வேல் யாத்திரை! பா.ஜ.க.விடம் பம்மிய அ.தி.மு.க. அரசு!

lmurugan

தேர்தல் களத்தில் இந்துத்வா ஆயுதம் பயன்படும் என நினைக்கும் தமிழக பா.ஜ.க., முருகக் கடவுளின் வேல் துணையை நாடியிருக்கிறது. நவம்பர் 6ல் திருத்தணியில் தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6 அன்று திருச்செந்தூரில் வேல் யாத்திரையை நிறைவு செய்வதாக அறிவித்தார் தமிழக பா.ஜக. தலைவர் எல்.முருகன்.

lmuruganமதரீதியான யாத்திரையால் தமிழகத்தில் வன்முறை விதைக்கப் பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என எதிர்ப்புத் தெரிவித் தன பல கட்சிகளும். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கொரோனா நேரத்தில் கூட்டம் சேர்வதைக் காரணம் காட்டி வேல் யாத்திரைக்கு தடை என்றது எடப்பாடி அரசு. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் பெயருக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டது.

தடையை மீறுவோம் என்றார் எல்.முருகன். அதற்கான பொறுப்பு, மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநில நிர்வாகிகளான லோகநாதன், நரேந்திரன் ஆகியோர் திருத்தணி-சென்னை பைபாஸ் சாலையில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகளை ஆரம்ப

தேர்தல் களத்தில் இந்துத்வா ஆயுதம் பயன்படும் என நினைக்கும் தமிழக பா.ஜ.க., முருகக் கடவுளின் வேல் துணையை நாடியிருக்கிறது. நவம்பர் 6ல் திருத்தணியில் தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6 அன்று திருச்செந்தூரில் வேல் யாத்திரையை நிறைவு செய்வதாக அறிவித்தார் தமிழக பா.ஜக. தலைவர் எல்.முருகன்.

lmuruganமதரீதியான யாத்திரையால் தமிழகத்தில் வன்முறை விதைக்கப் பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என எதிர்ப்புத் தெரிவித் தன பல கட்சிகளும். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கொரோனா நேரத்தில் கூட்டம் சேர்வதைக் காரணம் காட்டி வேல் யாத்திரைக்கு தடை என்றது எடப்பாடி அரசு. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் பெயருக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டது.

தடையை மீறுவோம் என்றார் எல்.முருகன். அதற்கான பொறுப்பு, மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநில நிர்வாகிகளான லோகநாதன், நரேந்திரன் ஆகியோர் திருத்தணி-சென்னை பைபாஸ் சாலையில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகளை ஆரம்பித்து விட்டனர். கட்சியின் லோக்கல் நிர்வாகியான சவேரா சக்கரவர்த்தி நாயுடு அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். ஏராளமான பா.ஜ.க.தொண்டர்களும் அந்த மேடையருகே குவிந்தனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீசாருக்கும் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமானது. ஆனால், போலீஸ் உயரதிகாரிகளுடன் பா.ஜ.க. நிர்வாகிகள் நல்லுறவில் இருந்தனர். திருத்தணியில் உள்ள அனைத்து லாட்ஜுகளிலும் நவ.05-ஆம் தேதி இரவே பா.ஜக.வினர் தங்க வைக்கப்பட்டனர். வி.வி.ஐ.பி.களுக்கு பண்ணை வீடுகளில் ஸ்பெஷல் கவனிப்பு நடந்தது.

ஐ.ஜி. நாகராஜ், டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, எஸ்.பி. அரவிந்தன் ஆகியோர் திருத்தணியில் ஆஜராகிவிட்டனர். 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, திருத்தணிக்குள் நுழையும் அனைத்து சாலைகளும் பேரிகார்டால் தடுக்கப்பட்டு, வாகன சோதனையும் தீவிரமாக நடந்தது.

திருத்தணிதான் யாத்திரை தொடங்கும் ஸ்பாட் என்றாலும், 06-ஆம் அதிகாலையிலேயே பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வீடு இருக்கும் சென்னை கோயம்பேடு ஏரியாவில் பி.ஜே.பி. தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். விண் டி.வி. தேவநாதன் ஏற்பாடு செய்திருந்த யாத்திரை வேன் முருகன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டது.

