ராங்கால் ரஜினியிடம் ஆதரவு கேட்ட விஜய்! சீமானுக்கு கொக்கி ரெய்டில் சிக்கிய நாம் தமிழர் கட்சி! பர்தாவுடன் சுற்றிய அமர்பிரசாத் ரெட்டி!

ss

"ஹலோ தலைவரே, நாளுக்கு நாள் அரசியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறிக்கிட்டேயிருக்கு.''”

"ஆமாம்பா, புதிதாகக் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கூட, அதற்கு நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்டிருக்கிறாரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, தனது கட்சிப் பெயரை அறிவித்த சூட்டோடு, தனது ‘தமிழக வெற்றி கழகத்தின்’ முதல் செயற்குழுக் கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் விஜய். இதைத் தொடர்ந்து, "இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்கமாட்டோம்' என்றும் பகிரங்கமாக அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு முன்பு ’"வேட்டையன்'’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் பயணத்தில் இருந்த நடிகர் ரஜினியைத் தொடர்புகொண்டு 15 நிமிடத்திற்கு மேல் விஜய் பேசினாராம். அப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி யிடம், "நாங்கள் தேர்தலில் நிற்கும்போது நீங்கள் எங்களை ஆத ரித்துக் குரல்கொடுக்க வேண்டும்' என்று பேச்சுக் கிடையில் அவருக்கு கர்ச்சீப் போட்டாராம் விஜய். இதைக்கேட்ட ரஜினியோ, "பார்க்கலாம்...' என்று மழுப்பலாகச் சொல்லிச் சிரித்திருக்கிறார். இதையே ரஜினியின் பாதி சம்மதம் கிடைத்திருப் பதாக எண்ணிப் பூரிக்கிறதாம் விஜய் தரப்பு.''”

"தந்தை 16 அடி பாய்ஞ்சா மகள் 32 அடி பாய்வாங்கங்கிறதை "லால் சலாம்' ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிரூபிச்சிருக்காங்களே''…”

"ஆமாம் தலைவரே, "லால் சலாம்' படம் உருவான கதையைப் பேசின ஐஸ்வர்யா, தன் பேச்சோட நிறைவுப் பகுதியில தன் தந்தை மீது சங்கிங்கிற விமர்சனம் வைக்கப்படுவதை வலுவா மறுத்ததோட, ரஜினிகாந்த்ங்கிற மனிதர் சங்கி கிடையாது. சங்கியா இருக்கிற ஒருத்தர் லால் சலாம் மாதிரி படத்துல நடிக்கமாட்டார். ஒரு மனிதநேயவாதியால மட்டும்தான் இந்த மாதிரி படத்தை எடுக்கமுடியும், நடிக்கமுடியும். ஒரு ரஜினி ரசிகனா இந்தப் படத்தைப் பார்க்கிற எல்லாரும் பெருமைப்படுவீங்கனு கணீர்னு பேசி கைத்தட்டலை வாங்கிக் குவிச்சுட்டார். ஐஸ்வர்யா வோட பேச்சை மேடையின் முன்வரிசையில் அமர்ந்து கேட்ட ரஜினி மிகவும

"ஹலோ தலைவரே, நாளுக்கு நாள் அரசியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறிக்கிட்டேயிருக்கு.''”

"ஆமாம்பா, புதிதாகக் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கூட, அதற்கு நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்டிருக்கிறாரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, தனது கட்சிப் பெயரை அறிவித்த சூட்டோடு, தனது ‘தமிழக வெற்றி கழகத்தின்’ முதல் செயற்குழுக் கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் விஜய். இதைத் தொடர்ந்து, "இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்கமாட்டோம்' என்றும் பகிரங்கமாக அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு முன்பு ’"வேட்டையன்'’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் பயணத்தில் இருந்த நடிகர் ரஜினியைத் தொடர்புகொண்டு 15 நிமிடத்திற்கு மேல் விஜய் பேசினாராம். அப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி யிடம், "நாங்கள் தேர்தலில் நிற்கும்போது நீங்கள் எங்களை ஆத ரித்துக் குரல்கொடுக்க வேண்டும்' என்று பேச்சுக் கிடையில் அவருக்கு கர்ச்சீப் போட்டாராம் விஜய். இதைக்கேட்ட ரஜினியோ, "பார்க்கலாம்...' என்று மழுப்பலாகச் சொல்லிச் சிரித்திருக்கிறார். இதையே ரஜினியின் பாதி சம்மதம் கிடைத்திருப் பதாக எண்ணிப் பூரிக்கிறதாம் விஜய் தரப்பு.''”

