நெடுஞ்சாலைத் துறை கோல்மால் அள்ளிச் சுருட்டுவதற்காக அவசர டெண்டர்! பாலைவனமாகும் தமிழகம்!

rr

கொரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து ஆராய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும் பொருளாதார அறிஞருமான ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை கடந்த மே-9ந் தேதி அமைத்தார் முதல்வர் எடப்பாடி. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டை ஆராய்ந்து அதனையொட்டி அரசுக்கு வருவாயை பெருக்கும் வழிகளையும், எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டச் செலவுகளை செய்ய வேண்டுமென்பதையும் முடிவு செய்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ரங்கராஜனை வலியுறுத்தி, அரசாணையையும் வெளியிட்டது எடப்பாடி அரசு.

rr

அந்தக் கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, பல்வேறு துறைகளை உள்ளடக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை எடப்பாடி அறிவித்து வருவதுடன் அத்தகைய டெண்டர்களுக்கு நிதி ஒதுக்கீடு ஒப்புதலை அளிக்குமாறு நிதித்துறையினருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

அரசின் அராஜகத்திற்கும் ஊழல்களுக்கும் எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி ""எடப்பாடி அரசின் பொருளாதார விவகாரங்களை தற்போது கையிலெடுத்திருக்கிறார். அவரிடம் பேசிய போது, ’ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார வல்லுநர் கமிட்டி தனது பொருளாதார ஆலோசனைகளை அரசிடம் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 9 வரை அவகாசம் இருக்கிறது. அதுவரை காத்திருக்காமல் பல்வேறு துறைகளுக்கான டெண்டர்களை அறிவித்து அந்த திட்டங்களை நிறைவேற

கொரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து ஆராய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும் பொருளாதார அறிஞருமான ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை கடந்த மே-9ந் தேதி அமைத்தார் முதல்வர் எடப்பாடி. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டை ஆராய்ந்து அதனையொட்டி அரசுக்கு வருவாயை பெருக்கும் வழிகளையும், எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டச் செலவுகளை செய்ய வேண்டுமென்பதையும் முடிவு செய்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ரங்கராஜனை வலியுறுத்தி, அரசாணையையும் வெளியிட்டது எடப்பாடி அரசு.

rr

அந்தக் கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, பல்வேறு துறைகளை உள்ளடக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை எடப்பாடி அறிவித்து வருவதுடன் அத்தகைய டெண்டர்களுக்கு நிதி ஒதுக்கீடு ஒப்புதலை அளிக்குமாறு நிதித்துறையினருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

அரசின் அராஜகத்திற்கும் ஊழல்களுக்கும் எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி ""எடப்பாடி அரசின் பொருளாதார விவகாரங்களை தற்போது கையிலெடுத்திருக்கிறார். அவரிடம் பேசிய போது, ’ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார வல்லுநர் கமிட்டி தனது பொருளாதார ஆலோசனைகளை அரசிடம் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 9 வரை அவகாசம் இருக்கிறது. அதுவரை காத்திருக்காமல் பல்வேறு துறைகளுக்கான டெண்டர்களை அறிவித்து அந்த திட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி அரசு துடிப்பது தவறானது.

கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச்-24 ந்தேதிக்கு பிறகு, முக்கியமான 20 துறைகளில் இதுவரை 3,500 டெண்டர்களை அறிவித்துள்ளது எடப்பாடி அரசு. இந்த டெண்டர்களில், கொரோனா பரவலை தடுப்பதற்கான சுகாதாரத்துறையின் டெண்டர்கள் அடங்காது. நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளின் டெண்டர்களே இதில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அதாவது, நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான வேலைகள், தஞ்சை கோட்டத்தில் செயல்பாடு அடிப்படையிலான ஒப்பந்தத்தில் 1,850 கோடி மதிப்பிலான வேலைகள், கிராம சாலைகள் பிரிவில் 1,500 கோடி மதிப்பிலான வேலைகள், திட்டங்கள் பிரிவில் 1,500 கோடி மதிப்பிலான பாலங்கள் , உலக வங்கி மற்றும் ஆசியன் வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்ற 1,300 கோடி மதிப்பிலான வேலைகள், திட்டம் சாரா வேலைகளில் 500 கோடி மதிப்பிலான பணிகள் என 12,000 கோடி மதிப்பிலான 5000 வேலைகளுக்கு 1000 டெண்டர்களை அறிவித்து அந்த திட்டங்களை நடை முறைப்படுத்த மிகவும் அவசரத்தை காட்டி வருகிறார் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி.