மூத்த நிர்வாகிகளான பொன்னார், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வினோஜ் செல்வம், வேதா சுப்பிரமணியம், கேசவ வினாயகம், டால்பின் ஸ்ரீதர், சுரேஷ் கண்ணா, கருநாகராஜன் ஆகியோரும் முருகன் வீட்டில் ஆஜராகினார்கள். காவி வேஷ்டி, சட்டை, கையில் வேலுடன் வீட்டைவிட்டு வெளியே வந்த முருகனுக்கு மேளதாளம் பேண்டு வாத்தியம், சரவெடி என தூள் கிளப்பினார்கள் பா.ஜ.க.தொண்டர்கள்.

யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் மாஸ்க்கும் இல்லாமல் சமூக இடைவெளியும் இல்லாமல் புறப்பட்டனர். 200-க்கும் மேற்பட்ட வாகனங்களால் பூந்தமல்லி நெடுஞ்சாலையே திணறியது. சென்னை மாநகர காவல் எல்லை முடியும் இடமான நசரத்பேட்டையில் யாத்திரைக் குழுவினர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பின்னர் வி.ஐ.பி. வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தது போலீஸ். அந்த வாகனங்களுக் குப் பின்னே மற்ற வாகனங்களும் செல்ல ஆரம்பித்தன. இப்படியே தடுத்து நிறுத்தப்பட்டு, பின்பு அனுமதிக்கப்பட்டு என 110 கி.மீ. பயணித்து திருத்தணிக்கே சென்றுவிட்டது வேல் யாத்திரை. தடை என அரசு அறிவித்த நிலையில், மீடியாக் களின் லைவ் கவரேஜுடன் தன் போக்கில் போனது பா.ஜ.க. நினைத்தது நிறைவேறிய மகிழ்ச்சியில் கூத்தாடினர் பா.ஜ.க.வினர்.

திருத்தணியில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் ஆலோசனை செய்துவிட்டு முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய எல்.முருகன், திருத்தணி பைபாஸ் சாலையில் திரண்டிருந்த தொண்டர்களிடம் பேசும் போது, “துள்ளி வரும் இந்த வேலுக்கு யாரும் தடை போட முடியாது. இந்த திருத்தணி தொகுதியில் நாம் தான் வெற்றி பெறுவோம்’’ என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

bjp

எல்.முருகனும் கர்நாடக மந்திரி ரவியும் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றப்பட்டனர். பஸ்ஸில் ஏறிய சில நிமிடங்களிலேயே இறங்கி, தனது காரில் புறப்பட்டுவிட்டார் ரவி. வழக்கம் போல் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கும் போடப்பட்டது.

நவ.07-ஆம் தேதி யாத்திரைக்கு லீவு விடப் பட்டு, 08-ஆம்தேதி காலை சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்குப் புறப்பட்டார் எல்.முருகன். திருத்தணி போலவே சீன் போடப் பட்டது.

வேல் யாத்திரையையும் போலீசின் ஆக்ஷனையும் பார்த்தால் ‘ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்’ என்ற கவுண்டமணியின் காமெடி தான் நினைவுக்கு வந்தது.

-அரவிந்த்

படங்கள் :ஸ்டாலின், அசோக்

___________

டெல்லி ஆர்டர்!

எடப்பாடி அரசின் நடவடிக்கையால் பிரதமர் மோடி அதிருப்தியடைய, ஜே.பி.நட்டாவிடம் இது பற்றி பேசியுள்ளார். எடப்பாடியைத் தொடர்பு கொண்டு, “நீங்கள் மட்டும் மாவட்டம் தோறும் டூர் போகலாமா? வேல் யாத்திரைக்கு அனுமதி தரமாட்டீங்களா? 10ந் தேதி வழக்கு வரும்போது, தமிழகத்தில் 200 பேர் அளவுக்கு கூடி மத நிகழ்ச்சிகளை நடத்தலாம் என நீதிமன்றத்தில் சொல்லுங்க என டெல்லி உத்தரவிட்டுள்ளது.

-பிரகாஷ்

nkn111120
இதையும் படியுங்கள்
Subscribe