"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய்யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அர்ஜுன் ரெட்டியும் போட்டி போட்டுக்கொண்டு தி.மு.க.வை தாக்கிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.

விகடன் குழுமமும், அர்ஜுன் ரெட்டியின் "வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பும் இணைந்து வெளியிட்ட இந்த நூல் வெளியீட்டில் அம்பேத்கர் நூலை விஜய் வெளியிட, அதனை திருமா வளவன் பெற்றுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க.வை தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தி யிருக்கும் விஜய்யுடன், திருமாவளவன் மேடையேறுவதை தி.மு.க. தலைமையும், உடன்பிறப்புகளும் ரசிக்கவில்லை.

இதனை திருமாவிடம் அழுத்த மாகச் சொல்லியிருந்தார் தி.மு.க. சீனியர் அமைச்சர் ஒருவர்.. இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொள்வதை திருமா புறக்கணித்தார். ஆனால், அவரது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அர்ஜுன் ரெட்டி கலந்துகொள்ள அனுமதியும் கொடுத்தார் திருமா.

tt

இதுகுறித்து திருமாவுக்கும் அர்ஜுன் ரெட்டிக்குமிடையே நடந்த விவாதங்களின்போது, ”"நீங்கள் இல்லாத மேடையில் நானும் இருக்க விரும்ப வில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்துவிட லாம் அல்லது நானும் கலந்து கொள்ள வில்லை'’என்று அர்ஜுன் ரெட்டி சொல்ல, ”"அம்பேத்கர் பற்றிய நூலை தயாரித்து அதனை வெளியிடுவதே உங்கள் அமைப்புதான். நீங்கள் இல்லா மல் நிகழ்ச்சியை நடத்துவது ஆரோக்கிய மாக இருக்காது. எனக்காக நிகழ்ச்சியை ரத்து செய்யாதீர்கள். விழாவில் கலந்து கொள்ளுங்கள்''’என்று சொல்லி அனுமதி கொடுத்திருக்கிறார் திருமா.

இப்படிப்பட்ட பின்னணிகளுடன் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அர்ஜுன் ரெட்டி, "மன்னராட்சியை ஒழிப்போம்; பிறப்பால் இனி முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது. கருத்தியல் தலைவராக விஜய் உருவாகியிருக்கிறார். 2026-ல் புதிய முதலமைச்சரை மக்கள் உருவாக்குவார்கள்''‘என்று முதல்வர் ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதியையும் பெயர் குறிப்பிடாமல் தாக்கினார்.

Advertisment

"தி.மு.க.வுக்கு எதிராக அர்ஜுன் ரெட்டியின் பேச்சே இப்படி கடுமையாக இருக்கும்போது, விஜய்யின் பேச்சு இன்னும் சூடாக இருக்குமோ' என தொலைக்காட்சி லைவ்வில் விழாவை கவனித்துக் கொண்டிருந்த அரசியல் கட்சியினரும் உளவுத் துறையினரும் எதிர்பார்த்தனர்.

அதேபோல, மைக் பிடித்த விஜய், தி.மு.க.வுக்கு எதிராக கர்ஜித்ததுடன், "இருநூறு இடங்களை வெல்வோம் என இறுமாப்புடன் எகத்தாளமிடுகின்ற னர். சுயநலத்துக்காக தி.மு.க. அமைத்துள்ள கூட்டணிக் கணக்குகளை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்குவார்கள்'' என்று கடுமையாகத் தாக்கினார்.

