வீரப்பன் வெப் தொடர்! சட்டப் போராட்டத்தில் வென்ற நக்கீரன்!

webseries

யக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், வீரப்பன் குறித்து உருவாக்கிய "வீரப்பன் -கொலைக்கான பசி' என்ற வெப்தொடரை வெளியிட பெங்களூரு 12-வது முதன்மை அமர்வு நீதிமன்றம் தடைவிதித்து உத்தர விட்டுள்ளது.

இந்த வழக்கின் விவரங்களைக் காணும் முன் இதனோடு தொடர்புள்ள 2012-ஆம் ஆண்டின் முந்தைய வழக்கொன்றைப் பார்த்துவிடுவோம்.

2012-ஆம் ஆண்டில் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை வனயுத்தம் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிடுவதில் மும்முரம் காட்டினார்.

webseries

சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் வீரப்பனை நேர்காணல் கண்டு, வீரப்பனின் தோற்றம் இதுதான் என உலகுக்கு அறிமுகம் செய்ததுமுதல், 9 வன அலுவலர்கள் மீட்பு, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மீட்பு உள்ளிட்ட விவகாரங்களில் அரசுத் தூதராக சென்றதுவரை நக்கீரன் இதழின் பங்கையும், ஆசிரியர் நக்கீரன் கோபாலின் பங்கையும் புறக்கணிக்க முடியாது.

இந்தப் படம் தொடங்கும்போதே 09-09-2011 அன்று, பிரதிவாதிகள் மூவருக்கும் படத்தில் ஆசிரியரின் கதாபாத்திரம்

யக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், வீரப்பன் குறித்து உருவாக்கிய "வீரப்பன் -கொலைக்கான பசி' என்ற வெப்தொடரை வெளியிட பெங்களூரு 12-வது முதன்மை அமர்வு நீதிமன்றம் தடைவிதித்து உத்தர விட்டுள்ளது.

இந்த வழக்கின் விவரங்களைக் காணும் முன் இதனோடு தொடர்புள்ள 2012-ஆம் ஆண்டின் முந்தைய வழக்கொன்றைப் பார்த்துவிடுவோம்.

2012-ஆம் ஆண்டில் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை வனயுத்தம் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிடுவதில் மும்முரம் காட்டினார்.

webseries

சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் வீரப்பனை நேர்காணல் கண்டு, வீரப்பனின் தோற்றம் இதுதான் என உலகுக்கு அறிமுகம் செய்ததுமுதல், 9 வன அலுவலர்கள் மீட்பு, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மீட்பு உள்ளிட்ட விவகாரங்களில் அரசுத் தூதராக சென்றதுவரை நக்கீரன் இதழின் பங்கையும், ஆசிரியர் நக்கீரன் கோபாலின் பங்கையும் புறக்கணிக்க முடியாது.

இந்தப் படம் தொடங்கும்போதே 09-09-2011 அன்று, பிரதிவாதிகள் மூவருக்கும் படத்தில் ஆசிரியரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்படவிருக்கும் தன்மையை உறுதிப்படுத்துமாறும், இந்தப் படத்தை எடுக்கும்முன் உரிய அனுமதி பெறுமாறும் நக்கீரன் ஆசிரியர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதைப் புறந்தள்ளிவிட்டு இயக்குநர் பட வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.

மறைந்த சந்தன வீரப் பனின் வாழ்வு திரைப்படமாக எடுக்கப்பட்டு தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும், கன்னடத்தில் அட்டகாசம் என்ற பெயரிலும் வெளியாக இருந்த நிலையில், அரசுத் தூதராகவும் பத்திரிகையாள ராகவும் தனது பகுதிகளைத் தவிர்த்து படத்தை எடுத்திருக்க முடியாது. படத்தில் தனது பாத்திரம் தவறாகச் சித்தரிக் கப்பட்டிருந்தால் அது தன் பெயருக்கு இழுக்கு என்பதோடு, வேறுபல விதத்திலும் சிரமம். எனவே அந்தப் படத்தை போட்டுக் காண்பித்து, உரிய அனுமதிபெறாமல் வெளி யிடக்கூடாதென சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது.

