ராங்கால் அ.தி.மு.க.வை ஆட்டிவைக்கும் வேலுமணி! தேர்தல் பரபரப்பில் அறிவாலயம்! ஆர்வம் காட்டாத உடன்பிறப்புகள்! கட்சிப்பணத்தையே சுருட்டும் பா.ஜ.க. நிர்வாகிகள்!

rang

"ஹலோ தலைவரே, பொங்கல் பரிசுத்தொகை விவகாரத்தில் தி.மு.க. அரசு, தன் முடிவை மாற்றிக்கொண்டு, மகிழ்வான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறதே?''”

"ஆமாம்பா, வழக்கம்போல் இந்த வருடமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 தரப்படும்னு சொல்லப்பட்டிருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இந்த வருடம் பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்க இயலாது என்ற முடிவை தி.மு.க. அரசு எடுத்திருந்தது. இதன் பின்னணியை அறிந்த நம் நக்கீரன்,’"பொங்கல் பரிசு நோ! நிதி நெருக்கடியில் தள்ளிய அதிகாரிகள்!'’ என்கிற அட்டைப்பட செய்தியை கடந்த இதழில் விரிவாக வெளியிட்டது. இந்த செய்தி கோட்டை வட்டாரத்தில் பலத்த விவாதத்தை உருவாக்கியது. அரசும் இதனால் சங்கடத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் நிதித்துறைச்செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின், இது குறித்து மீண்டும் ஆலோசித்தார். அப்போதும் நிதித்துறைச் செயலாளர் மறுக்க... முதல்வரோ, ’என்ன செய்வீர் களோ தெரியாது. குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த வருடமும் ரொக்கப் பணமாக ஆயிரம் ரூபாயை நாம் கொடுத்தே ஆகவேண்டும் என்று சற்று கறார் குரலில் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிதி பரிமாற்றங்களைச் செய்துவிட்டு, பொங்கலுக்கு ரொக்கப் பணம் உண்டு என்ற அறிவிப்பை அரசு வெளி யிட்டிருக்கிறது. எனினும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வர்கள் பட்டியலில் இருந்து 25 லட்சம் பேரை நீக்கி, ஒரு தரப்பிற்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்கள்.''”

"காவல்துறையில் அதிரடியாக மாற்றம் நடந்திருக்கிறதே?''”

r

"உண்மைதாங்க தலைவரே, 32 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு லம்பாக பணியிட மாற்றங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதில் 16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தரப்பட்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் பரவலாகப் பாராட்டைப் பெற்றுவரும் நிலையில், ஒரே ஒரு அதிகாரி விசயத்தில் மட்டும் வேறுமாதிரியான எதிர்வினைகள் வந்துகொண்டு இருக்கின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம் எஸ்.பி. டாக்டர் சுதாகர், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக முன்பு இருந்தவர். இவர் தனது பணிகளில் சரிவர அக்கறை காட்டவில்லை என்ற புகார் டி.ஜி.பி. வரை போய்க்கொண்டேயிருந்

"ஹலோ தலைவரே, பொங்கல் பரிசுத்தொகை விவகாரத்தில் தி.மு.க. அரசு, தன் முடிவை மாற்றிக்கொண்டு, மகிழ்வான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறதே?''”

"ஆமாம்பா, வழக்கம்போல் இந்த வருடமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 தரப்படும்னு சொல்லப்பட்டிருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இந்த வருடம் பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்க இயலாது என்ற முடிவை தி.மு.க. அரசு எடுத்திருந்தது. இதன் பின்னணியை அறிந்த நம் நக்கீரன்,’"பொங்கல் பரிசு நோ! நிதி நெருக்கடியில் தள்ளிய அதிகாரிகள்!'’ என்கிற அட்டைப்பட செய்தியை கடந்த இதழில் விரிவாக வெளியிட்டது. இந்த செய்தி கோட்டை வட்டாரத்தில் பலத்த விவாதத்தை உருவாக்கியது. அரசும் இதனால் சங்கடத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் நிதித்துறைச்செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின், இது குறித்து மீண்டும் ஆலோசித்தார். அப்போதும் நிதித்துறைச் செயலாளர் மறுக்க... முதல்வரோ, ’என்ன செய்வீர் களோ தெரியாது. குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த வருடமும் ரொக்கப் பணமாக ஆயிரம் ரூபாயை நாம் கொடுத்தே ஆகவேண்டும் என்று சற்று கறார் குரலில் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிதி பரிமாற்றங்களைச் செய்துவிட்டு, பொங்கலுக்கு ரொக்கப் பணம் உண்டு என்ற அறிவிப்பை அரசு வெளி யிட்டிருக்கிறது. எனினும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வர்கள் பட்டியலில் இருந்து 25 லட்சம் பேரை நீக்கி, ஒரு தரப்பிற்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்கள்.''”