"தந்தை 16 அடி பாய்ஞ்சா மகள் 32 அடி பாய்வாங்கங்கிறதை "லால் சலாம்' ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிரூபிச்சிருக்காங்களே''…”

"ஆமாம் தலைவரே, "லால் சலாம்' படம் உருவான கதையைப் பேசின ஐஸ்வர்யா, தன் பேச்சோட நிறைவுப் பகுதியில தன் தந்தை மீது சங்கிங்கிற விமர்சனம் வைக்கப்படுவதை வலுவா மறுத்ததோட, ரஜினிகாந்த்ங்கிற மனிதர் சங்கி கிடையாது. சங்கியா இருக்கிற ஒருத்தர் லால் சலாம் மாதிரி படத்துல நடிக்கமாட்டார். ஒரு மனிதநேயவாதியால மட்டும்தான் இந்த மாதிரி படத்தை எடுக்கமுடியும், நடிக்கமுடியும். ஒரு ரஜினி ரசிகனா இந்தப் படத்தைப் பார்க்கிற எல்லாரும் பெருமைப்படுவீங்கனு கணீர்னு பேசி கைத்தட்டலை வாங்கிக் குவிச்சுட்டார். ஐஸ்வர்யா வோட பேச்சை மேடையின் முன்வரிசையில் அமர்ந்து கேட்ட ரஜினி மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டாராம்''

"அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சியில் சேர்த்து, எடப்பாடிக்கு பா.ஜ.க. அதிர்ச்சி கொடுத்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் உட்பட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை டெல்லிக்கு அழைத்துச்சென்று பா.ஜ.க.வில் ஐக்கியமாக்கியிருக்கிறார்கள். இவர் களில் பெரும்பாலானவர்கள் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களையெல்லாம் பா.ஜ.க.வுக்கு அனுப்பி, எடப்பாடிக்கு ஆப்பு வைத்ததே அ.தி.மு.க.வின் மாஜி மந்திரியான வேலு மணி தானாம். டெல்லியை மகிழ்விக்க, அவர் இந்த கரசேவையைச் செய்தாராம். இதற்கிடையே அ.தி.மு.க.வுக்கான கூட் டணிக் கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில், உங்களோடு வரமுடியாது என்று மறுத்துவந்த எடப்பாடி, கடைசியில் அவர்களின் நெருக்கடியைத் தாங்கமுடியா மல், "உங்கள் தமிழகத் தலைவர் பொறுப் புக்கு புதிதாக ஒருவரை நியமித்தால், அங்கு வருவது குறித்து யோசிக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறாராம். இதுகுறித்து பா.ஜ.க. ஆலோசித்து வருகிறதாம்.''”

"பெண்களைத் தாக்கிய வழக்கில் பா.ஜ.க. அமர்பிரசாத்ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்திருக்கிறதே?''”

rr

"கட்சியின் பெண் நிர்வாகியைத் தாக்கிய வழக்கில், போலீஸிடம் பிடிபடா மல் கண்ணாமூச்சு ஆடிக்கொண்டிருந்த பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்றம் தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கி, அவரது ஓட்டத்தை நிறுத்தியிருக்கிறது. அவர், இத்தனை நாளாய் எங்கே இருந் தார் என விசாரித்த போலீஸ் டீமுக்கு, பல வேடிக்கையான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தன்னை போலீஸ் தேடுவதை அறிந்த அமர் பிரசாத், கள்ளக்குறிச்சிக்குச் சென்று அங்கிருந்து, ஆந்திராவுக்கும் மும்பைக்கும் ஓடினாராம். அங்கும் போலீஸ் வருவதை அறிந்து குஜராத்திற்கும், பின்னர் ராஜஸ்தானுக்கும் ஓட்டம் பிடித்தாராம். இதன்பின் அங்கே இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் பர்தா அணிந்து ஒரு இஸ்லாமியப்பெண் போலவே, ஒளிந்திருந்தாராம் அமர்.''”