இரு தரப்பையும் விசாரித்த நீதிமன்றம், படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக மனுதாரருக்கு படத்தைப் போட்டுக்காண்பிக்க உத்தரவிட்டது. நீதிபதியின் உத்தரவை அடுத்து, பிரதிவாதிகளின் தரப்பில் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படம் பார்த்தபின் அதனை வெளியிட நமது ஆசிரியர் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை.

webseries

இந்த நிலையில்தான் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ், ஏ.எம்.ஆர். பிக்சர்ஸ் மற்றும் இந்துமதி ஷிவானாவுடன் இணைந்து "வீரப்பன்- கொலைக்கான பசி' எனும் பன்மொழி வெப் தொடரைத் தயாரித்தார். இத்தொடர் வெளியாகவிருந்த நிலையில் இதுகுறித்த விவரம் நக்கீரன் கவனத்துக்கு வந்தது.

இந்த வெப்தொடர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வரும் ஜூலை மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப்தொடரை வெளியிட தடைவிதிக்க வேண்டுமென்று நக்கீரன் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் நக்கீரன் கோபால் சார்பில் பெங்களூருவிலுள்ள 12-வது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வனயுத்தம் வழக்குக்குப் பிறகு பல விஷயங்கள் நடந்துள்ளன. பத்திரிகையின் முன்னாள் பணியாளர்கள் சிலர், நக்கீரன் ஆசிரியருக்கெதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டும், வீரப்பன் வாழ்க்கை, மரணம் குறித்து தவறான, புனையப்பட்ட விவரங்களைப் பேசிவருகின்றனர், எழுதி வருகின்றனர். பத்தி ரிகை ஊடகங்களில் சிலவும், நக்கீரன் முன்னாள் ஊழியரும் ஏ.எம்.ஆர். ரமேஷுடன் ரகசியத் தொடர்பு வைத்துக்கொண்டு, ஆசிரியரின் பிம்பத்துக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர். இவையனைத்தையும் நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டுசெல்ல முடிவுசெய்யப்பட்டது.

webseries

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நக்கீரன் கோபால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கள் நடேசன், கார்த்திக் நடேசன் நீதிபதியிடம், "வீரப்பனை சந்தித்து போராடி ராஜ்குமாரை மீட்ட செய்தியாளர் நக்கீரன் கோபால். வீரப்பனை பலமுறை சந்தித்து மீட்புப் பணியை நிறைவேற்றி யது மட்டுமில்லாமல் வீரப்பன் குறித்து முழுத் தகவலையும் இந்த உலகுக்கு அளித்தவர். இயக்குனர் எனது கட்சிக்காரரிடம் தொடர்புகொண்டு இதுவரை வீரப்பன் குறித்து உண்மையான தகவல்களைப் பெறவில்லை. ஆகையால் ரமேஷ் உருவாக்கிவரும் வீரப்பன் குறித்த வெப்தொடரில் எனது கட்சிக்காரர் குறித்து பல அவதூறு செய்திகள் இடம்பெற்றுள்ளன என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்தப் வெப் தொடரை முழுவதுமாக எனது கட்சிக்காரருக்கு திரையிட்டுக் காண்பிக்கவேண்டும். அதன் பிறகுதான் இதை வெளியிடவேண்டும். அதுவரை இதனைத் திரையிட உடனடியாக தடை விதிக்கவேண்டும்''” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் நக்கீரன் கோபாலிடம் புதிதாக எடுக்கப்பட்டுள்ள வெப்தொடர் முழுவதுமாக போட்டுக் காண்பிக்கப்பட்ட பிறகே அனைத்து மொழிகளிலும் திரையிடப்பட வேண்டும் என் றும், அதுவரை இந்த படத்தை வெளியிட தற்கா லிகத் தடை விதிப்பதாகவும் தீர்ப்பு வழங்கினார்.

வீரப்பன் படங்கள் மற்றும் தரவுகளை திருடிச் சென்று நூல் வெளியிட்டார் சிவசுப்பிர மணியன். அதற்கு கோர்ட்டின் உதவியால் தடை பெற்றோம். இந்நிலையில் கோர்ட் தடையை மதிக்காமல் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கர்நாடக மாநிலத்தில் வைத்து அந்நூலை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டார். அதற்கும் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் தடை பெற்றோம்.

மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்தில் நக்கீரன் வென்றிருக்கிறது.

-சூர்யன்

webseries

nkn180323
இதையும் படியுங்கள்
Subscribe