"ஹலோ தலைவரே, தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் களம் முழுக்க அனல் அடிக்குது.''”

"ஆமாம்பா, கட்சி நிர்வாகிகளை சரியான திசையில் செலுத்தணு மேங்கிற கவலை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வந்திருக்கே?''”

stalin

"உண்மைதாங்க தலைவரே.. முதல்வர் ஸ்டாலின் கூட, தேர்தல் பணிகளில் உள்ளப் பூர்வமா கட்சி நிர்வாகிகள் இறங்கணுமேங்கிற கவலையில் கட்சி நிர்வாகிகளிடம் கறார் காட்டியிருக்கார். அதாவது, தி.மு.க. வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்ட கையோடு, காணொலிக் காட்சி மூலம் தி.மு.க. மா.செ.க்களுடன் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார் ஸ்டாலின். அப்போது அவர்களிடம் பேசிய அவர், ‘நம்முடைய கூட்டணி கட்சியினர் நீண்டகாலமாக உறுதியான எண்ணத்தோடு நம்முடன் பயணிக்கிறார்கள். நாமும் நட்புணர்வுடன் அவர்களுக்குத் தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி நம் தரப்பு வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற வைப்பது உங்கள் கடமை. ஒருவர்கூட தோற்கக்கூடாது. எந்த ஒரு தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும் அந்த மாவட்ட அமைச்சர்களும், நிர்வாகிகளும்தான் பதில் சொல்லவேண்டும்’ என்று எச்சரிக்கைக் குரலில் சொல்லியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் சேலம் கிழக்கு மா.செ.வான சிவலிங்கம் பங்கேற்கவில்லை. காரணம், தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் அவர் இருக்கிறாராம்.''”

Advertisment

"இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கும், தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகுவுக்கும் இடையில் உரசல் என்கிறார்களே?''”

’"ஆமாங்க தலைவரே, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணைய ரான ராஜீவ்குமார், நடுநிலை உணர்வோடு பாரபட்சமின்றி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். இந்த நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சரான சோபா கரந்த்லஜே, ’பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமி ழர்கள்தான் காரணம்’ என்று தெனாவெட் டாகப் பேச, அவர் மீது புகார்கள் சென்றன. இதைப் பார்த்த தலைமைத் தேர்தல் அதிகாரி, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக் கும்படி உத்தர விட்டார். இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கொடுக்கப் பட்ட புகாரின் மீது அங்கே தேர்தல் ஆணை யம் அமைச்சர் மீது வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவோ, ஒன்றிய அமைச்சர் சோபா மீது மதுரை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆகியோர் சோபாவுக்குக் கண்டனம் தெரிவித்த சூழலிலும், பா.ஜ.க. அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பதா? என்று அமைதியாகிவிட்டார். இந்த விவகாரத்தில்தான் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் இங்குள்ள சத்யபிரதா சாகுவுக்கும் உரசல் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சத்யபிரதா சாகு, எப்படி தேர்தலை சரியாக நடத்துவார்? என்ற கேள்வி இப்போது பூதாகரமாக எழுந்துள்ளது.''”

"வேட்பாளர்கள் அறிவிப்பு வர வர ஜோதிடர்கள் காட்டில் அடைமழை பெய்யுதே?''”

Advertisment

’"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருக் கின்றன. மற்ற கட்சிகளும் அறிவித்து வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய 27ஆம் தேதிதான் கடைசிநாள் என்பதால், இடைப்பட்ட நாட்களில், எந்த தேதியில் வேட்பு மனு தாக்கல் செய்வது என வேட்பாளர்கள் அனைவரும் ஆலோசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், தங்கள் ஆஸ்தான சோதிடர்களிடம் தேதி கேட்டு அவர்களை மொய்த்துவருகிறார்களாம். பெரும்பாலான ஜோதிடர்கள், வருகிற 24ஆம் தேதி நிறைந்த பௌணர்மி. மறுநாள் தேய்பிறை தொடங்கி விடும். அதனால் அந்த 24ஆம் தேதியை விட்றாதீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்காங்களாம். இதனால் அவர்கள் காட்டில் அடைமழை பெய்யுது.''”

