அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத்தின் முன்னாள் உதவியாளர் குமார் குடும்பத்தினர் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் தலைமறைவான சம்பத், முன்ஜாமீனுக்காக முயற்சித்துள்ள விவகாரம் அ.தி.மு.க. அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்ஜாமீன் கிடைத்ததும்தான் பொதுவெளியில் சம்பத் தலைகாட்டுவார் என்கிறார்கள் கடலூர் அ.தி.மு.க.வினர்.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும், பிறகு, தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் அ.தி. மு.க.வின் மூத்த தலைவரான கடலூர் எம்.சி.சம்பத். இவரிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்தவர் குமார். அ.தி.மு.க. ஆட்சி 2021-ல் முடிவுக்கு வந்த பிறகு, எம்.சி.சம்பத்திட மிருந்து குமார் விலகிவிட்டார். ஆனால், கொடுக்கல்- வாங்கல் விவகாரத்தில் இரு தரப்புக்கும் மோதல்கள் மட்டும் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு அன்று குமாரின் வீட்டுக்கு எம்.சி. சம்பத்தின் சகோதரர் தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றுள்ளனர். அங்கு குமாரின் மாமனார் ராமச் சந்திரன், மாமியார் ஜோதி மட்டும் இருந்துள்ளனர். அவர்களை அருகிலிருக்கும் திரௌபதி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று கொடுக்கல் வாங்கல் பிரச்சினை குறித்து தகராறு செய்திருக்கிறார் தங்கமணி.
இதனால் ஏற்பட்ட கைகலப்பினைப் பார்த்து ஏரியா மக்கள் திரண்டு வந்து அமைதிப் படுத்தியிருக்கிறார் கள். சம்பவத்தை யறிந்து டி.ஐ.ஜி. பாண்டியன், எஸ்.பி. சக்திகணேஷ் உள் ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஸ்பாட் டுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதால் கடலூர் மாவட்டமே பரபரப்புக்குள்ளானது.
இதற்கிடையே, பண்ருட்டி அரசு மருத் துவமனையில் அட்மிட்டான குமாரின் மாமனார் ராமச் சந்திரன், எம்.சி.சம்பத்தின் குடும்பத்தினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுக்க, எம்.சி.சம்பத், அவரது சகோதரர் எம்.சி .தங்க மணி உள்பட 14 பேர்மீது வழக்குப் பதிவு செய் யப்பட்ட நிலையில், தங்கமணியின் ஆதரவாளர்கள் 2 பேர் உடனடி யாக கைது செய்யப்பட்டார்கள். சம்பத்தையும், தங்க மணியையும் கைது செய்ய போலீசார் முயற்சித்த போது அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். முன்ஜாமீன் பெற முயற்சித்தபடி இருந்தனர்.
இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் அதிர்ச்சி யையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சூழலில், சம்பத்தின் கருத்தறிய அவரை பலமுறை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் எண் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் பண்ருட்டி ஒன்றிய செயலாளர் கந்தனை தொடர்புகொண்டு பேசியபோது,’"அமைச்சரின் பெயரைப் பயன் படுத்தி வேலை வாங்கித் தருவதாக பலபேரிடம் பல லட்சங்களை வாங்கியிருக்கிறார் குமார். ஆனால், அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சம்பத்தை விட்டு குமார் விலக, பணம் கொடுத்தவர்களெல்லாம் குமாரை அணுகி பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார்கள்.
"கொஞ்சம் டைம் கொடுங்கள்; கொடுத்துவிடுகிறேன்' என சமாளித்தபடி இருந்தாரே தவிர, பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை குமார். ஒரு கட்டத்தில் அவர்களை சந்திக்க மறுத்து அடிக்கடி தலை மறைவாகிவிடுவார். இதனால் வெறுத்துப்போன அவர்கள் கடந்த 3 மாதங்களாக சம்பத்திடம் முறையிட் டார்கள்.