"காவல்துறையில் அதிரடியாக மாற்றம் நடந்திருக்கிறதே?''”

r

"உண்மைதாங்க தலைவரே, 32 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு லம்பாக பணியிட மாற்றங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதில் 16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தரப்பட்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் பரவலாகப் பாராட்டைப் பெற்றுவரும் நிலையில், ஒரே ஒரு அதிகாரி விசயத்தில் மட்டும் வேறுமாதிரியான எதிர்வினைகள் வந்துகொண்டு இருக்கின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம் எஸ்.பி. டாக்டர் சுதாகர், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக முன்பு இருந்தவர். இவர் தனது பணிகளில் சரிவர அக்கறை காட்டவில்லை என்ற புகார் டி.ஜி.பி. வரை போய்க்கொண்டேயிருந்தது. இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலகம் கேள்வி எழுப்பியபோது, என்னை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றிவிடுங் கள் என்று சிலபல லாப நோக்கோடு கோரிக்கை வைத்தார். ஆனால் செல்வாக்குமிக்க துறை அதிகாரியான டேவிட் சன் தேவஆசிர்வாதம், இதில் தலையிட்டு, அவரை பரங்கிமலை துணைஆணையராக உட்கார வைத்துவிட்டார். இது சக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது.''”

"சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோரைச் சுற்றி சர்ச்சை சூறாவளி ஒன்று கிளம்பியிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, அதிகாரத்தில் இருக்கும் சிலரின் பேச்சைக் கேட்டு, சென்னை ஆணையரான சந்தீப்ராய் ரத்தோர், ஒரு தொழில் நிறுவனப் பங்குதாரர்கள் பிரச்சினை யில் மூக்கை நுழைத்து எல்லை மீறியதாக சர்ச்சை பலமாகக் கிளம்பியிருக்கிறது. அதா வது, ஓசன் பில்டர்ஸ் என்ற நிறுவனத்தில் பாலசுப்ரமணியன் ஸ்ரீராம் என்பவர் டைரக்ட ராக இருந்தார். இவருக்கும் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.கே.பீட்டர் என்பவருக் கும் உரசல் ஏற்பட்டதாம். இதைத் தொடர்ந்து ஸ்ரீராமை டைரக்டர் பதவியில் இருந்து பீட்டர் நீக்கிவிட்டாராம். இது குறித்த புகார் ஹெவியான பரிந்துரையோடு சென்னை ஆணையரிடம் சென்றதாம்.''

"ம்''”

"இதைத் தொடர்ந்து, மோசடி விவகாரங்களை விசாரிக்கும் உதவி கமிஷனரான முத்துவேல் பாண்டியன் களமிறக்கப்பட, அவர் அந்த பீட்டரை வலுக்கட்டாய மாக அழைத் துச்சென்று, ஒரே இரவில் அவரிட மிருந்து 50 கோடி ரூபா யைப் பறித்து ஸ்ரீராமிடம் கொடுத்து விட்டாராம். இந்த விவகாரம்தான் இப்போது சூறாவளியாகக் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் கவனத்துக்கு சீனியர் வழக்கறிஞர் ராமன் கொண்டு சென்றிருக்கும் நிலையில், சென்னை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோரோ, ’இந்தப் பிரச்சினையில் நான் தலையிடவில்லை. சிட்டி கமிஷனராக வரத்துடிக்கும் ஒரு ’தேவ’ அதிகாரி கிளப்பிவிடுகிற புகார்’ என்று மறுத்து வருகிறாராம். எனினும் இந்த விவகாரம் பூதாகரமாகி வருகிறது.''”

"இது திராவிட மாடல் அரசுன்னு முதல்வர் சொல்கிறார். ஆனால், இப்ப இருக்கும் அதிகாரிகளில் சிலர் ஏடாகூட ஆசிரமவாதி களுக்கு சப்போர்ட்டா இருக்காங்களே?''”