"பா.ஜ.க. கூட்டணிக்கு பா.ம.க. போனதற்கு டெல்லியின் மிரட்டல்தான் காரணம் என்கிறார்களே?''”

rang

"அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பது பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸின் தீர்மானமான முடிவாக இருந்ததாம். அதற்காகத் தான் அவரே முயற்சி எடுத்து எடப்பாடி தரப்போடு பேச்சுவார்த்தையையும் நடத்தி வந்தாராம். பா.ஜ.க. கூட்டணி வேண்டும் என்ற அன்புமணியும் கூட ஒரு கட்டத்தில் ராமதாஸின் முடிவில் கன்வின்ஸ் ஆனாராம். இந்த நிலையில், திடீரென ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்தே அன்புமணிக்கு போன் வந்ததாம். போனில் பேசிய அமித்ஷா, "இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு நீங்கள் அனுமதி கொடுத்த விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது என்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. எங்கள் கூட்டணிக்கு நீங்கள் வந்தால், உங்களுக்குரிய மரியாதையும், தொகுதிகளும், கணிசமான தேர்தல் நிதியும் கிடைக்கும். இல்லை என்றால் தேர்தலுக்கு முன்பே அதிரடி நடவடிக்கைகளும் சிறைவாசமும் இருக்கும், என்று கூலாகவே சொன்னாராம். இதைக்கேட்டு ஷாக்கான அன்புமணி, ராமதாஸ் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் இது குறித்துத் தெரிவித்த தால்தான், பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க சேரக் காரணம் என்கிறார்கள். இதுபோன்ற போன்கள் எடப்பாடிக்கும் வந்ததாம். ஆனால் அவர் அலட்டிக்கொள்ளவில்லையாம்.''”

"தே.மு.தி.க.வுக்கு அதிகம் பிடிகொடுக் காமல் இருந்த எடப்பாடி, இப்போது தங்கள் கூட்டணியில் அவர்களை இணைத்துக் கொண்டிருக்கிறாரே?''

’"ஆமாங்க தலைவரே, பா.ம.க. தங்கள் பக்கம் வரும் என்று அழுத்தமான நம்பிக்கையில் இருந்தார் எடப்பாடி. அதனால் விஜயகாந்தின் தே.மு.தி.க. நமக்கு வேண்டவே வேண்டாம். அந்தக் கட்சி நமக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜாக அமைந்துவிடும் என்ற ரீதியில் அவர் கமெண்ட்டுகளையும் பாஸ் பண்ணிக்கொண்டு இருந்தாராம். தங்களிடம் இணக்கமாகப் பேசிக்கொண்டிருந்த பாம.க, திடீரெனறு பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கிய மாகி விட்டதால் ஷாக்கான எடப்பாடி, இருப்பதையும் விட்டுவிடக்கூடாது என்றுதான், அவசர அவசரமாக தே.மு.தி.க. தரப்பை அழைத்து, அக்கட்சியோடு தொகுதி உடன்பாடு போட்டிருக்கிறார்.''

rang

"தே.மு.தி.க.விற்கு மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்கள் தரப்பு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து 20ஆம் தேதி நள்ளிரவு தாண்டியும் ஆலோசித்தபடி இருந்தார் பிரேமலதா. ஆனால் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள், எங்களிடம் பணம் இல்லை. நீங்கள் பணம் கொடுத்தால் நிற்கிறோம் என்ற பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடினார்களாம்.''”

rang

"அது சரிப்பா, பா.ஜ.க.வில் இணைந்திருந்த வீரப்பன் மகள் வித்யாராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வருதே?''”

