அன்று வீடியோ! இன்று ஆடியோ! அ.தி.மு.க. ஒ.செ. மீது மோசடி புகார்கள்!

ad

"இது வேற லெவல் மோசடி. நல்லதம்பி பண்ணுன மோசடிக்கு கணக்கே இல்ல. கவர்மென்ட் வேலைக்கு ஆசைப் பட்டு அவருகிட்ட பணத்த கொடுத்து ஏமாந்தவங்க அனேகம் பேரு. இந்த மோசடிகளை ரொம்ப காலமா பண்ணிட்டு வர்றாரு. குற்றம்சாட்டப்பட்ட நல்லதம்பியின் முந்தைய வழக்குகள்னு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அவரு சம்பந்தப்பட்ட வழக்கு எல்லாமே மதுரை ஹைகோர்ட்டுக்கு வந்திருக்கு. அவரு பண்ணுன மோசடிக்கு, நல்லதம்பியே செல்போன்ல பேசிய ஆடியோ ஆதாரங்கள் நெறய இருக்கு. சாம்பிளுக்கு மூணு ஆடியோ அனுப்புறேன், போட்டுக் கேளுங்க''” என்றார் ‘சோர்ஸ்’ ஒருவர்.

dd

பின்னாளில் விஜயநல்லதம்பி என பெயர் மாற்றம் செய்துகொண்ட நல்லதம்பி, சபாநாயகராக இருந்த காளி முத்துவின் கடைசித் தம்பி என்ற அறிமுகம் தேவையில்லை. ஏனென்றால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கில், இந்த விஜயநல்லதம்பிதான் புகார்தாரர்.

சாத்தூர் -வெம்பக்கோட்டையைச் சேர்ந்த ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவின் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்தது, கடையநல்லூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கின் மகனுக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்தது, தாயில்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரனிடம் நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது, சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணி மருமகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற வேலைக்கு போலியான உத்தரவு நகல் தந்தது, உயர்நீதிமன்றக் கிளையில் டிரைவர் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளர் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது, கொடைக்கானல் -மதர் தெரஸா பல்கலைக் கழகத் தில் பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரி யர் மற்றும் எழுத்தர் பணி பெற்றுத்தரு வதாக கொடைக்கானல் விஜய்யின் மனைவி சத்யா, ஸ்ரீஜா, ஜெனிபர், சந்திரா, கிருஷ்ணம் மாள், சுகன

"இது வேற லெவல் மோசடி. நல்லதம்பி பண்ணுன மோசடிக்கு கணக்கே இல்ல. கவர்மென்ட் வேலைக்கு ஆசைப் பட்டு அவருகிட்ட பணத்த கொடுத்து ஏமாந்தவங்க அனேகம் பேரு. இந்த மோசடிகளை ரொம்ப காலமா பண்ணிட்டு வர்றாரு. குற்றம்சாட்டப்பட்ட நல்லதம்பியின் முந்தைய வழக்குகள்னு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அவரு சம்பந்தப்பட்ட வழக்கு எல்லாமே மதுரை ஹைகோர்ட்டுக்கு வந்திருக்கு. அவரு பண்ணுன மோசடிக்கு, நல்லதம்பியே செல்போன்ல பேசிய ஆடியோ ஆதாரங்கள் நெறய இருக்கு. சாம்பிளுக்கு மூணு ஆடியோ அனுப்புறேன், போட்டுக் கேளுங்க''” என்றார் ‘சோர்ஸ்’ ஒருவர்.

dd

பின்னாளில் விஜயநல்லதம்பி என பெயர் மாற்றம் செய்துகொண்ட நல்லதம்பி, சபாநாயகராக இருந்த காளி முத்துவின் கடைசித் தம்பி என்ற அறிமுகம் தேவையில்லை. ஏனென்றால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கில், இந்த விஜயநல்லதம்பிதான் புகார்தாரர்.

