"ஹலோ தலைவரே, துணைமுதல்வ ராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதன்முறையாக உதயநிதி, கோட்டையில் ஓர் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறாரே.''”

"ஆமாம்பா, மழை வெள்ளத்தை எப்படி சமாளிப்பதுன்னு அதிகாரிகளை உதயநிதி உஷார்படுத்தியிருக்கிறாராமே?''”

uday

"ஆமாங்க தலைவரே.. வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதால், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இதன் வீரியம் அதிகமாக இருக்கும் என முன்கூட்டியே, சென்னை வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. அதனால், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு நடத்துமாறு உதயநிதியிடம் அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்துதான், கடந்த 5ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் இந்த ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார் உதயநிதி. இதில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், சென்னை மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஸ், தலைமைச் செயலா ளர் முருகானந்தம் உள்பட முக்கியத் துறைகளின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கள், சென்னை மற்றும் புறநகர் மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்துகொண்டி ருக்கிறார்கள்.இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோணங்களிலும் மழையின் தாக்கம் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள்.''”

Advertisment

"அப்படியா?''”

"இந்த ஆய்வுக்கூட்டத்தில், முந்தைய காலங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகள், அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக் கைகள், அதனுடைய தற்போதைய சூழல் என பலவற்றையும் விவாதித்திருக்கிறார்கள், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டா லின், "வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிக மாக இருந்தாலும் அதை நாம் சமாளித்தாக வேண்டும். எனவே, மழைநீர்வடிகால் பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி, மின் கேபிள்கள் அமைக்கும் பணி ஆகியவைகளை விரைந்து முடிக்க வேண்டும். மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளின் பட்டியல் நம்மிடம் இருக்கிறது. வார்டு வாரியாக அந்த பகுதிகளில் இப்போதே நீரை வெளியேற்றும் பம்புகள், படகுகள் ஆகியவற்றைக் கொண்டு சென்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று பாதுகாப்பதில் எந்த சுணக் கமும் ஏற்பட்டுவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதில், எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படக்கூடாது. நம்முடன் நம் அரசு இருக்கிறது என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் எப்போதும் இருக்கவேண்டும். அதற்கு ஏற்ப நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்' என்றெல்லாம் அறிவுறுத்தியிருக்கிறா ராம். சீனியர்களையும், அதிகாரிகளையும் இலகுவாக ஹேண்டில் செய்து, இந்தக் கூட்டத்தை உதயநிதி நடத்திய விதம் முதல்வரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம்.''”

"இப்போதிருக்கும் சீனியர் அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த இறுக்கம் நீங்கியிருக் கிறதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, அமைச்சரவை மாற்றத்தின்போது, சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டவர்களின் இலாகாக்கள் இடம் மாறும் என்றும், துணை முதல்வரான உதயநிதி யின் வசம் உள்ளாட்சித்துறை போகும் என்றும், அந்த சமயத்தில் செய்திகள் பரவியதால், சீனியர் அமைச்சர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் இருந்தது. உதயநிதியோ, அப்படியெல்லாம் எதுவும் துறைகளைப் பறித்து எனக்குத் தரவேண்டாம் என்று சொன்னதால், முதல்வரின் சிறப்புத் திட்டங்களை கவனிக்கும் பொறுப்பு மட்டும் அவருக்குக் கூடுதலாக தரப்பட்டது. இத னால், சீனியர் அமைச்சர்கள் மத்தியில் ஒருவித நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க.வில் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. என்றும், உதயநிதி கொண்டுவர விருக்கும் மாற்றத்தை, தற்போதைய மா.செ.க் களில் 80 சதம் பேர் ஏற்கும் மனநிலையில் இல்லை என்கிறார்கள். ஆனாலும் உதயநிதி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாராம்.''”

"நடிகர் விஜய், ஒருவித குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கிறார்களே?''”

"தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து, அதன் முதல் மாநாட்டை நடத்தும் ஆயத்தத்தில் இருக்கும் நடிகர் விஜய், தனது கட்சியின் வளர்ச்சி குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது சில நிர்வாகிகள், தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் அனைத்து மாவட்டங்களி லும், அனைத்து நகரங்கள் தொடங்கி, சிற்றூர் கள் வரையில் கிளைக்கழகங்கள் இருக்கின்றன. அதன் மூலம் அக்கட்சிகள், பலமாக மக்கள் மத்தியில் வேரூன்றி இருக்கின்றன. அதேபோல் நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தே.மு.தி.க.வுக்கு, இந்தக் கட்சிகள் அளவுக்குக் கிளைகள் இல்லை என்றாலும், அவற்றில் ஏறத்தாழ 50 சத அளவிற்கு, கிளைக்கழகங்கள் இருக்கின்றன. அதனால்தான் அவர்கள் தேர்தல் நேரத்தில் கூட்டணி டீலிங்கெல்லாம் பேச முடிகிறது. ம.தி.மு.க.வுக்கு இவற்றில் 30 சத அளவிற்குக் கிளைகள் உள்ளன. சிறுத்தைகளுக்கும் பா.ம.க.வுக்கும் வட மாவட்டங்களில் கிளைகள் அதிகம். மற்ற கட்சிகளுக்கு இப்படியெல்லாம் கணக்குப் போடுகிற அளவுக்குக் கூட கிளைகள் இல்லை என்றெல்லாம் விளக்கிய அந்த நிர்வாகிகள், நமக்கும் இப்படியொரு நிலைதான் இருக்கிறது என்றிருக்கிறார்கள். இதைக்கேட்டு அப்செட்டான விஜய், தமிழகம் முழுக்க கிராமங்கள் வரை நாம் வேரூன்ற வேண்டும். அதற்கான வழிகளைப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். திராவிடக் கட்சிகளுக்கு இணையாக தங்கள் கட்சியை வேரூன்றி வளர்க்க முடியுமா? என்கிற குழப்பத்தில் அவர் ஆழ்ந்திருக்கிறாராம்.''”

