"ஹலோ தலைவரே, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பான வேலைகள் தீவிரமா நடக்குது.''”

"ஆமாம்பா. தமிழக அரசின் ஏற்பாட்டில் உலக அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் வரும் 28-ந் தேதி தொடங்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இதில் 187 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கறாங்க. இந்த விழாவைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் பிரதமரை நேரில் சந்திக்க இருக்காங்க. இருப்பினும் தி.மு.க.விலுள்ள சீனியர்களோ, காங்கிரஸுடன் நாம் கூட்டணியில் இருக்கும் போது, எதற்காக மோடியை அழைக் கணும்? அப்படி அழைத்தால் பா.ஜ.க.விடம் தி.மு.க. சரணடைவ தாகப் பலரும் கருதுவார்கள். அதனால் மோடியே வேண்டாம்னு முணுமுணுக்கறாங்க.''”

"சர்வதேச விளையாட்டுப் போட்டின்னா பிரதமர்ங்கிற முறையில் மோடி தொடங்கி வைப்பது தானே சரி?''”

Advertisment

dd

"ஆமாங்க தலைவரே, ஆனாலும் முணுமுணுப்பு கேட்குது. ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் பிரமாண்ட மான கலைஞர் சிலையைத் திறக்க அண்மை யில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை அழைத்தபோதே, விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனம் இப்போதும் தொடரலாம். இதற்கிடையே, அந்த விழாவிற்கு மோடியை அதிகமாக எதிர்பார்க்குது அ.தி.மு.க. தரப்புகள். அப்படி வரும்போது தங்களை அவர் தனித்தனியாகச் சந்திக்க நேரம் ஒதுக்கணும்னு எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் இப்போதே டெல்லியில் காய்களை நகர்த்துது.''”

"எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரில் பா.ஜ.க.வின் சாஃப்ட் கார்னர் யார் பக்கம்?''”

"இப்போதைய சூழலில் இந்த இருவருமே இனி உதவாதவர்கள்னு பா.ஜ.க. நினைக்குதாம். அதனால் தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு, இவர்கள் இருவரும் இல்லாத புதிய நபர் ஒருவரை செல்வாக்கோடு வளர்த்தெடுத்து, அவர்களின் தோழமையோடுதான் தமிழகத்தில் காலூன்ற வேண்டும்னு பா.ஜ.க. வியூகம் வகுக்குதாம். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ். நீக்கியதை ஏற்க வேண்டும் என்று எடப்பாடித் தரப்பு கொடுத்த மனுவை, அது ஏற்கவில்லையாம். அதேபோல் ஓ.பி.எஸ். எடப்பாடியை நீக்குவதாக அனுப்பிய மனுவையும் அது கண்டுகொள்ளவில்லையாம். அதனால் இரு தரப்புமே பதட்டத்தில் கையைப் பிசையுது. இந்த சூழலில் இருவரையுமே மோடி சந்திக்கமாட் டார் என்று கூறும் தமிழக பா.ஜ.க. தரப்பினர், மோடி தமிழகம் வந்தால் அவர் எங்களுடன் உரையாட நேரம் ஒதுக்கணும்னு தங்கள் கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.''”

"கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் பா.ஜ.க. தரப்பின் பெயரும் அடிபடுதே?''”

"கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி மர்மமாக மரண மடைந்த நிலையில், பள்ளி யின் டார்ச்சரால்தான் அவர் இறந்தார் என்று மாணவிக் காக களமிறங்கியவர்கள் போராட்டத்தில் குதிக்க, அது கலவரமாக வெடித்திருக் கிறது. இந்தப் பள்ளி பா.ஜ.க. பிரமுகரான ஹெச்.ராஜா வுக்கு நெருக்கமானவர்களின் நிறுவனமாம். அதோடு அந்தப் பள்ளியில் ஆர்.எஸ். எஸ். பயிற்சியும் நடக்குமாம். எடப்பாடி ஆட்சியில் தூய்மையான பள்ளின்னு இந்த ஸ்கூலுக்கு அவார்டும் கொடுத்திருக்காங்க. அதனால், பள்ளியின் அரசியல் பின்னணி குறித்து போலீஸ் கவனமா ஆராய்ஞ்சிக்கிட்டிருக்கு.''”

Advertisment

karunagaraj

"சரிப்பா, சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க.வினருடன், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை ஆலோசனை நடத்தியிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் பற்றியும், கோட்டப் பொறுப்பாளர்கள் பற்றியும் சரமாரியாக புகார்கள் வைக்கப்பட்டிருக்கு. அதாவது, சென்னையில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிட்டு, தோற்றாலும் டெபாசிட் வாங்கியவர்களையும், அதிக ஓட்டுகள் வாங்கியவர்களில் முதலிடத்தில் இருக்கும் 20 பேரையும்தான் இந்தக் கூட்டத்திற்கு அவர் அழைத்திருந்தார். இதில் சென்னை பெருங்கோட்டப் பொறுப்பாளர் கரு.நாகராஜன், பா.ஜ.க. செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் கலந்துக்கிட் டாங்க.. அப்போது, "தோல்விக்குக் காரணம் என்னன்னு சொல் லுங்க' என்று அண்ணாமலை கேட்டதும், சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி பிரமுகரான செல்லப்பாண்டி யன், "இங்கே எத்தனை மண்டலங்கள் இருக்கு? எத்தனை வார்டுகள் இருக்குங்கிறது கூட நிர்வாகிகளுக்குத் தெரிவதில்லை. இங்கு இருக்கும் கரு.நாகராஜனே அந்த லட்சணத்தில்தான் இருக்கிறார். இதேபோல் இங்குள்ள மாவட்ட தலைவர் சாய்சத்யனும் இந்த ரகம்தான்'னு குமுறித் தள்ளிவிட்டார்.''”