சாத்தூர் -வெம்பக்கோட்டையைச் சேர்ந்த ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவின் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்தது, கடையநல்லூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கின் மகனுக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்தது, தாயில்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரனிடம் நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது, சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணி மருமகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற வேலைக்கு போலியான உத்தரவு நகல் தந்தது, உயர்நீதிமன்றக் கிளையில் டிரைவர் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளர் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது, கொடைக்கானல் -மதர் தெரஸா பல்கலைக் கழகத் தில் பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரி யர் மற்றும் எழுத்தர் பணி பெற்றுத்தரு வதாக கொடைக்கானல் விஜய்யின் மனைவி சத்யா, ஸ்ரீஜா, ஜெனிபர், சந்திரா, கிருஷ்ணம் மாள், சுகன்யா ஆகியோரை ஏமாற்றியது, இதுபோக, பஞ்சாயத்து கிளார்க் வேலைக்கு மேட்டமலை பூபாலன், சாத்தூர் மணி ஆகியோரிடமிருந்து பணம் வாங்கி ஏமாற் றியது என நல்லதம்பி மீதான மோசடி வழக்குகளின் பட்டியல் நீள்கிறது.

dd

இத்தனைபேர் நல்ல தம்பியை ஏன் நம்பினார் கள் என்றால், அ.தி.மு.க. பின்னணியில் வெவ்வேறு காலகட்டங்களில் இவர் விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராகவும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அரசு வழக்குரைஞராகவும், ஊராட்சிமன்றத் தலைவராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்ததுதான். இவருடைய மனைவி மாலதியும், வெம்பக் கோட்டை கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருக்கிறார்.

அந்த ஆடியோக்களில், அரசு வேலைக் காக லட்சங்களில் பணம் கொடுத்து ஏமாந் தவர்கள் நல்லதம்பியைத் தொடர்புகொண்டு குமுறுவதும், எதிர்முனையில் நல்லதம்பி பேசியே சமாளிப்பதும், ஒருகட்டத்தில் மிரட்டுவதும் பதிவாகியிருக்கிறது. அந்த உரையாடல்களில் சில...

"ஏ.பி.ஆர்.ஓ. 10 பேர் இன்னைக்கு ஜாயின் பண்ணிட்டாங்க. நாளை மறுநாள் காலைல நம்ம லிஸ்ட் வரும்''’என்று நல்லதம்பி எடுத்துவிட, பணம் கொடுத்தவர் எதிர்முனையில் “"இப்பவே எனக்கு மனசு நெறஞ்ச மாதிரி இருக்கு''’என்று பூரிக்கிறார்.

ஒருவர் "என் ஏற்பாட்டுல பணம் கொடுத்த அத்தனைபேரும் கழுத்தைப் பிடிக் கும்போது நான் என்ன சார் பண்ணு வேன்?''’என்று கேட்க... நல்லதம்பி அவரிடம், "இத்தனை நாளாச்சு.. உங்கள அவங்க ஒண்ணும் பண்ணலயா?''’என்று எகத்தாள மாகக் கேட்க, அவர் "அதெல்லாம் கேவலப் பட்டாச்சு... போலீஸ் ஸ்டேஷன் போயாச்சு...'' என்கிறார்.

மற்றொருவர், "உழைச்சு சம்பாதிச்சு, தாலி வரைக்கும் அடகுவச்சுதான் உங்ககிட்ட பணம் கொடுத்திருக்காங்க. பணம் கொடுத்து ஒண்ணே கால் வருஷம் ஆச்சு. உங்க கிட்ட பணம் கொடுத்த 20 பேருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? 20 நாளுக்கு மேல கடைய பூட்டிட்டு, ஃபேமிலிய விட்டுட்டு வந்து உட் கார்ந்திருக்கேன்''’ என்று கதற... அதற்கு நல்லதம்பி "என்னைக்கு காரியம் முடியுதோ, அதுவரைக்கும் வெயிட் பண்ணணும்''’என்கிறார் அழுத்தமாக.

dd

இன்னொருவர் "உங்கள நம்பி நான் பண்ணுனேன் சார். இப்ப தலை குனிஞ்சு நிக்கிறேன். கொடைக் கானல்ல பேர் கெட்டுப்போயி நிக்கிறேன். அத்தனை பேரும் என் மாமனார்கிட்ட போறாங்க...''’என்று புலம்ப, நல்லதம்பியோ, "பணத்தை கொடுத்தா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிரும்''’என சமாளிக்கிறார்.