"ஆமாங்க தலைவரே, ஆன்மீகத்தை வியாபாரம் செய்யும் கார்ப்பரேட் சாமியாரான ஈசா மைய ஜக்கி, வெள்ளியங்கிரி வனப்பகுதி யையும் அங்குள்ள யானைத் தடங்களையும் ஆக்கிரமிச்சி, அனைவரது எதிர்ப்பையும் சம்பாதிச்சிருக்கார். அப்படிப்பட்டவர் பல்வேறு பெருமைகள் கொண்ட கோவைக்கு தன் அடையாளத்தை சூட்டத் துடிக்கிறார்.இந்த நிலையில் அவருக்கு ஜால்ரா தட்ற மாதிரி, கோவையில் கடந்த 5ஆம் தேதி தமிழக அரசு சார்பில் திறக்கப்பட்ட அறிவு சார் மையத்தில் இருக்கும் நூலகத்தில், ஜக்கி உருவாக்கிய ஆதியோகி சிலையின் புகைப்படத்தைப் பெரி தாக வச்சிருக்காங்க. இந்த அறிவு சார் மையத்திற் கும் அந்த ஆதியோகிக்கும் என்ன சம்பந்தம்?ன்னு அங்க வரும் பொதுமக்களே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இதற்குக் கடும் கண்டனம் தெரிவிச்சிருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், அந்தப் படத்தை அங்கு வைத்து தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் எங்கள் இயக்கம் போராட்டத்தில் குதிக்கும்னு அதிரடியா அறிவிச்சிருக்கார்.''”

"அறிவாலயத் தரப்பிலும் தேர்தல் பரபரப்பு தெரியுதே?''”

ff

"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் களைத் தேர்வு செய்வதில் அறிவாலயம் மும் முரமாக இருக்கிறதாம். அதிலும் தொகுதிகளில் பல்ஸ் ரேட்டுக்கு ஏற்பவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்லப் படுகிறது. குறிப்பாக நெல்லை நாடாளுமன்ற தொகுதி என்று எடுத்துக்கொண்டால், வாக்கு வங்கியின் பலத்தை வைத்து, நாடார் சமூ கத்தைச் சேர்ந்த ஒருவரையே அங்கு நிறுத்தும் முடிவுக்கு தலைமை வந்திருக்கிறதாம். அந்த வகையில், அங்கே பொருளாதார பலம், செல் வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அஜய் படையப்பா பாண்டியன், கிரகாம்பெல் ஆகிய இருவரின் பெயர்கள்,இப்போதைய பரிசீல னைப் பட்டியலில் இருக்கிறதாம். இதில் இன் னும் பெயர்கள் இணையலாம். இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பரிசீல னைப் பட்டியலைத் தயாரித்துவருகிறதாம் அறிவாலயம். இந்த முறை வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்கிற டாக்கும் அடிபடுகிறது. எனினும் இறுதிப்பட்டியலை ஸ்டாலினே தீர்மானிப்பார் என்கிறார்கள்.''”

"எடப்பாடியை அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி, தன் விருப்பம்போல் ஆட்டி வைக்கிறார் என்கிறார்களே?''”

velumani

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வுடன் மிகவும் நெருக்கமாக நட்பு வளர்த்துக்கொண்டு, அவர்களிடம் தனிப்பட்ட முறையில் உறவுப் பாலத்தை வளர்க்க தந்திரமாய் காய்நகர்த்தும் மாஜி வேலுமணி, எடப்பாடியிடம் மட்டும், இனி நாம் பா.ஜ.க.வோடு உறவுவைக்கக் கூடாது என்று நிர்ப்பந்தித்து வருகிறார். இதன் நோக்கம், பா.ஜ.க.வுக்கு எடப்பாடியை எதிரியாக்கிவிட்டு, தான் மட்டும் ’எதிர்கால லாபம் கருதி’உறவு கொண்டாட நினைக்கிறார். இருந்தும் வேலு மணியின் நிர்ப்பந்ததுக்கு ஆட்பட்ட எடப் பாடி, பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துக்களை அங்கங்கே ஒப்பித்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக, கடந்த 7ஆம் தேதி மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோதும் ’இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை’ என்பதையே சொல்லிவிட்டு வந்திருக்கிறார். எடபாடியைத் தன் விருப்பம் போல் ஆட்டிவைக்கும் வேலுமணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி யில் தன் சகோதரர் அன்புமணிதான் வேட் பாளர் என்று அவரை நிர்ப்பந்திக்கிறாராம். இந்த விவகாரங்களை அறிந்த அ.தி.மு.க. சீனியர்கள் பலரும் வேலுமணிக்கு எதிராக புகைந்துகொண்டு இருக்கிறார்கள்.''”