rr

நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 15,850 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இதில், சாலைகளை பராமரிக்கவும் பாலங்கள் கட்டவும் மட்டுமே 15,000 கோடிகள். இதில், கடந்த வருடம் அறிவிக்கப்பட்டு தற் போது வரை நடந்து வரும் பணிகளுக்காக 2000 கோடி ரூபாயும், இந்த ஆண்டில் புதிய வேலை களுக்காக 13,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நிதியாண்டு ஆரம்பித்த இரண்டே மாதங்களில் 1000 டெண்டர்களை புயல் வேகத்தில் அறிவித்த வரலாற்றை நெடுஞ்சாலைத் துறை கடந்த 50 ஆண்டுகளில் கண்டதில்லை.

பொதுவாக பட்ஜெட் நிறைவேறிய பிறகு, புதிய பணிகளுக்கான டெண்டர்கள் நவம்பர் மாதத்தில்தான் இறுதி வடிவம் பெறும். ஆனால், இந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட இரண்டே மாதத்தில் டெண்டர் அறிவித்து அதனை இறுதி செய்யும் வேலைகள் வேகவேகமாக நடந்துள்ளது. அதாவது, சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடிகளையும் செலவு செய்து அதன் மூலம் தாங்கள் எதிர்பார்ப்பதை சாதிக்க நினைத்தே இந்த புயல் வேகத்தை காட்டுகின்றனர்.

மக்களுக்கான வாழ்வாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும் அரசு, சாலைகளுக்கும் பாலங்களுக் கும் நிதி ஒதுக்குவது அநியாயம். டெண்டர்களை அறிவிப்பதற்கு முன்பு ரங்கராஜன் கமிட்டியிடம் ஆலோசித்திருக்க வேண்டும். நிதி நெருக்கடியிலிருக்கும் அரசு, உடனடி செலவு செய்ய வேண்டிய பணிகள் எவை என கண்டறிந்து சொல்வதற்கான பொருளாதார கமிட்டியின் ஆலோசனைகளைப் பெறாமலே டெண்டர்களை தங்களது விருப்பம்போல் அறிவிக்கிறது எனில் அந்த பொருளாதார கமிட்டி எதற்கு? தற்போதைய சூழலில், நெடுஞ்சாலை பணிகள் முக்கிய மானவை அல்ல. அவைகளுக்கு ஒதுக்கப்படும் மக்களின் வரிப்பணம், ஆட்சியாளர்கள், துறையின் அதிகாரிகள், டெண்டரை எடுக்கும் காண்ட்ராக்டர்களின் சூட்கேஸ் களை நிரப்பவே உதவும். மக்களுக்கு பலனில்லை.

பொருளாதார உயர்மட்ட குழுவின் ஆலோசனைகளை பெறாமலே வேகமாக அறிவிக்கப்படும் இந்த டெண்டர்கள் குறித்து நிதித்துறை அதிகாரிகள் கவலைப்படாததும், கண்டுகொள்ளாமலிருப்பதும் மேலும் அதிர்ச்சியைத் தருகிறது. இது குறித்து ரங்கராஜன் கமிட்டிக்கும், நிதித்துறைக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளேன்'' என்கிறார் மிக ஆவேசமாக.

