தீண்டாமைக் கொடுமை! -அரசு அலுவலக அவலம்!

dd

‘"இந்தியப் போர்க்கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட மகாலிங்கம், சீனக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, சில சம்பிரதாயங்களை முடித்த பிறகு, விரைவில் வருடாந்திர விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்'’ -1963 மே 21-ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த மகாலிங்கத்தின் மனைவி முனியம்மாவுக்கு அவுரங்காபாத்தி லிருந்து கர்னல் பிராவல் அனுப்பிய தந்தியில் இடம்பெற்ற வாசகம் இது!

மேலே குறிப்பிட்டுள்ள மகாலிங்கம்- முனியம்மா தம்பதியரின் மகனான மாரியப்பனும், ஒரு ராணுவ வீரராக இருந்து தேசப்பணியில் தன்னை ஈடு படுத்திக்கொண்டவர்தான். ராணுவத்தி லிருந்து விலகிய பிறகு, TNPSC IV தேர்வில் தேர்ச்சிபெற்று, விருதுநகர்-தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிவருகிறார்.

ss

தேச சேவையில் தங்களை அர்ப் பணித்துக்கொண்ட குடும்பப் பின்னணி உள்ள மாரியப்பனுக்கு அவர் வேலை பார்த்த அரசு அலுவலகத்தில் கிடைத்தது அவமரி யாதை மட்டும்தான். காரணம், அவர் இந்து குறவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான்.

மாரியப்பனுக்கு எதிரான தீண்டா

‘"இந்தியப் போர்க்கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட மகாலிங்கம், சீனக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, சில சம்பிரதாயங்களை முடித்த பிறகு, விரைவில் வருடாந்திர விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்'’ -1963 மே 21-ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த மகாலிங்கத்தின் மனைவி முனியம்மாவுக்கு அவுரங்காபாத்தி லிருந்து கர்னல் பிராவல் அனுப்பிய தந்தியில் இடம்பெற்ற வாசகம் இது!

மேலே குறிப்பிட்டுள்ள மகாலிங்கம்- முனியம்மா தம்பதியரின் மகனான மாரியப்பனும், ஒரு ராணுவ வீரராக இருந்து தேசப்பணியில் தன்னை ஈடு படுத்திக்கொண்டவர்தான். ராணுவத்தி லிருந்து விலகிய பிறகு, TNPSC IV தேர்வில் தேர்ச்சிபெற்று, விருதுநகர்-தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிவருகிறார்.

ss

தேச சேவையில் தங்களை அர்ப் பணித்துக்கொண்ட குடும்பப் பின்னணி உள்ள மாரியப்பனுக்கு அவர் வேலை பார்த்த அரசு அலுவலகத்தில் கிடைத்தது அவமரி யாதை மட்டும்தான். காரணம், அவர் இந்து குறவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான்.

மாரியப்பனுக்கு எதிரான தீண்டா மைக் குற்றத்தை, தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித்துறையின் விருதுநகர் அலு வலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் இளங்கோவனிலிருந்து வாட்ச்மேன் கதிரேசன்வரை மொத்தம் 6 பேர் செய்து வந்துள்ளனர். அரசு விதிமுறைகளுக்கு மாறாக, 26 ஆண்டுகளாக ஒரே அலுவலகத் தில் பணிபுரிந்து, ‘ஆதிக்கம்’ செலுத்திவரும் இளங்கோவன், ‘ஏலி1’ ஆகச் சேர்க்கப்பட்டு விருதுநகர் ஊரகக் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

ஒருநாள், கணினி அறையிலுள்ள குடிநீர் கேனிலிருந்து மாரியப்பன் டம்ளரில் தண்ணீர் பிடித்ததைக் கண்ட சூப்பிரண்டு இளங்கோவன், டம்ளரைப் பிடுங்கியதோடு, "நீ இந்த டம்ளரில் தண்ணீர் குடித்தால், நாங்க எந்த டம்ளரில் தண்ணீர் குடிப்பது? நாங்க குடிக்கிற தண்ணீரை நீ எப்படி குடிக்கலாம்? உன் சாதி என்னவென்று உனக்குத் தெரியாதா? இன்றைக்கும் உன் சாதிக்காரன் சிரட்டையில்தான் டீ குடிக்கிறான். டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வேறு ஊருக்குப் போ என்று எத்தனை தடவைதான் சொல்வது?''’என்று அசிங்கமாகத் திட்டியிருக்கிறார்.

பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் வாட்ச்மேனாகப் பணிபுரியும் கதிரேசன், டீலியில் எதையோ கலந்துகொடுத்து மாரியப்பனைக் கொல்ல முயற்சித்துள்ளார். இளநிலை உதவியாளர் கணேஷ் முனியராஜும், தட்டச்சர் ராஜேஷும், பொது ஊழியர்களுக் கான கழிப்பறையை மாரியப்பன் பயன்படுத்த முடியாதபடி பூட்டி வைத்துள்ளனர். “"நீ இங்கே சிறுநீர் கழித்தால், எங்களைப் போன்ற மேல்சாதியினர் எங்கே போய் சிறுநீர் கழிப்பது? இந்தக் கழிப்பறையை உபயோகப்படுத்த நினைத்தால், உன்னுடைய சிறுநீர்க் குழாயை அறுத்துவிடுவோம்'’என இழிவுபடுத்தி மிரட்டியுள்ளனர்.

சேரில் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலைபார்த்த மாரியப்பனைப் பார்த்து, உதவியாளர் முத்துமுருகானந்தம், "நீ உட்கார்ந்திருக்கிற சேரில் நாங்களும் உட்கார்ந்து, நீ தொட்டு வேலை பார்க்கிற கம்ப்யூட்டரில் நாங்களும் வேலை பார்க்கணுமா? நான் யாரென்று தெரியுமாடா? ஆண்ட பரம்பரைடா... மஞ்சளாறு வடிநிலைக் கோட்டத்தில் ஒரு கொலை செய்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். நானும் சூப்பிரண்டும் சேர்ந்து பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து வெங் கட்டை கொன்றோம். எங்களை யார் கேட்க முடியும்? உன்னையும் கொஞ்சம் கொஞ்சமா கொல்வோம்''’என்று மிரட்டலாகப் பேசியிருக்கிறார்.

வட மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர யாதவ், விருதுநகர் அலு வலகத்தில் கோட்ட கணக்கராக வேலை பார்க்கிறார். அவர் மாரியப்ப னிடம், “"சூடா சாலா (கீழ்ச்சாதி பயலே), பெல் அடிச்சா வரமாட்டியா? உன்னை ஆளைவிட்டுத்தான் கூப்பிட ணுமா? எங்க உத்தரப்பிரதேசமா இருந்தால், உன்னை அடிச்சே விரட்டிருப்போம். இந்த வீடியோவ பாரு.” என்று தன் கையிலிருந்த செல் போனில், ஒருவரை சிலர் சூழ்ந்து நின்று கம்பால் தாக்கி துன்புறுத்திய வீடியோவைக் காட்டி டிரான்ஸ் பர் வாங்கிட்டு எங்கேயாவது போயிரு. இல்லைன்னா உயிரோடு இருக்கமாட் டாய்''’என மிரட்டி யிருக்கிறார்.

இவ்விவகாரத் தில் புகாரளிக்கப் பட்டது குறித்து கண்காணிப் பாளர் இளங் கோவனிடம் கேட்டபோது, "அப்படி எதுவும் கிடையாது சார். வழக்கு விசாரணையில் இருக்கும்போது நாங்க பேசக்கூடாது''’என்று முடித் துக்கொண்டார்.

இவ்வழக்கில் குற்றம்சாட் டப்பட்ட 6 பேர் சார்பில் நம்மைத் தொடர்புகொண்ட ஓய்வுபெற்ற அதிகாரி ஊர்க் காவலன், "நானும் பட்டியலினத் தைச் சேர்ந்தவன்தான். எப்படி சார் ஒரு கவர்மெண்ட் ஆபீசுல இந்த மாதிரியெல்லாம் நடந் துக்க முடியும்? இந்த மாரியப் பன் எந்த வேலையும் பார்க்கிற தில்ல. அதைச் சொல்லிக் கண்டித்ததால் தீண்டாமைக் குற்றத்தை இத்தனை பேர் மீதும் சுமத்தியிருக்கிறார்''’என்றார்.

மாரியப்பன் மீதான குற் றச்சாட்டுக்கு பதிலாக, ‘"அர்ப் பணிப்புடன் கடமையாற்றி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுவதற்கு மனமொத்துப் பணி செய்தவர் மாரியப்பன்'’என 2021 குடியரசு தினவிழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அளித்த பாராட்டுச் சான்றிதழைக் காண் பிக்கிறது மாரியப்பன் தரப்பு.

விருதுநகர் டி.எஸ்.பி. அர்ச்சனாவைத் தொடர்பு கொண்டோம். “"நான் மீட்டிங் கில் பிஸியாக இருக்கிறேன்...'' ’என துண்டித்தவர், அடுத்து நம் லைனுக்கு வரவில்லை.

சாதி, மதம், இனம், பால், பிறப்பு, இவற்றின் அடிப்படையில் எவரிடமும் பாகுபாடு காட்டக்கூடாதென சட்ட விதி 15 கூறுகிறது. "நெஞ்சுக்குள் ‘நீதி' இருந்தால், தீண்டாமை என்னும் அநீதி தானாகப் பொசுங்கி விடும்.

nkn180622
இதையும் படியுங்கள்
Subscribe