இதனால் குமாரை தொடர்பு கொண்டு, ’"உன்னைத்தேடி என்னிடம் வந்திருக் கிறார்கள்; நேரில் வந்து அவர்களுக்கு பதில் சொல்'’என பேசினார். ஆனால், வரவே இல்லை. ஏற்கனவே சில கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் குமார் சரிவர கணக்கு காட்டாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டே வந்ததால் அது தொடர்பான பிரச்சனையும் நீடித்தபடி இருந்தது. இந்த நிலையில்தான், வேலைக்கு பணம் கொடுத்த விவகாரம் முளைக்க... மனஉளைச்சல்களுக்கு ஆளானார் சம்பத்.
பிரச்சனை இப்படியே நீடிக்க, புத்தாண்டு அன்று திருவந்திபுரம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இருந்ததால் விடியற்காலை 3 மணிக்கெல்லாம் அங்கு சென்று விட்டார் சம்பத். அதேசமயம், இந்த புத்தாண்டில் பிரச்சனை சரியாக வேண்டும் என நினைத்து, குமாரை தேடிச் சென்றார் சம்பத்தின் சகோதரர் தங்கமணி. வீட்டில் குமார் இல்லை. அவரது மாமனார் -மாமியார்தான் இருந்தனர்.
மாமனார் ராமச்சந்திரனிடம், உங்க மருமகன் பண்ண காரியத்துக்கு நாங்க பதில் சொல்லவேண்டியிருக்கு. பணத்தையெல்லாம் உங்ககிட்ட குமார் கொடுத்து வெச்சிருக்கான். அதனால் நீங்க வந்து செட்டில் பண்ணுங்க என சொன்னார் தங்கமணி. என்கிட்டே கொடுக் கலைன்னு ராமச்சந்திரன் மறுத்துப் பேச, அப்படின்னா கோவிலுக்கு வந்து சத்தியம் பண்ணு என தங்கமணி சொல்ல, வர முடியாது என அவர் மறுக்க, ஏன் வரமுடியாதுன்னு சொல்லிக் கொண்டே ராமச்சந்திரன் கையைப் பிடித்து இழுத்தபடியே கோவிலுக்கு வந்தார் தங்கமணி.
மக்களெல்லாம் ஓடோடி வந்து விலக்கி விட்டனர். இந்த நிலையில் தனது மருமகன் குமாரை தொடர்புகொண்டு ஜோதி தெரிவித்திருக்கிறார். உடனே டி.ஐ.ஜி.யிடம் குமார் பேச, அவர்களும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டனர். அதேசமயம், குமாரின் யோசனையின் பேரில் சம்பத்திற்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் சம்பத் இல்லவே இல்லை. அவர் மீது எதற்கு புகார் கொடுக்க வேண்டும்? மேலும், யாரையும் கொலை செய்து விடுவதாக தங்கமணி மிரட்டவே இல்லை. தனது திருட்டுத்தனத்தை மறைக்க சம்பத்தை பழிவாங்க சதி செய்கிறார் குமார்''’என்று நடந்தவைகளை சுட்டிக்காட்டுகிறார் கந்தன்.
மேலும் துறைரீதியாக நாம் விசாரித்த போது,’"வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையினருடன் மென்மையாக இருந்தவர் சம்பத். அதனாலேயே அவரிடம் பலரும் நட்பில் இருந் தனர். இதைப் பயன்படுத்தி போலி பத்திரப்பதிவு களை நிறைய செய்திருக்கிறார் குமார். இதற்கு உடந்தையாக பதிவுத்துறையில் உள்ள சிலர் குமாருடன் கூட்டு சேர்ந்து கொண்டார்கள். இதன் மூலம் கோடிகோடியாக சொத்து சேர்த்துள்ளார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இப்போதும் சார்-பதி வாளர்களுடன் பழைய நட்பை தொடர்ந்து வரும் குமார், சம்பத் பெயரை யூஸ்பண்ணி போலி பத்திரப்பதிவுகளை செய்து வருகிறார்.
