நக்கீரன் கோபால் சார் எழுதிய "யுத்தம்' எனும் தலைப்பில் வீரப்பனின் கதை, வாரம் இருமுறை இதழில் இரண்டரை வரு டம் வந்த தொடர்கதைக்கு ஓவியம் வரைந்தது மிகப்பெரிய பெருமை.
ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு வந்து ஓவியம் வாங்கிச் செல்வார் திரு.நக்கீரன் கோபால் சார் அவர்கள். அந்த சம்பவங் கள் அனைத்தையும் நடித் துக் காட்டுவார். கீழே புரளுவார்... குதிப்பார்... மோனோ ஆக்டிங் எல் லாம் செய்து காட்டுவார். அவருடைய இல்வால்வ் மெண்ட் வியப்பாக இருக்கும்.
இன்று-
சந்தனக் கடத்தல் வீரப் பனைப் பற்றிய ஒரு டாகு மெண்டரி ஃபிலிம்... டாகு மெண்டரி என்று சொல்லிவிட முடியாது. 4 மணி நேரம் அடித்தாற்போல் நம் இருக்கையில் உட்கார வைத்துவிட்டது. ஃபோர் பிரேமில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. வீரப்பன் வரும் ஒவ்வொரு காட்சியிலும் மொத்த தியேட்டரே கைத்தட்டல்களும், விசில் களும் பறந்தது. தான் ஏன் அப்படி ஆனேன் என்பதற்கும், ஒவ்வொரு முறையும் அவர் சொல்லும் செயல்கள் சிரிப்புடன்... உண்மை நமக்கு விளங்கும்போது ஆச்சரியங்கள்...!
இதைத் திரைப்படமாக்கலாம் என்ற சிலர் கருத்தைவிட... இது திரைப் படத்தைவிட சிறந்த ஒரு படைப்பாகவே திகழ்கிறது. நக்கீரன் கோபால் சாருடைய புதல்வி திருமதி.பிரபா மற்றும் அவரது குழுவினர்கள் உழைப்பு உன்னதமாகச் செய்திருக்கிறார்கள்.
நிஜமான மனிதர்களின் முகச்சாய லில் எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் என்ற மிகப்பெரிய ஆச்சரியத்தில் திளைக்க வைத்தார்கள். சில நேரங்களில் எது நிஜம், எது நிழல்? என்று தெரியவில்லை. அத்தனை உழைப்பு... அபார உழைப்பு... பாராட்ட வார்த்தைகள் இல்லை.
நான் தொடர்கதைக்கு ஓவியம் வரையும்பொழுது அவர் சொல்லச் சொல்ல, என் கண்ணுக்கு முன்னால் நிஜமாகவே இருந்தது... எனக்கு புல்லரிப்பை ஏற்படுத்தியது.
ஒருவன் நல்லவனா, கெட்டவனா? என்பதை இந்தச் சமூகம்தான் தீர்மானிக் கிறது என்பதற்கு வீரப்பனின் கதை ஆணித்தரமான உண்மை. ஆம்! "சாது மிரண்டால் காடு கொள்ளாது'தானே...?
இத்தனை வருடமாக திரு. நக்கீரன் கோபால் சார், இந்த புட்டேஜை பாதுகாத்து வந்தது... இன்று வீரப்பனின் உண்மை நிலையை உலகம் அறியச் செய்துவிட்டது. வீரப்பன் மேல் தவறு இருக்கிறது, இல்லை என்று கூறவில்லை.
பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்பது நம் எல்லோருக்கும் இருக்கும் குணம்தான். அது நமக்கும் நிகழும்வரை...!
தனது ஊர்மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு, அவன் பழிவாங்கும் எண்ணத்தில் ஊர்மேல் வைத்திருக்கும் பாசமே ஊர்க்காரர்களுக்கு, போலீசுக்கு பதில் சொல்லவா? வீரப்பனுக்கு பதில் சொல்லவா? என்ற இருதலைக்கொள்ளி எறும்பாய்...!?
வீரப்பனின் நோக்கம் பழிக்குப் பழி, வேரோடு புடுங்கி வெந்நீர் ஊற்றுவதுதான்.
பல வருடம் நடத்திய பொய் நாடகத்தை, முகத்திரையை கிழித்து... இன்று உண்மையைச் சொல்லும் வீரப்பனின் கதை ஓ.டி.டி.யில்!
நக்கீரன் குடும்பத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!