இது ஒருபுறமிருக்க, இத்தகைய நெடுஞ்சாலைத் திட்டங்களால் தமிழகம் பாலைவனமாகும் என எச்சரிக்கிறார்கள் சுற்றுச் சூழல் நிபுணர்கள். இது குறித்து நம்மிட பேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான ’ பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் சுந்தரராஜன், ""இந்தியன் ரோடு காங்கிரஸ் என்றழைக்கப்படும் (ஐ.ஆர்.சி.) இந்திய சாலைப் பொறியாளர்களின் உயர்மட்ட குழுவின் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான விதிகள்தான், சாலைகள் மற்றும் பாலங்கள் வடிவமைக்கும் போது கையாள வேண்டிய தர நிர்ணயங்களையும் வழிமுறை களையும் வரையறை செய்கிறது. அதன்படி, நெடுஞ்சாலை திட்டங்கள் அறிவிப்பதற்கு முன்பு சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை அரசு செய்ய வேண்டும் என்பது விதி.

நெடுஞ்சாலை பணிகளுக்கு ப்ளு மெட்டல் எனப்படும் உடைக்கப்பட்ட பாறை ஜல்லிகள், கிராவல், இயற்கை மண், மணல், தார், சிமெண்ட், தண்ணீர் இவைகள் தேவை. இதற்கான குவாரிகளால் வெளியேற்றப்படும் சிலிக்கான் துகள்களால் நுரையீரல் புற்றுநோய் வருகிறது. சிமெண்டின் மூல பொருட்களால் ஏற்படும் விளைவுகளும் நமக்குத் தெரியும். அதனால்தான் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை செய்ய வேண்டும் என ஐ.ஆர்.சி. வலியுறுத்துகிறது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப் படவில்லை. ஐ.ஆர்.சி.யின் வழிகாட்டும் நெறிமுறைகளை புறந்தள்ளி திட்டப் பணிகளில் வேகம் காட்டுவது மிக ஆபத்தானது.

குறிப்பாக, கடந்த 5 வருடங்களில் மட்டும் நெடுஞ்சாலை பணிகளுக்காக 41,000 கோடி ரூபாய் செலவு செய்தி ருக்கிறது எடப்பாடி அரசு. நடப்பாண்டில் 15,000 கோடிகளை செலவு செய்கின்றனர். இந்த திட்டப்பணிகளுக்காக, குறைந்தபட்சம் 59 கோடி கனஅடி ஜல்லிகள் தேவைப்படும். இதற்காக, 54 அடிகள் உயரம் கொண்ட 1 சதுர கிலோ மீட்டர் பரப்பள விலான பாறைகள் உடைக்கப்படும். இந்த திட்டத்திற்காக 45 கோடி கன அடி இயற்கை மண்ணும், 75 லட்சம் டன் சிமெண்டும், 7 லட்சம் டன் தாரும் தேவை. இவைகளுக்காக பயன்படுத்தப்படும் வழிமுறைகளால் உமிழப்படும் வெப்பம், வெளியேற்றப்படும் விஷவாயுக்கள், அழிக்கப்படும் மரம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஆகியவை அனைத்தும் தமிழகத்தின் சுற்றுச்சூழலை அழித்து பாலைவனமாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

இவ்வளவு பெரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய திட்டப்பணிகளை நிறைவேற்ற எடப்பாடி அரசு துடிப்பது துரதிர்ஷ்டவசமானது. சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீடு செய்யப்படாத 15,000 கோடி மதிப்பிலான நெடுஞ் சாலை பணிகளால் தமிழகம் பாலைவனமாகும்'' என கடுமையாக எச்சரிக்கிறார் சுந்தரராஜன்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரிடம் நாம் பேசிய போதும் இதே கருத்தினைத்தான் வலியுறுத்துகிறார்கள். திட் டங்களால் அள்ளிச் சுருட்ட திட்டமிடும் எடப்பாடி அரசு, தமிழகம் எதிர்நோக்கும் ஆபத்தினை உணராத அரசாக இருக்கிறது!

-இரா.இளையசெல்வன்

nkn250720
இதையும் படியுங்கள்
Subscribe