குறிப்பாக, மதுரையில் 116 ஏக்கர் நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த விவகாரம், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பொன்னுச்சாமிக்கு சொந்தமான திருச்சி அம்மாபேட்டையிலுள்ள 9 ஏக்கர் நிலத்தை, வாலாஜாபாத் கிராமத்திலுள்ள 5 சென்ட் நிலத்தோடு இணைத்து ஜே.ஜே.கல்வி நிறுவனத்துக்கு விற்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், பாண்டிச்சேரியின் ஜூவல்லரி ஓனர் ஒருவருக்கு சொந்தமான பீச் ரெசார்ட்டை 148 கோடிக்கு சசிகலா வாங்கியதில் கைமாற்றப்பட்ட பணத்தில் 40 கோடியை அமைச்சர் பெயரைச் சொல்லி ஆட்டையை போட்ட விவகாரம் உள்பட குமாரின் தில்லு முல்லு கள் எல்லாம் சம்பத்துக்கு தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து குமாரை கடுமையாக எச்சரித்துள்ளார் சம்பத். ஆனால் அவர் மாறவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், தனது பெயரைப் பயன்படுத்தி பத்திரப்பதிவுத் துறையில் குமார் விளையாடிவருவதை அறிந்து டென்சனாகி விட்டார் சம்பத். இதற்கிடையே, தென்மாவட் டத்தைச் சேர்ந்த மாவட்ட பதிவாளர் ஒருவரும், குமாரும் இணைந்து நடத்திய போலி பத்திரப் பதிவுகளை ஆராய்ந்தால் அதிர்ச்சிகரமான பல பூதங்கள் வெளியே வரும்” என்று நம்மிடம் விவரித்தனர் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள்.
இது குறித்து கருத்தறிய குமாரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவரது எண்ணும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது. அவரது ஆதரவு வட்டாரத்தில் விசாரித்தபோது, பெயரைச் சொல்ல மறுத்து நம்மிடம் பேசியவர்கள், "சம்பத்துக்கு மிக நெருக்கமாக இருந்தவர் குமார். சம்பத்துக்கு தெரியாமல் குமார் மட்டும் தனியாக இயங்கியிருக்க முடியாது. அதனால் ஏற்பட்ட கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோதுதான் அவர்களுக்குள் மோதல் வந்திருக்கிறது. கணக்கு ஏதேனும் சரியாக இல்லையெனில் குமாரை அழைத்து சாதாரண மாக பேசியிருக்கலாம். அதனை விட்டுவிட்டு, மாமனார் வீட்டுக்கெல்லாம் சென்று மிரட்டுவது எந்த வகையில் நியாயம்?''’என்று கேட்கின்றனர்.
இந்த நிலையில், சம்பத்தை கைது செய்ய தீவிரமாக தேடி வருகிறது போலீஸ். முன்ஜாமீன் கிடைத்தால் தப்பித்துக்கொள்வார் மாஜி சம்பத். கிடைக்காத பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார் என்கிற பேச்சே காவல்துறை வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.
______________
இறுதிச் சுற்று!
மறைந்தார் திருமகன் ஈ.வெ.ரா!
தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வு மான திருமகன் ஈ.வெ.ரா. உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மரணமடைந்திருப்பது, அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று, திருமகன் ஈ.வெ.ரா. சட்டசபைக்குச் சென்றார். தொகுதியில் மக்கள் சந்திப்பு, கோரிக்கைகளை நிறைவேற்றுதல் என தொடர்ந்து பயணம் செய்துவந்தார்.
கடந்த சில நாட்களாகவே இவருக்கு உடல்நலக்குறைவு இருந்துள்ளது. இந்த நிலையில் 4-ஆம் தேதி காலையில் வெகு நேரம் படுக்கையிலிருந்து அவர் எழவில்லை. வீட்டிலிருந்தவர்கள் திருமகன் ஈ.வெ.ரா.வை ஈரோடு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்றுள்ளார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத்திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கச்சேரி சாலையிலுள்ள வீட்டில் திருமகன் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின், உதயநிதி, கனிமொழி ஆகியோருடன் ஈரோட்டுக்கு நேரில்வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
-ஜீவாதங்கவேல்