"வீரப்பன் மகள் வித்யாராணி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகளில் ஒருவரான முரளிதரராவின் தலைமையில் பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் தற்போது அவர் சீமானின் ’நாம் தமிழர்’ கட்சியில் இணையப் போகிறார் என்றும், அக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரியில் களமிறங்கப் போகிறார் என்றும் அவர்கள் தரப்பில் இருந்தே தகவல்கள் வருது. அவர் பெயரை சீமான் விரைவில் அதிகாரப்பூர்வ மாக அறிவிப்பார் என்கிறார்கள். கடந்த மாதம் வித்யாராணி, சீமானை சந்தித்துப் பேசினாராம். அப்போதே, "என் தலைவனின் மகள் எங்களோடு இணைவது மகிழ்ச்சியைத் தருகிறது. தேர்தலுக்கு முன்பு சிறப்பும், தேர்தலுக்குப் பிறகு பொறுப்பும் உன்னைச் சேரும்'’என்று சீமான் மனம் மகிழ்ந்து வாழ்த்தினாராம்.''

"இந்தத் தகவல் அரசல்புரசலாக பா.ஜ.க. தரப்பினருக்குப் போக, அவர்கள் பதறிப்போய் வித்யாராணியுடன் பேச முயன்றார்களாம். ஆனால், அவர்களின் அழைப்புகளில் வித்யாராணி சிக்கவே இல்லையாம்.''” "ஓ.பி.எஸ். தரப்புக்கு உயர்நீதிமன்றம் அதிர்ச்சி கொடுத்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின்போது, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், கட்சிப் பெயர் ஆகியவற்றை ஓ.பி.எஸ். தரப்பு பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று, எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி தரப்பின் கோரிக்கை யை ஏற்றுக்கொண்டு, அ.தி.மு.க. வின் கட்சிப்பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ். தரப்பு பயன்படுத்தக்கூடாது என்று நிரந்தரத் தடைவிதிப்ப தாக அறிவித்து, ஓ.பி.எஸ். தரப்புக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இருந்த போதும், ’நாங்கள் தொடர்ந்த பிரதான வழக்கு இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. அதனால் எங்களுக்கு எந்த உரிமையும் போகவில்லை’ என்று சொல்லிவருகிறார்கள். இதற்கிடையே, பிரதான வழக்கு நிலுவையில் இருப்பதால், வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கு வதற்கான பி-பார்மில் எடப்பாடியைக் கையெழுத்துப்போட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். முறையிட்டார். இதையொட்டி, இதற்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் எடப்பாடிக்கு நோட்டீஸ் அனுப்பி, அவரையும் திகைக்க வைத்திருக்கிறது.''”

"என் காதுக்கு வந்த ஒரு வித்தியாசமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். காங்கிரஸ் எம்.பி.யான திருநாவுக்கரசின் சிட்டிங் தொகுதி யான திருச்சியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கி இருக்கிறது தி.மு.க. இதனால், தேனி தொகுதியில் நிற்கலாம் என்று கணக்குப் போட்டார் திருநாவுக்கரசு. ஆனால் காங்கிரஸோ, தேனியை யும் தி.மு.க.விடம் கொடுத்துவிட்டது. அதனால் எந்தத் தொகுதியில் நிற்பது என்று குழம்பிப் போனாராம் திருநாவுக்கரசு. இதற்கிடையே, அவரது ஆதரவாளரான அறந்தாங்கி வீராச்சாமி, ஏதாவது ஒரு தொகுதியில் அவர் நிற்கவேண்டும் என்று பழனிமலையின் அடிவாரத்தில் இருந்து மேலே வரை மண்டிபோட்டு நடந்திருக்கிறார். அதோடு நிற்காமல், தனது 2 கிரவுண்ட் நிலத்தை விற்று, அந்தப் பணத்தை திருநாவுக்கரசு நிற்கும் தொகுதிக்கு செலவிடுவேன் என்றும் அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.''’

rb