டதுருவமாகவும், தென்துருவமாகவும் இருந்துவந்த முன்னாள் அமைச்சர்ககளான இரண்டு பேர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மூலம் கைகோர்த்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலும். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையிலும் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எந்த ஒரு கட்சிக்கூட்டம், விளம்பரம் எது போட்டாலும் இரு தரப்பு ஆதரவாளர்களும் தங்களுடைய முன்னாள் அமைச்சர்களை முன்னிலைப்படுத்தி படங்களைப் போடுவார்களே தவிர, இருவர் படங்களையும் ஒன்றாகப் போடுவதில்லை.

dd

Advertisment

ஜெ. மறைவுக்குப்பின் சீனிவாசன் எடப்பாடிக்கு ஆதரவாகவும், விஸ்வநாதன் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக வும் செயல்பட்டு வந்தனர். தற்பொழுது அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மூலம் விஸ்வநாதன் எடப்பாடியின் தீவிர விசுவாசியாக மாறிவிட்டார். தன்னை ஆதரித்த சீனிவாசனுக்கு பொருளாளர் பதவியையும் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செய லாளர் பதவியையும் கொடுத்தார் எடப்பாடி.

இப்படி இரண்டு முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி அணியில் ஐக்கியமானதைக் கண்டு மாவட்டத்திலுள்ள முன்னாள் அமைச்சர் களின் ஆதரவாளர் களும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரின் படங்களையும் ஒன்றாகப் போட்டு வாழ்த்து போஸ்டர்கள் அடித்து விளம்பரம் கொடுத்துவருகிறார்கள். இதில் சீனி ஆதரவாளர்கள் ஒரு படி மேலேபோய் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் என்று இரட்டை இலையில் ஒரு பக்கம் சீனிவாசன் படத்தையும் மற்றொரு பக்கம் விசுவநாதன் படத்தையும் போட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதுசம்பந்தமாக முன்னாள் அமைச்சர் களின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்ட போது, “"எங்க முன்னாள் அமைச்சர்கள் 2 பேருக்கும் அம்மா காலத்திலிருந்தே கருத்துவேறுபாடு இருந்துவருகிறது. தற்பொழுது எடப்பாடியின் தலைமையில் இணைந்திருக்கிறார்கள். தலைமையும் எங்களை போன்மூலம் தொடர்புகொண்டு இனிமேல் மாவட்டத்தில் எந்த கருத்து வேறுபாடுகளும் இருக்கக்கூடாது, இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இணைந்துதான் செயல்படுவார்கள். கட்சிப் பொறுப்பாளர் களும் ஒற்றுமையாகச் செயல்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் வத்தலக்குண்டைச் சேர்ந்த சிறுபான்மைப்பிரிவு அணிச் செயலாளர் கனி பாய், சீனிவாசனை சந்தித்து ஏலக்காய் மாலைபோட்டு மரியாதை செய் தார். “இதே மாதிரி மாலையை தம்பி விசுவ நாதனுக்கும் போட்டு மரியாதை செய்ய வேண்டும்” என்று கனி பாயிடம் கூறியிருக் கிறார் சீனிவாசன். அதைத் தொடர்ந்துதான் கட்சிப் பொறுப்பாளர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான மரியாதையைக் கொடுத்து ஒருங்கிணைந்து கட்சியை வளர்க்கத் தயாராகிவருகிறார்கள்.

Advertisment