"ம்.''”

"அதோடு, கட்சியின் அடிப்படை விசயங்கள்கூடத் தெரியாதவர்களை முக்கியப் பொறுப்பாளர்களாக வைத் திருந்தால் கட்சி எப்படி வளரும் என்று செல்லப்பாண்டியன் கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அண்ணாமலை தவித்துப்போய் விட்டார். அதேபோல, சென்னையில் வெற்றி பெற்ற ஒரே ஒரு பா.ஜ.க. கவுன்சிலரான உமா ஆனந்தன் பேசும்போது, "கட்சியில் தீவிரமாக பணியாற்றுபவர்களுக்கு பொறுப்பே கொடுப்பதில்லை. எனக்கும் கூட கட்சியில் எந்தப் பொறுப்பையும் தராமல் வைத்திருக் கிறார்கள்'னு ஆதங்கப்பட்டார். இவர்களின் ஆத்திரத்தைக் கண்டு வெலவெலத்துப்போன அண்ணாமலை சைலண்ட் ஆகிவிட்டாராம்.''”

ff

"அறிவாலயக் கூட்டத்திலும் இதே போன்ற குமுறல் வெடிச்சிருக்கே?''”

"தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. இது தொடர்பான புகார்கள் வெடிப்பது குறித்து ஏற்கனவே நாம் சிலமுறை பேசியிருக்கோம். இந்தப் புகார்கள் குறித்த பஞ்சாயத்து அறிவாலயத்தில் நடந்துக் கிட்டு இருக்கு. குறிப்பா, மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் இரண்டு கோஷ்டிகள் இருக் கிறது. இவர்களின் பிரச்சினையைப் பேசித் தீர்க்க அறிவாலயம் அவர்களை அழைத்திருக் கிறது. மாஜி ஒன்றிய அமைச்சர் ஆ.ராசாதான் பஞ்சாயத்தை நடத்தியிருக்கார். அப்போது வடக்கு ஒன்றியத்தில் போட்டியிட மனு கொடுத்த மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரான சாலவாக்கம் பெ.மணி, "தேர்தலை முறையாக நடத்துங்கள். பொறுப்பில் இருப்பவர்களே இருக்கட்டும்னு சொல்லா தீங்க'ன்னு சொல்லியிருக்கார். இதைக்கேட்ட ராசா டென்ஷனாகி, "கட்சித் தலைமை எடுக்குற முடிவுக்கு கட்டுப்படணு'ம்னு குரலை உயர்த்த... பதிலுக்கு மணியும், "ஏ.சி. ரூம்ல உட்கார்ந்து நிர்வாகிகளை முடிவு செய்வதற்கு காரணமே எங்க மாதிரி கட்சிக்காரங்க உழைப்புதான்'னு சொல்ல, வார்த்தைகள் முற்றியதால், பரபரப்பு அடங்குறதுக்கு கொஞ்ச நேரமாகியிருக்கு.''’

"சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் பதட்டத்தில் இருக்காங்களே?''

"ஆமாங்க தலைவரே, எடப்பாடி ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் விடப்பட்ட பல்வேறு சாலைப் பணிகளுக்கான ரூ.811 கோடி மதிப்பிலான டெண்டர்களில், பெரும் ஊழல் நடந்திருப்பதாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் கொடுத்திருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தி.மு.க. அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது. அதற்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் என்ன செய்வது என ஐ.ஏ.எஸ். அல்லாத அந்த மாநகராட்சி அதிகாரிகள் தங்களுக்குள் பரபரப்பா விவாதிக்கிறாங்களாம். முன்ஜாமீன் வாங்குவதைத் தவிர வேறு வழி யில்லைங்கிற முடிவுக்கு வந்திருக்கும் அதிகாரி கள், அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை யும் கரன்ஸி பலத்தால் செய்திருக்கிறார்களாம். இருந்தாலும் அவர்களின் பதட்டம் இன்னும் நீங்கவில்லையாம்.''”

"போன முறை காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரோட பிறந்தநாள் பற்றி நம்ம நக்கீரனில் வந்த செய்திக்கு அவரோட ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்திருக்காங்க. ஜூலை 13 அன்னைக்கு திருநாவுக்கரசர் பிறந்தநாள். அதைக் கொண்டாடுறதில் அவர் ஆர்வம் காட்டாத நிலையில், அவர் எம்.பி.யா இருக்கும் திருச்சி தொகுதியின் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசித்து, திருச்சி மாவட்டத்தில் 3 நாட்கள் நலத்திட்ட உதவிகளோடு திருநாவுக் கரசரோட பிறந்தநாளை பயனுள்ள வகையில் கொண்டாடுறதுன்னு முடி வெடுத்து, அதன்படியே கொண் டாடியிருக்காங்க. ஏழை-எளி யவர்கள், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடந்ததுன்னும் யாரிடமும் வசூல் செய்யவுமில்லை, அதற்கான அவசியமும் இல்லைன்னு சொல்றாங்க.''”