"பா.ஜ.க. தமிழிசைக்கும், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனுக்கும் இடையில் ஏற்பட்ட உரசல் முடிவுக்கு வந்திருக்கிறதே?''”

f

"விடுதலை சிறுத்தைகள் கட்சி கள்ளக்குறிச்சியில் நடத்திய மாநாடு குறித்து விமர்சித்த பா.ஜ.க. தமிழிசை மாநாட்டுக்கு முன்பாக, மன உறுத்தல் காரணமாகத்தான் மது ஒழிப்பை வலிறுத்திய காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று திருமா மீது சாட்டையைச் சொடுக்கியிருந்தார். இதற்கு விளக்கமளித்த திருமா, காந்தி பிறந்த நாளில் மாநாடு நடந்த நிலையில், காந்திமண்டபத்துக்கு மாலையிடச் சென்றபோது, கவர்னர் வந்துசென்ற பிறகுதான் உங்களை அனுமதிக்க முடியும் என்று காவல்துறையினர் கூறினார்கள். மாநாட்டைத் தொடங்க வேண்டிய நேர நெருக்கடியால் காத்திருக்க முடியவில்லை. இதை குற்றஉணர்வு என்று எப்படிச் சொல்லலாம்? என்று விளக்கம் கொடுத்த திருமா, தமிழிசைக்கும் என்னைப் போல் மதுப்பழக்கம் இருக்காது என்று நம்பு கிறேன் என பதிலடி கொடுத்தார்.''”

"இது கொஞ்சம் ஹாட் அட்டாக் தானே?''”

"ஆமாங்க தலைவரே.. இது தமிழிசையை டென்சனாக்க, திருமா நாகரிகமற்றவர் என்று அட்டாக் செய்தார். இதைத் தொடர்ந்து திருமாவோ, என் பதில் காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்ல, இருவருக்கும் இடையில் வெள்ளைக் கொடி பறக்கத் தொடங்கிவிட்டது. அதே சமயம், சிறுத்தைகளின் கள்ளக்குறிச்சி மாநாட் டில் ராஜாஜிக்கு கட் அவுட் வைக்கப்பட்டது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் தரப்போ மதுவிலக்கில் தீவிரம் காட்டியவர் என்பதற்குக் குறியீடாக ராஜாஜியைப் பார்க்கிறோம் என்று சொல்ல, குலக்கல்வித் திட்டத்தின் குறியீடாகத்தான் ராஜாஜி இருக்கிறார். அவருக்கு கட்அவுட் சரியா என்கிறார்கள் பலரும். ’இப்படிப்பட்ட சலசலப்புகளுக்குக் காரணமானவர் லாட்டரி மார்ட்டினின் மருமகன் அர்ஜுன் ரெட்டிதான். அண்மைக் காலமாக சிறுத்தைகள் கட்சியை தன் விருப்பப்படி டியூன் செய்கிறார்’என்கிற பேச்சும் பரவலாக எழுந்திருக்கிறது.''”

rr

"ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியியல் பல்கலைக் கழகத்தில் இன் னும் சலசலப்ப்பு அடங்கலையே?''

"உண்மைதாங்க தலைவரே, இந்த கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் முறைகேடுகள் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு நாம் அம்பலப்படுத்தினோம். குறிப்பாக, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் நாராயணன் மற்றும் கவர்னரின் நாமினியான நடேசன் ஆகியோர் 92 கல்லூரிகளிடமிருந்து, ரினிவலுக்காக 3 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தார்களாம். இதனை அறிந்த உயர்கல்வித் துறையின் அமைச்ச ராக இருந்த பொன்முடியும், துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவும், இந்த ரினிவல் ஆணைகளை வழங்கத் தடை விதித்ததோடு, விசாரணைக்கும் உத்தரவிட்டடனர்.''

"இந்த நிலையில், அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, துறையின் புதிய அமைச்சராக கோவி. செழியன் நியமிக்கப்பட, துறையின் செயலாளராகக் கூடுதல் தலைமைச் செயலா ளர் டாக்டர் கோபால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தச்சூழலில் நிறுத்திவைக் கப்பட்ட அந்த கல்லூரி களுக்கான இசைவு ஆணையைப் பெறுவதற் காக, அமைச்சர் கோவி.செழியனையும், செயலாளர் ராஜகோபாலையும் அணுக ஊழல் டீம் முயற்சித்து வருகிறதாம். இது உயர்கல்வித் துறையில் பரபரப்பான டாக்காக மாறியிருக்கிறதாம்.''”

"நானும் என் காதுக்கு வந்த, சென்னை மாநகராட்சி பற்றிய ஒரு தகவலைப் பகிர்ந் துக்கறேன். சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் என்பவர் தி.மு.க.விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். குடிநீர் மற்றும் கழிவுநீர் நிலையப் பணிகளைச் செய்யும் மாநகராட்சி காண்ட்ராக்டர்களிடம் 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத் திலும், அதிகாரிகளை மிரட்டிய விவகாரத்திலும் தி.மு.க. தலைமைக்குப் புகார்கள் சென்ற நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்கிறார்கள்.''