ss

Advertisment

இவர்கள் இருவரும் தி.மு.க.வுக்கு எதிராக போட்டி போட்டுக் கொண்டு பேசியவை, தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் நிறைய விவாதங்களை உரு வாக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் சிறுத்தைகள் கட்சி யில் திருமாவளவனுக்கு நெருக்கடி முற்றியிருக் கிறது. இதுகுறித்து சிறுத்தைகள் கட்சியின் முக் கியஸ்தர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "நடந்து கொண்டிருக்கும் அரசியல் குறித்து தலைவர் திருமா பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்; அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியும் வரு கிறார். அதுவே போதுமானது தான். இருந்தாலும், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள், நெருக் கடிகள் இல்லாமல் இல்லை. விஜய்யும் திருமாவும் ஒரே மேடையை பகிர்ந்துகொள்வதை தி.மு.க. விரும்பாதபோது, கூட் டணி தர்மத்தை மதித்து நீங்கள் விழாவை தவிர்த்த நிலையில், அர்ஜுன் ரெட்டியும் தவிர்க்க வேண்டும் என திருமாவிடம் கட்சியின் சீனியர்கள் பலரும் வலியுறுத்தினர். அதற்கு திருமா, "விழாவே ஆதவ் ஏற்பாட்டில் தான் நடக்கிறது. அதை தவிர்க்கச் சொல்வது நாகரிகமாக இருக் காது. அதனால் கலந்துகொள்ள நான்தான் அனுமதி கொடுத்தேன். என்னிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் விழாவுக்கு ஏற்பாடு செய்தார்' என சொல்ல, "அப்படியானால், விழா அம்பேத் கர் நூல் பற்றியது. அம்பேத் கருக்கும் விஜய்க்கும் என்ன சம்மந்தம்? அவரை வைத்து ஏன் வெளியிட வேண்டும்? தி.மு.க. வுக்கு எதிராக தனது அபிலா சைகளை தீர்த்துக்கொள்ள அரசியல் செய்கிறார் அர்ஜுன் ரெட்டி. அதற்கு நமது கட்சியை பலிகடாவாக்குகிறார். இதற்கு நீங்கள் சம்மதிக்கக்கூடாது' எனவும் வாதிட்டனர்.

அப்போது, "விஜய்யை விகடன் குழுமம்தான் தேர்வு செய்திருக்கிறது. அதனை நாம் எப்படி கேள்வி கேட்க முடியும்?' என்று திருமா தெளிவுபடுத்திய தோடு, "விஜய்யை வைத்து அர்ஜுன் ரெட்டி நடத்துகிற ஒரு நிகழ்வுக்காக நிறைய நாம் விவாதிக்க வேண்டுமா? அந்தளவுக்கு நாம் பலகீனமானவர் களா?' என சீனியர்களிடம் கேள்வி எழுப்பினார் திருமா.

அதன்பிறகு அமைதியானதுடன், விழா குறித்த கவனமே எல்லோருக்கும் இருந்தது. நிச்சயம் திமுகவுக்கு எதிராக அர்ஜுன் ரெட்டி பேசுவார்; தி.மு.க.வுக்கும் சிறுத்தைகளுக்குமான உறவை காயப்படுத்துவார் என சீனியர்கள் எதிர்பார்த்தது போலவே, மிகக்காட்டமாக தி.மு.க.வை விமர்சித்தார் அர்ஜுன் ரெட்டி. அதைக்கேட்டு கட்சியினர் அனைவருக்குமே அதிர்ச்சி. இன்னும் சொல்லப்போனால் திருமாவே அப்-செட்டானார்.

காரணம், விழாவில் கலந்துகொள்ள ஆதவ்வுக்கு அனுமதி கொடுத்ததுடன், பேச்சில் கவனம் இருக்கவேண்டும்; அரசியல் கூடாது என திருமா அறிவுறுத்தியிருந்தார். அதனை அலட்சியப்படுத்திவிட்டு எந்த நோக்கத்திற்காக இந்த விழாவை நடத்த அர்ஜுன் ரெட்டி திட்ட மிட்டாரோ, அதை நடத்தி முடித்திருக்கிறார். அதாவது, தி.மு.க. கூட்டணியிலிருந்து திருமாவை வெளியே கொண்டுவர வேண்டும். திருமாவை விஜய்யுடன் கூட்டணியாக இணைக்க வைக்கவேண்டும் அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்குள் திருமாவை கொண்டு போகவேண்டும் அல்லது அ.தி.மு.க. -திருமா -விஜய் மூவரும் இணைந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதே அஜெண்டா.