விஜயகுமார், ராபின் மாமா, அருண் ஆகியோர் ஒரே லைனில் நல்லதம்பியிடம் மாறி, மாறிப் பேசுகிறார் கள். ஒருகட்டத்தில் “நல்ல நாள் (தீபாவளி) அதுவுமா சொல்லுறேன். சத்தியமா சூசைட் பண்றத தவிர வேற வழியில்ல. அந்த அளவு எக்ஸ்ட்ரீம்ல இருக்கேன். நல்லபடியா முடிச்சுக்கொடுங்க''’என்று கெஞ்சுகிறார்கள்.

நல்லதம்பியோ, "சைக்காலஜிகலா, டெக்னிகலா, பிராக்டிகலா உங்களுக்கு தெரியும். என்னை கார்னர் பண்ணி ஏதாவது பண்ண நினைச்சா, ரொம்ப எக்ஸ்ட்ரீமான விளைவுகளை நீங்க சந்திக்கவேண்டியது இருக்கும்...''’என்று மிரட்டுகிறார்.

பணம் வாங்கிக்கொண்டு வருடக்கணக்கில் டிமிக்கி கொடுத்துவந்த நல்லதம்பியை எப்படி யோ லைனில் பிடித்து சிலர் நச்சரிக்க, அவர் களில் ஒருவரிடம் “உங்க ளுக்கு பணம் கிடைப்பதற்கு ஒரு வழியிருக்கிறது..”என்று நல்லதம்பி ஒரு யோசனை சொல்கிறார். அதில், அப் போது பணியில் இருந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரை, தன்னுடைய மோசடி வளையத் துக்குள் லாவகமாக நுழைக்கிறார். விருதுநகர் மாவட்ட எஸ்.பி. (மனோ கர்) எனக்கு ரொம்ப நெருக்கம். யுனிவர்சிடி வேலைக்கு நாம பணம் வாங்கு னோம்ல. அத கம்ப்ளைன்டா இந்தமாதிரி எழுதிக் கொடுக்கணும். கொடைக்கானல் போயிட்டு வரும் போது விஜய் பழக்கமானாரு. நான் வந்து உங்கள மாதிரி நண்பர்களை ரவி அண்ணாச்சிகிட்ட கூட்டிட்டு போயி, சிவகாசி வீட்ல வச்சு அவருகிட்ட பணம் கொடுத்தமாதிரி கம்ப்ளைன்ட் எழுதணும். அப்படி பண்ணுனா இம்மீடியேட்டா நான் பணத்த வாங்கிக் கொடுக்கிறேன்னு எஸ்.பி. சொன்னாரு. அப்படி நாம கொடுக்கலாமா? என்கூட தைரியமா நிப்பீங்களா? நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுனா டக்குனு செட்டிலாயிரும். எஸ்.பி. என்ன சொன்னாருன்னா, மந்திரிய (ராஜேந்திரபாலாஜி) வந்து நான் கூப்பிட்டு டைட் பண்ணமுடியாது. மத்த சாட்சிகள வச்சு டைட் பண்ணுனாத்தான் இவ்வளவு தூரத்துக்கு கொண்டுபோக முடியும். உங்க பிரதர (ரவி) பொறுத்தவரைக்கும் அவரு எவ்வளவு பணம் வச்சிருக்காரு? அவரு அ.தி.மு.க. மாவட்ட செயலா ளர் ஆனது, எம்.எல்.ஏ. சீட் கிடைச் சது எல்லாமே உங்களாலதான்னு சொல்றீங்க. உங்க பிரதர நான் (எஸ்.பி.) கூப்பிட்டு, உங்க (ரவி) மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு. உங்க மிஸஸும் (வள்ளி) இதுல வர்றாங்க. ஏதாவது செட்டில் பண்ணுங்கன்னு சொன்னா பிரச்சனை முடிஞ்சிரும் னாரு. நேத்துதான் எஸ்.பி.ய பார்த் துட்டு வந்தேன்.” என்று கூற, எதிர்முனையில் இருப்பவர் “ஓகே..” சொல்கிறார்.

dd

தொடர் முயற்சியில் நல்லதம்பி நம் லைனுக்கு வந்தபோது, பாதிப்புக்கு ஆளாவர்களின் கை பேசியில் பதிவான நல்லதம்பியின் உரையாடல், அரசு வேலைக்கு பணம் வாங்கியபோது வீடியோ வில் சிக்கிய விவகாரம் குறித்து கேட்டோம்.