"என்னப்பா சொல்றே?''”

"ஆமாங்க தலைவரே, சிறுபான்மையினரை விமர்சிப்பவர்களுக்கு, அவர்களின் வேடம் கூட பாதுகாப்பைத் தந்திருப்பது சுவாரஸ்யம்தான். அடுத்து, ராஜஸ்தானிலும் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்த அமர்பிரசாத், கடைசியாக சென்னை காசிமேடு பகுதிக்கு அதே இஸ்லாமியப் பெண் வேடத்திலேயே வந்து தங்கி யிருக்கிறார். இப்படியான அமரின் ஓட்டங்களுக்கு பேருதவியாக பின்னணியில் இருந்தது, ஒரு பெண் வழக்கறிஞராம். போலீஸ் டீம் தேடிவருவது குறித்து, உளவுத்துறையில் இருக்கும் கண்ணன் என்பவர் கொடுக்கும் தகவலை, அந்தப் பெண் வழக்கறிஞர்தான் அமருக்கு தொடர்ந்து பாஸ் செய்து, அவரது கண்ணாமூச்சு ஆட்டத்தை வழி நடத்தினாராம். இதையெல்லாம் அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகளே தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள்.''”

"நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டுகள் நடந்திருக்கே?''”

seeman

"நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி, பாலாஜி உள்ளிட்ட 6 பேர் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் மத்திய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அதிரடி ரெய்டுகளை 2 நாள் நடத்தியிருக்கிறது. தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து இவர்களுக்கு பணம் வந்ததாகக் கிடைத்த தகவல்களின் பேரிலேயே இந்த சோதனை நடந்ததாகச் சொல்கிறது என்.ஐ.ஏ. இந்த சோதனையின் போது, மடிக்கணினி, செல்ஃபோன், பென் ட்ரைவ்கள் உள்ளிட்ட பொருட்களையும், சட்டவிரோத புத்தகங்களையும் கைப்பற்றியதாக அது தெரிவித்திருக்கிறது. மேலும், கட்சித் தலைவரான சீமானுக்குத் தெரியாமலேயே, இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்திடமிருந்து பணம் பெற்றிருக்கிறார்கள் என்றும் அது திகைக்க வைத்திருக்கிறது.''”

"இந்த ரெய்டு விவகாரத்தில் சீமானை சந்தேக வளையத்தில் சிக்கவைக்க டெல்லி முயல்வதாக தமிழ்த் தேசிய அமைப்பினர் சந்தேகம் கிளப்புகிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, சீமானுக்கு தெரியாமல் இப்படி பணப்பரிவர்த்தனை நடந்திருக் கிறது என்று சொல்வதன் மூலம் என்.ஐ.ஏ. எதை வலியுறுத்த முயல் கிறது? என்று சந்தேகத்தை எழுப் பும் தமிழ்த் தேசிய அமைப்பினர், சீமானை மீறி அல்லது சீமானுக்கு இணையாக சாட்டை துரைமுரு கன் உள்ளிட்டவர்கள் தமிழ்த் தேசியத் தளத்தில் புகழடைந்து வருகிறார்கள். இதனை ஜீரணிக்க முடியாமல் சீமானே பா.ஜ.க.வுக்கு போட்டுக் கொடுத்து இப்படி ரெய்டுகளை நடத்த வைத்து விட்டார் என்கிற ஒரு போலி பிம்பத்தை டெல்லி உருவாக்க முயல்கிறதா? என்றும், அல்லது, இதன்மூலம் பா.ஜ.க.வுக்கும் சீமானுக் கும் கள்ள உறவு இருக்கிறது என்கிற தோற்றத்தையும் உருவாக்க நினைக் கிறார்களா? என்றும் சந்தேகங் களை அவர்கள் கிளப்புகிறார்கள். இதற்கிடையே என்.ஐ.ஏ. கொடுத்த சம்மனை ஏற்று 7 ஆம் தேதி, அவர்கள் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆஜராகி விசாரணையை எதிர் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்ததாகவும் சொல்கிறார்கள்.''”