அதைநோக்கிய பயணத்தின் முதல்அடியாக திருமாவுக்கும் தி.மு.க.வுக்கும் மோதல் வெடிக்கும் வகையில், ஸ்டாலினையும் உதயநிதியையும் தாக்கிப் பேசியதன் மூலம் உருவாக்கியிருக்கிறார் அர்ஜுன் ரெட்டி. தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்குமான கூட்டணி உறவில் மோதல் வெடிக்கத் தொடங்கிவிட்டது. தனது சுயநலத்துக்காக, சிறுத்தைகளுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறார் அர்ஜுன் ரெட்டி''’என்று விவரிக்கின்றனர் சிறுத்தைகள்.

இதற்கிடையே, விஜய் மற்றும் அர்ஜுன் ரெட்டியின் தி.மு.க. தாக்குதலை அறிவாலயம் ரசிக்கவில்லை. கட்சியின் சீனியர்கள் ஸ்டாலினின் கவனத்துக்கு சில தகவல்களை கொண்டு சென்றுள்ளனர்.

அது குறித்து தி.மு.க. தரப்பில் விசாரித்த போது, ‘’"தி.மு.க. கூட்டணிக்குள் சிக்கலை ஏற் படுத்தவேண்டும் என்றுதான் அந்த சின்னப் பையன் (அர்ஜுன் ரெட்டி) அரசியல் செய் கிறான். அதை அவனாக செய்யவில்லை. திருமா, அந்த சின்னப்பையனையும் புறக் கணிக்க வைத்திருக்கவேண்டும். ஏன்னா, அந்த பையன் சிறுத்தைகளின் சாதாரண தொண்டன் இல்லை; அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர். பொறுப்புள்ள உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நபர், பேசுகிற பேச்சுக்களை அந்த கட்சியின் நிலைப்பாடாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட கருத்து என புறந்தள்ளிவிட முடியாது. தெரிந்தேதான் பேசுகிறான். இனியும் இதனை அனுமதித்தால் நமக்குத்தான் இழுக்கு.

தி.மு.க.வை விமர்சிக்கட்டும், தடை யில்லை. ஆனால், கூட்டணிக்குள் இருந்து கொண்டு விமர்சிக்கக்கூடாது. கூட்டணியை விட்டு வெளியேறி அவர்கள் விமர்சித்துக்கொள் ளட்டும். அதற்கு எந்த வகையில் பதில் சொல்லணுமோ நாம் சொல்வோம். தி.மு.க.வை விமர்சித்த அந்த சின்னப்பையன் மீது திருமா நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே இதனை சொல்லியும் திருமா அலட்சியமாக இருந்ததால்தான், நீங்கள் முதல்வரானதையும் உதயநிதி துணை முதல்வரானதையும் அந்த பையன் கொச்சைப்படுத்துகிறான். அதனால், அந்த பையன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள் என ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் சீனியர்கள்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தி.மு.க.வினர்.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி வழங்க முதல்வரை சந்திக்க திருமா சார்பில் ஒரு முயற்சி எடுக்கப்படுகிறது என தி.மு.க.விலும், கோட்டையிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, தி.மு.க.வின் கோபத்தை அறிந்துள்ள வி.சி.க.வின் மூத்த நிர்வாகிகள், தி.மு.க.- சிறுத்தைகள் கூட்டணி உடைந்துவிடக்கூடாது என கவலைப்பட்டு வருகிறார்கள். இது குறித்து திருமாவிடம் தங்களின் ஆதங்கங் களையும் கோபத்தை யும் வெளிப்படுத்தும் அவர்கள், "அர்ஜுன் ரெட்டியை கட்சியிலிருந்து நீக்குங்கள் அல்லது குறைந்தபட்சம் துணை பொதுச் செயலாளர் பொறுப்பி லிருந்தாவது நீக்குங்கள்' என வலியுறுத்தி வரு கின்றனர். "கட்சியின் உயர்மட்ட குழுவில் இதைப்பற்றி விவாதிப்போம்' என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார் திருமாவளவன்.