"அந்த நேரத்துல சத்துணவு வேலைக்கு எங்க அண்ணாச்சிகிட்ட டிரைவரா இருந்தவரு என் கிட்ட பணம் கொடுத்தாரு. அது நான் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரா, எங்க அண்ணன் ரவி மாவட்ட செயலாளரா இருந்தபோது, மந்திரிக்காக (ராஜேந்திரபாலாஜி) வாங்குனதத்தான் எனக்கு தெரியாம வீடியோ எடுத்திருக்காங்க. ஆடியோ விஷயத்துக்கு வர்றேன். அது என்னோட வாய்ஸா இருக்காது. என்னோட வாய்ஸ், எங்க அண்ணாச் சியோட வாய்ஸ் எல்லாம் ஒரேமாதிரியா இருக்கும். மோசடி பண்ணுன பெரிய லிஸ்ட்டே இருக்குன்னு நீங்க சொல்லுறது எல்லாம், நான் முன்னாடியே முடிச்சது. அப்படியெல்லாம் பண்ணியிருந்தா இப்ப நான் குண்டாஸ்ல உள்ள போயிருக்கணும். அரசியல்ல இருக்கோம். ரெண்டு வாங்குவோம். ரெண்டு நடக்காது. ரெண்டு நடந்திருக்கும். அத வச்சிட்டு என்னை மெயின் ரோல்னு சொல்லுறதா?

இந்த விஜய் எல்லாம், அவங்களே அண்ணாச்சி (ரவி) மேல நேரடியா கம்ப்ளைன்ட் கொடுத்து, போலீஸ் விசாரிச்சு, அது உண்மைன்னு எப்.ஐ.ஆர். போட்ருக்காங்க. ஹைகோர்ட்ல கேஸ் பென்டிங்ல இருக்கு. நம்ம மேல சில தவறுகள் இருந்தது. அபுபக்கர் சித்திக், சங்கரசுப்பிரமணி விவ காரம் எல்லாம், என்கூட இருந்தவங்க பண்ணுன தவறுகள். அந்த கேஸ அவங்கள வச்சே க்ளோஸ் பண்ணியாச்சு. மோசடி எல்லாம் என்கூட இருந்து பண்ணுனவங்க செஞ்சதுன்னு தெரிஞ்சுதான், நம்ம கட்சில (அ.தி.மு.க.) எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, நான் காலத்த ஓட்டிட்டு இருக்கேன். அதுக் காக, மோசடி பண்ணுறதுதான் எனக்கு பொழப்புன்னு சொல்லக் கூடாது என்று கூலாக, ‘"நான் அவன் இல்லை'’பாணியில் மறுத்தார்.

dd

நல்லதம்பியின் அண்ணனும் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி. மு.க. செயலாளருமான ரவிச்சந்திரன் நம்மிடம், "நல்லதம்பி படிச்ச படிப்பு, அறிவு எல்லாத்தையும் மோசடிக்கு மட்டுமே பயன்படுத்திட்டு இருக் காரு. தமிழ்நாடு பூராவும் நல்லதம்பி மேல ஆயிரக் கணக்குல கேஸ் இருக்கு. என் மனைவி வள்ளி பல்கலைக்கழகத்துல இருந்த காலத்துல, கல்வித் துறையில் ரொம்ப ஹானஸ்ட்டான துணைவேந் தர்னு பேர் வாங்கினவங்க. அவரு பண்ணுன தவறு களுக்கு எல்லாம் வேற யாரையாவது பழி சொல்ல ணும்னு பார்ப்பாரு. காளிமுத்தண்ணன் பேரை நல்லதம்பி களங்கப்படுத்திட்டு இருக்காரு''’ என்று வேதனைப்பட்டார். முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். மனசாட்சிப்படி வாழறவன். யாருக்கும் துரோகம் பண்ணுனது இல்ல. நல்லதம்பி வாயில இருந்து வர்றதெல்லாம் பொய்''” என்றார்.

குறுக்கு வழியில் அரசு வேலை பெற பணத்தை இழப்பதும், அரசியல் போர்வையில் பணம் குவிக்க மோசடி பண்ணுவதும் தொடர்ந்த படியே இருக்கிறது.

nkn080223
இதையும் படியுங்கள்
Subscribe