"பிரதமர் மோடி நிகழ்ச்சிக்காகக் கொடுத்த பணத்தை சுருட்டிய தாக, பா.ஜ.க. பிரமுகர் கள் மேலேயே குற்றச்சாட்டு எழுந்திருக்கே?''”

ff

"ஆமாங்க தலைவரே, கடந்த வாரம் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சிக்கு வந்திருந்தார். அவர் நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேர்ப்பது, போஸ்டர் ஒட்டுவது, கொடி தோரணங்கள் கட்டுவது உள்ளிட்ட வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, மாநில பா.ஜ.க. வுக்கு ரூபாய் 2 கோடியை அனுப்பியதாம். மோடி எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் இப்படி பணம் கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்கிறார்கள். அப்படி வந்த தொகையை தமிழக பா.ஜ.க. தலைமை, டெல்டா மாவட்டங்களின் கோட்டப் பொறுப்பாளரான கருப்பு முருகானந்தத்திடம் ஒப்படைத்து விழாவை சிறப்பா நடத்தணும்னு சொல்லியிருக்கு. ஆனால் அந்தத் தொகையில் ஒரு பகுதியை மட்டும்தான் அவர் செலவுசெய்த தாகவும் மீதம் எங்கே போச்சுன்னும் அக்கட்சி யைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரம் குறித்து தேசியத் தலைமை விசாரிக்கணும்னு டெல்லிக்குப் புகார்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.''”

"ஏற்கெனவே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தபோதும் இதேபோல் தலைமை கொடுத்த பணம் சுருட்டப்பட்டதாகப் புகார் கிளம்புச்சே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடத்திய ’"என் மண் ; என் மக்கள்'’ நடைபயணத்தை தொடங்கி வைக்க, தமிழகத்துக்கு அமித்ஷா வந்திருந்தார். அப்போதும், அவரை சிறப்பாக வரவேற்க, இதேபோல சில கோடி ரூபாய்களை அக்கட்சி யின் டெல்லித் தலைமை கொடுத்திருக்கிறது. அதில் ஆளாளுக்கு கை வச்சி, ஏகத்துக்கும் சுருட்டியதாக பலமான புகார் எழுந்தது. இத னால் டெல்லி கடுப்பாகி, மாநில நிர்வாகிகள் பலருக்கு டோஸ் விட்டு எச்சரித்ததாம். அவ்வளவு கடுமையாக டெல்லி நடந்து கொண்ட போதும் கொஞ்சமும் கவலைப்படா மல், இந்தமுறையும் கட்சிப்பணத்தை சிலர் அமுக்கியிருப்பதைப் பார்த்த பா.ஜ.க. தொண்டர்கள் டென்ஷனாகியிருக்கிறார்கள். இதற்கிடையே, தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் 7 கோட்டப் பொறுப்பாளர்களில் பலரும், குறுகிய காலத்தில் சொத்துக்களை ஏகத்துக்கும் சேர்த்திருக்கிறார்களாம். அவர்கள் குறித்த விபரங்களை பா.ஜ.க.வினரே சி.பி.ஐ.க்கு அனுப்பியிருக்கிறார்களாம். இந்த விவகாரமும் விரைவில் பரபரப்பாகும்னு தெரியுது.''”

"சரிப்பா, பா.ஜ.க. பற்றிய தகவல் ஒன்றை நானும் பகிர்ந்துக்கறேன். அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் விரைவில் சென்னை வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளிடம், கூட்டணி விவகாரம், வேட்பாளர்கள் தேர்வு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், பொருத்தமான வேட்பாளர்கள் போன்றவை குறித்தெல்லாம் ஆலோசித்துவிட்டு கட்சியின் தேசிய தலைமைக்கு ஒரு ரிப்போர்ட்டை கொடுக்க இருக் கிறாராம். அந்த ரிப்போர்ட்டை வைத்து மோடியும் அமித்ஷாவும் சில அதிரடி முடிவுகளை எடுப்பார்கள் என்றும் கமலாலயத் தரப்பு சொல்கிறது.''

nkn100124
இதையும் படியுங்கள்
Subscribe