அர்ஜுன் ரெட்டியை அறிந்துள்ள சிறுத்தைகளின் முக்கியஸ்தர்கள் சிலரிடம் விவாதித்தபோது, ‘’"அர்ஜுன் ரெட்டியின் பிடியில் சிக்கியிருக்கிறார் திருமா. விஜய்க்கும், அர்ஜூன் ரெட்டிக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அவர்கள் இருவரும் திட்டமிட்டுத்தான் தி.மு.க.வை சீண்டுகிறார்கள். இதனால், தி.மு.க.-திருமா உறவுதான் கெட்டுப்போகிறது. தி.மு.க. கூட்டணியை திருமா முறித்துக்கொள்ள வேண்டும் என்பது அர்ஜுன் ரெட்டியின் அரசியல் சதி. இதற்கு விஜய்யின் தூண்டுதலும் இருக்கிறது. கூட்டணியை திருமா முறித்துக் கொள்ளவில்லையெனில், விடுதலை சிறுத்தைகளை பிளவுபடுத்த அர்ஜுன் ரெட்டி திட்டமிட்டிருக்கிறார்.

இப்போதே, வி.சி.க.வின் மாவட்ட தலைவர்கள் பலபேர், தனது வசம் இருப்பதாக அர்ஜுன் ரெட்டி மிரட்டல் தொனியில் சொல்லிவருகிறார். அதனால், அர்ஜுன் ரெட்டியின் ஆசைப்படி தி.மு.க. கூட்டணியிலிருந்து திருமா வெளியே வரவேண்டும். அதற்கு மாறாக, அர்ஜுன் ரெட்டியை கட்சியிலிருந்து நீக்கினால், சிறுத் தைகள் கட்சியை உடைக்க திட்டமிட் டுள்ளார் அர்ஜுன் ரெட்டி. அதற்கேற்ப, விஜய்யும் ஆதவ்வும் இணைந்து சீக்ரெட் மூவ்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்''’ என்கிறார்கள் சிறுத் தைகள்.

இப்படிப்பட்ட அரசியல் சூழ்ச்சி களுக்கு அடிபணி யாமல், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சமாதானப்படுத்தி கூட்டணி உறவை தக்கவைத்துக்கொள்ள திருமாவளவன் முயற்சித்து, அது வெற்றி பெற்றாலும், தேர்தல் களத்தில் சிறுத்தை களுடன் இணக்கமான அரசியலை தி.மு.க. இனி முன்னெடுக்குமா என்பது சந்தேகம்தான்.

அர்ஜுன் ரெட்டிக்கும் விஜய்க்கும் எப்படி இவ்வளவு நெருக்கம் என்பதற்கு, "அர்ஜுன் ரெட்டியின் திருமண புகைப்படத்தைப் பார்த்தாலே தெரியும்' என சிறுத்தைகள் கட்சியின் தம்பிகள் கிசுகிசுக்கிறார்கள்.

படம் : ஸ்டாலின்

_______________

அர்ஜுன் ரெட்டி அதிரடி நீக்கம்!

தி.மு.க. -விடுதலை சிறுத்தைகள் கூட் டணியை உடைக்கும் அரசியல் சித்து விளை யாட்டை விளையாடிவந்த அர்ஜுன் ரெட்டியை, வி.சி.க.விலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்திருக்கிறார் திருமாவளவன். கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக நடந்து கொள்வது, தலைமையின் நன்மதிப்பை கேள்விக் குள்ளாக்கும் வகையில் விமர்சனங்கள் உருவாகி யிருக்கின்றன. இந்தநிலையில் தலைமை நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில்... அர்ஜுன் ரெட்டி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் 6 மாத காலம் அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்திருக்கிறார் திருமாவளவன்.