2025-ஆம் ஆண்டுக்கான வி.சி.க. விருது விழா ஜூன் 25-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. "அம்பேத்கர் சுடர்'’விருதினை திராவிடப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.எஸ்.சலத்துக்கும், "பெரியார் ஒளி' விருதினை திரைப்படக் கலைஞர் சத்தியராஜுக்கும், "மார்க்ஸ் மாமணி' விருதை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகுக்கும், "காமராசர் கதிர்' விருதை புதுச்சேரி மேனாள் முதலமைச் சர் வெ.வைத்திலிங்கத்துக்கும், "அயோத்திதாசர் ஆதவன்' விருது பௌத்த ஆய்வறிஞர் முனைவர் பா.ஜம்புலிங்கத்துக் கும், "காயிதேமில்லத் பிறை' விருதை, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவிக்கும், "செம்மொழி ஞாயிறு' விருதை யாழ்ப்பாணம் தமிழறிஞர், பேராசிரியர் அ.சண்முகதாஸுக்கும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் வழங்கிச் சிறப்பித்தார். 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை- இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர் கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு, இந்த விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. 2022-ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘"மார்க்ஸ் மாமணி'’விருதும் வழங்கிவருகிறார்கள்.
விருது பெற்றுக்கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், "என்னுடைய நீண்டநாள் பெரிய குறை நீங்கியது. தம்பிகிட்ட எதாவது வாங்கவேண்டும் என நினைத்த எனக்கு, தற்போது இந்த விருது கிடைத்துள்ளது. "பெரியார்' படத் தில் நடித்ததற்காக சம்பளம் வாங்க வில்லை. அதற்குப் பரிசாக 100-வது நாள் விழாவில் பெரியார் அணிந்திருந்த மோதி ரத்தை எனக்கு வீரமணி கொடுத்தார். அதேபோல எம்.ஜி.ஆரிடம் அவரது கர்லா கட்டையை கேட்டு வாங்கினேன். இன்று எழுச்சித் தமிழரிடம் ரூ.50,000 செக் வாங்கினேன். வி.சி.க.வில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு இதில் 49,500 ரூபாய் கொடுத்துவிடுகிறேன். மீதி 500 ஐ பிரேம் போட்டு எனக்குக் கொடுக்க வேண்டும்''’என வன்னியரசுவிடம் கேட்டுக்கொண்டார். 


அம்பேத்கர் விருது பெற்றுப் பேசிய பௌத்த ஆய்வறிஞர் முனைவர் பா.ஜம்பு லிங்கம், “"மனுதர்ம சாஸ்திரத்தின்படியும், அனைத்து சூத்திரர்களும் இந்திய பூர்வகுடிகள். இந்திய பூர்வகுடிகள்தான் உலகிலேயே பெரிதும் துன்புறுத்தப் பட்டவர்கள். 4000 ஆயிரம் ஆண்டுகள் துயரம் அவர்களுடையது. அவர்கள் முதலில் பௌத்தத்துக்கும், பின் இஸ்லாமுக்கும் மதம் மாறினர். இவர்களை மதத்தின் பெயரைச் சொல்லி பிளவுபடுத்தும் திட்டத்தை முறியடிக்கவேண்டும். இந்த விருதினைக் கொடுத்தமைக்கு நன்றி''’என்றார்.  

Advertisment

thiruma1

மார்க்ஸ் மாமணி விருது பெற்றுப் பேசிய தோழர் தியாகு, "என் சார்பிலும், இயக்கத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைப் பருவத்தில் தாடியுடன் இருந்த புகைப் படத்தை பற்றிக் கேட்டபோது... "அவர் சிங்கம், காட்டுக்கு ஒரு சிங்கம் போன்று நாட்டிற்கு ஒரே சிங்கம் கார்ல்மார்க்ஸ்தான்' எனச் சொன்னார்கள். அதிலிருந்து அவரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அவருக்கும் எனக்குமான உறவு இந்த விருதுவரை கொண்டு சேர்த்துள்ளது. திருமாவின் போராட்டக் களத்தில் நானும், எங்களின் போராட்டக்களத்தில் திருமாவும் எப்போதும் இருப்போம்''’என்றார்.  


வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பேசியபோது, "நாங்கள் 234 தொகுதிகளுக்கும் இணையானவர்கள், தகுதியானவர்கள். ஆனால் இன்றைக்கு கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட் டம், பேரணி நடத்த போராடவேண்டியுள்ளது. இந்து மதம் சகோதரத்துவத்தைப் பேசுகிறதா? இல்லையே, மேல்பாதியில் என்னால் நுழைய முடியவில்லை. திருநீறை அழித்துவிட்டேன் என ஆத்திரப்படுகிற நீங்கள், என்னை கோவிலின் கருவறைக்குள் அழைத்துச்செல்ல ஒரு போராட்டம் நடத்த முடியுமா? இவர்கள் எப்போதும் நம்மை சகோதரனாக அணுகுவதில்லை, ஆனால் ஓட்டுக்காக உன்னையும், என்னையும் முருக பக்தர் என சொல்லி அரசியலில் வீழ்த்தப் பார்க்கிறார்கள். புண்ணியம் கிடைக்கும் என திருநீறைப் பூசிக்கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அழிக்கவி ல்லை. இது அந்த அற்பர்களுக்குத் தெரியாது.

Advertisment


அ.தி.மு.க. வெறும் அரசியல் ஆதாயம் கருதி பா.ஜ.க.வோடு சேர்ந்துகொண்டு அவர்கள் செய்வதையெல்லாம் நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் அவர்கள் விசுவாசமாக இருந்தால், அவர்களால் பி.ஜே.பி.யோடு சேரவே முடியாது. எடப்பாடி பழனிச்சாமி மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். நீங்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைச் செய்கிறீர்கள். அ.தி.மு.க. தொண்டர்களை பா.ஜ.க. ஆட்களாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.


அ.தி.மு.க.வை ஒரு தோழமை இயக்கம் என்று கருதி இதை நான் முன்வைக்கிறேன் ஜெயலலிதா, "பா.ஜ.க.விடம் நாங்கள் ஏமாந்து விட்டோம். மோடியிடம் நாங்கள் எந்த காலத்தி லும் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம்' என்று சொன்னார் அவரது வாக்கை நிறைவேற்ற வேண்டாமா? இன்றைக்கு எதற்காக இந்த மாநாட்டை நடத்தினார்கள்? எந்த கோரிக்கை யை முருக பக்தர்கள் வைத்தார்கள்? மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். அப்படி பிளவுபடுத்துவதுதான் இந்துத்துவா வின் செயல்திட்டம். அதில் ஒன்றுதான் அரசிய லமைப்புச் சட்டத்தை தூக்கியெறிவது. இந்தியா அல்லது பாரத் என்பதை மாற்றி ஹிந்துஸ்தான் அல்லது இந்து ராஷ்ட்ரா என்று அறிவிப்பு செய்வது. இதெல்லாம் நடந்தால் 2000 வருடங் களுக்குப் பின்னால் இந்தியா செல்லும்''’எனச் சுட்டிக்காட்டினார்.