"கூட்டணி விசயத்தில், தே.மு.தி.க.வும் இன்னும் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தத்தளிக்குதே?''”

premalatha

"தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிரேமலதா. அப்போது, ’"தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுக்கக்கூடாது. கூட்டணி வைத்துதான் தே.மு.தி.க. தேர்தலைச் சந்திக்க வேண்டும்’ என்றே 90 சதவீத மாவட்டத் தலைவர்கள் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில், 14 + 1 சீட் தருபவர்களுடன்தான் கூட்டணி வைப்போம் என அறிவித்திருக் கிறார் பிரேமலதா. இதைபார்த்து பா.ஜ.க.வே அதிர்ந்து விட்டதாம். இருப்பினும், ’"நீங்கள் எங்கள் பக்கம் வந்தால் 2 சீட் தருகிறோம். ராஜ்யசபா சீட்டுக்கெல்லாம் உறுதி தரமுடியாது. இல்லையெனில் அதிக பட்சம் 3 சீட்டுகளை வாங்கிக்கொண்டு, நல்லபடியாக எங்களோடு பயணத்தைத் தொடருங்கள்'’ என்று சொல்லியிருக்கிறதாம் பா.ஜ.க. அதேசமயம் அ.தி.மு.க.வோ, பிரேமலதாவின் கருத்தைப் பரிசீலிக்கக்கூட தயாராக இல்லை யாம். காரணம், எடப்பாடியிடம் இதுகுறித்து கருத்துரைத்த அ.தி.மு.க. சீனியர்கள், "தே.மு.தி.க.வை பெயரளவுக்குக்கூட பேச அழைக்காதீர்கள். ஆசை இருக்கலாம். ஆனால் இந்த அளவுக்குப் பேராசை கூடாதல்லவா?' என்றார்களாம்.''”

"பா.ம.க. தரப்பில் இந்த விசயத்தில் திணறல் தெரியுதேப்பா?''”

admk-pmk

"பா.ம.க.வை பொறுத்தவரை, அக்கட்சியில் அதிகார மையமாக இருக்கும் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் தனித்தனி கோணத்தில் கூட்டணியை முடிவு செய்ய காய்களை நகர்த்துகிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.க. கூட்டணியை ராமதாசும், பா.ஜ.க. கூட்டணியை அன்பு மணியும் விரும்புகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய, தைலாபுரத்துக்கு நெருக்கமானவர்கள், இந்தமுறை எப்படியும் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தாக வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறார் அன்புமணி. அதனால் பா.ஜ.க. கூட்டணியைத் தேர்வு செய்யுமாறு அவர் டாக்டர் ஐயாவுக்கு அழுத்தம் தருகிறார். ஆனால், ஐயாவோ, "பா.ஜ.க.வை நம்பக்கூடாது. அது நமக்கு அமைச்சர் பதவி தருவதாகச் சொல்வதெல்லாம் ஏமாற்று. அதேசமயம் பா.ஜ.க.வுடன் ஒப்பிட்டால் அ.தி.மு.க.வுக்கான வாக்கு வங்கி பலமானது. அதோடு நாம் கூட்டணி அமைத்தால்தான், நமக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்கிறார். இவர்களின் உரசல் கலாட்டாவால்தான் கூட்டணி விவகாரத்தை முடிவு செய்வதில் திணறல் ஏற்பட்டிருக்கிறது ’என்கிறார்கள்.''”

"நானும், பா.ம.க. பற்றி எனக்குக் கிடைத்த ஒரு உபரித் தகவலைப் பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து கூட்டணி குறித்து விவாதித் திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அப்போது 12 லோக்சபா சீட்டும் 1 ராஜ்யசபா சீட்டும் எங்களுக்கு வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தாராம். ஆனால், சண்முகமோ, 7 லோக்சபாவும் ஒரு ராஜ்யசபாவும் கிடைக்க நான் உத்தரவாதம் தருகிறேன். மேலும், தேர்தல் செலவுகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் ராமதாஸ், மேலும் சில டிமாண்டுகளை வைத்துவிட்டு, அ.தி.மு.க. தரப்பின் சிக்னலுக்காக காத்திருக்கிறாராம்.''

nkn100224
இதையும் படியுங்கள்
Subscribe