிறதே?''”

’"தமிழகம் முழுக்க 12,524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தலைவர்களின் எண்ணிக்கையே ஏறத்தாழ 2,200. இவர்களில் பெரும்பான்மையான வர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார் கள். இருந்தும், இவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந் தவர்கள் என்பதால், பல கிராம ஊராட்சிகளில் அவர்களுக்கான அறை ஒதுக்கப்படவே இல்லையாம். அதே சமயம், அறை ஒதுக்கப்பட்ட இடங்களிலும், பட்டியலின சேர்மன்களை சாதி வன்மத்தால் அங்கே உட்கார விடுவதில்லையாம். தலைவர்களுக்கான அறைகளை துணைத்தலைவர் களாக இருக்கும் பிற சாதியினர்தான் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த விவகாரம், நீறுபூத்த நெருப்பு போல பகீ ரூட்டும் வகையில், பல இடங்களி லும் வெடித்துக்கொண்டிருப் பதால், இதில் முதல்வர் ஸ்டா லின் உடனடியாகத் தலையிட்டு சமூகநீதி அடிப்படையிலான தீர்வை ஏற்படுத்தவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருக்கிறது.''”

"தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், அ.தி.மு.க. மா.செ.வுடன் கைகோத் துக்கொண்டு, சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய சேர்மனின் பதவியை காலி பண்ணியிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் 15 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். அவர்களில் 10 பேர் தி.மு.க.வினர். மீதமுள்ள 5 பேரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இதனால், லத்தூர் தெற்கு தி.மு.க. ஒ.செ.வான பாபுவின் மனைவி சுபலட்சுமி, லத்தூர் ஒன்றிய சேர்மனாக இருந்து வருகிறார். இவரைப் பிடிக்காத தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான சுந்தர், அ.தி.மு.க. மா.செ.வான ஆறுமுகத்தின் உதவியோடு, 5 அ.தி.மு.க. கவுன்சிலர் களையும் தன் பக்கம் வளைத்தார். இந்த சூழலில் கடந்த மே மாதமே ஒன்றிய சேர்மன் சுபலட்சுமி மற்றும் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை செங்கல்பட்டு கலெக்டரிடம் கொடுத்திருந்தார் சுந்தரின் ஆதரவாளரான ராமச்சந்திரன். அப்போது கொடுக்கப்பட்ட அந்த கடிதத்தின் அடிப்படையில் இந்த மாதம் 13ஆம் தேதி லத்தூர் ஒன்றியக் குழு கூட்டம் கோட்டாச்சியர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. அதில் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப் பட்டது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உட்பட 12 பேர், இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் பதவிக்கு வேட்டு வைத்திருக்கிறார்கள். புதிய தலைவருக்கான தேர்வு அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.வின் இந்த ’உள்ளடி வேலை’ பற்றிய பஞ்சாயத்து, அறிவாலயம்வரை சென்றிருக்கிறது.''”

rr

"தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறிவரும் என்கவுன்ட்டர்கள், கிரிமினல்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருக்கிறதே?''”

’"சமீபகாலமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் அரங்கேறிய என்கவுன்டர் நடவடிக்கைகளைப் பார்த்து, தமிழகத்தில் இருக்கும் ஏ ப்ளஸ்’ ரவுடிகள், ரொம்பவே மிரண்டுபோய் உயிர் பயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார் கள். குறிப்பாக கடந்த வாரம் சோழவரம் அருகே முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இரண்டு குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இவர்களைப் பிடித்துவைத்து சுட்டதாக, குடும்பத்தினர் கண்ணீர் புகார்களை எழுப்பி வருகிறார்கள். இதேபோல், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த தணிகா என்கிற தணிகாச்சலத்தையும் காவல்துறை சுற்றி வளைத்தபோது, சிலர் அந்தக் காட்சியை படம் பிடித்ததால், என்கவுன்ட்டர் என்பது வெறும் துப்பாக்கித் தாக்குதலாக மாறி, மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார் அந்த தணிகா. இதேபோல் போலீஸிடம் பிடிபட்ட ராக்கெட் ராஜாவுக்கு நெருக்கமான செந்தில் என்பவரும் என்கவுன்டர் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், நாகர்கோயில் போலீஸாரால் கடைசி நேரத்தில் தப்ப வைக்கப்பட்டிருக்கிறார். அதிகரித்துவரும் என்கவுன்டர் விவகாரம், இன்னொருபுறம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க.வின் உறவை அ.தி.மு.க. முறித்துக்கொண்டிருக்கும் நிலையில், டெல்லி மீண்டும் அ.தி.மு.க.வுக்கு கூட்டணி நிர்ப்பந்தம் கொடுத்துவருகிற தாம். அப்படி கூட்டணி ஏற்படாத நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தங்களுக்கு ஓரளவு செல்வாக்குள்ள 9 தொகுதிகளில் மட்டும் நிற்பது என்றும், அங்கு மட்டுமாவது எதிர்த்து நிற்காமல் தங்களை அ.தி.மு.க. முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்றும் மோடி மற்றும் அமித்ஷா தரப்பு வலியுறுத்துகிறதாம். இது குறித்து, எடப்பாடி தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.”